Thursday, November 01, 2018

யோகம்! - சாந்திபர்வம் பகுதி – 317

Yoga! | Shanti-Parva-Section-317 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 144)


பதிவின் சுருக்கம் : யோக நிலைகளான சகுண பிராணாயாமம், நிர்க்குண பிராணாயாமம், சமாதி ஆகியவை குறித்தும் யோகிகளின் தத்துவம் குறித்தும் ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...


யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனுக்கு}, "நான் சாங்கியர்களின் அறிவியலை உனக்குச் சொன்னேன். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இப்போது, யோகிகளின் அறிவியலை நான் கேள்விப்பட்டவகையிலும், பார்த்த வகையிலும் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(1) சாங்கிய ஞானத்தோடு ஒப்பிடத்தக்க வகையில் வேறு ஞானம் ஏதும் இல்லை. யோக பலத்தோடு ஒப்பிடத்தக்க வகையில் வேறு பலம் ஏதும் கிடையாது. ஒரே நடைமுறைகளை விதிக்கும் இவ்விரண்டும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கவல்லவையாகக் கருதப்படுகின்றன.(2) புத்தியால் அருளப்படாத மனிதர்களே சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டிருப்பதாகக் கருதுகிறார்கள். எனினும், ஓ! மன்னா, அவற்றை (கற்று, சிந்தித்த பிறகு) நாம் அடையும் தீர்மானத்தின்படி அவற்றை ஒன்றாகவே நாம் காண்கிறோம்.(3) சாங்கியர்கள் பார்ப்பதையே யோகிகளும் பார்க்கிறார்கள். சாங்கியம் மற்றும் யோக அமைப்புகளை ஒன்றாகக் காண்பவன், அண்டத்தை விதிக்கும் தத்துவங்கள், அல்லது கோட்பாடுகளை உண்மையில் அறிந்தவனாகக் கருதப்படுகிறான்.(4)

ஓ! மன்னா {தேவராதனா}, உயிர் மூச்சுகளும், புலன்களுமே யோகம் பயில்வதற்கான முக்கிய வழிமுறைகள் என்பதை அறிவாயாக. அந்த உயிர் மூச்சுகளையும், புலன்களையும் ஒழுங்கு செய்வதன் மூலம் மட்டுமே யோகிகள் தங்கள் விருப்பப்படி எங்கும் திரிகிறார்கள்[1].(5) பருவுடல் அழிவடையும்போது, (அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் முதலிய அட்டமா சித்திகளான) எட்டு யோக குணங்களைக் கொண்ட நுண்ணுடல்களுடன் அனைத்து வகை இன்பநிலைகளையும் (அவ்வுடலால்) அனுபவித்தபடியே அண்டத்தில் திரிகிறார்கள்.(6)

யோக பலம் எட்டு வகையெனச் சாத்திரங்களில் ஞானிகள் சொல்லியிருக்கின்றனர். அவர்கள் யோகத்தை எட்டு அங்கங்களைக் கொண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்[2].(7) உண்மையில், ஓ! மன்னா, அவர்கள் வேறு எவ்வகை யோகத்தைக் குறித்தும் பேசவில்லை. யோகிகளின் சிறந்த நடைமுறைகளில் (அவற்றின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு) இரண்டுவகை உண்டு எனச் சொல்லப்படுகிறது. சாத்திரங்களில் தோன்றும் குறியீடுகளின்படி அவை, குணங்களுடன் கூடிய நடைமுறை {சகுணயோகம்} மற்றும் குணங்களில் இருந்து விடுபட்ட நடைமுறை {நிர்க்குணயோகம்} என்று இருவகைப்படும்.(8)

