Thursday, November 22, 2018

முக்தியின் பாதையில் சுகர்! - சாந்திபர்வம் பகுதி – 333

Suka on the path of emancipation! | Shanti-Parva-Section-333 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 160)


பதிவின் சுருக்கம் : யோகத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட சுகர்; முக்தியின் வழியைக் அவர் கண்டடைந்தது; தாம் கண்ட பாதையை நாரதருக்குச் சொன்னது; மீண்டும் யோகத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டது; தமது தந்தை அழைத்தால் மறுமொழி கூறுமாறு தேவதேவிகளுக்கு ஆணையிட்டது...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, {கயிலாய} மலையின் சிகரத்தில் ஏறிய வியாசரின் மகன் {சுகர்}, பிற உயிரினங்களின் நடமாட்டம் இல்லாத புற்களற்ற சமதரையில் அமர்ந்தார்.(1) யோகத்தினுடைய அடுத்தடுத்த படிநிலைகளின் வரிசையை அறிந்தவரான அந்தத் தவசி {சுகர்}, சாத்திரங்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்புடைய வகையிலும், விதிக்கப்பட்ட விதிகளின்படியும், முதலில் தம் ஆன்மாவை ஓர் இடத்திலும், பிறகு மற்றுமோர் இடத்திலுமென {படிப்படியாக} நிலை நிறுத்தி, பாதம் தொடங்கி அங்கங்கள் அனைத்தையும் கடந்து சென்றார்.(2) பிறகு சுகர், சூரியன் உதித்து வெகு நேரமாகாத போது, தமது முகத்தைக் கிழக்குப்புறம் நோக்கித் திருப்பி, கைகால்களை மடக்கிப் பணிவான மனோநிலையில் அமர்ந்தார்.(3)

நுண்ணறிவைக் கொண்டவரான அந்த வியாசரின் மகன், யோகத்தில் {தமக்குள்} தம்மையே காண ஆயத்தமாக இருந்த அந்த இடத்தில் எந்தப் பறவைக்கூட்டமுமில்லை, எந்த ஒலியும் இல்லை, வெறுத்தொதுக்கும், அல்லது அச்சத்தைத் தூண்டும் எந்தக் காட்சியும் தென்படவில்லை.(4) பிறகு அவர் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட தமது ஆன்மாவைக் கண்டார். அனைத்துப் பொருட்களிலும் உயர்ந்ததைக் கண்டு அவர் இன்பமாகச் சிரித்தார்.(5) பிறகு அவர் விடுதலையின் பாதையை {மோக்ஷ மார்க்கத்தை} அடைவதற்காக மீண்டும் தம்மை யோகத்தில் நிறுவிக் கொண்டார். யோகத்தின் பேராசானாக ஆன அவர், வெளியெனும் பூதத்தைக் கடந்தார்.(6) அதன்பிறகு, தெய்வீக முனிவரான நாரதரை வலம் வந்து, உயர்ந்த யோகத்தைத் தாமே அடைந்த உண்மையை முனிவர்களில் முதன்மையான அவரிடம் {நாரதரிடம்} சொன்னார்.(7)

சுகர் {நாரதரிடம்}, "நான் (விடுதலையின் {முக்தியின்}) பாதையைக் காண்பதில் வென்றேன். நானே அதைக் கண்டுகொண்டேன். ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவரே, நீர் அருளப்பட்டிருப்பீராக. ஓ! பெருங்காந்தி கொண்டவரே, மிகவும் விரும்பத்தக்க கதியை உமது அருளால் நான் அடையப் போகிறேன்" என்றார்".(8)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தீவில் பிறந்த வியாசரின் மகனான சுகர், தெய்வீக முனிவரான நாரதரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு வணங்கி, மீண்டும் தம்மை யோகத்தில் நிலைநிறுத்தி வெளியெனும் பூதத்திற்குள் நுழைந்தார்.(9) அவர், கயிலாய மலைச் சாரலில் இருந்து உயர்ந்து வானத்திற்குள் எழுந்தார். ஆகாயத்தினூடாகப் பயணிக்கவல்லவரும், நிலைத்த தீர்மானத்தால் அருளப்பட்டவருமான சுகர், அப்போது தம்மைக் காற்றெனும் பூதமாகக் கண்டார்.(10) கருடனின் பிரகாசத்தைக் கொண்ட அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர் {சுகர்}, மனோ வேகத்தில், அல்லது எண்ணத்தின் வேகத்தில் வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்தபோது, அனைத்து உயிரினங்களும் தங்கள் கண்களை அவர் மேல் செலுத்தின.(11) நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியைக் கொண்ட சுகர், மூவுலகங்கள் முழுமையையும் ஒரே தன்மையைக் கொண்ட பிரம்மமாகக் கருதி, நெடுநீளம் கொண்ட அந்தப் பாதையில் சென்று கொண்டிருந்தார்.(12)

அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும், குவிந்த கவனத்தோடும், அமைதியான, அச்சமற்ற ஆன்மாவோடும் சென்று கொண்டிருந்த அவர் மீது தங்கள் கண்களைச் செலுத்தின.(13) அனைத்து உயிரினங்களும், விதிக்கு ஏற்புடைய வகையிலும், தங்கள் சக்திக்குத் தகுந்த வகையிலும் அவரை மதிப்புடன் வழிபட்டன.(14) அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வ குலங்கள் அனைத்தும் அவரைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தன. வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர்களும் கூட அதற்கிணையான வியப்பையே அடைந்தனர்.(15)

