Tuesday, November 27, 2018

நாராயணத் துதி! - சாந்திபர்வம் பகுதி – 339

Adorations to Narayana! | Shanti-Parva-Section-339 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 166)


பதிவின் சுருக்கம் : நாராயணனைக் காணச் சென்ற நாரதர்; நாரதர் சொன்ன நாராயணத் துதி ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்றழைக்கப்படும் பரந்த ஆட்சிப்பகுதியை அடைந்த சிறப்புமிக்க முனிவர் {நாரதர்}, (நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னது போன்ற) சந்திர காந்தியைக் கொண்ட அதே வெண்மனிதர்களைக் கண்டனர்.(1) நாராயணனைக் காண விரும்பிய அவர், மிகக் கடினமான நோன்புகளை நோற்றபடியே, புனிதமான மந்திரங்களை அமைதியாக உரைப்பதில் அமைதியாகவும், கவனமாகவும் ஈடுபட்டு அங்கே வசிக்கத் தொடங்கினார்.(2) குவிந்த மனத்தைக் கொண்ட அந்த மறுபிறப்பாள முனிவர், கரங்களை உயர்த்தி, யோகத்தில் நின்றபடி, குணங்கள் கொண்ட மற்றும் குணங்கள் அனைத்தும் அற்ற ஆன்மாவான {சகுண மற்றும் நிர்க்குண பரமாத்மாவான} அண்டத்தின் தலைவனிடம் பின்வரும் பாடலைப் பாடினார்.(3)

நாரதர், "ஓ! தேவர்களின் தேவா {தேவதேவேசனே}, ஓ! செயல்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனே {நிஷ்கிரியனே}, குணங்கள் அற்றவனே {நிர்க்குணனே}, உலகங்கள் அனைத்திற்கும் சாட்சியாக இருப்பவனே {லோகஸாக்ஷியே}, க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுபவனே {க்ஷேத்ரஜ்ஞனே}, அனைத்திலும் முதன்மையானவனே {புருஷோத்தமனே}, எல்லையற்றவனே {அநந்தனே}, புருஷன் என்றழைக்கப்படுபவனே {புருஷனே}, பெரும்புருஷனே {மஹாபுருஷனே}, புருஷர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {புருஷோத்தமனே}, முக்குணங்களின் ஆன்மாவானவனே {த்ரிகுணனே}, முதன்மையானவன் என்று அழைக்கப்படுபவனே {பிரதாநனே}, அமுதமாக இருப்பவனே {அம்ருதனே}, இறப்பற்றவன் என்று அழைக்கப்படுபவனே {அம்ருதாக்யனே}, அனந்தன் (சேஷன்) என்றழைக்கப்படுபவனே {அநந்தாக்யனே}, வெளியாக {ஆகாயமாக} இருப்பவனே {வியோமனே}, தொடக்கமற்றவனே {அம்ருதாத்மாவே}, வெளிப்பட்டும், வெளிப்படாமலும், இருந்தும், இல்லாமலும் இருப்பவனே {ஸதஸத்வ்யக்தாவ்யக்தனே}, வாய்மையின் இல்லமாக இருப்பவனே {ருத்தாமனே}, தேவர்களில் முதல்வனே {அதிதேவனே} (நாராயணனே),

செல்வங்களை (அல்லது செயல்களின் கனிகளை) அளிப்பவனே {வஸ்பிரதனே}, தக்ஷன் மற்றும் படைப்பின் தலைவர்கள் பிறரோடு அடையாளங்காணப் படுபவனே {பிரஜாபதியே}, அஸ்வதம் {அரசமரம்} மற்றும் பெரும் மரங்களாக இருப்பவனே {ஸுப்ரஜாபதியே}, நான்கு தலை பிரம்மனே {வநஸ்பதியே}, படைக்கப்பட்ட பொருட்கள் அடைதிலும் தலைவனே {மஹாபிரஜாபதியே}. வாக்கின் தலைவனே {ஊர்ஜஸ்பதியே}, அண்டத்தின் (அல்லது இந்திரனின்) தலைவனே {வாஸ்பதியே}, நீக்கமற நிறைந்திருக்கும் ஆன்மாவே {ஜகத்பதியே}, சூரியனாக இருப்பவனே {மநஸ்பதியே}, பிராணன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சாக இருப்பவனே {திவஸ்பதியே}, நீர்நிலைகளின் தலைவனே (வருணனே) {மருத்பதியே}, பேரரசனே {ஸலிலபதியே}, அல்லது மன்னனோடு அடையாளங்காணப்படுபவனே {பிருதிவீபதியே}, திசைப்புள்ளிகளைச் சார்ந்த லோகபாலர்களோடு அடையாளம் காணப்படுபவனே {திக்பதியே}, இறுதி அழிவின் போது அண்டத்தின் புகலிடமாக இருப்பவனே {பூர்வநிவாஸனே}, வெளிப்படாதிருப்பவனே {குஹ்யனே},

