Sunday, December 09, 2018

பித்ரு வழிபாடு! - சாந்திபர்வம் பகுதி – 346

Pitri worship! | Shanti-Parva-Section-346 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 173)


பதிவின் சுருக்கம் : பித்ருக்களுக்குச் செய்யும் சடங்குகளின் சிறப்பை நாரதருக்குச் சொன்ன நரனும், நாராயணனும்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஒரு சமயத்தில் பரமேஷ்டியின் மகனான நாரதர், நர நாரயணரின் ஆசிரமத்தில் வசித்து வந்தபோது, தேவர்களை மதிக்கும் சடங்குகளையும், நோன்புகளையும் முறையாகச் செய்துவிட்டு, பித்ருக்களைக் கௌரவிக்கும் சடங்கைச் செய்வதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(1) இவ்வாறு அவர் ஆயத்தமாவதைக் கண்ட தர்மனின் மூத்த மகனான பலமிக்க நாராயணர், "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தேவர்கள் மற்றும் பித்ருக்கள் தொடர்புடைய இந்தச் சடங்குகள் மற்றும் நோன்புகளில் யாரை நீர் வழிபடுகிறீர்? ஓ! புத்திமான்கள் அனைவரிலும் முதன்மையானவரே, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் எனக்கு இது குறித்துச் சொல்வீராக. நீர் செய்வது என்ன? நீர் செய்யும் இந்தச் சடங்குகளால் என்ன கனிகளை {பலன்களை} நீர் விரும்புகிறீர்" என்று கேட்டார்.(2,3)

நாரதர், "முந்தைய நிகழ்வொன்றில் தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் சடங்குகளும், நோன்புகளும் செய்யப்பட வேண்டும் என்று நீர் என்னிடம் சொன்னீர். தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் சடங்குகள் உயர்ந்த வேள்வியாகும் என்றும், நித்தியமான பரமாத்மாவை வழிபடுவதற்கு இணையானவை என்றும் நீர் சொன்னீர்.(4) அந்தப் போதனையில் அறிவுரை பெற்ற நான், தேவர்களை வழிபட்டுச் செய்யப்படும் இந்தச் சடங்குகளின் மூலம் நித்தியமானவனும், மாற்றமில்லாதவனான விஷ்ணுவைக் கௌரவித்து வேள்வி செய்கிறேன். அந்தப் பரம தேவனிலிருந்த உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன் பழங்காலத்தில் உதித்தெழுந்தான்.(5) பரமேஷ்டி என்றும் வேறு பெயரில் அழைக்கப்படும் அந்தப் பிரம்மன் என் தந்தையை (தக்ஷனை) உண்டாக்கினான். (தக்ஷ முனிவரின் சாபத்தால் பின்னாளில் அவருடைய மகனாகப் பிறப்பை அடைந்தாலும்) நான் அனைவருக்கும் முன்பாகப் பிரம்மனின் விருப்பத்தால் படைக்கப்பட்ட அவருடைய ஆன்ம மகனாவேன் {பிரம்மனின் மானஸபுத்திரனாவேன்}.(6) ஓ! சிறப்புமிக்கவரே, அறவோரே, நாராயணனால் விதிக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்புடைய வகையில் பித்ருக்களைக் கௌரவிக்கும் இந்தச் சடங்குகளை நான் நாராயணனுக்காகவே செய்கிறேன். சிறப்பு மிக்க நாராயணனே, (அனைத்து உயிரினங்களின்) தந்தையும், தாயும், பாட்டனுமாவான்.(7) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகள் அனைத்திலும் அண்டத்தின் தலைவனான அவனே துதிக்கப்படுகிறான், வழிபடப்படுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் தந்தைமாரான தேவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்ருதிகளைச் சொல்லிக் கொடுத்தனர்.(8) ஸ்ருதிகளில் ஞானத்தை இழந்த அந்தத் தந்தைமார் தாங்கள் சொல்லிக் கொடுத்தவற்றை மீண்டும் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து அடைந்தனர். இந்நிகழ்வின் விளைவால், தங்கள் தந்தைமாருக்கு மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்த மகன்கள் தந்தையின் நிலையை அடைந்தனர் (தங்கள் மகன்களிடம் மந்திரங்களைப் பெற்ற தந்தைமார் மகன்களின் நிலையை அடைந்தனர்)[1].(9) அச்சந்தர்ப்பத்தில் தேவர்கள் என்ன செய்தனர் என்பதை நீங்கள் இருவரும் நன்கு அறிவீர்கள். (அந்தச் சந்தர்ப்பத்தில்) மகன்களும், தந்தைமாரும் ஒருவரையொருவர் இவ்வாறு வழிபட்டுக் கொண்டனர்.(10) முதலில் சில தர்ப்பை புற்களைப் பரப்பி வைத்துக் கொண்ட தேவர்களும், பித்ருக்களும் (தேவர்களின் பிள்ளைகளும்) மூன்று பிண்டங்களை அதில் வைத்து இவ்வழியில் ஒருவரையொருவர் வழிபட்டனர். எனினும், பழங்காலத்தில் பிண்டங்கள் என்ற பெயரை பித்ருக்கள் ஏன் அடைந்தனர் என்பதை நான் அறிய விரும்புகிறேன்" என்றார்.(11)

