Tuesday, October 30, 2018

இருபது பூதங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 312

Twenty Bhutas! | Shanti-Parva-Section-312 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 139)


பதிவின் சுருக்கம் : அவ்யக்த முதலியவற்றின் காலக்கணக்கையும், படைப்பையும் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்..


யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, புலப்படாததை (அல்லது பரம புருஷனைப்) பொறுத்தவரையிலான காலக்கணக்கை உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக. பத்தாயிரம் {10000} கல்பங்கள் அவனுடைய ஒரு பகல் என்று சொல்லப்படுகிறது.(1) அவனது இரவின் காலமும் அதே அளவு {10000 கல்பங்கள்} கொண்டதாகும். ஓ! ஏகாதிபதி, அந்த இரவு முடிந்ததும் அவன் முதலில் உடல் கொண்ட உயிரினங்கள் வாழ்வதற்கான செடி கொடிகளைப் படைக்கிறான்.(2) பிறகு அவன் தங்க முட்டையில் இருந்து எழும் பிரம்மனைப் படைக்கிறான். அந்தப் பிரம்மன் படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் வடிவமாவான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) ஒரு முழு வருடம் அந்த முட்டைக்குள் இருந்தவனும், பெரும் தவசியும், பிரஜாபதி (அனைத்து உயிரினங்களின் தலைவன்) என்றும் அழைக்கப்படுபவனுமான பிரம்மன் அதைவிட்டு {அந்த முட்டையை விட்டு} வெளியே வந்து, மொத்த பூமியையும், மேலுள்ள சொர்க்கத்தையும் படைத்தான்.(4)

பிறகு அந்தத் தலைவன் {பிரம்மன்}, வானத்தை இடையில் வைத்து சொர்க்கத்தையும், பூமியையும் பிரித்தான்.(5) பிரம்மனின் ஒரு பகல் ஏழாயிரத்து ஐநூறு {7500} கல்பங்களாகும்.(6) அத்யாத்ம அறிவியல் அறிந்த மனிதர்கள், அவனது இரவும் அதே அளவைக் கொண்டது என்று சொல்கிறார்கள். மஹான் என்றழைக்கப்படும் அந்தப் பிரம்மன், பிறகு பூதம் என்றழைக்கப்படுவதும், சிறந்த சாரத்தைக் கொண்டதுமான நனவுநிலையை {அகங்காரத்தைப்} படைக்கிறான்[1].(7) பெரும்பூதங்கள் என்றழைக்கப்படும் உட்பொருள்களில் இருந்து எந்த உடலையும் படைப்பதற்கு முன்னால், தவங்களுடன் கூடிய மஹான் அல்லது பிரம்மன், அவனது மகன்கள் என்றழைக்கப்படும் நால்வரை படைத்தான்[2].(8)

[1] "இங்கே சொல்லப்படும் ரிஷி என்பது மஹான் அல்லது பெரிய என்ற பொருளைத் தரும். நனவுநிலை சிறந்த சாரத்தைக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது, மேலும் எண்ணிக்கையில் ஐந்தான பெரும்பூதங்களை உண்டாக்கும் வல்லமை கொண்டிருக்கும் காரணத்தால் அது பூதம் என்றும் அழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "இவை, மனம், புத்தி, நனவுநிலை மற்றும் சமஷ்டிக்குப் பதிலாக வியஷ்டி என்று கருத்தப்படும் சித்தம் ஆகியனவாகும் என உரையாசிரியர் விளக்குகிறார். இவற்றில் இருந்தே மஹாபூதங்கள் பிறந்தன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! ஏகாதிபதி, நான்கு உள் இயக்கங்களோடு கூடிய (அறிவுப்) புலன்கள் {ஞானேந்திரியங்கள்} பித்ருக்களில் (பித்ருக்கள் என்றழைக்கப்படும் பெரும்பூதங்களில்) இருந்து உண்டாகின. அசைவன மற்றும் அசையாதவற்றைக் கொண்ட இந்த மொத்த அண்டமும் அந்தப் பெரும்பூதங்களாலேயே நிறைந்திருக்கிறது[3].(9) பலமிக்க நனவுநிலையே {அகங்காரமே} ஐம்பூதங்களையும் படைத்தது. அவை பூமி, காற்று, வெளி {ஆகாயம்}, நீர் மற்றும் ஒளியென்று எண்ணிக்கையில் ஐந்தாக இருக்கிறது.(10) மூன்றாம் படைப்பான (பெரும் பூதமான) இந்த நனவுநிலை {அகங்காரம்}, தன் இரவுக்கு ஐயாயிரம் {5000} கல்பங்களையும், பகலுக்கு அதே கால அளவையும் கொண்டிருக்கிறது.(11) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம் ஆகிய இந்த ஐந்தும் விசேஷங்கள் {தன்மாத்திரைகள்} என்றழைக்கப்படுகின்றன. அவை ஐம்பெரும் பூதங்களுக்குள் பொதிந்திருக்கின்றன.(12)

