Sunday, December 09, 2018

நாராயண மகிமை! - சாந்திபர்வம் பகுதி – 347

The glory of Narayana! | Shanti-Parva-Section-347 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 174)


பதிவின் சுருக்கம் : தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்ற நாரதர்; ஜனமேஜயனுக்கு நாராயணனின் மகிமையைச் சொன்ன வைசம்பாயனர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நரனும், நாராயணனும் சொன்ன இந்த வார்த்தைகளைக்கேட்ட முனிவர் நாரதர், பரம்பொருளிடம் அர்ப்பணிப்பில் {பக்தியில்} நிறைந்தார்.(1) நரநாராயணர்களின் ஆசிரமத்தில் முழுமையாக ஆயிரம் வருடங்கள் வசித்து, மாற்றமில்லாதவனான ஹரியைக் கண்டு, நாராயாணனைக் குறித்த சிறந்த உரையாடல்களைக் கேட்ட பிறகு அந்தத் தெய்வீக முனிவர், இமயச் சாரலில் உள்ள தன் சொந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(2) எனினும், முதன்மையான தவசிகளான நரனும், நாராயணனும், கடுந்தவப் பயிற்சிகளில் ஈடுபட்டபடியே இனிமை நிறைந்த தங்கள் பதரி ஆசிரமத்தில் தொடர்ந்து வசித்தனர்.(3) நீ பாண்டவ குலத்தில் பிறந்தவனாவாய். நீ அளவிலா சக்தி கொண்டவனாவாய். ஓ! பாண்டவ குலத்தைத் தழைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, நாராயணனைக் குறித்த இந்த உரையைத் தொடக்கம் முதல் கேட்ட உனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் கழுவப்பட்டு, ஆன்ம புனிதம் அடைந்தவனாக நீ இருக்கிறாய்.(4)

ஓ! மன்னர்களில் சிறந்தவனே, மாற்றமில்லாதவனான ஹரியை விரும்பி மதிப்பதற்குப் பதிலாக வெறுக்கும் ஒருவனுக்கு இம்மையுமில்லை, மறுமையுமில்லை.(5) தேவர்களில் முதன்மையானவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான நாராயணனை வெறுக்கும் மனிதனுடைய மூதாதையர்கள் நிச்சயம் நித்திய நரகில் மூழ்குவார்கள்.(6) ஓ! மனிதர்களில் புலியே, விஷ்ணுவே இருப்பிலுள்ள அனைத்தின் ஆன்மாவாக இருக்கிறான். அவ்வாறிருக்கையில், ஒருவன் விஷ்ணுவை வெறுப்பதன் மூலம் தன்னையே வெறுப்பதால், எவ்வாறு எவனாலும் அவனை வெறுக்க முடியும்?(7) நமது ஆசானும், காந்தவதியின் {சத்தியவதியின்} மகனுமான முனிவர் வியாசரே, உயர்ந்த மற்றும் மாற்றமில்லாத மகிமையான நாராயணனின் மகிமையைக் குறித்த இந்த உரையை நமக்குச் சொல்லியிருக்கிறார். ஓ! பாவமற்றவனே, நான் அவரிடமிருந்தே இதைக் கேட்டேன், நான் கேட்டவாறே சரியாக இதை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(8)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, புதிர்களுடன் கூடியதும், விவரங்களின் சுருக்கமுமான இந்த வழிபாட்டு மரபானது, அண்டத்தின் தலைவனான நாராயணனிடமிருந்தே நாரதரால் அடையப்பட்டது.(9) இந்தப் பெரும் வழிபாட்டு மரபின் விபரங்கள் இவ்வாறே இருக்கின்றன. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இதற்கு முன்பே ஹரி கீதையில், விதிகளுடன் கூடிய சுருக்கமான குறிப்புடன் இதை நான் உனக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறேன்[1].(10) வியாசர் என்றும் அழைக்கப்படும் தீவில் பிறந்தவரான கிருஷ்ணரே பூமியில் நாராயணர் என்பதை அறிவாயாக. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, மஹாபாரதத்தைப் போன்ற ஓர் ஆய்வை அவரைத் தவிர வேறு எவனால் தொகுக்க முடியும்?(11) நீ ஒரு பெரும் வேள்வியைச் செய்யத் தீர்மானித்திருக்கிறாய். நீ தீர்மானித்தவாறே அந்த வேள்வி நடைபெறட்டும். பல்வேறு வகைக் கடமைகள் மற்றும் வழிபாட்டு மரபுகளைக் கேட்டவனான உனது குதிரை வேள்வி நடைபெறட்டும்" {என்றார் வைசம்பாயனர்}".(12)

