Wednesday, October 03, 2018

துன்பமற்ற நிலை! - சாந்திபர்வம் பகுதி – 287

No grief! | Shanti-Parva-Section-287 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 114)


பதிவின் சுருக்கம் : துக்கத்தையும், மரணத்தையும் தவிர்ப்பது எவ்வாறு என்று கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும், சமங்கருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உயிரினங்கள் எப்போதும் துன்பத்தையும், மரணத்தையும் கண்டு அஞ்சுகின்றன. ஓ! பாட்டா, இந்த இரண்டும் நேராமல் தவிர்ப்பது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாக நாரதருக்கும், சமங்கருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2)

நாரதர் {சமங்கரிடம்}, "(பெரியோரை வணங்க சிலர் தங்கள் தலைகளை மட்டுமே தாழ்த்துகின்றனர்) நீர் பெரியோர்களை வணங்க உமது மார்பு தரையைத் தொடும் வரை நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்து வணங்குகிறீர். நீர் உமது கரங்களைக் கொண்டே (வாழ்வெனும் ஆற்றைக்) கடப்பதாகத் தெரிகிறது[1]. நீர் எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட்டவராகவும், மிகுந்த உற்சாகம் நிறைந்தவராகத் தென்படுகிறீர். நீர் எப்போதும் நிறைவுடையவராகவும், மகிழ்ச்சியானவராகவும் ஒரு குழந்தையைப் போல (இன்பமாக) விளையாடிக் கொண்டிருப்பவராகவும் தென்படுகிறீர்" என்றார்.(4)

[1] "உமக்கு நேரும் பயங்கரத் துயத்திலும் நீர் உம்மைச் சார்ந்தே இருக்கிறீர். வாழ்வெனும் பயங்கர ஆற்றை ஒரு தோணியும் இல்லாமல் வெறும் கரங்களின் உதவியுடன் மட்டுமே கடப்பது பெரும் தற்சார்பையே குறிப்பிடுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சமங்கர் {நாரதரிடம்}, "ஓ! கௌரவங்களை அளிப்பவரே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களைக் குறித்த உண்மையை நான் அறிவேன். எனவே நான் ஒருபோதும் உற்சாகமிழப்பதில்லை[2].(5) இவ்வுலகில் செயல்களின் தொடக்கம் எது, அவற்றால் அடையப்படும் கனிகள் என்னென்ன, அந்தக் கனிகள் எவ்வாறு பல்வேறு வகைகளில் இருக்கின்றன என்பதையும் நான் அறிவேன். எனவே நான் ஒருபோதும் துன்பத்தின் வசப்படுவதில்லை[3].(6) ஓ! நாரதரே, கல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள், செல்வந்தர்கள், குருடர்கள், மூடர்கள், பித்தர்கள் என நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பாரும்[4].(7) இவர்கள் தங்கள் முற்பிறவிச் செயல்களின் மூலம் வாழ்கிறார்கள். நோய்களில் இருந்து விடுபட்டவர்களான தேவர்களே கூட, முற்பிறவிகளின் செயற் தன்மையின் மூலம் (அந்நிலையில்) இருக்கிறார்கள். பலவீனர்களும், பலவான்களும் என அனைவரும் தங்கள் முற்பிறவி செயல்களின் தன்மையால் வாழ்கின்றனர். எனவே, நீர் நம்மை மதிப்பதே உமக்குத் தகும்.(8) ஆயிரங்களைக் கொண்டவர்கள் வாழ்கிறார்கள். நூறுகளைக் கொண்டவர்களும் வாழ்கிறார்கள். துன்பத்தில் மூழ்கியவர்களும் வாழ்கிறார்கள். நாமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் பாரும்.(9)

