Saturday, November 10, 2018

விதைத்த வினையே முளைக்கும்! - சாந்திபர்வம் பகுதி – 323

Acts that are sown sprouts! | Shanti-Parva-Section-323 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 150)


பதிவின் சுருக்கம் : செய்த வினை செய்தவனையே சரியாக வந்தடையும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, கொடைகள், வேள்விகள், நன்கு செய்யப்படும் தவங்கள், ஆசான்களுக்கும், மதிப்புமிக்கப் பெரியோருக்கும் செய்யப்படும் கடமையுணர்வுமிக்கத் தொண்டுகள் ஆகியவற்றுக்குச் செயற்திறன் {பலாபலன்} உண்டென்றால் அதைக்குறித்து எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தீமையுடன் தொடர்புடைய புத்தியானது மனத்தைப் பாவத்தில் வீழச் செய்கிறது. இந்நிலையில் தன் செயல்களைத் தானே களங்கம் செய்யும் ஒருவன் பெரும் துன்பத்தில் வீழ்கிறான்.(2) பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவர்கள் மிகவறிய நிலையில் உள்ள மனிதர்களாகப் பிறக்க வேண்டிவரும். பஞ்சத்துக்குப் பஞ்சம், துன்பத்துக்குத் துன்பம், அச்சத்திற்கு அச்சம் என்பதே அவர்களது மாற்றமாக இருக்கும். இறந்தவர்களைக் காட்டிலும் இவர்களே இறந்தவர்களாக இருக்கிறார்கள்.(3) நம்பிக்கை கொண்டவர்கள், தற்கட்டுப்பாடு கொண்டவர்கள், அறச்செயல்களில் அர்ப்பணிப்புமிக்கவர்கள் ஆகியோர் செழிப்பை அடைந்தவர்களாக, இன்பத்துக்கு இன்பம், சொர்க்கத்திற்குச் சொர்க்கம், மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி என்ற மாற்றமடைகின்றனர்.(4) நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்கள், இரைதேடும் விலங்குகளாலும், யானைகளாலும் தொற்றப்பட்டதும், பாம்புகள், கள்வர்கள் மற்றும் அச்சத்திற்குரிய பிற காரணங்கள் நிறைந்ததுமான பாதையற்ற தடத்தில் கையைப் பிசைந்தபடியே கடக்க நேரிடும். இவற்றைத் தவிர வேறு என்ன சொல்லப்பட வேண்டும்?(5)

மறுபுறம், தேவர்களையும், விருந்தினர்களையும் மதிப்பவர்கள், பரந்த மனம் கொண்டவர்கள், நல்லோரை முறையாக மதிப்பவர்கள் ஆகியோர் தூய்மையடைந்த, வெல்லப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களுக்குச் சொந்தமான (இன்பம்நிறைந்த) பாதையைத் தங்களுடையதாகக் கொள்கிறார்கள்.(6) தானியங்களுடன் பதர்களும், பறவைகளுடன் கரப்பான்பூச்சிகளும் கணக்கிடப்படாததைப் போலவே மனிதர்களுடன் அறவோர் கணக்கிடப்படுவதில்லை.(7) ஒருவன் செய்யும் செயல்கள், அவன் வீழும்போது அவனோடு கிடக்கிறது.(8) உண்மையில், ஒருவன் செய்யும் பாவங்கள் அவன் அமரும் போது அமர்கின்றன, அவன் ஓடும்போது ஓடுகின்றன. செய்தவன் செயல்படும்போது பாவங்களும் செயல்படுகின்றன. உண்மையில் அவை செய்தவனின் நிழல் போல அவனைப் பின்தொடர்கின்றன.(9) எந்த வழிமுறையிலும், எந்தச் சூழ்நிலையிலும் ஒருவன் செய்யும் எந்தச் செயலும், (அவற்றின் கனிகளைப் பொறுத்தவரையில்) அதைச் செய்தவனால் மறுமையில் நிச்சயம் அனுபவிக்கப்படவும், தாங்கிக் கொள்ளப்படவும் வேண்டும்.(10)

உயிரினங்கள் வீசப்படும் தொலைவு மற்றும் அவற்றின் செயல்களோடு தொடர்புடைய விதியை முறையாகக் காணும் காலம் அவற்றை {அந்த உயிரினங்களை} அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எப்போதும் இழுத்துக் கொண்டிருக்கிறது.(11) மலர்களும், கனிகளும் தூண்டப்படாமலே தாமதிக்காமல் உரிய காலத்தில் தோன்றுவதைப் போலவே, முற்பிறவியில் செய்த செயல்களும் {வினைகளும்} உரிய காலத்தில் தோன்றுகின்றன.(12) கௌரவம் மற்றும் கௌரவமின்மை, ஈட்டல் மற்றும் இழத்தல், அழிவு மற்றும் வளர்ச்சி ஆகியவை தோன்றுவது காணப்படுகிறது. (அவை வரும்போது) அவற்றை யாராலும் தடுக்க முடியாது. தோன்றியதும் மறைவதால் அவற்றில் எதுவும் நீடித்திருக்காது.(13) ஒருவன் அனுபவிக்கும் துன்பம் அவனது செயல்களின் விளைவேயாகும். ஒருவனுடைய மகிழ்ச்சி அவனது செயல்களில் இருந்தே உண்டாகிறது. ஒருவன் தாயின் கருவறைக்குள் கிடக்கும் காலத்திலிருந்து தன் முற்பிறவி செயல்களை அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் தொடங்குகிறான்.(14) குழந்தைப் பருவம், இளமை, அல்லது முதுமையில் ஒருவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் எதன் விளைவையும் அவனது மறுமையில் அதே வயதுகளில் அவன் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறான்.(15)

ஆயிரம் பசுக்களுக்கு மத்தியில் கன்று தன் தாயை அடையாளம் காண்பதைப் போலவே முற்பிறவியில் ஒருவன் செய்த செயல்கள், அடுத்தபிறவியில் அவன் தன் இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் நின்றாலும் (தவறேதும் இல்லாமல்) அவனையே வந்து அடையும்.(16) அழுக்கடைந்த துணியானது நீரால் வெளுக்கப்படுவதைப் போலவே, அறவோரும் நோன்புகள் தவங்களெனும் நெருப்பில் தொடர்ந்து தங்களை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் தூய்மையடைந்து, இறுதியாக எல்லையில்லா மகிழ்ச்சியை அடைகின்றனர்.(17) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, நன்கு செய்யப்படும் நீடித்த தவங்களால் பாவங்கழுவப்பட்டவர்களின் ஆசைகளும், நோக்கங்களும், கனிவதால் மகுடம் சூட்டப்படுகின்றன.(18) வானத்தில் பறவைகளின் பாதையைய் போன்றோ, நீரில் மீன்களின் பாதையைப் போன்றோ அறவோரின் பாதையையும் பிரித்தறிய முடியாது.(19) பிறரை நிந்திப்பதற்கு எந்தத் தேவையுமில்லை; அதே போலப் பிறர் தவறிய தருணங்களைச் சொல்ல வேண்டியதுமில்லை. மறுபுறம் ஒருவன், தனக்கு இனிமையானதையும், ஏற்புடையதையும், நன்மையானதையும் செய்துகொள்ள வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(20)

சாந்திபர்வம் பகுதி – 323ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்