Monday, November 12, 2018

சுகப்ரம்மத்தின் தோற்றம்! - சாந்திபர்வம் பகுதி – 325

The birth of Suka! | Shanti-Parva-Section-325 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 152)


பதிவின் சுருக்கம் : சுகப்பிரம்மத்தின் பிறப்பு மற்றும் உபநயனம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பெருந்தேவனிடம் {சிவனிடம்} இருந்து உயர்ந்த வரத்தை அடைந்த சத்தியவதியின் மகன் {வியாசர்}, நெருப்பை உண்டாக்குவதற்காக ஒரு நாள் அரணிக் கட்டைகளை எடுத்துக் கடைவதில் ஈடுபட்டார்.(1) ஓ! மன்னா, அந்தச் சிறப்புமிக்க முனிவர் அவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தன் சக்தியின் விளைவால் பேரழகைக் கொண்டிருந்த அப்சரஸ் கிருதாசியைக் கண்டார்.(2) ஓ! யுதிஷ்டிரா, அந்தக் காட்டில் அப்சரஸைக் கண்ட சிறப்புமிக்க முனிவர் வியாசர் திடீரென ஆசையால் பீடிக்கப்பட்டார்.(3) ஆசையால் இதயம் பீடிக்கப்பட்ட முனிவரைக் கண்ட அந்த அப்சரஸ், தன்னை ஒரு பெண்கிளியாக மாற்றிக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தாள்.(4) அந்த அப்சரஸ் மற்றொரு வடிவத்தால் தன்னை மறைத்திருப்பதை முனிவர் கண்டாலும், அவரது இதயத்தில் எழுந்த ஆசை (மறையாமல்) அவரது உடலில் ஒவ்வொரு பகுதிக்கும் பரவியது.(5)

பொறுமையை வேண்டிய அந்தத் தவசி அந்த அசையை அடக்கப் பெரும் முயற்சி செய்தார். எனினும், வியாசர் எவ்வளவுதான் முயன்றாலும், கலக்கமடைந்த தன் மனத்தை அடக்குவதில் அவர் வெல்லவில்லை. நடக்கப் போவதைத் தவிர்க்க முடியாததால், முனிவரின் இதயம் கிருதாசியின் அழகிய வடிவில் ஈர்க்கப்பட்டது.(6) அவர் தன் உணர்வை அடக்கி நெருப்பை உண்டாக்கும் பணியில் தன்னை நிறுவிக் கொள்ள உண்மையில் மெய்யுறுதிப்பாட்டுடன் முயன்றாலும், அவரது உயிர்வித்து {அந்த அரணிக்கட்டைகளிலேயே} வெளியேறியது.(7) ஓ! மன்னா, இருந்தாலும் அந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர் {வியாசர்}, நடந்ததற்காக எந்த ஐயுணர்வும் அடையாமல் தன் அரணிக் கட்டைகளைக் கடைவதைத் தொடர்ந்தார். விழுந்த அந்த வித்தில் இருந்து, சுகர் என்றழைக்கப்படும் ஒரு மகன் அவருக்குப் பிறந்தார்.(8) அவரது பிறப்பு தொடர்பான இந்தச் சூழ்நிலையின் விளைவாலேயே அவர் சுகர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். உண்மையில் இவ்வாறே முனிவர்களில் முதன்மையானவரும், யோகிகளில் உயர்ந்தவருமான அந்தப் பெருந்தவசி (தன் தந்தை நெருப்பை உண்டாக்க வைத்திருந்த) ஈர் அரணிக் கட்டைகளில் இருந்து தன் பிறப்பை அடைந்தார்[1].(9) வேள்வியில் தெளிந்த நெய் ஆகுதியாக ஊற்றப்படும்போது சுடர்மிக்க நெருப்பானது சுற்றிலும் ஒளியைப் பொழிவதைப் போலவே, சுகரும் தன் சக்தியின் விளைவால் ஒளியால் சுடர்விட்டபடி தன் பிறப்பை அடைந்தார்.(10)

[1] கும்பகோணம் பதிப்பில், "அந்த முனிவர் அக்கினியை உண்டுபண்ண விருப்பத்தால் முயற்சி செய்து மனத்தையடக்கும்பொழுது, உடனே அவருடைய வீரியமானது அரணியிலேயே விழுந்தது. அரசனே, பிராம்மணசிரேஷ்டரான அந்தப் பிரம்மரிஷியானவர் சங்கையில்லாத மனத்துடன் அப்படியே அரணியைக் கடைந்தார். அந்த அரணியில் சுகர் உண்டானார். சுக்கிரமானது கடையப்படும்போது, பெருந்தவமுடையவரும் பரமரிஷியும், மஹாயோகியும் அரணியின் கர்ப்பத்தில் உற்பத்தியையுடையவருமான அந்தச் சுகர் பிறந்தார்" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், "சுக்ரமென்றால் வீரியம். சுக்ரமென்கிற பதத்தில் ரக்ரத்தைத் தள்ளிச் சுகரென்று பெயர் கொண்டார்" என்றிருக்கிறது.

