Monday, November 26, 2018

உபரிசரன் அடைந்த சாபம்! - சாந்திபர்வம் பகுதி – 338

The curse on Uparichara! | Shanti-Parva-Section-338 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 165)


பதிவின் சுருக்கம் : வேள்விகள் தானியங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டுமா? விலங்குகளைக் கொண்டு செய்யப்பட வேண்டுமா? என்பதில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையில் நேர்ந்த சச்சரவு; மன்னன் உபரிசரன் சொன்ன தீர்ப்பு; பிராமணர்களால் சபிக்கப்பட்ட உபரிசரன்; தேவர்களின் கருணையாலும், நாராயணனின் அருளாலும் உயர்ந்த கதியை அடைந்தது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மாமன்னன் வசு நாராயணனிடம் முழுமையான பக்தியுடன் இருந்தபோது, என்ன காரணத்தினால் அவன் சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்தான்? மேலும் அவன் ஏன் பூமியின் பரப்புக்குக் கீழே மூழ்கிப் போனான்?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாக முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஒரு காலத்தில், பிராமணர்களில் முதன்மையானோரிடம் பேசிய தேவர்கள், அவர்களிடம் அஜஸ் என்ற பலிகளைக் காணிக்கையாக்குவதன் மூலம் வேள்விகள் செய்யப்பட வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அஜ என்ற சொல்லின் மூலம் வெள்ளாடு என்று புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி வேறு எந்த விலங்கையும் அல்ல.(3)

முனிவர்கள், "வேத ஸ்ருதியானது, வேள்விகளில் வித்துகள் {தானியங்கள்} காணிக்கைகளாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வித்துகளே {தானியங்களே} அஜஸ் என்று அழைக்கப்படுகின்றன. வெள்ளாடுகளைக் கொல்வது உங்களுக்குத் தகாது.(4) தேவர்களே, விலங்குகளைக் கொல்ல விதிக்கப்படுவது நல்லோருக்கும், அறவோருக்குமான அறமல்ல. மேலும் இது கிருத யுகமாகும். அறம்சார்ந்த இந்த யுகத்தில் விலங்குகள் எவ்வாறு கொல்லப்படலாம்?" என்றனர்".(5)

பீஷ்மர் தொட்ரந்தார், "முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் இந்த உரையாடல் நேர்ந்து கொண்டிருந்தபோது, மன்னர்களில் முதன்மையானவனான வசு அவ்வழியில் வந்தான். பெருஞ்செழிப்பைக் கொண்ட அந்த மன்னன், தன் துருப்புகள், வாகனங்கள் மற்றும் விலங்குகளுடன் ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தான்.(6)

வானத்தின் மூலம் அந்த இடத்திற்கு வரும் மன்னன் வசுவைக் கண்ட அந்தப் பிராமணர்கள், தேவர்களிடம், "இவன் எங்கள் ஐயங்களை விலக்குவான்.(7) இவன் வேள்விகளைச் செய்பவன். இவன் கொடைகளை அளிக்கும் ஈகையாளன். இவன் எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையை நாடுபவனாவான்" என்றனர்.(8)

இவ்வாறு தங்களுக்குள் பேசிக்கொண்ட முனிவர்களும் தேவர்களும் விரைவாக மன்னன் வசுவிடம் வந்து அவனைக் கேள்வி கேட்டனர். {அவர்கள்}, "ஓ! மன்னா, எதைக் கொண்டு ஒருவன் வேள்விகளைச் செய்ய வேண்டும்?(9) அவன் வெள்ளாட்டைக் கொண்டு வேள்வி செய்ய வேண்டுமா? மூலிகைகள் மற்றும் செடிகளைக் கொண்டு வேள்வி செய்ய வேண்டுமா? எங்களுடைய இந்த ஐயங்களை நீ விலக்குவாயாக. இக்காரியத்தில் நாங்கள் உன்னையே நீதிபதியாகக் கொள்கிறோம்" என்றனர்.(10)

