Monday, October 29, 2018

அறமீட்டல்! - சாந்திபர்வம் பகுதி – 310

The acquisition of Righteousness! | Shanti-Parva-Section-310 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 137)


பதிவின் சுருக்கம் : ஆறமீட்டல் மற்றும் அறிவு ஈட்டல் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் வசுமானுக்கு விளக்கிச் சொன்ன பிராமண முனிவர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு காலத்தில், ஜனக குல மன்னன் ஒருவன் {மன்னன் வசுமான்}, வசிப்பாரற்ற காடுகளில் மானைத் தேடித் திரிந்து கொண்டிருந்தபோது, பிருகு குலத்தைச் சேர்ந்த ஒரு மேன்மையான பிராமணரை அல்லது முனிவரைக் கண்டான்.(1) சுகமாக அமர்ந்திருந்த அந்த முனிவருக்குத் தலைவணங்கிய அந்த மன்னன் வசுமான், அவர் அருகில் அமர்ந்து, அவர் அனுமதியுடன் இந்தக் கேள்வியைக் கேட்டான்:(2) "ஓ! புனிதமானவரே, நிலையற்ற உடலைக் கொண்டவனும், ஆசைகளுக்கு அடிமையாக இருப்பவனுமான ஒரு மனிதனுக்கு இம்மையிலும், மறுமையிலும் எது உயர்ந்த நன்மையை உண்டாக்கும்?" என்று கேட்டான்(3) மன்னனால் முறையாகக் கௌரவிக்கப்பட்டு இவ்வாறு கேட்கப்பட்டவரும், தவத் தகுதி கொண்டவருமான அந்த முனிவர் நன்மைமிக்க வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(4)


முனிவர் {மன்னன் வசுமானிடம்}, "உன் மனத்திற்கு ஏற்புடைய வகையில் இம்மையையும், மறுமையையும் நீ விரும்பினால், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்பில்லாதவற்றைச் செய்வதை நீ தவிர்க்க வேண்டும்.(5) நல்லோருக்கு அறமே நன்மையானது. நல்லோருக்கு அறமே புகலிடமாக இருக்கிறது. அறத்திலிருந்தே அசையும் மற்றும் அசையாத உயிரனங்களுடன் கூடிய மூவுலகங்களும் உண்டாகின.(6) ஓ! ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அனுபவிப்பதில் ஆவலும், விருப்பமும் கொண்டவனே, ஆசைக்குரிய பொருட்களில் நீ இன்னும் தெவிட்டாமல் இருப்பது எவ்வாறு? ஓ! சிறு மதிகொண்டோனே, நீ தேனைக் காண்கிறாயேயன்றி, பள்ளத்தைக் காணாத குருடனாக இருக்கிறாய்.(7) அறக்கனிகளை ஈட்ட விரும்பும் ஒருவன் அறமீட்டுவதில் தன்னை நிறுவிக் கொள்வதைப் போலவே அறிவுக்கனிகளை ஈட்ட விரும்பும் ஒருவனும் தன்னை அறிவை ஈட்டுவதில் நிறுவி கொள்ள வேண்டும்.(8) தீய மனிதன் ஒருவன், அற விருப்பத்தின் காரணமாக, களங்கமற்ற தூய செயலொன்றைச் செய்ய முனைந்தால், அவனது ஆசை நிறைவடைவது சாத்தியமில்லாமல் போகிறது. மறுபுறம், நல்லோனொருவன் அறமீட்டும் விருப்பத்தால் தூண்டப்பட்டுக் கடினமான ஒரு செயலைச் செய்ய முனைந்தாலும், அஃது அவனுக்கு எளிதாக இருக்கிறது.(9) காட்டில் வசிக்கும் ஒருவன், நகரத்தில் வாழும் இல்லறத்தாரின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தால், அவன் காட்டுத் துறவியாக அல்லாமல் நகரவாசியாகவே பார்க்கப்படுவான். அதே போல நகரத்தில் வசிக்கும் ஒருவன், வானப்ரஸ்த வாழ்வுமுறைக்குரிய இன்பநிலையை அனுபவித்துக் கொண்டிருந்தால், அவன் நகரவாசியாக அல்லாமல் காட்டுவாசியாகவே பார்க்கப்படுவான்.(10)

