Sunday, November 11, 2018

வியாசரின் தவம்! - சாந்திபர்வம் பகுதி – 324

The penance of Vyasa! | Shanti-Parva-Section-324 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 151)


பதிவின் சுருக்கம் : மகனைப் பெற வியாசர் தவமிருந்தது; சிவன் வரமருளியது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, கடுதவங்களைக் கொண்ட உயர் ஆன்மா சுகர் வியாசரின் மகனாக எவ்வாறு பிறந்தார்? உயர்ந்த வெற்றியை அடைவதில் அவர் எவ்வாறு வென்றார்?(1) தவத்தையே செல்வமாகக் கொண்ட வியாசர் எந்தப் பெண்மணியிடம் தன் மகனைப் பெற்றார்? சுகரின் தாயார் யார் என்பதை நாம் அறியவில்லை, மேலும் அந்த உயர் ஆன்ம தவசியின் பிறப்பைக் குறித்த எதையும் நாம் அறியவில்லை.(2) சிறுவனாக இருந்தபோதே இவரது மனம் எவ்வாறு நுட்பமான ஞானத்தில் (பிரம்மத்தில்) செலுத்தப்பட்டது? உண்மையில், இவ்வளவு இளம் வயதில் இத்தகைய மனநிலை வாய்த்த வேறு இரண்டாவது மனிதனை இவ்வுலகில் காண முடியாது.(3) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, இவை யாவையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். அமுதம் போன்ற உமது சிறந்த வார்த்தைகளைக் கேட்பதில் நான் ஒருபோதும் தணிவடைவதில்லை.(4) ஓ! பாட்டா, சுகரின் மகிமை, ஞானம் மற்றும் அவரது ஆத்மயோகத்தையும் (பரமாத்மாவுடன் அவர் கலந்த வகையையும்) முறையான வரிசையில் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "வயது, முதுமை, செல்வம் அல்லது நண்பர்களைச் சார்ந்து முனிவர்கள் தகுதியை அடைவதில்லை. வேத கல்வியில் ஈடுபடுபவனே பெரியவன் என அவர்கள் சொல்கிறார்கள்.(6) நீ கேட்கும் இவை அனைத்தும் தவங்களையே தங்கள் வேராகக் கொண்டவையாகும். மேலும், ஓ! பாண்டுவின் மகனே, அந்தத் தவமானது புலனடக்கத்தில் இருந்தே எழுகிறது.(7) தன் புலன்களிடம் கடிவாளத்தை ஒப்படைக்கும் ஒருவன் நிச்சயம் களங்கத்தை ஈட்டுகிறான். அவற்றைக் கட்டுப்படுத்துவதாலேயே அவன் வெற்றியை ஈட்டுகிறான்.(8) ஆயிரம் குதிரை வேள்விகள், அல்லது நூறு வாஜபேயங்களோடு தொடர்புடைய தகுதியானது, யோகத்தில் இருந்து எழும் தகுதியின் பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது.(9) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் புரிந்து கொள்ள முடியாதவையான சுகரின் பிறந்த சூழ்நிலைகள், தன் தவங்களால் அவர் வென்ற கனிகள், (தன் செயல்களால்) அவர் அடைந்த முதன்மையான கதி ஆகியவற்றைக் குறித்து இப்போது உனக்குச் சொல்லப்போகிறேன்.(10)

ஒரு காலத்தில், கர்ணீகார மலர்களால் {கொன்றை மலர்களால்} அலங்கரிக்கப்பட்ட மேருவின் சிகரத்தில், தன் தோழர்களான பயங்கரமான பூதகணங்களின் துணையுடன் மஹாதேவன் விளையாடிக் கொண்டிருந்தான்.(11) மலைகளின் மன்னனுடைய மகளான தேவி பார்வதியும் அங்கிருந்தாள். தீவில் பிறந்தவர் ({துவைபாயனரான} வியாசர்}, இயல்புக்குமீறிய கடுந்தவங்களை அந்தச் சிகரத்திற்கு அருகிலேயே செய்து கொண்டிருந்தார்.(12) ஓ! குருக்களில் சிறந்தவரே, யோகப் பயிற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருந்த அந்தப் பெரும் தவசி, யோகத்தின் மூலம் தன் ஆன்மாவுக்குள் தன்னையே ஈர்த்துக் கொண்டும், தாரணையில் ஈடுபட்டும், ஒரு மகனுக்காக (மகனைப் பெறுவதற்காக) கடுந்தவங்கள் பலவற்றைச் செய்து வந்தார்.(13) அவர் அந்தப் பெருந்தேவனிடம், "ஓ! பலமிக்கவனே {விபுவே}, நெருப்பு {அக்னி}, பூமி {நிலம்}, நீர் {அப்பு}, காற்று {வாயு} மற்றும் வெளி {ஆகாயம்} ஆகியவற்றின் பலத்துடன் கூடிய ஒரு மகன் எனக்குக் கிடைக்கட்டும்" என்று வேண்டிக் கொண்டிருந்தார்.(14) தீவில் பிறந்த முனிவரான அவர் {வியாசர்} மிகக் கடுமையான தவங்களில் ஈடுபட்டு, தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் அணுக முடியாத பெருந்தேவனிடம் (வார்த்தைகளாலல்லாமல்) தன் யோகத் தீர்மானத்தின் மூலம் வேண்டினார்.(15)