இவ்வாறு அவர்களால் சொல்லப்பட்ட வசு {உபரிசரன்}, பணிவுடன் தன் கரங்களைக் கூப்பியபடி அவர்களிடம், "பிராமணர்களில் முதன்மையானவர்கள், இக்காரியத்தில் உங்கள் கருத்து என்ன என்பதை உண்மையில் எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான்.(11)

முனிவர்கள், "ஓ! மன்னா, வேள்விகள் தானியங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டுமென நாங்கள் கருதுகிறோம். எனினும், தேவர்களோ விலங்குகளைக் கொண்டு வேள்விகள் செய்யப்பட வேண்டும் எனச் சொல்கின்றனர். எங்களுக்கிடையில் நீதிபதியாக இருந்து இந்தக் கருத்துகளில் எது சரி என்பதைச் சொல்வாயாக" என்றனர்".(12)

பீஷ்மர் தொடர்ந்தார், "தேவர்களால் சொல்லப்படும் கருத்து என்ன என்பதை அறிந்த வசு {உபரிசரன்}, அவர்களுக்குச் சாதகமாக விலங்குகளைக் கொண்டே வேள்விகள் செய்யப்பட வேண்டும் என்று சொன்னான்.(13)

சூரியனின் காந்தியுடன் கூடிய முனிவர்கள் அனைவரும் இந்தப் பதிலால் மிகவும் கோபமடைந்தனர். தேரில் அமர்ந்திருந்தவனும், (தவறாகத்) தேவர்களின் தரப்பை அடைந்தவனுமான வசுவிடம் அவர்கள்,(14) "நீ (தவறாகத்) தேவர்களின் தரப்பை அடைந்ததால், சொர்க்கத்தில் இருந்து வீழ்வாயாக. ஓ! ஏகாதிபதி, இந்த நாள் முதல் நீ வானத்தில் பயணிக்கும் உன் சக்தியை இழப்பாயாக. எங்கள் சாபத்தால் நீ பூமியின் பரப்புக்கு அடி ஆழத்தில் மூழ்குவாய்" என்றனர்.(15)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முனிவர்கள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், உடனே கீழே விழுந்த மன்னன் உபரிசரன், பூமியின் குழிக்குச் சென்றான். எனினும், நாராயணனின் ஆணையின் பேரால் அவனது நினைவு தவறவில்லை.(16) பிராமணர்களால் வசுவுக்கு இடப்பட்ட சாபத்தால் துன்புற்ற தேவர்கள், அவனுடைய நற்பேற்றின் காரணமாக, அந்தச் சாபத்தை எவ்வாறு சமன் செய்வது {தணிப்பது} என்பதைக் கவலையுடன் நினைக்கத் தொடங்கினர்.(17)

அவர்கள், "இந்த உயர் ஆன்ம மன்னன் நம் நிமித்தமாகவே சபிக்கப்பட்டிருக்கிறான். சொர்க்கவாசிகளான நாம் ஒன்று சேர்ந்து அவன் நமக்குச் செய்ததற்குப் பதிலாக அவனுக்கு நன்மையைச் செய்ய வேண்டும்." என்றனர்.(18)

