Saturday, December 08, 2018

பதரியில் வசிக்கும் நாரதர்! - சாந்திபர்வம் பகுதி – 345

Narada resides at Vadari! | Shanti-Parva-Section-345 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 172)


பதிவின் சுருக்கம் : பரமாத்மாவின் மகிமையைச் சொன்ன நரனும், நாராயணனும்; தவத்தில் ஈடுபட்ட நாரதர்...


நரனும், நாராயணனும் {நாரதரிடம்}, "(அநிருத்தனின் வடிவில்) பலமிக்க நாராயணனை நீர் கண்டதால் உயர்ந்த அருளைக் கொண்டவராகவும், உயர்ந்த புகழுக்குத் தகுந்தவராகவும் இருக்கிறீர். வேறு எவராலும், ஏன் ஆதி தாமரையில் பிறந்த பிரம்மனாலும் கூட அவனைக் காண முடிந்ததில்லை.(1) பலமிக்கவனும், புனிதம் நிறைந்தவனுமான அந்தப் புருஷர்களில் முதன்மையானவன், வெளிப்படாத மூலத்தையும், காணப்பட முடியாதவனாகவும் இருக்கிறான் ஓ! நாரதரே, நாங்கள் உமக்குச் சொல்லும் இந்த வார்த்தைகள் உண்மையே.(2) அர்ப்பணிப்புடன் அவனைத் துதிப்பவனைவிட இந்த அண்டத்தில் வேறு எவனும் அவனுக்கு அன்புக்குரியவன் இல்லை. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இதன் காரணமாகவே அவன் உம்மிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(3) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தவங்கள் நோற்பதில் ஈடுபட்டுவரும் அந்தப் பரமாத்மாவின் ஆட்சிப்பகுதிக்கு எங்கள் இருவரைத் தவிர வேறு எவராலும் செல்ல முடியாது.(4) அந்த இடம் அவனால் அலங்கரிக்கப்பட்டிருப்பதன் விளைவால், அஃது {அவ்விடம் / வெண்தீவு / ஸ்வேதத்வீபம்} ஆயிரம் சூரியர்கள் ஒன்றுதிரண்டதற்கு ஒப்பான காந்தியைக் கொண்டிருக்கிறது.(5)

ஓ! பிராமணரே {நாரதரே}, சிறப்புமிக்கவனும், அண்டப் படைப்பாளனின் தோற்றுவாயுமான அவனிடம் இருந்தே பூமியுடன் தொடர்புடைய மன்னிக்கும் குணம் பிறந்தது.(6) அனைத்து உயிரினங்களின் நன்மைக்கான குணங்களைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவனில் இருந்தே ரசம் (சுவை) எழுந்தது. நீருடன் தொடர்புடைய ரஸம் என்ற குணம் நீராகவே இருக்கிறது.(7) அவனிடமிருந்தே வடிவம் அல்லது பார்வையை ஆன்மாவாகக் கொண்ட குணத்துடன் கூடிய வெப்பம் அல்லது ஒளி எழுந்தது. அது சூரியனைப் பற்றுவதன் விளைவால், சூரியனால் ஒளிரவும், வெப்பத்தைத் தரவும் முடிகிறது.(8) சிறப்புமிக்கவனும், முதன்மையானவனுமான அவனிடமிருந்தே தீண்டலும் எழுந்தது. அது காற்றைப் பற்றுவதன் விளைவால் காற்றானது தீண்டல் உணர்வை உண்டாக்கியபடியே உலகம் முழுவதும் திரிகிறது.(9) மொத்த அண்டத்தின் பலமிக்கத் தலைவனான அவனிடம் இருந்தே ஒலி எழுந்தது. அது வெளியுடன் பற்று கொள்வதன் விளைவால் மறைக்கப்படாததாகவும், அடைக்கப்படாததாகவும் இருக்கிறது.(10) அனைத்து உயிரினங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மனம் இந்தச் சிறப்புமிக்கவனிடம் இருந்தே எழுந்தது. சந்திரனுடன் பற்று கொள்வதன் விளைவால் சந்திரன் அனைத்துப் பொருட்களையும் வெளிப்படுத்தும் குணத்தைக் கொண்டிருக்கிறான்.(11)

வேள்விகளில் அளிக்கப்படும் ஆகுதிகள் மற்றும் பிற காணிக்கைகளை உண்ணும் தெய்வீக நாராயணன், ஞானத்தை மட்டுமே துணையாகக் கொண்டு எந்த இடத்தில் வசிக்கிறானோ, அந்த இடமே அனைத்துப் பொருட்களையும் உண்டாக்கும் காரணமான சத் என்ற பெயரில் அறியப்படுகிறது.(12) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, களங்கமற்றவர்களும், அறம் மற்றும் பாவம் ஆகிய இரண்டில் இருந்தும் விடுபட்டவர்களுமான மனிதர்களின் பாதையானது மங்கலமும், இன்பமும் நிறைந்ததாகும்.(13) உலகங்கள் அனைத்தின் இருளை விலக்கும் சூரியனே (முக்தன் ஒருவன் கடந்து செல்லும்) வாயிலாகச் சொல்லப்படுகிறான். சூரியனுக்குள் நுழையும் அத்தகைய மனிதர்களின் உடல்கள் அவனது நெருப்பில் எரிக்கப்படுகின்றன. அதன் பிறகு அவர்கள் எக்காலத்திலும், எவராலும் காண முடியாத நிலையை அடைகிறார்கள்.(14) புலப்படாத அணுக்களாகக் குறைக்கப்படும் அவர்கள் பிறகு (சூரியனின் நடுப்பகுதியில் வசிக்கும்) நாராயணனுக்குள் நுழைகிறார்கள். அவனிலிருந்தும் கடந்து செல்லும் அவர்கள் அநிருத்தன் என்ற வடிவத்திற்குள் நுழைகிறார்கள்.(15)

