Monday, October 29, 2018

யாஜ்ஞவல்கியர்! - சாந்திபர்வம் பகுதி – 311

Yajnavalkya! | Shanti-Parva-Section-311 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 138)


பதிவின் சுருக்கம் : பிரகிருதி மற்றும் படைப்புமுறை குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, கடமையில் இருந்து விடுபட்டதும், அதற்கு மாறானதும் {தர்ம அதர்மங்களில் இருந்து விடுபட்டதும்}, அனைத்து ஐயங்களில் இருந்தும் விடுபட்டதும், பிறப்பு, இறப்பு, அறம் {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகியவற்றைக் கடந்திருப்பதும், மங்கலமானதும், நித்திய அஞ்சாமையும், நித்தியமானதும், அழிவற்றதும், மாற்றமில்லாததும், எப்போதும் தூய்மையானதும், கடும் உழைப்பில் இருந்து எப்போதும் விடுபட்டதும் எதுவோ, அதைக் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(1,2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் யாஜ்ஞவல்கியர் மற்றும் ஜனகன் {ஜனககுல மன்னன் தேவராதன்} ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில், கேள்விகள் அனைத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக அறிந்தவனும், புகழ்பெற்றவனுமான ஜனக குல மன்னன் தேவராதன், முனிவர்களில் முதன்மையான யாஜ்ஞவல்கியரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான்.(4)

ஜனகன் {தேவராதன், யாஜ்ஞவல்கியரிடம்}, "ஓ! மறுபிறப்பாள முனிவரே, புலன்கள் எத்தனை வகைப்படும்? பிரகிருதி எத்தனை வகைப்படும்? புலப்படாதது {அவ்யக்தம்} எது? உயர்ந்த பிரம்மம் {பரப்பிரம்மம்} எது? பிரம்மத்தைவிட உயர்ந்தது எது?(5) பிறப்பும், இறப்பும் எது? கால அளவுகள் என்னென்ன? ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, உமது அருளைப் பெற்று உம்மிடம் நான் வேண்டும் இக்காரியங்கள் அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(6) நானோ அறியாதவன், நீரோ ஞானப் பெருங்கடல். எனவே, உண்மையில் கேட்க விரும்பியே இக் காரியங்கள் குறித்து உம்மைக் கேட்கிறேன்" என்றான்.(7)

யாஜ்ஞவல்கியர் {தேவராதனிடம்}, "ஓ! ஏகாதிபதி, உன் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்கிறேன் கேட்பாயாக. யோகிகள் மதிப்பதும், சாங்கியர்களிடம் உள்ளதுமான உயர்ந்த ஞானத்தை நான் உனக்குச் சொல்கிறேன்.(8) நீ அறியாதது ஏதுமில்லை. இருந்தும் என்னைக் கேட்கிறாய். எனினும், கேள்வி கேட்கப்படுபவன் பதிலளிக்க வேண்டும். இதுவே நித்திய நடைமுறையாம்.(9) பிரகிருதி என்ற பெயரில் எட்டுக் {8} கோட்பாடுகள் அழைக்கப்படுகின்றன, அதே வேளையில் மாறுபாடுகள் என்று பதினாறு {16 விகாரங்கள்}அழைக்கப்படுகின்றன. புலப்படாதவை {அவ்யக்தம்} ஏழாகும் {7}. இவையே அத்யாத்ம அறிவியலை அறிந்தோரின் கருத்துகளாக இருக்கின்றன.(10) புலப்படாதது (அல்லது மூலப் பிரகிருதி {அவ்யக்தம்}), மஹத், நனவுநிலை {அகங்காரம்}, பூமி, காற்று, வெளி, நீர், ஒளி(11) ஆகிய நுட்பமான ஐந்து பூதங்கள் உள்ளிட்ட இந்த எட்டும் பிரகிருதி என்ற பெயரில் அறியப்படுகின்றன. மாறுபாடுகள் {விகாரங்கள்} என்றழைக்கப்படுபவற்றின் பட்டியலை இப்போது கேட்பாயாக. காது, தோல், கண், நாக்கு, மூக்கு;(12) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம், வாக்கு, இரு கரங்கள், இரு கால்கள், குதம் மற்றும் இன்பஉறுப்புகள் {மற்றும் மனம்} ஆகியவையே அவை[1].(13)