[3] "தேவா என்பது புலன்கள் மற்றும் நான்கு உள் இயக்கங்கள் என உரையாசரியரால் விளக்கப்படுகிறது. தேவாய என்பது பூதங்களைக் குறிப்பதாக அவர் கருதுகிறார். வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால் அது, "தேவர்கள் பித்ருக்களின் பிள்ளைகள்; அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட உலகங்கள் அனைத்தும் தேவர்களால் மறைக்கப்படுகின்றன" என்ற பொருளைத் தரும். ஆனால் உரையாசிரியரின் வழிகாட்டலைப் புறக்கணிப்பதும் பாதுகாப்பாகாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னா, இந்த ஐந்தாலும் உடனே படர்ந்தூடுருவப்படும் {நீக்கமற நிறைக்கப்படும்} பூதங்கள் அனைத்தும், ஒன்றோடொன்று தோழமையை விரும்பி, ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன;(13) ஒன்றையொன்று சவாலுக்கழைத்து, ஒன்றையொன்று கடந்திருக்கின்றன; மாற்ற முடியாத மயக்கக் கோட்பாடுகளால் வழிகாட்டப்படும் உயிரினங்கள் ஒன்றையொன்று கொன்று, எண்ணற்ற இடைநிலை வகை உயிரினங்களில் புகுந்து இவ்வுலகில் திரிகின்றன.(14) அவற்றின் ஒருபகல் மூவாயிரம் {3000} கல்பங்களாகும். அவற்றின் இரவும் அதே அளவைக் கொண்டதாகும்.(15) ஓ! மன்னா {தேவராதா}, மனமானது {மூளையானது} புலன்களால் வழிகாட்டப்பட்டு அனைத்துப் பொருட்களிலும் திரிகிறது. புலன்கள் எதையும் உணர்வதில்லை. மனமே அவற்றின் மூலம் எதையும் உணர்கிறது.(16)

கண்ணானது, மனத்தின் {மூளையின்} துணையால் வடிவங்களைப் பார்க்கிறதேயன்றி தன்னாலல்ல. மனத்தின் கவனம் திரும்புகையில், கண்ணின் முன்பு ஒரு பொருள் இருந்தாலும் அதைக் காணத் தவறுகிறது.(17) புலன்கள் உணர்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. புலன்களின் மூலம் மனமே உணர்வதால் இதில் உண்மையில்லை.(18) மனத்தின் செயல்பாடு நிறுத்தப்படும்போது, அதைப் பின்தொடர்ந்து புலன்களின் செயல்பாடும் நின்று போகிறது. மனச்செயல்பாட்டின் நிறுத்தமே புலன்களின் செயல்பாட்டை நிறுத்தும். எனவே ஒருவன் புலன்கள் மனத்தின் ஆளுகையில் இருப்பதாகக் கருத வேண்டும்.(19) உண்மையில் மனமே, புலன்கள் அனைத்தின் தலைவன் என்று சொல்லப்படுகிறது. ஓ! பெரும்புகழ் கொண்டவனே, அண்டத்தில் இருக்கும் இருபது பூதங்கள் இவையே" என்றார் {யாஜ்ஞவல்கியர்}[4].(20)

[4] கும்பகோணம் பதிப்பில், "மனம் ஒழிவடைந்தபொழுது இந்திரியங்களுக்கு ஒழிவு ஏற்படும். இந்திரியங்கள் ஒழிவடைந்தபொழுது மனத்திற்கு ஒழிவு ஏற்படாது. இவ்விதம் இந்திரியங்கள் மனத்தைப் பிரதானமாகவுடையவைகளென்று கருத வேண்டும். எல்லா இந்திரியங்களுக்கும் மனம் தலைமையாகச் சொல்லப்படுகிறது. மிக்கப் புகழுள்ளவனே, இவ்வுலகத்தில் எல்லாப் பூதங்களும் இந்த மனத்தில் பிரவேசிக்கின்றன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இருபது என்ற எண்ணிக்கை சுட்டிக்காட்டப்படவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 312ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்