பிரம்மனுக்கு வேதங்களைக் கொடுத்தவனே {பிரம்மபுரோஹிதனே}, வேள்விகளோடு அடையாளம் காணப்படுபவனே {பிரம்மகாயிகனே}, உடல்களின் துணையுடன் பிராமணர்களால் அடையப்படும் வேத கல்வியும், தேவர்களின் நால்வகைக் கோட்பாடுகளோடு அடையாளம் காணப்படுபவனே {ராஜகனே}, நான்கு வர்ணங்களாக இருப்பவனே {சாதுர்மஹராஜிகனே}, பிரகாசம் கொண்டவனே {ஆபாஸுரனே}, பெரும் பிரகாசம் கொண்டவனே {மஹாபாஸுரனே}, காயத்ரி மற்றும் பிற புனித மந்திரங்களுடன் ஏழு பெரும் வேத காணிக்கைகளை ஏற்பவனே {சப்தமஹாபாகனே}, யமனே {யாம்யனே}, சித்திரகுப்தனும், யமனின் தொண்டர்களாக ஆனவனே {மஹாயாம்யனே}, யமனின் மனைவியே {ஸம்ஜ்ஞாஸம்ஜ்ஞனே}, துஷிதன் என்றழைக்கப்படும் தேவ வகையைச் சேர்ந்தவனே {துஷிதனே}, மஹா துஷிதன் என்றழைக்கப்படும் வேறு தேவ வகையைச் சேர்ந்தவனே {மஹாதுஷிதனே}, காலனாக இருப்பவனே {பிரமர்த்தநனே}, ஆசையாகவும், காலனுக்குத் துணை புரிய படைக்கப்படும் நோய்கள் அனைத்தாகவும் {பரிநிர்மிதனே} இருப்பவனே, உடல்நலமாகவும், நோயில் இருந்துவிடுபட்ட நிலையாகவும் {அபரிநிர்மிதனே} இருப்பவனே, ஆசைகள் மற்றும் விருப்பங்களுக்கு உட்படுபவனே {வசவர்த்தினே}, ஆசைகள் மற்றும் விருப்பங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவனே {அவசவர்த்தினே}, பல்வேறு இனங்களில், வடிவங்களில் எல்லையில்லாமல் வெளிப்படுபவனே {அபரிமிதனே}, தண்டிக்கப்படுபவனே {வசவர்த்தினே}, தண்டிப்பவனே {அவசவர்த்தினே},

(அக்னி ஹோத்ரம் முதலிய) சிறு வேள்விகளாக இருப்பவனே {யஜ்ஞனே}, (பிரம்ம வேள்வி முதலிய) பெரும் வேள்விகளாக இருப்பவனே {மஹாயஜ்ஞனே}, ரித்விஜர்களாக இருப்பவனே {அஸம்யஜ்ஞனே}, வேள்விகள் அனைத்தின் தோற்றமாக (வேதங்களாக) இருப்பவனே {யஜ்ஞஸம்பவனே}, நெருப்பாக இருப்பவனே {யஜ்ஞயோநியே}, {யஜ்ஞகர்ப்பனே} வேள்விகள் அனைத்தின் இதயமாக (மந்திரங்கள் மற்றும் அவற்றில் சொல்லப்படும் ஸ்லோகங்களாக) இருப்பவனே {யஜ்ஞஹ்ருதயனே}}, வேள்விகளில் பாடப்படும் பொருளாக இருப்பவனே {யஜ்ஞஸ்துதனே}, வேள்வி காணிக்கைகளின் பங்குகளை எடுத்துக் கொள்பவனே {யஜ்ஞபாகஹரனே}, ஐந்து வேள்விகளின் உடல்வடிவமாக இருப்பவனே {பஞ்சயஜ்ஞனே}, (பகல், இரவு, மாதம், பருவகாலங்கள், வருடம் என்ற) ஐந்து காலப்பிரிவுகளை, அல்லது காலப்பகுதிகளை உண்டாக்குபவனே {பஞ்சகாலகர்த்ருபதியே}, பஞ்சராத்ரம் என்றழைக்கப்படும் சாத்திரங்களைத் தவிர வேறு எதனாலும் புரிந்துகொள்ளப்பட முடியாதவனே {பஞ்சராத்ரிகனே}, எதிலிருந்தும் சுருங்காதவனே {வைகுண்டனே}, வெல்லப்படமுடியாதவனே {அபராஜிதனே}, (உடற்கட்டு இல்லாமல்) மனமாக மட்டுமே இருப்பவனே {மானஸிகனே}, {நாவமிகனே} பெயரால் மட்டுமே அறியப்படுபவனே {நாமநாமிகனே},