[1] "இங்கு ருத்ரம் என்பது பிராணவாயு மற்றும் பிற வாயுக்களைக் குறிக்கும் சொல்லாகும். உயிர் மூச்சுகளையும், புலன்களையும் ஒழுங்குமுறை செய்வதன் மூலம் யோக பலத்தை அடையும் யோகிகள், தங்கள் லிங்க சரீரம் அல்லது நுண்உடல்களுடன் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்வதில் வெல்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "பிராணாயாமம், பிரத்யாஹாரம், தியானம், தாரணை, தாரகம், சமாதி, யமம் மற்றும் நியமம் ஆகியவையே யோகத்தின் அந்த எட்டு அங்கங்களாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னா {தேவராதனா}, மூச்சை அடுத்தடுத்து ஒழுங்குசெய்து, (குறிப்பிட்ட பதினாறு பொருட்களில்) மனத்தைக் குவிப்பது (ஒரு வகை {யோகம்} ஆகும்). காலம் நெடுகிலும் புலன்களை அடக்கி (தியானிப்பவர், தியானிக்கப்படும் பொருள் ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் அனைத்தையும் அழிக்கும் வழியில்) மனத்தைக் குவிப்பது (மற்றொரு வகை {யோகம்} ஆகும்). முதல் வகை யோகம் குணங்களைக் கொண்டதாக {சகுண யோகமாகச்} சொல்லப்படுகிறது; இரண்டாம் வகைக் குணங்களில் இருந்து விடுபட்டதாக {நிர்க்குண யோகமாகச்} சொல்லப்படுகிறது[3].(9) மேலும் மூச்சை ஒழுங்குமுறை செய்தல் குணங்களுடன் கூடிய யோகமாகும். குணங்களற்ற யோகத்தில் மனமானது, அதன் செயல்பாடுகளில் இருந்து விடுபட்டு நிலைத்திருக்க {குவிந்திருக்க} வேண்டும். ஓ! மிதிலையின் ஆட்சியாளா {தேவராதனா}, (உள்ளிழுத்து நிறுத்தப்படும்) மூச்சானது, (வரையறுக்கப்பட்ட மந்திரத்தின் மூலம்) ஒரு திட்டவட்டமான தோற்றத்தின் மீது மனத்தைச் செலுத்தாமல் வெளியேற்றப்பட்டால், அந்தப் புதிய பயிற்சியாளனின் {உடல்} அமைப்பில் காற்று {வாயு} பெருகி, அவனுக்குப் பெரும் தீங்கை இழைக்கும் என்பதால், குணங்களுடன் கூடிய மூச்சுப் பயிற்சி {சகுண பிராணாயாமம்} மட்டுமே அவனால் முதலில் செய்யப்பட வேண்டும்[4].(10) இரவின் முதல் யாமத்தில் {ஜாமத்தில்}, மூச்சைப் பிடிக்கும் பனிரெண்டு வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உறங்கிய பிறகு, இரவின் இறுதி யாமத்தில், அதையே செய்வதற்கு வேறு பனிரெண்டு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.(11) அமைதியாக இருப்பவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், ஓய்வில் வாழ்பவனும், தன்னில் மகிழ்பவனும், சாத்திரங்களின் கருத்துகளை முழுமையாக அறிந்தவனுமான ஒருவன், (இந்த இருபத்துநான்கு வழிமுறைகளின் மூலம் மூச்சை ஒழுங்குபடுத்தி) தனது ஆன்மாவை (பரமாத்மாவில்) நிலைநிறுத்த வேண்டும்[5].(12)

[3] "9ம் ஸ்லோகத்தின் முதல் வரியில் உள்ள பிராணாயாமம் என்ற சொல், உயிர்மூச்சுகளை ஒழுங்கபடுத்தும் செயலைக் குறிக்கிறது. இரண்டாம் வரியில் உள்ள அதே சொல் மனத்தால் புலன்களை அழிப்பதைக் குறிக்கிறது. யோக சாத்திரங்களில் குறிப்பிடப்படும் பதினாறு பொருட்களில் அடுத்தடுத்து மனத்தை நிலைபெறச் செய்வது தாரணை என்று சொல்லப்படுகிறது. ஏகாகிரதை ekaagrataa என்ற சொல், தியாத்ரி, தேயம், தியானம் ஆகியவற்றுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் அறியாத மனம் குவிந்த நிலையைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "பிராணாயாமம் பயிலாதவர்களுக்கு இதை முழுமையாகப் புரிந்து கொள்வது கடினமானதாக இருக்கும். உண்மையில், சகுண பிராணாயாமத்தில், மூச்சு உள்ளிழுக்கப்படும்போது, நன்கறியப்பட்ட மந்திரத்தை மனத்தில் சொல்வதற்கு ஆகும் காலம் வரை அஃது உள்ளிழுக்கப்படும். அவ்வாறு உள்ளிழுக்கப்படும் மூச்சு நிறுத்தப்படும் போதும், ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை மனத்தால் சொல்லும் காலம் வரை அது நிறுத்தப்படும். எனவே, அவ்வாறு மூச்சு நிறுத்தி வைக்கப்படும் காலத்தின் அதே அளவுக்கு அது வெளியேற்றப்படவும் வேண்டும். தொடக்கப் பயிற்சியாளர்களுக்கு இந்தச் சகுண பிராணாயாமமே பரிந்துரைக்கப்படுகிறது. மூச்சு வெளியேறுவது குறித்து மட்டுமே சொல்லப்பட்டிருந்தாலும், அஃது உள்ளிழுப்பதையும், நிறுத்தப்படுவதையும் சேர்த்தே குறிக்கும். இம்மூன்று நடைமுறைகளும், பூரகம், கும்பகம் மற்றும் ரேசகம் என்று யோக மொழியில் குறிப்பிடப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] "ஏகாந்தாசிலி என்பது சந்நியாசியைக் குறிக்கும்; ஆத்மாராமம் என்பது ஒருவன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் இல்லாமல் தன் ஆன்மாவிலேயே இன்பம் பெறும் நிலையைக் குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஐம்புலன்களின் ஐந்து களங்கங்களான ஒலி, வடிவம், ஊறு {தீண்டல்}, சுவை மற்றும் மணத்தை (அவற்றை அவை நுகரும் பொருட்களில் இருந்து விலகச் செய்து) களைந்து,(13) ஓ! மிதிலையின் ஆட்சியாளா, பிரதீபம், அபபங்கம் என்றழைக்கப்படும் நிலைகளைக் களைந்து, புலன்கள் அனைத்தும் மனத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.(14) ஓ! மன்னா, மனமானது நனவுநிலையில் {அகங்காரத்தில்} நிலைநிறுத்தப்பட வேண்டும்; நனவுநிலையானது புத்தியில் நிலைநிறுத்தப்பட வேண்டும்; புத்தியானது பிரகிருதியில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.(15) இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக இவற்றைக் கலக்கும் யோகிகள், ஒன்றேயானவனும், ரஜஸ் குணத்தில் இருந்து விடுபட்டவனும், களங்கமற்றவனும், நிலையானவனும், எல்லையற்றவனும், தூய்மையானவனும், குறையற்றவனும்,(16) நித்தியபுருஷன் என்றழைக்கப்படுபவனும், மாற்றமில்லாதவனும், பிரிக்கப்பட முடியாதவனும், சிதைவும், அழிவும் அற்றவனும், எப்போதும் இருப்பவனும், குறைவைக் கடந்தவனும், நிலையான பிரம்மமுமான பரமாத்மாவைத் தியானிக்கிறார்கள்.(17)