நினைவின் துணைகொண்டு இதைத் தங்கள் மனங்களில் தீர்மானித்த தேவர்கள் மன்னன் உபரிசரன் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவனது முன்னிலைக்குச் சென்ற அவர்கள்,(19) பிராமணர்களின் பெருந்தேவனிடம் (நாராயணனிடம்) நீ அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டிருக்கிறாய். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பெருந்தேவனாக இருக்கும் அவன், உன்னில் நிறைவடைந்திருப்பதால், உன் மீது விழுந்திருக்கும் சாபத்தில் இருந்து உன்னை மீட்பான்.(20) எனினும், உயர் ஆன்ம பிராமணர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதே முறையானது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உண்மையில் அவர்களது தவங்கள் கனி தர வேண்டும்[1].(21) உண்மையில் நீ வானத்தில் இருந்து பூமிக்கு ஏற்கனவே விழுந்துவிட்டாய். எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன்னைப் பொறுத்தவரையில் உனக்கு நாங்கள் உதவ விரும்புகிறோம்.(22) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீ இந்தக் குழியில் இருக்கும்வரை (எங்கள் வரத்தின் மூலம் உனக்குரிய வாழ்வாதாரத்தைப்) பெறுவாயாக.(23) பிராமணர்களால் குவிந்த மனத்துடனும், புனித மந்திரங்களின் துணையுடனும் வேள்விகளில் ஊற்றப்படுவதும், வசுதாரம் {வஸோர்த்தாரை / ஆஜ்யதாரை} என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான தெளிந்த நெய்யின் இழையானது, எங்களது பொறுப்பில் உனதாகட்டும். உண்மையில், பலவீனமோ, மனத்தளர்வோ உன்னைப் பற்றாது[2].(24) ஓ! மன்னர்களின் மன்னா, பூமியின் குழிக்குள் வாழும்போது நீ வசுதாரம் என்றழைக்கப்படும் தெளிந்த நெய்க்கீற்றுகளைக் குடிக்கப் போவதால், பசியோ, தாகமோ உன்னைப் பீடிக்காது. உன் சக்தியும் குன்றாது. நாங்கள் உனக்குத் தரும் இந்த வரத்தின் விளைவால், தேவர்களின் தேவனான நாராயணன், எங்களிடம் நிறைவடைந்து, உன்னை இங்கிருந்து பிரம்மலோகத்திற்குக் கொண்டு செல்வான்" என்றார்கள்.(25)

[1] "அவர்களுடைய சாபம் பலிக்க வேண்டும். அந்தச் சாபத்தை ஒன்றுமில்லாமல் செய்ய நீ எதையும் செய்யக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "இந்த நாள்வரை, அறச்சடங்குகள் பலவற்றில் மந்திரங்கள் சொல்லி இந்த நெய்யிழை ஊற்றப்படுகிறது. வசுதாரம் என்றழைக்கப்படும் அவை சுவற்றின் பரப்பில் ஊற்றப்படுகின்றன. முதலில் அலையும் ஒரு சிவப்புக் கோடு சுவற்றில் கிடைமட்டமாக வரையப்படுகிறது. பிறகு அந்தக் கோட்டின் கீழ் ஏழு புள்ளிகள் உண்டாக்கப்படுகின்றன. பிறகு வேள்விக் கரண்டியைக் கொண்டு அந்த ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் சுவற்றின் வழியாக அடர்த்தியான நெய்யிழை ஊற்றப்படுகிறது. அந்த இழைகளின் நீளம் பொதுவாக 3 முதல் 4 அடியாகவும், அகலம் அரையடியாகவும் இருக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மன்னனுக்கு இந்த வரங்களை அளித்த பிறகு, மன்னனுக்கு இவ்வரங்களை அளித்த தேவலோகவாசிகளும், தவங்களைச் செல்வமாகக் கொண்ட அந்த முனிவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்றனர்.(26) அப்போது அந்த வசுவானவன், ஓ! பாரதா, அண்டத்தைப் படைத்தவனைத் துதிக்கத் தொடங்கி, பழங்காலத்தில் நாராயணனின் வாயில் இருந்து வெளிவந்த புனித மந்திரங்களை அமைதியாக ஓதிக் கொண்டிருந்தான்[3].(27) அம்மன்னன் பூமியின் குழிக்குள் வசித்துவந்தாலும், ஓ! பகைவர்களைக் கொல்பவனே {யுதிஷ்டிரா}, ஒவ்வொரு நாளும் ஐந்து வேளைகளில் செய்யப்படும் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தேவர்கள் அனைவரின் தலைவனான அந்த ஹரியை வழிபட்டு வந்தான்.(28) ஹரி என்றும் அழைக்கப்படும் நாராயணன், அந்தத் துதிகளின் விளைவால், நிறைவடைந்து, தன்னையே ஒரே புகலிடமாக எண்ணி தன்னையே முழுமையாகச் சார்ந்திருந்தவனும், புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான அவனிடம் உயர்ந்த நிறைவையடைந்தான்.(29)