தலைவன் பிரம்மனாகவே இருப்பவனே {பரஸ்வாமியே}, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நோன்புகள் மற்றும் நியமங்களை நிறைவு செய்தவனே {ஸுஸ்நாதனே}, (திரிதண்டம்தரித்த) அன்னப்பறவையாக இருப்பவனே {ஹம்சனே}, (ஒரே தண்டம் தரிக்கும்) பேரன்னப்பறவையாக இருப்பவனே {பரமஹம்சனே}, (தண்டமில்லாத) முதன்மையான அன்னப்பறவையாக இருப்பவனே {மஹாஹம்ஸனே}, {பரமஜ்ஞேயனே} வேள்விகள் அனைத்திலும் முதன்மையானவனாக இருப்பவனே {பரமயாஜ்ஞிகனே}, {சாங்கிய யோகமாக இருப்பவனே {ஸாங்க்யயோகனே}, சாங்கிய தத்துவத்தின் உடல்வடிவமாக இருப்பவனே {ஸாங்க்யமூர்த்தியே}, ஜீவன்கள் அனைத்திலும் வசிப்பவனே {அம்ருதேசயனே}, அனைவரின் இதயங்களிலும் வாழ்பவனே, ஒவ்வொரு புலனிலும் வசிப்பவனே {ஹிரண்யேசயனே}, பெருங்கடலின் நீரில் மிதப்பவனே, வேதங்களில் வாழ்பவனே {வேதேசயனே}, (அண்டம் உண்டாகும்போது முட்டையின் தோற்றத்தில்) தாமரையில் கிடப்பவனே {பத்மேசயனே}, அண்டத்தின் தலைவனே {தேவேசயனே}, வழிபாட்டாளர்களைக் காப்பதற்கு எங்கும் செல்லும் துருப்புகளைக் கொண்டவனே {விஷ்வக்ஸேநனே}, உன்னை வணங்குகிறேன்.

உயிரினங்கள் அனைத்துமாகப் பிறப்பவன் {ஜகதந்வயன்} நீயே. (அனைத்து உயிரினங்களையும் கொண்ட) அண்டத்தின் தோற்றுவாய் {ஜகத்ப்ரக்ருதி} நீயே. நெருப்பையே வாயாகக் கொண்டவன் நீயே. பெருங்கடலின் நீரில், குதிரைத் தலையுடன் வெளிப்பட்டுச் செல்லும் நெருப்பு {வடவாமுகாக்நி} நீயே. வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் புனிதமாக்கப்பட்ட நெய் {ஆகுதி} நீயே. (உடலின் நெருப்பு, அல்லது வெப்பத்தைத் தூண்டி, அதை வாழவும் வளரவும் செய்யும்) தேரோட்டி {ஸாரதி என்ற அக்நி} நீயே. வஷட் {வஷட்காரம்} நீயே. ஓம் ஏன்ற ஓரசை {ஓங்காரம்} நீயே. தவங்கள் நீயே. மனம் நீயே. சந்திரமாஸ் {சந்திரன்} நீயே. வேள்வி நெய்யைப் புனிதமாக்குபவன் ச்சக்ஷுராஜ்யம்} நீயே. சூரியன் நீயே. திசைகளின் நான்கு முக்கியப் புள்ளிகளில் நின்றிருக்கும் யானைகள் {திக்கஜம்} நீயே. திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டுபவன் {திக்பாநு} நீயே. துணைத்திசைகள் அனைத்திற்கும் ஒளியூட்டுபவன் {விதிக்பாநு} நீயே.