ஓ! ஏகாதிபதி, யோகத்தில் இருப்பவனின் குறியீடுகளைக் குறித்து இப்போது கேட்பாயாக. சமாதியில் இருப்பவனிடம் நிறைவாக உறங்குபவனிடம் காணப்படும் நிறைவும் மற்றும் உற்சாகக் குறியீடுகள் அனைத்தும் இருக்கும்.(18) சமாதியில் இருப்பவன், எண்ணெய் நிறைந்ததும், காற்று இல்லாத பகுதியில் எரிவதுமான விளக்கின் நிலைத்த மேல்நோக்கிய தழலைப் போலத் தெரிவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(19) மேகங்களில் இருந்து கனமழை பொழிந்தாலும், சற்றும் அசைக்கப்பட முடியாத ஒரு பாறையைப் போலவே அவன் இருப்பான்.(20) சங்கங்கள், பேரிகைகள், அல்லது பாடல்கள் அல்லது நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளின் ஒலி ஒன்றாக முழங்கும்போதும் அந்த ஆரவாரத்தால் அசைக்கப்பட முடியாதவனாக அவன் இருப்பான். இதுவே சமாதியில் இருப்பவனின் குறியீடாகும்.(21)

பதற்றமற்ற துணிவும், உறுதிப்பாடும் கொண்ட மனிதன், தன் கரங்களில் எண்ணெய் நிறைந்த பாத்திரத்துடன் படிகளில் ஏறும்போது, ஆயுதம் தரித்த மனிதர்களால் அச்சுறுத்தப்பட்டாலும், ஒரு துளி எண்ணெயையும் சிந்த விடாததைப் போலவே ஒரு யோகியும், தன் மனம் குவிந்த சமாதி நிலையில் பரமாத்மாவைக் காணும்போது, தன் புலன்களின் செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தியிருப்பதன் விளைவால் சற்றும் அசையாதவனாக இருப்பான். இதுவும் சமாதியில் இருக்கும் யோகியின் குறியீடாக அறியப்பட வேண்டும்.(22-24)

சமாதியில் இருக்கும்போது அந்த யோகி, நிலையானதும், அடர்ந்த இருளுக்கு மத்தியில் சுடர்மிக்க ஒளியாக இருப்பதுமான பரப்பிரம்மத்தைக் காண்கிறான்.(25) இவ்வழிமுறைகளின் மூலமே அவன் பல வருடங்கள் சென்றதும், தன் உயிரற்ற உடலைக் கைவிட்டு விடுதலையை {முக்தியை} அடைகிறான். இதையே நித்யமான ஸ்ருதி அறிவிக்கிறது.(26) இதுவே யோகிகளின் யோகம் என்று அழைக்கப்படுகிறது. அது வேறென்ன? ஞானம் கொண்டவர்கள் இஃதை அறிந்தே, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுகிறார்கள்" என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(27)

சாந்திபர்வம் பகுதி – 317ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்