[2] "எது இல்லையோ, எது இருக்கப் போவதில்லையோ அஃது இந்தக் கணத்தில் இருப்பதில்லை. எனவே, அசத்-ன் இயல்பில் உள்ளவை அனைத்தும் இருப்பில்லாதவை. நமது துன்பங்களும் அசத்துடன் தொடர்புடையவை. இதை அறிந்த நான் துன்பங்கள் அனைத்தையும் கைவிடுகிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "செயல்கள் துன்பத்திற்கானவை; வெளிப்படையாகத் தோன்றுவதைப் போலல்லமால் செயல்களின் கனிகளும் துன்பத்திற்கானவை; பல்வேறு செயற்கனிகளும், எதிர்பாராமல் சில வேளைகளில் நேரும் பிறகனிகளும் கூடத் துன்பத்திற்கானவையே என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே, செயல்களைத் தவிர்த்து, செயல்களின் கனிகளை அடையாததற்கு வருந்தாமல், அல்லது வெளிப்படையாக இனிமையாகத் தெரியும் கனிகளை அடையாததற்கு வருந்தாமல் இருப்பதால் நான் துன்பத்தில் ஈடுபடுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "செயல்களைத் தவிர்க்கிறோம் என்பதால் நாம் இறப்பதில்லை; உண்மையில் பிறரைப் போலவே நாம் வாழ்கிறோம்; அதுவும் சமமற்ற சூழ்நிலை கொண்ட பிறரும் வாழ்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! நாரதரே, நாம் துன்பவசப்படாமல் இருக்கும்போது, (அறக்) கடமை பயிற்சியோ, (அறச்) செயல் நோற்போ நமக்கு என்ன செய்துவிட முடியும்? இன்ப துன்பங்கள் அனைத்தும் முறிவற்றவை என்பதால், அவற்றால் ஒருபோதும் நம்மைக் கலங்கடிக்க முடிவதில்லை[5].(10) ஞானிகள் என்று எதனால் மனிதர்கள் சொல்லப்படுகிறார்கள், அது பிழையில் {குற்றத்தில்} இருந்து புலன்களை விடுபடச் செய்யும் ஞானமே ஆகும். புலன்களே பிழைக்கும் {குற்றத்திற்கும்}, துயரத்திற்கும் வசப்படுகிறது. பிழைக்கு {குற்றத்திற்கு} ஆட்படும் புலன்களைக் கொண்ட ஒருவன் ஞானத்தை அடைவான் என்று ஒருபோதும் சொல்ல முடியாது.(11) பிழையின் ஆதிக்கத்தால் மனிதன் கொள்ளும் செருக்கானது, அவன் அடங்கியிருக்கும் பிழையின் {குற்றத்தின்} வடிவம் மட்டுமே ஆகும். பிழை செய்யும் மனிதனைப் பொறுத்தவரையில் அவனுக்கு இம்மையும் கிடையாது, மறுமையும் கிடையாது. துன்பங்கள் எப்போதும் நீடித்திருப்பதில்லை, இன்பமும் எப்போதும் இருக்காது என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும்[6].(12) திருப்பங்கள் மற்றும் துன்ப நிகழ்வுகள் நிறைந்த இந்த உலகவாழ்வை என்னைப் போன்ற ஒருவன் ஒருபோதும் பின்பற்ற மாட்டான். அத்தகைய ஒருவன், இன்பத்திற்குரிய பொருட்களை விரும்புவதில் கவனம் கொள்ள மாட்டான், அவை கொண்டு வரும் மகிழ்ச்சியை நினைக்க மாட்டான், அல்லது அவை கொண்டு வரும் துன்பங்களையும் நினைக்க மாட்டான்.(13) தற்சார்பு கொள்ள இயன்ற ஒருவன், பிறரின் பொருள்களில் ஒருபோதும் பேராசை கொள்ள மாட்டான்; அடையப்படாத லாபங்களைக் குறித்து நினைக்க மாட்டான்; அபரிமிதமான செல்வத்தை அடைவதால் மகிழ்ச்சியை உணர மாட்டான்; செல்வத்தை இழப்பதால் துன்பவசப்பட மாட்டான்.(14) நண்பர்களாலோ, செல்வத்தாலோ, உயர்ந்த பிறப்பாலோ, சாத்திரக் கல்வியாலோ, மந்திரங்களாலோ, சக்தியாலோ மறுமையின் துன்பத்தில் ஒருவனை மீட்க முடியாது. ஒழுக்கத்தின் மூலமே ஒருவனால் அங்கே இன்பத்தை அடையமுடியும்.(15)