செயல்களின் அறத்தகுதிகளை உறுதி செய்து கொண்டு, செயல்களைத் தவிர்த்து, குவிந்த புலன்களுடன், எண்ணம், சொல் மற்றும் செயலில் அறப்பயிற்சிக்கு உன்னை நீ அர்ப்பணிக்க வேண்டும்.(11) காலம், இடம் ஆகியவற்றின் ஆதிக்கத்தைத் தீர்மானித்து, நோன்புகளையும், தூய்மையாக்கும் பிற சடங்குகளையும் செய்து தூய்மையடைந்து, வன்மம் இல்லாமல் நல்லோருக்குப் பெருங்கொடைகளை அளிக்க வேண்டும்.(12) நேர்மையான வழிமுறைகளில் செல்வத்தை ஈட்டும் ஒருவன், அதைத் தகுந்தோருக்குக் கொடையளிக்க வேண்டும். ஒருவன் கோபத்தைக் கைவிட்டு கொடையளிக்க வேண்டும்; கொடையளித்த பிறகு, அதுகுறித்து வருந்தவோ, அதைப் பற்றிப் பேசவோ கூடாது.(13) கருணை நிறைந்தவனும், தூய்மையானவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், பேச்சில் வாய்மை கொண்டவனும், வெளிப்படைத்தன்மை கொண்டவனும், பிறப்பால் தூய்மையானவனுமான பிராமணன், கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(14) ஒரே கணவனைக் கொண்டவளும், தன் கணவன் சார்ந்த வகையைச் சார்ந்தவளுமான தாய்க்குப் பிறந்த ஒருவன் தூய பிறப்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில், ரிக், யஜுஸ் மற்றும் சாமம் எனும் மூன்று வேதங்களை அறிந்தவனும், (வேள்விகள் செய்வது, பிறரின் வேள்விகளைச் செய்து கொடுப்பது, கல்வி, கற்பித்தல், கொடையளிப்பது, கொடையேற்பது ஆகிய) ஆறு கடமைகளை முறையாகச் செய்பவனுமான அத்தகைய பிராமணன், கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(15)

செயல்படுபவன், காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் தன்மைக்கேற்றபடி, அறம் மறமாகவும், மறம் அறமாகவும் மாறுகிறது.(16) பாவமானது, ஒருவனுடைய உடலில் உள்ள புழுதியைப் போல அகற்றப்பட வேண்டும். சிறியதை சிறு முயற்சியாலும், பெரியதை பெரிய முயற்சியாலும் அகற்ற வேண்டும்.(17) ஒரு மனிதன் தன் குடலின் மாசகற்றிய பிறகு, தன் உடலமைப்பில் (நலம் தரும் சத்து மருந்தாக) மிக நன்மையான செயலைச் செய்யும் நெய்யை உட்கொள்ள வேண்டும். அதே போலவே, ஒருவன் களங்கமனைத்திலும் இருந்து தன்னைத் தூய்மை செய்து கொண்டு, அறமீட்டுவதில் தன்னை நிறுவி கொண்டால் அந்த அறமானது மறுமையில் உயர்ந்த மகிழ்ச்சியை நிச்சயம் உண்டாக்கும்.(18) உயிரினங்கள் அனைத்தின் மனத்திலும் நல்ல மற்றும் தீய எண்ணங்கள் இருக்கின்றன. தீய எண்ணங்களில் இருந்து மனத்தை விலக்கி, அதை நற்சிந்தனைகளை நோக்கிச் செலுத்த வேண்டும்.(19) ஒருவன் தன்னுடைய வகைக்குண்டான நடைமுறைகளை எப்போதும் மதிக்க வேண்டும். எனவே, நீ உன் வகைக்கான நடைமுறைகளில் நம்பிக்கை கொள்ளும் வகையில் செயல்படுவாயாக.(20)

ஓ! பொறுமையற்ற ஆன்மா கொண்டவனே, பொறுமையைப் பயில்வாயாக. ஓ! மூட புத்தி கொண்டவனே, புத்தியடைய முனைவாயாக. அமைதியற்றவனே அமைதியை நாடுவாயாக, ஞானமற்றவனே, ஞானத்துடன் செயல்பட முனைவாயாக.(21) அறவோரின் தோழமையுடன் திரியும் ஒருவன் இம்மைக்கும், மறுமைக்குமான நன்மையான வழிமுறைகளைத் தன் சொந்த சக்தியின் மூலமே அடைவான்.(22) அரசமுனியான மஹாபிஷன் உறுதியற்றவனாக இருந்ததால் சொர்க்கத்தில் இருந்து விழுந்தான். யயாதியும் கூட, (தற்பெருமை பேசியதன் விளைவால்) தன் தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் (சொர்க்கத்தில் இருந்து வீசியெறியப்பட்டாலும்) அவன் தன் உறுதியினால் இன்பவுலகங்களை மீண்டும் அடைவதில் வென்றான்.(23) அறவோர் மற்றும் தவத்தகுதி கொண்ட கல்விமான்களுடன் சேர்வதால் நீ பெரும் புத்தியையும், உனக்கான உயர்ந்த நன்மையையும் நீ அடைவாய்" என்றார் {அந்த முனிவர்}".(24)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "தவசியின் இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், நல்ல மனோநிலை கொண்டவனுமான மன்னன் வசுமான், ஆசைத் தேடல்களைத் தன் மனத்தில் இருந்து விலக்கி, அதை {மனத்தை} அறமீட்டுவதில் நிறுவினான்".(25)

 சாந்திபர்வம் பகுதி – 310ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்