குதிரை தலை கொண்டவன் {ஹயசிரஸ்} நீயே. ரிக் வேதத்தின் முதல் மூன்று மந்திரங்கள் {பிரதமத்ரிஸுபர்ணன்} நீயே. (பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்ற) பல்வேறு வகை மனிதர்களின் பாதுகாவலன் {வர்ணதரன்} நீயே. (கார்ஹபத்தியத்தின் தொடக்கத்தில் உள்ள) ஐந்து நெருப்புகள் பஞ்சாக்நி} நீயே. நாசி என்றழைக்கப்படும் வேள்வி நெருப்பை மூன்றுமுறை முடுக்கியவன் {திரிணாசிகேதன்} நீயே. (வேதங்களுடைய) ஆறு அங்கங்களின் புகலிடம் {ஷடங்கநிதாநன்} நீயே. வேள்விகள் மற்றும் பிற அறச் சடங்குகளில் சாமங்களைப் பாடுவதில் ஈடுபடும் முதன்மையான பிராமணர்கள் நீயே. பிராக்ஜோதிஷன் நீயே, முதல் சாமத்தைப் பாடுபவன் நீயே {ஜியேஷ்டஸாமகன்}. அதர்வசிரஸ் என்ற பெயரால் அழைக்கப்படும் உபநிஷத்தின் உடல்வடிவம் {அதர்வசிரஸ்} நீயே. (சூரிய, சக்தி, கணேச, சிவ மற்றும் விஷ்ணு வழிபாடு தொடர்புடைய) முதன்மையான ஐந்து சாத்திரங்களின் பொருள் {பஞ்சமஹாகல்பன்} நீயே.

நீரின் நுரையை மட்டுமே உண்டு வாழும் ஆசான் என்று அழைக்கப்படுபவன் {பேநபாசார்யன்} நீயே. வாலகில்யன் நீயே. யோகத்தில் இருந்து வீழாதவனின் உடல்வடிவம் {வைகாநஸன்} நீயே. சரியான தீர்மானம் அல்லது அறிவின் உடல்வடிவம் {அபக்நயோகனும், அபக்நபரிஸங்க்யாநனும்} நீயே. யுகங்களின் தொடக்கம் {யுகாதி} நீயே. யுகங்களின் நடுப்பகுதி {யுகமத்யன்} நீயே. அவற்றின் முடிவும் {யுகநித்நன்} நீயே. ஆகண்டலன் (இந்திரன்) நீயே. பிராசீனகர்ப்பனும், கௌசிகனும் நீயே. புருஷ்டுதன் நீயே. புருஹூதன் நீயே, அண்டத்தின் கைவினைஞன் நீயே. அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஷ்வகிருத்} நீயே. எல்லையற்ற அசைவுகளைக் கொண்டவன் {விஷ்வஜித்} நீயே. எல்லையில்லா உடல்களைக் கொண்டவன் {விஷ்வரூபன்} நீயே. முடிவில்லாதவன் {அநந்தகதி} நீயே, தொடக்கமில்லாதவன் {அநந்தபோகன்} நீயே, நடுவுநிலை இல்லாதவன் {அநாதி} நீயே. வெளிப்படாத நடுப்பகுதியைக் கொண்டவன் {அமத்யன்} நீயே.

வெளிப்படாத முடிவைக் கொண்டவன் {அவ்யக்தமத்யனும், அவ்யக்தநிதநனும்} நீயே. நோன்புகளை இல்லமாகக் கொண்டவன் {விரதாவாஸன்} நீயே. பெருங்கடலில் வசிப்பவன் {ஸமுத்ராதிவாஸன்} நீயே. புகழ், தவங்கள், தற்கட்டுப்பாடு, செழிப்பு, அறிவு, பெருஞ்சாதனைகள் மற்றும் அண்டத்திற்குரிய அனைத்தின் இல்லமாக இருப்பவன் {ய்யோவாஸனும், தபோவாஸனும், தமர்வாஸனும், லக்ஷ்ம்யாவாஸனும், வித்யாவாஸனும், கீர்த்யாவாஸனும், ஸ்ரீவாஸனும், ஸர்வவாஸனும்} நீயே. வாசுதேவன் நீயே. அனைத்து விருப்பங்களையும் அருள்பவன் {ஸர்வச்சந்தகன்} நீயே. ராமனைத் தன்தோள்களில் சுமந்த குரங்கு {ஹரிஹரயன்} நீயே. பெருங்குதிரை வேள்வி {ஹரிமேதன்} நீயே. பெரும் வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளைப் பங்காகப் பெறுபவன் {மஹாயஜ்ஞபாகஹரன்} நீயே. வரங்களையும், மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அளிப்பவன் {வரப்ரதனும், ஸுகப்ரதனும், தனப்ரதனும்} நீயே. ஹரிக்கு அர்ப்பணிப்புள்ளவன் நீயே. புலனடக்கம் கொண்டவன் {ஹரிமேதன்} நீயே. நோன்புகளும், நியமங்களும் {யமனும், நியமனும்} நீயே. பேரழிவுகள் {கிருச்ரன்} நீயே, கடும் பேரழிவுகள் {அதிக்ருச்ரன்} நீயே, மிகக் கடும் பேரழிவுகளும் {மஹாக்ருச்ரன்} நீயே.

