Wednesday, October 31, 2018

குணமும் கதியும்! - சாந்திபர்வம் பகுதி – 315

Attributes and end! | Shanti-Parva-Section-315 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 142)


பதிவின் சுருக்கம் : குணங்களும், வினைகளும் அடையும் கதிகளைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...


யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) இந்த மூன்றும் பிரகிருதியின் குணங்களாகும். இவை அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுடனும் தொடர்புடையவையாகவும், அவற்றை எப்போதும் உள்ளீர்ப்பவையாகவும் இருக்கின்றன.(1) யோக குணங்கள் ஆறைக் கொண்ட புலப்படாத {அவ்யக்தமான} புருஷன் (இந்த முக்குணங்களைத் தழுவுவதன் மூலம்) நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக் கணக்கான வடிவங்களாகத் தன்னைத் தானே மாற்றிக் கொள்கிறான்.(2) அத்யாத்ம அறிவியலை அறிந்தவர்கள் சத்வ குணம் அண்டத்தில் உயர்ந்த இடத்திற்கும், ரஜஸ் நடுநிலைக்கும், தமஸ் இழிந்த இடத்திற்கும் ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.(3) கலப்பில்லாத அறத்தின் துணையின் மூலம் ஒருவன் (தேவர்களுக்குரிய) உயர்ந்த கதியை அடைகிறான். பாவத்துடன் கலந்த அறத்தின் மூலம் ஒருவன் மனித நிலையை அடைகிறான். அதே வேளையில் கலப்பில்லாத பாவத்தின் மூலம் (விலங்காகவோ, தாவரம் முதலியவையாகியோ) ஒருவன் இழிந்த கதியை அடைகிறான்.(4)

ஓ! மன்னா {தேவராதனா}, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் கலவைகளைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் இப்போது கேட்பாயாக.(5) சிலவேளைகளில் ரஜஸானது சத்வத்துடன் சேர்ந்து காணப்படுகிறது. தமஸ் ரஜஸுடன் இருக்கிறது. தமஸுடன் சத்வமும் காணப்படுகிறது. சத்வம், ரஜஸ், தமஸ் சம அளவில் கலந்திருப்பதும் காணப்படுகிறது. அவை புலப்படாதவளாக, அல்லது பிரகிருதியாக அமைகின்றன.(6) புலப்படாதவன் (அவ்யக்தமான புருஷன்) சத்வத்துடன் சேரும்போது அவன் தேவர்களின் உலகங்களை அடைகிறான். சத்வம் மற்றும் ரஜஸ் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும்போது, அவன் மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பெடுக்கிறான்.(7) ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்போது, அவன் இடைநிலை உயிரினங்களில் பிறப்பெடுக்கிறான். மூன்று குணங்களான சத்வம், ரஜஸ், தமஸ் என அனைத்தையும் கொண்டிருப்பவன், மனிதன் என்ற நிலையை அடைவான்.(8)

அறம் {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டையும் கடந்த உயர் ஆன்ம மனிதர்கள், நித்தியமானதும், மாற்றமில்லாததும், சிதைவற்றதும், அழிவற்றதுமான இடத்தை {கதியாக} அடைகிறார்கள்.(9) ஞானிகள், மிக மேன்மையான பிறவிகளை அடைந்து, களங்கமற்றதும், சிதைவற்றதும், புலன்களின் அறிவுக்கு எட்டியதைக் கடந்ததும், அறியாமையில் இருந்து விடுபட்டதும், பிறப்பு இறப்புக்கு மேலானதும், அனைத்து வகை இருளையும் விலக்கும் முழு ஒளி உள்ளதுமான இடத்தை {கதியாக} அடைகின்றனர்.(10) புலப்படாதவளில் {பிரகிருதியில்} வசிக்கும் பரமனின் (புருஷனின்) இயல்பைக் குறித்து நீ என்னிடம் கேட்டாய். நான் உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா, கேட்பாயாக. பிரகிருதியில் வசிக்கும்போது, பிரகிருதியின் இயல்பை ஏற்காமல் தன்னியல்பிலேயே அவன் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.(11) ஓ! மன்னா, பிரகிருதியானவள் அசைவற்றவளாகவும் {உயிரற்றவளாகவும்}, புத்தியற்றவளாகவும் இருக்கிறாள். புருஷனால் தலைமை தாங்கப்படும்போது மட்டுமே, அவளால் படைக்கவும், அழிக்கவும் முடியும்" என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(12)

ஜனகன் {தேவராதன்}, "ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இருவரும் தொடக்கமும், முடிவும் அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வடிவமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இரண்டும் சிதைவற்றவர்களாக இருக்கிறார்கள்.(13) அவர்கள் இருவரும் புரிந்துகொள்ளப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அவர்களில் ஒருவர் அசைவற்றவள் {உயிரற்றவள்}, புத்தியற்றவள் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார்? மேலும் மற்றொருவர் அசைவுள்ளவன் {உயிருள்ளவன்}, புத்தியுள்ளவன் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார்? மேலும் பின்னவன் ஏன் க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறான்?(14) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, விடுதலையறம் {மோக்ஷதர்மம்} குறித்து முற்றும் அறிந்தவர் நீர். அந்த விடுதலை அறத்தை உம்மிடமிருந்து நான் முற்றாக அறிய விரும்புகிறேன்.(15)

புருஷனின் இருப்பு, அவனது ஒருமை, பிரகிருதியில் இருந்து தனிப்பட்டிருக்கும் அவனது தன்மை, உடலுடன் தொடர்புடைய தேவர்கள்,(16) உடல்படைத்த உயிரினங்கள் இறந்ததும் செல்லும் இடம், காலப்போக்கில் அவை இறுதியாகச் சென்றடையக்கூடிய இடம் ஆகியவற்றை எனக்குச் சொல்வீராக.(17) சாங்கிய அமைப்பிலும், யோக அமைப்பிலும் விளக்கப்படும் ஞானத்தைத் தனித்தனியாக எனக்குச் சொல்வீராக. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, மரணம் குறித்த முன்னெச்சரிக்கை குறியீடுகளைக் குறித்தும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். இக்காரியங்கள் அனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல நீர் நன்குஅறிந்திருக்கிறீர்" என்று கேட்டான் {ஜனக குல மன்னன் தேவராதன்}.(18)

சாந்திபர்வம் பகுதி – 315ல் உள்ள சுலோகங்கள் : 18

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்