ஓ! குருவின் மகனே, தூய ஆன்மாவைக் கொண்ட சுகர், தன் தந்தையின் சிறந்த வடிவத்தையும், நிறத்தையும் ஏற்று, புகையற்ற நெருப்பைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(11) ஓ! மன்னா, ஆறுகளில் முதன்மையான கங்கை,  தன் உடல் கொண்ட வடிவுடன் மேருவின் சாரலுக்கு வந்து, தன் நீரால் சுகரை (அவரது பிறப்புக்குப் பிறகு) நீராட்டினாள்.(12) ஓ! குருவின் மகனே, ஓ! ஏகாதிபதி, அப்போது அந்த உயர் ஆன்ம சுகர் பயன்படுத்த ஒரு தண்டமும் ஒரு கரிய மான்தோலும் {கிருஷ்ணாஜினமும்} ஆகாயத்தில் இருந்து விழுந்தது.(13) கந்தர்வர்கள் மீண்டும் மீண்டும் பாடினார்கள்; பல்வேறு இனங்களைச் சேர்ந்த அப்சரஸ்கள் ஆடினார்கள்; தெய்வீகப் பேரிகைகள் உரக்க முழங்கத் தொடங்கின.(14) கந்தர்வன் விஸ்வாவசு, தும்புரு, நாரதர் மற்றும் ஹாஹா மற்றும் ஹுஹு என்ற பெயர்களில் அழைக்கப்படும் கந்தர்வர்கள் சுகரின் பிறப்பைத் துதித்தனர்.(15)

சக்ரனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட லோகபாலகர்களும், தேவர்களும், தெய்வீக மறுபிறப்பாள முனிவர்களும் அங்கே வந்தனர்.(16) காற்றின் தேவன் {வாயு}, அந்த இடத்தில் தெய்வீகப் பூமாரியைப் பொழிந்தான்.(17) அசைபவற்றையும், அசையாதவற்றையும் கொண்ட அண்டம் முழுமையும் இன்பத்தால் நிறைந்தது.(18) பேரொளி கொண்ட உயர் ஆன்ம மஹாதேவன் {சிவன்}, {உமா} தேவியின் துணையுடன், அன்பால் உந்தப்பட்டு அங்கே வந்து, முனிவரின் மகன் பிறந்ததும் அவருக்குப் புனித நூலை தரித்துவிட்டான்.(19) தேவர்களின் தலைவனான சக்ரன் {இந்திரன்} சிறந்த வடிவிலான ஒரு கமண்டலத்தையும், சில தெய்வீக ஆடைகளையும், அன்புடன் அவருக்குக் கொடுத்தான்.(20)

ஓ! பாரதா, அன்னங்கள், சதபத்ரங்கள் {நூறு சிறகுகளைக் கொண்ட அன்னங்கள்}, ஆயிரக்கணக்கான நாரைகள் மற்றும் பல கிளிகளும், சாஸங்களும் அவரது தலையை வட்டமிட்டன {வலம் வந்தன}.(21) பெரும் காந்தியையும் நுண்ணறிவையும் கொண்ட சுகர், அந்த அரணிக் கட்டைகள் இரண்டில் பிறப்பை அடைந்து, பல நோன்புகள் மற்றும் நியமங்களைக் கவனமாக நோற்றபடி அங்கேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.(22) சுகர் பிறந்த உடனேயே, ஓ மன்னா, புதிர்கள் அனைத்துடன் கூடிய வேதங்களும், அவற்றின் பொழிப்புரைகளும் அவரது தந்தையுடன் வசிப்பதைப் போலவே அவரிடமும் வசிக்க வந்தன.(23) அதன் பிறகும் சுகர், உலக நடைமுறையின்படியே, அங்கங்கள் மற்றும் உரைகளுடன் கூடிய வேதங்கள் அனைத்தையும் அறிந்தவரான பிருஹஸ்பதியைத் தன் ஆசானாகத் தேர்ந்தெடுத்தார்[2].(24)

[2] "வேதங்கள் தாமாகவே முன்வந்து சுகரிடம் வசித்தாலும், அவர் உலக நடைமுறையை அலட்சியம் செய்யாமல், ஓர் ஆசானிடம் முறையாக அவற்றைப் பெறும் கடப்பாட்டை ஏற்றார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! பலமிக்க ஏகாதிபதி, புதிர்கள் மற்றும் பொழிப்புரைகள் அனைத்துடன் கூடிய வேதங்களையும், வரலாறுகள் அனைத்தையும், அரசு அறிவியலையும் படித்த அந்தப் பெருந்தவசி,(25) தன் ஆசானுக்குரிய கட்டணத்தை அளித்துவிட்டு {குருவுக்குத் தக்ஷிணை கொடுத்துவிட்டு} வீடு திரும்பினார். பிரம்மச்சாரியின் நோன்பைப் பின்பற்றிய அவர், அது முதல் தன் கவனம் அனைத்தையும் குவித்துக் கடுந்தவங்களைப் பயிலத் தொடங்கினார்.(26) குழந்தைப்பருவத்திலும் கூட அவர், தனது ஞானத்திற்காகவும், தவங்களுக்காகவும் தேவர்களாலும், முனிவர்களாலும் மதிக்கப்பட்டார்.(27) ஓ! மன்னா, அந்தப் பெருந்தவசியின் மனமானது, இல்லறத்தைத் தங்களில் ஒன்றாகக் கொண்ட மூன்று வகை வாழ்வு முறைகளிலும் {மூவகை ஆசிரமங்களிலும்} இன்பங்கொள்ளாமல் விடுதலை {முக்தி} அறத்தையே தன் மனத்தில் நோக்கமாகக் கொண்டு, அதையே செய்தார்" என்றார் {பீஷ்மர்}.(28)

சாந்திபர்வம் பகுதி – 325ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்