பலமிக்கவரான வியாசர், காற்றை மட்டுமே உண்டு பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், உமையின் தலைவனுமான மஹாதேவனைத் துதித்தபடியே நூறு வருடங்கள் அங்கேயே இருந்தார்.(16) அங்கே மறுபிறப்பாள முனிவர்கள், அரசமுனிகள், லோகபாலகர்கள், சாத்யர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், ருத்திரர்கள், சூரியன், சந்திரமாஸ், மருத்துகள், பெருங்கடல்கள், ஆறுகள்,(17) அசுவினிகள், தேவர்கள், கந்தர்வர்கள், நாரதர் மற்றும் பர்வதர், கந்தர்வன் விஸ்வாவசு, சித்தர்கள் மற்றும் அப்ரசஸ்கள் அனைவரும் இருந்தனர்.(18) அங்கே ருத்திரன் என்ற பெயராலும் அழைக்கப்படும் மஹாதேவன் {சிவன்}, கர்ணீகார மலர்களால் {கொன்றை மலர்களால்} ஆன சிறந்த மாலையை அணிந்து கொண்டு, கதிர்களால் ஒளிரும் நிலைவைப் போலச் சுடர்விட்டுபடியே அமர்ந்திருந்தான்.(19) தேவர்களும், தெய்வீக முனிவர்களும் நிறைந்த இனிமையான தெய்வீக வனத்தில் அந்தப் பெரும் முனிவர் ஒரு மகனைப் பெறும் விருப்பத்தால் உயர்ந்த தியான யோகத்திலேயே நீடித்திருந்தார்.(20)

அவரது பலம் குன்றவில்லை, எந்தத் துன்பத்தையும் அவர் உணரவில்லை. இதனால் மூன்று உலகங்களும் மிகவும் ஆச்சரியமடைந்தன.(21) அளவிலா சக்தியைக் கொண்ட அந்த முனிவர் {வியாசர்}, யோகத்தில் அமர்ந்திருந்தபோது, அவரது சக்தியின் விளைவால் அவரது சடாமுடி நெருப்பின் தழல்களைப் போலச் சுடர்விடுவதாகத் தெரிந்தது.(22) சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம் இருந்தே நான் இவற்றைக் கேட்டறிந்தேன். அவரே எப்போதும் தேவர்களின் செயல்களைக் குறித்து எனக்குச் சொல்வார்.(23) உயர் ஆன்மா கொண்டவரும் (தீவில் பிறந்தவருமான) கிருஷ்ணரின் {வியாசரின்} சடாமுடி இவ்வாறு அவரது சக்தியால் எரிந்து கொண்டிருந்த காரணத்தாலேயே இந்த நாள்வரை அது நெருப்பின் நிறத்துடன் கூடியதாக இருக்கிறது.(24) ஓ! பாரதா, முனிவரின் இத்தகைய தவங்கள் மற்றும் அர்ப்பணிப்பில் நிறைவடைந்த பெருந்தேவன் (அவர் விரும்பியதைக் கொடுக்கத்) தீர்மானித்தான்.(25)

முக்கண் தேவன் {சிவன்}, மகிழ்ச்சியாகப் புன்னகைத்தபடியே அவரிடம், "ஓ! தீவில் பிறந்தவரே {துவைபாயனரே}, நீர் விரும்பியதைப் போன்றே ஒரு மகனைப் பெறுவீர்.(26) மகிமை நிறைந்த அவன், நெருப்பைப் போல, காற்றைப் போல, பூமியைப் போல, நீரைப் போல, வெளியைப் போலத் தூய்மையானவனாக இருப்பான்.(27) அவன் தன்னுணர்வில் பிரம்ம விழிப்பு நிலையில் இருப்பான்; அவனது புத்தியும், ஆன்மாவும் பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும்; அவன் பிரம்மத்தைப் போன்றவனாகவே அதையே முழுமையாகச் சார்ந்திருப்பான்" என்றான் {சிவன்}[1].(28)

[1] கும்பகோணம் பதிப்பில், "உம்முடைய புத்திரன் பிரம்மபாவத்தைத்யானிக்கிறவனும் ப்ரம்மத்தில் உறுதியுடையவனும், பிரம்மத்தினிடம் ஆதரவுள்ளவனும், ப்ரம்மத்தை ஆஸ்ரயமாகவுடையவனுமாகித் தேஜஸால் மூவுலகஙளையும் வியாபிக்கச்செய்து கீர்த்தியை அடையப் போகிறான்" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 324ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்