[1] "இந்தக்கதை என்னவென்றால், ஒருகாலத்தில் தேவர்கள், அசுரர்களுக்கெதிராகப் போரிடச் செல்லும் முன் தங்கள் பிள்ளைகளான அக்னிஷாதர் முதலியோருக்கு வேதங்களைச் சொல்லிக் கொடுத்தனர். எனினும், போர்க்களத்திலேயே அவர்கள் நீண்ட காலத்தைச் செலவிட்டதால் வேதங்களை மறந்து போனார்கள். மீண்டும் சொர்க்கத்திற்குத் திரும்பிய அவர்கள் தங்கள் பிள்ளைகளும் சீடர்களாகவும் இருந்தவர்களிடமே அவற்றை மீண்டும் அடைந்தனர். ஆசானே எப்போதும் தந்தை என்றும், சீடனே மகன் என்றும் சாத்திரங்கள் அறிவிக்கின்றன. வயதில் வேறுபாடு இந்த உறவுமுறையைப் பாதிக்காது. எனவே, பதினாறு வயதுடைய இளைஞன் ஒருவன் எண்பது வயது கொண்ட ஒருவருக்குத் தந்தையாகலாம். பிராமணர்களில் ஞானத்திற்கே மதிப்பன்றி வயதுக்கல்ல" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

நரனும், நாராயணனும், "பழங்காலத்தில், கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமி காட்சியில் இருந்து மறைந்து போனாள். பெரும் பன்றியின் வடிவையேற்ற கோவிந்தனர் (தன் வலிமைமிக்கத் தந்தத்தால்) அவளை மேலே உயர்த்தினான்.(12) பூமியை மீண்டும் அவளது பழைய நிலையிலேயே நிலைநிறுத்தியவனும், நீரும், புழுதியும் பூசப்பட்டவனுமான அந்தப் புருஷர்களில் முதன்மையானவன், உலகத்திற்கும், அதில் வசித்தவர்களுக்கும் தேவையானவற்றைச் செய்வதில் தன்னை நிறுவிக் கொண்டான்.(13) ஓ! நாரதரே, சூரியன் நடுவானை அடைந்து, காலை துதிகளுக்கான வேளை {ஆந்நிக காலம்} வந்த போது, அந்தப் பலமிக்கத் தலைவன் {வராகன்}, தன் தந்தத்தைக் கொண்டு, திடீரென மூன்று மண் உருண்டைகளை உருட்டி, ஏற்கனவே புல் பரப்பப்பட்ட பூமியில் வைத்தான். நித்திய விதியில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி அந்தப் பலமிக்க விஷ்ணு அந்த மண் உருண்டைகளைத் தன் சுயத்திற்கே அர்ப்பணித்தான்.(14,15) அந்தப் பலமிக்கத் தலைவன் தன் தந்தங்களால் உருட்டிய மண் உருண்டைகளைப் பிண்டங்களாகக் கருதி, தன் உடல் வெப்பத்தால் எழுந்தவையும், உள்ளே எண்ணெய் உள்ளவையுமான எள்வித்துகளைக் கொண்டு, கிழக்கு முகமாக அமர்ந்து அந்த அர்ப்பணிப்புச் சடங்கைத் தானே செய்தான். அப்போது அந்தத் தேவர்களில் முதன்மையானவன், மூவுலகங்களில் வசிப்போருக்கு உண்டான ஒழுக்க விதிகளை நிறுவும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(16,17)