நோன்புகள் மற்றும் அற, பக்திச் சடங்குகளைச் செய்பவன் {நியமதரனும், நிவ்ருத்தப்ரதமனும்} நீயே. பிழைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவன் {நிவ்ருத்திதர்ம்பரவசகதன்} நீயே. பிரம்மச்சாரி {பிரவசநகதனே} நீயே. பிருசினியின் கருவறையில் பிறந்தவன் {பிருச்நிகர்ப்பப்ரவருததனே} நீயே. வேதசடங்குகள் மற்றும் செயல்கள் அனைத்தும் பிறப்பெடுத்த இடம் {பிரவ்ருத்தவேதவிக்ரியன்} நீயே. பிறப்பில்லாதவன் {அஜன்} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வகதி} நீயே. அனைத்துப் பொருட்களிலும் கண்களைச் செலுத்துபவன் {நக்ராஹ்யன்} நீயே. புலன்களால் புரிந்து கொள்ளப்பட முடியாதவன் {அக்ஷயன்} நீயே. சிதைவுக்கு உள்ளாகாதவன் {அசலன்} நீயே. பெரும்பலம் கொண்டவன் {மஹாவிபூதி} நீயே. பார்க்கமுடியாத அளவுக்குப் பரந்த உடலைக் கொண்டவன் {மஹாத்ம்யசரீரன்} நீயே. புனிதமானவனும் {பவித்ரனும்}, மிகப் புனிதமானவனும் {மஹாபவித்ரனும்} நீயே. தங்கமயமானவன் {ஹிரண்யமயன்} நீயே.

பரந்தவன் {பிருஹத்} நீயே. தர்க்கம் அல்லது வாதத்தின் கருத்துக்கு அப்பாற்பட்டவன் {அப்தர்க்யன்} நீயே. அறிந்து கொள்ளப்பட முடியாதவன் {அவிஜ்ஞேயன்} நீயே. காரணங்களில் முதன்மையானவன் {பிரம்மாக்ரியன்} நீயே. அனைத்து உயிரினங்களையும் படைப்பவனும் {பிரஜஸர்க்ககரன்}, அவற்றை அழிப்பவனும் {பிரஜாநித்னகரன்} நீயே. பெரும் மாயசக்திகளைக் கொண்டவன் {மஹாமாயாதரன்} நீயே. சித்திரசிகண்டி என்றழைக்கப்படுபவன் நீயே. வரங்களை அளிப்பவன் {வரப்ரதன்} நீயே. வேள்விக் காணிக்கைகளின் பங்கை ஏற்பவன் {புரோடோசபாகஹரன்} நீயே. வேள்விகள் அனைத்தில் இருந்தும் தகுதியை அடைபவன் {கதாத்வரன்} நீயே.

ஐயங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவன் {சிந்நத்ருஷ்ணன்} நீயே. எங்கும் நிறைந்தவன் {ஸர்வதோவ்ருத்தன்} நீயே. பிராமணனின் வடிவம் கொண்டவன் {பிராம்மணரூபன்} நீயே. பிராமணர்களிடம் அன்பு கொண்டவன் {பிராம்மணபிரியன்} நீயே. அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஷ்வமூர்த்தி} நீயே. மிகப் பரந்த வடிவைக் கொண்டவன் {மஹாமூர்த்தி} நீயே. நண்பர்களில் பெரியவன் {பாந்தவன்} நீயே. வழிபாட்டாளர்கள் அனைவரிடமும் கருணை கொண்டவன் {பக்தவத்ஸலன்} நீயே. பிராமணர்களின் பெருந்தேவன் {பிராம்மண்யதேவன்} நீயே. உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட சீடன் நானே. நான் உன்னைக் காண விரும்புகிறேன். விடுதலையின் வடிவில் இருக்கும் {நிர்வகல்பகஜ்ஞானத்தின் பொருட்டு} உன்னை நான் வணங்குகிறேன்" {என்று வேண்டினார் நாரதர்}.(4)

சாந்திபர்வம் பகுதி – 339ல் உள்ள சுலோகங்கள் : 4

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்