[3] "வசுவால் சொல்லப்பட்ட மந்திரங்கள் வேதமந்திரங்களாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது, வரங்களை அளிப்பவனான சிறப்புமிக்க விஷ்ணு, பணியாளனாகத் தன்னிடம் காத்திருந்தவனும், பறவைகளில் முதன்மையானவனும், பெரும் வேகம் கொண்டவனுமான கருடனிடம் இந்த இனிய இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(30) "ஓ! பறவைகளில் முதன்மையானவனே, ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. அற ஆன்மா கொண்டவனாகவும், கடும் நோன்புகளைக் கொண்டவனாகவும், வசு என்ற பெயரில் ஒரு பெரும் மன்னன் இருக்கிறான். பிராமணர்களின் கோபத்தால் அவன் பூமியின் குழிக்குள் வீழ்ந்திருக்கிறான்.(31) பிராமணர்கள் (தங்கள் சாபம் பலித்திருப்பதால்) போதுமான அளவுக்குக் கௌரவிக்கப்பட்டு இருக்கின்றனர். நீ இப்போது அந்த மன்னனிடம் செல்வாயாக.(32) ஓ! கருடா, பூமியின் குழிக்குள் இப்போது வசித்து வருபவனும், வானத்தில் பறக்க முடியாதவனும், மன்னர்களில் முதன்மையானவனுமான அந்த உபரிசரனிடம் என் ஆணையின் பேரில் சென்று, தாமதமில்லாமல் அவனை உயர்ந்த ஆகாயத்திற்குக் கொண்டு வருவாயாக" என்றான் {விஷ்ணு}.(33)

விஷ்ணுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், தன் சிறகுகளை விரித்து, காற்றின் வேகத்தில் விரைந்து, மன்னன் வசு வாழ்ந்துவந்த பூமியின் குழிக்குள் நுழைந்தான்.(34) திடீரென அந்த வினதையின் மகன் {கருடன்}, அம்மன்னனைத் தூக்கிக் கொண்டு வானத்தில் உயரப் பறந்து, அங்கேயே தன் அலகுகளில் இருந்து மன்னனை விடுவித்தான்.(35) அந்தக் கணத்தில் மீண்டும் தன் தேவ வடிவத்தை அடைந்த மன்னன் உபரிசரன், பிரம்மலோகத்திற்குள் மீண்டும் நுழைந்தான்.(36) ஓ! குந்தியின் மகனே, இவ்வழியிலேயே அந்தப் பெரும் மன்னன் பேச்சின் களங்கத்திற்காகப் பிராமணர்களின் சாபத்தின் மூலம் முதலில் விழுந்து, பெருந்தேவனின் (விஷ்ணுவின்) ஆணையின் பேரில் மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(37) அனைத்திலும் முதன்மையானவனும், பலமிக்கவனுமான தலைவன் ஹரியை மட்டுமே அவன் {உபரிசரன்} அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} வழிபட்டு வந்தான். இந்த அர்ப்பணிப்புமிக்க வழிபாட்டின் காரணமாகத்தான் அம்மன்னன், பிராமணர்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட சாபத்தில் இருந்து தப்புவதிலும், பிரம்மனின் பேரின்ப உலகத்தை மீண்டும் அடைவதிலும் மிக விரைவாக வென்றான்".(38)

பீஷ்மர் தொடர்ந்தார், "பிரம்மனின் ஆன்ம மகன்களின் தோற்றம் குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதர் எவ்வாறு வெண்தீவிற்கு {ஸ்வேதத்வீபத்திற்குச்} சென்றார் என்பதை நான் இப்போது சொல்லப் போகிறேன், சிதறாத கவனத்துடன் கேட்பாயாக".(39)

சாந்திபர்வம் பகுதி – 338ல் உள்ள சுலோகங்கள் : 39

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்