[5] "அறியாமையானது கவலையின் வேராகக் கிடக்கிறது. அறியாமையைக் கைவிடுவதால் நாம் துன்பத்தைத் தவிர்த்திருக்கிறோம். எனவே, அறமோ, வேள்வி முதலியவற்றைப் போன்ற அறச் செயல்களோ நமக்கு எந்த நன்மையையும், தீமையையும் செய்துவிட முடியாது. இன்ப துன்பங்களைப் பொறுத்தவரையில், அவற்றின் மதிப்பை நாம் அறிந்திருப்பதாலும், அவை நீடிக்கும் காலத்தை ஒப்பிடுகையில் மிகக் குறுகியவையாக இருப்பதாலும் இவை இரண்டாலும் நம்மை அசைக்க முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] "எனவே, "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று எவரும் செருக்கில் ஈடுபடலாகாது, "நான் துன்பநிலையில் இருக்கிறேன்" என்று எவரும் துயரில் ஈடுபடலாகாது. ஞானியானவன், இந்த நிலையற்ற மனநிலைகளால் கலக்கமடைந்து ஒருபோதும் துன்புறக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

யோகத்தை அறியாத மனிதனின் புத்தியை ஒருபோதும் விடுதலையை {முக்தியை} நோக்கிச் செலுத்த முடியாது. யோகத்தை அறியாத ஒருவனால் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது. பொறுமையும், கவலையைக் கைவிடும் மனோவுறுதியுமே மகிழ்ச்சி உண்டாவதற்கான இரண்டு அறிகுறிகளாகும்.(16) ஏற்புடைய {இனிமையான} எதுவும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இன்பம் செருக்கைத் தூண்டுகிறது. மேலும் செருக்கானது கவலையை உண்டாக்குகிறது. இந்தக் காரணங்களுக்காகவே நான் இவை அனைத்தையும் தவிர்க்கிறேன்.(17) என் உடல் உயிருள்ளதாகத் திரிந்து கொண்டிருப்பதால், இதயத்தைத் திகைப்படையச் செய்யும் துயரம், அச்சம், செருக்கு ஆகியவற்றையும், இன்ப துன்பங்களையும் நான் (கவலையற்ற) சாட்சியாக மட்டுமே காண்கிறேன்[7].(18) செல்வம் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும், தாகம் மற்றும் பிழையையும் கைவிட்டு, துயரத்தில் இருந்தும், அனைத்து வகை இதயக் கவலைகளிலும் இருந்தும் விடுபட்டுப் பூமியில் திரிந்து விருகிறேன்.(1) அமுதம் பருகிய ஒருவனைப்போல, இம்மையிலோ, மறுமையிலோ, மரணத்திலோ, கொடூரத்திலோ, காமத்திலோ, அவ்வகையான எவற்றிலோ எனக்கு அச்சமேதும் இல்லை.(20) ஓ! பிராமணரே, நான் செய்த கடுமையான, அழிவற்ற தவங்களின் விளைவாக நான் இந்த ஞானத்தை அடைந்திருக்கிறேன். ஓ! நாரதரே, இதன் காரணமாகவே, என்னிடம் வரும் துன்பத்தால் என்னைப் பீடிப்பதில் வெல்ல முடிவதில்லை" என்றார் {சமங்கர்}" {என்றார் பீஷ்மர்}.(21)

[7] "நான் உயிர் வாழும் ஓர் உடலைக் கொண்டிருப்பதால் அவற்றைக் காணும் கடன் எனக்கு இருக்கிறது; ஆனால் நான் அவற்றை ஒரு கவலையுமில்லாத சாட்சியாக மட்டுமே காண்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 287ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்