அவர்கள் {முனிவர்கள்}, "தவங்களால் வெற்றியை அடைந்த இவன் யார்? தன் உடலில் இருந்து {பார்வை} விலகியவனும், மேல் நோக்கிய பார்வையுடன் கூடியவனுமான இவன், நம் அனைவரையும் தன் பார்வையின் மூலம் இன்பத்தால் நிறையச் செய்கிறான்" என்றனர்.(16)

உயர்ந்த அற ஆன்மாவைக் கொண்டவரும், மூவுலகங்களிலும் முழுமையாகக் கொண்டாடப்படுபவருமான சுகர், தம் முகத்தைக் கிழக்கு நோக்கித் திருப்பிக் கொண்டு, சூரியனை நோக்கிச்செலுத்தப்பட்ட பார்வையுடன் அமைதியாக {மௌனமாகச்} சென்று கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சென்ற போது, அவர் அனைத்திலும் பரவும் ஒலியால் மொத்த ஆகாயத்தையும் நிறைப்பதாகத் தெரிந்தது.(17) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர் அவ்வழியில் வருவதைக் கண்டு பிரமிப்படைந்த அப்ஸரஸ் குலங்கள் அனைத்தும் வியப்பால் நிறைந்தன.(18) அவர்கள் ஒருவருக்கொருவர், "இவர் பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டவராகவும், ஆசைகள் அனைத்தில் இருந்தும் விடுதலையடைந்தவராகவும் இங்கே வருகிறார் என்பதில் ஐயமில்லை. இத்தகைய உயர்ந்த கதியை அடைந்திருக்கும் இந்தத் தேவன் யார்?" என்று கேட்டனர்.(19)

பிறகு அவர் {சுகர்} ஊர்வசியும், பூர்வசித்தியும் எப்போதும் வசிக்கும் மலய மலைகளுக்குச் சென்றார்.(20) அவர்கள் இருவரும், அந்தப் பெரும் மறுபிறப்பாள முனிவரின் சக்தியைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் {ஊர்வசி}, "வேதங்களை ஓதுவதையும், அவற்றைக் கற்பதையும் வழக்கமாகக் கொண்ட ஒரு மறுபிறப்பாள இளைஞனின் இந்தக் குவிந்த கவனம் ஆச்சரியம் நிறைந்ததாகும். விரைவில் இவன் நிலவைப் போல ஆகாயம் முழுவதும் செல்லப் போகிறான். இவன் தன் தந்தையிடம் கொண்ட கடமைநிறைந்த தொண்டுணர்வு மற்றும் பணிவிடையினால் இந்தச் சிறந்த புத்தியை அடைந்திருக்கிறான்.(21,22) இவன் கடுந்தவங்களைச் செய்த தன் தந்தையிடம் உறுதியான பற்றுடன் இருக்கிறான், மேலும் இவனது தந்தையால் மிகவும் விரும்பப்படுபவனாகவும் இருக்கிறான். ஐயோ, கவனமில்லாத இவனது தந்தையால், திரும்பிவராத பாதையில் ஏன் இவன் அனுப்பப்பட்டான்?" என்றனர் {என்றாள்}.(23)

ஊர்வசியின் இந்த வார்த்தைகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் கவனித்து, தம் கண்களை அனைத்துப் பக்கங்களிலும் செலுத்தி,(24) மீண்டும் ஆகாயம் முழுமையையும், மலைகள், நீர்நிலைகள், காடுகள், தடாகங்கள் மற்றும் ஆறுகள் அனைத்தையும் கொண்ட மொத்த உலகத்தையும் கண்டார்.(25) தேவர்கள் மற்றும் தேவிகள் அனைவரும், தீவில் பிறந்த முனிவரின் மகனை {வியாசரின் மகனை} மதிக்கும் வகையில் தங்கள் கரங்களைக் குவித்து, ஆச்சரியத்துடனும், மதிப்புடனும் அவனைக் கண்டனர்.(26) அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரான சுகர் அவர்கள் அனைவரிடமும் இந்த வார்த்தைகளைச் சொன்னார், "என் தந்தை {வியாசர்} என்னைப் பின்தொடர்ந்து வந்து, மீண்டும் மீண்டும் என் பெயரைச் சொல்லி அழைத்தால்,(27) நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்காக அவருக்குப் பதிலளியுங்கள். என்னிடம் அன்பு கொண்ட நீங்கள் அனைவரும் இந்த என் வேண்டுகோளை நிறைவேற்றுவீராக" என்றார் {சுகர்}.(28)

சுகரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திசைப்புள்ளிகள் அனைத்தும், காடுகள் அனைத்தும், கடல்கள் அனைத்தும், ஆறுகள் அனைத்தும், மலைகள் அனைத்தும், ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் அவருக்குப் பதிலளித்தன,(29) "ஓ! மறுபிறப்பாளரே, நாங்கள் உமது ஆணையை ஏற்கிறோம். நீர் சொன்னது போலவே ஆகட்டும். அந்த முனிவரால் {வியாசரால்} சொல்லப்படும் வார்த்தைகளுக்கு நாங்கள் இவ்வழியிலேயே பதிலளிக்கப் போகிறோம்" {என்றன}" என்றார் {பீஷ்மர்}.(30)

சாந்திபர்வம் பகுதி – 333ல் உள்ள சுலோகங்கள் : 30

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்