உடல்சார்ந்த குணங்கள் அனைத்தையும் மொத்தமாக இழந்து, மனமாக மட்டுமே மாறும் அவர்க்ள பிரத்யும்னனுக்குள் நுழைகிறார்கள். பிரத்யும்னனிலிருந்தும் கடந்து செல்பவர்களும், சாங்கிய தத்துவத்தை அறிந்தவர்களும், பரம்பொருளிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள், ஜீவன் என்றழைக்கப்படும் சங்கர்ஷணனுக்குள் நுழைகிறார்கள். அதன் பிறகு, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற அடிப்படை முக்குணங்களையும் இழக்கும் அந்த மறுபிறப்பாளர்கள் அந்த அடிப்படை முக்குணங்களைக் கடந்தவனான க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படும் பரமாத்மாவுக்குள் நுழைகிறார்கள். அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் அசல் புகலிடம் அல்லது வசிப்பிடம் வாசுதேவனே என்பதை நீர் அறிய வேண்டும்.(16-18) குவிந்த மனத்தைக் கொண்டவர்களும், அனைத்து வகைக் கட்டுப்பாடுகளையும் நோற்பவர்களும், புலனடக்கம் கொண்டவர்களும், மொத்த ஆன்மாவுடன் சேர்த்து அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களே வாசுதேவனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள்.(19)

ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {நாரதரே}, நாங்கள் இருவரும் தர்மனின் இல்லத்தில் பிறப்பை அடைந்தோம். மேலும் நாங்கள் இனிமையான இந்தப் பெரிய ஆசிரமத்தில் கடுந்தவங்களைச் செய்து வருகிறோம்.(20) ஓ! மறுபிறப்பாளரே, பரம்பொருளால் வெளிப்படுத்தப்பட்டவையும், மூவுலகங்களிலும் தேவர்கள் அனைவருக்கும் அன்புக்குரியவையுமான பொருட்கள் அனைத்திற்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் (பிற உயிரினங்களால அடையப்பட முடியாத பல்வேறு சாதனைகளை அடைவதற்காக) நாங்கள் இவ்வாறு தவத்தில் ஈடுபடுகிறோம்.(21) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பொதுவில் இல்லாதவையும், எங்கள் இருவருக்கு மட்டுமே பொருந்தக்கூடியவையுமான விதிகளுக்கு இணக்கமாகச் சிறந்த மற்றும் உயர்ந்த நோன்புகள் நிறைந்த கடுந்தவங்களை நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் செய்து வருகிறோம்.(22) ஓ! தெய்வீக முனிவரே, தவங்களைச் செல்வமாகக் கொண்ட தெய்வீக முனிவரான உம்மை நாங்கள் வெண்தீவில் கண்டோம். நாராயணனைச் சந்தித்த பிறகு நீர் ஒரு குறிப்பிட்ட தீர்மானத்தை அடைந்திருக்கிறீர்.(23) அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய மூவுலகங்களிலும் நாங்கள் அறியாதது ஏதுமில்லை. ஓ! பெருந்தவசியே, {மூவுலகங்களிலும்} நடக்கப் போகும், அல்லது நடந்த, அல்லது நடந்து கொண்டிருக்கும் நன்மை அல்லது தீமையை அந்தத் தேவதேவன் உமக்குச் சொன்னான்" என்றனர்".(24)

Image result for பத்ரிநாத் கோயில்வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கடுந்தவங்களில் ஈடுபட்டுவந்த நரநாராயணர்கள் இருவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தெய்வீக முனிவரான நாரதர், மதிப்புடன் தன் கரங்களைக் கூப்பி நாராயணனில் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டார்.(25) நாராயணனால் அங்கீகரிக்கப்பட்ட எண்ணற்ற புனித மந்திரங்களை அவர் காலத்திற்கும் தன் மனத்தில் முறையான நோன்புகளுடன் உரைத்துக் கொண்டே இருந்தார். பெரும் சக்தியுடன் கூடிய நாரதர், பரம தேவனான நாராயணனை வழிபட்டும், தர்மனின் இல்லத்தில் பிறந்த புராதன முனிவர்கள் இருவரையும் துதித்துக் கொண்டும், இமயச் சாரலில் உள்ள நரநாராயணர்களுக்குச் சொந்தமான பதரி எனும் ஆசிரமத்தில் ஓராயிரம் தேவ வருடங்களுக்குத் தொடர்ந்து வசித்து வந்தார்".(26-27)

சாந்திபர்வம் பகுதி – 345ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்