[1] "மனம் உள்ளிட்ட இவையே விக்ருதி அல்லது பிரகிருதியின் மாறுபாடுகள் என்றழைக்கப்படும் பட்டியலில் பதினாறு உள்ளடக்கங்களாக அமைகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இவற்றில் ஒலி முதலிய பத்தும், ஐம்பெரும் கோட்பாடுகளில்[2] பிறப்பவையும் விசேஷங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஓ! மிதிலையின் ஆட்சியாளா, அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} ஐந்தும் சவிசேஷம் என்று அழைக்கப்படுகின்றன.(14) அத்யாத்ம அறிவியலை அறிந்த மனிதர்கள் மனத்தைப் பதினாறாவதாகக் கருதுகிறார்கள். இஃது உன் கருத்துகளுக்கும், கோட்பாடுகள் குறித்த உண்மைகள் அறிந்த பிற கல்விமான்களுக்கும் இணக்கமானதே ஆகும்.(15) ஓ! மன்னா {தேவராதா}, புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்து மஹத்-ஆன்மா {ஹிரண்ய கர்ப்பனின் நான்கில் ஒரு பங்கு} உண்டாகிறது. பிரதானம் (அல்லது பிரகிருதி) தொடர்பான முதல் படைப்பு இஃது எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள்.(16) ஓ! மனிதர்களின் மன்னா, மஹத்திலிருந்து நனவுநிலை {அஹங்காரம்} உண்டாகிறது. புத்தியைத் தன் சாரமாகக் கொண்ட இஃது இரண்டாம் படைப்பு என்றழைக்கப்படுகிறது[3].(17) நனவுநிலையில் {அஹங்காரத்தில்} இருந்து ஒலியைத் தன் சாரமாகக் கொண்ட மனமும், வெளியின் {ஆகாயத்தின்} குணங்களைக் கொண்ட பிறவும், எஞ்சியவையும எழுந்தன. இது நனவுநிலை தொடர்பானது மூன்றாம் படைப்பு என்று சொல்லப்படுகிறது.(18) ஓ! மன்னா, மனத்தில் இருந்து (எண்ணிக்கையில் ஐந்தான) பெரும்பூதங்கள் உண்டாகின. மனோநிலை {மானஸம்} என்று நான் சொல்வது போல அழைக்கப்படும் இதை, நான்காம் படைப்பாக அறிவாயாக.(19) (அடிப்படை) பெரும் பூதங்களின் தொடர்புடைய ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம் ஆகியவை ஐந்தாம் படைப்பு எனப் பூதங்களை அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.(20)

[2] "இவை நுண்கோட்பாடுகள் அல்லது தன்மாத்திரைகளாகும், திரள் பூதங்கள் அல்ல" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "மஹத் சில வேளைகளில் புத்தி என்றுமழைக்கப்படுகிறது. எனவே, மஹத்திலிருந்து உண்டான நனவுநிலையும் புத்தி தொடர்புடைய படைப்பாகவே இருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

காது, தோல், கண், நாக்கு, மூக்கு ஆகியவற்றின் {அறிவுப்புலன்களின் / ஞானேந்திரியங்களின்} படைப்பு ஆறாவதாகவும், எண்ணப் பன்மையின் சாரத்தைக் கொண்டதாகவும் கருதப்படுகிறது.(21) பிறகு, ஓ! ஏகாதிபதி, காது முதலியவற்றுக்கு அடுத்து வரும் புலன்கள் (செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} எழுகின்றன. ஏழாம் படைப்பு என்றழைக்கப்படும் இவை {இந்தச் செயற்புலன்கள் / இந்தக் கர்மேந்திரியங்கள்} அறிவுப்புலன்களுடன் {ஞானேந்திரியங்களுடன்} தொடர்பு கொள்கின்றன.(22) ஓ! ஏகாதிபதி, அதன் பிறகே மேல் நோக்கிய மூச்சுக் காற்றும் (பிராணனும்) குறுக்காக ஏழும் (சமானன், உதானன், வியானன் உள்ளிட்ட) மூச்சுக்காற்றுகளும் உண்டாகின்றன. எட்டாம் படைப்பான இஃது ஆர்ஜவம் என்றழைக்கப்படுகிறது[4].(23) அடுத்து உடலின் கீழ்ப்பகுதிகளில் குறுக்காகச் செல்லும் (சமானன், உதானன் மற்றும் வியானனும்) மூச்சுக்காற்றுகளும், கீழ்நோக்கிச் செல்லும் அபானன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்றும் வருகிறது. ஓ! மன்னா, ஒன்பதாம் படைப்பான இதுவும் ஆர்ஜவம் என்றே அழைக்கப்படுகிறது.(24) ஓ! ஏகாதிபதி, இந்த ஒன்பது வகைப் படைப்புகளும், இந்த இருபத்துநான்கு கோட்பாடுகளும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி அறிவிக்கப்படுகின்றன.(25) ஓ! மன்னா, இதன் பிறகு, இந்தக் கோட்பாடுகள் அல்லது குணங்களைப் பொறுத்தவரையில் கல்விமான்களால் குறிப்பிடப்படும் கால அளவை உனக்குச் சொல்லப் போகிறேன்" என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(26)

[4] "ஆர்ஜவன் என்பது "நேரான பாதைகள் அல்லது போக்குகள்" என்ற பொருளைக் கொண்டதாகும். காற்று அல்லது மூச்சுக்காற்றின் நேரான போக்கை இது குறிக்கிறது. இந்த மூச்சுக்காற்றுகளைக் குறிப்பிடுவதால் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றைத் தவிர உடல் அமைப்பில் உள்ள பிற உறுப்புகளின் படைப்பும் மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 311ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்