அந்த விருஷாகபி, "உலகங்களைப் படைத்தவன் நானே. நான் பித்ருக்கள் என்றழைக்கப்படுவோரை உண்டாக்கத் தீர்மானித்திருக்கிறேன்" என்று சொன்னான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன், பித்ருக்களைக் கௌரவிப்பதற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படுத்தும் உயர்ந்த விதிகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(18)

அவன் அவ்வாறு ஈடுபட்டிருந்தபோது, தன் தந்தத்தால் உருட்டப்பட்ட மண் உருண்டைகள் மூன்றும் தெற்கு நோக்கி விழுந்திருப்பதைக் கண்டான். அப்போது அவன், "என் தந்தத்தால் உருட்டப்பட்ட இந்த உருண்டைகள், பூமியின் பரப்பில் தென் திசை நோக்கி விழுந்திருக்கின்றன. இதனால் வழிநடத்தப்படும் நான், இதுமுதல் இவை பித்ருக்கள் என்ற பெயரில் அறியப்பட வேண்டும் என அறிவிக்கிறேன்.(19) உருண்டையாக எந்தக் குறிப்பிட்ட வடிவத்திலும் இல்லாத்த இவை மூன்றும், உலகின் பித்ருக்களாகக் கருதப்பட வேண்டும். இவ்வாறே நான் நித்திய பித்ருக்களை உண்டாக்குகிறேன்.(20) தந்தையும், பாட்டனும், பெரும்பாட்டனுமான நானே இந்த மூன்று பிண்டங்களில் வசிப்பதாகக் கருதப்பட வேண்டும்.(21) எனக்கு மேன்மையானவன் வேறு எவனும் இல்லை. நான் வழிபடவோ, சடங்குகளுடன் துதிக்கவோ வேறு எவன் இருக்கிறான்? இந்த அண்டத்தில் என் தந்தையென எவன் இருக்க முடியும்? நானே என் பாட்டனாவேன்.(22) உண்மையில் நானே பெரும்பாட்டனாகவும் தந்தையாகவும் இருக்கிறேன். (அண்டமனைத்திற்கும்) நானே ஒரே காரணனாவேன்" என்றான்.

ஓ! கல்விமானான பிராமணரே {நாரதரே}, விருஷாகபி என்றழைக்கப்படும் அந்தத் தேவர்களின் தேவன் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வராஹ மலைகளின் சாரலில் பெரும் சடங்குகளுடன் அந்தப் பிண்டங்களுக்குக் காணிக்கையளித்தான். அந்தச் சடங்குகளின் மூலம் அவன் தன்னையே வழிபட்டான். அந்த வழிபாட்டை நிறைவு செய்த அவன் அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(23,24) இதனாலேயே பித்ருக்கள் பிண்டம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இதுவே அந்தப் பொறுப்புப் பெயரின் அடித்தளமாகும். அச்சந்தர்ப்பத்தில் விருஷாகபியால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு ஏற்புடைய வகையிலேயே அனைவராலும் செய்யப்படும் வழிபாட்டைப் பித்ருக்கள் அடைகிறார்கள்.(25) பித்ருக்கள், தேவர்கள், ஆசான் அல்லது மதிப்புமிக்கப் பெரியவர், வீட்டிற்கு வரும் விருந்தினர், பசு, மேன்மையான பிராமணர்கள், பூமாதேவி, தாய்மார் ஆகியோரை எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் துதித்துக் கௌரவித்து வேள்வி செய்பவர்கள் விஷ்ணுவையே துதிப்பதாகவும், அவனுக்கே அவர்கள் வேள்வியைச் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பில் உள்ள அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தச் சிறப்புமிக்கத் தேவனே அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருக்கிறான்.(26,27) இன்ப துன்பங்களால் பாதிப்படையாத அவன் அனைத்திடமும் சமமாக நடக்கும் மனோநிலையைக் கொண்டவனாவான். மகிமை கொண்டவனும், பேரான்மாவுமான நாராயணனே அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாகச் சொல்லப்படுகிறான்" என்றனர் {நரனும், நாராயணனும்}".(28)

சாந்திபர்வம் பகுதி – 346ல் உள்ள சுலோகங்கள் :28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்