[1] "ஹரி கீதை என்பது பகவத்கீதையாகும். சில வேளைகளில் இது நாராயணக் கீதை என்றும் அழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சௌதி {சௌனகரிடம்} தொடர்ந்தார், "அந்த மன்னர்களில் சிறந்தவன் {ஜனமேஜயன்}, இந்தப் பெரும் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, தன் பெரும் வேளிவியின் நிறைவுக்காக விதிப்படி விதிக்கப்பட்டிருக்கும் அனைத்துச் சடங்குகளையும் செய்யத் தொடங்கினான்.(13) ஓ! சௌனகரே, உம்மால் கேட்கப்பட்ட நான், நாராயணனைக் குறித்த அந்தப் பெரும் சொற்பொழிவை {நாராயணீயத்தை} உமக்கும், நைமிசக் காட்டில் வசிப்பபோரான இந்த முனிவர்கள் அனைவருக்கும் முறையாகச் சொல்லிவிட்டேன்.(14) இதற்கு முன்பு, கிருஷ்ணன் மற்றும் பீஷ்மரின் முன்னிலையில், பல முனிவர்களும், பாண்டுவின் மகன்களும் கேட்டுக் கொண்டிருந்தபோது நாரதர் என் ஆசானுக்கு இதைச் சொன்னார்[2].(15) பரமதேவனான நாராயணனே மூவுலகங்களுக்கும், முனிவர்களில் முதன்மையான அனைவருக்கும் தலைவனாவான். பேரளவு கொண்ட இந்தப் பூமியைத் தாங்குபவன் அவனே. ஸ்ருதிகள் மற்றும் பணிவெனும் குணம் ஆகியவற்றின் கொள்ளிடம் அவனே. அமைதியான இதயத்தை அடையச்செய்யும் பயிற்சி விதிகள் அனைத்திற்கும், யமன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனிடம் செல்வோர் அனைவருக்கும் பெருங்கொள்ளிடம் அவனே. எப்போதும் முதன்மையான மறுபிறப்பாளர்கள் சூழ இருப்பவன் அவனே. அந்தப் பெருந்தேவனே உன் புகலிடமாக இருக்கட்டும்.(16)

[2] "இந்த ஸ்லோகத்தில் குருவெனக் குறிப்பிடப்படும் ஆசான் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தேவர்களின் குருவான பிருஹஸ்பதியே இங்கே குறிப்பிடப்படுகிறார் என உரையாசிரியர் நினைக்கிறார். தேவ குருவோ ஒருபோதும் பாண்டவர்களிடம் வந்ததில்லை. இஃது ஒருவேளை வியாசராகவோ, வைசம்பாயனராகவோ இருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நைமிசாரண்யவாஸிகளின் இடையில் கேட்கப்பட்ட நான் இப்பொழுது நாராயணீயமென்கிற இந்தச் சரித்திரத்தை உமக்குச் சொன்னேன். முன் காலத்தில் நாரதரால் ரிஷிகளும், பாண்டவர்களும், கிருஷ்ணனும், பீஷ்மரும் கேட்டுக் கொண்டிருக்கையில் பிருஹஸ்பதிக்குச் சொல்லப்பட்டது" என்றிருக்கிறது.

சொர்க்கவாசிகளுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எப்போதும் செய்பவன் ஹரியே. (மூவுலகங்களுக்குத் தொல்லையாக அமையும்) அசுரர்களை எப்போதும் கொல்பவனும் அவனே. தவங்களின் கொள்ளிடம் அவனே. பெரும் புகழ் கொண்டவன் அவனே. மது மற்றும் கைடபன் என்ற பெயர்களில் அறியப்படும் தைத்தியர்களைக் கொன்றவன் அவனே. சாத்திரங்கள் மற்றும் பிற கடமைகளை {தர்மங்களை} அறிந்தவர்களும், அவற்றை நோற்பவர்களுமான மனிதர்களால் அடையப்படும் கதிகளை விதிப்பவன் அவனே. வேள்விகளில் அர்ப்பணிக்கப்படும் முதன்மையான காணிக்கைகளை எடுத்துக் கொள்பவன் அவனே. உன் புகலிடமும், பாதுகாப்பும் அவனே.(17) குணங்களுடன் கூடியவன் அவன். குணங்களில் இருந்து விடுபட்டவனும் அவனே. நான்கு வகை வடிவங்களில் இருப்பவன் அவனே. குளங்களை அர்ப்பணித்தல், அதே வகையிலான அறச் சடங்குகளைச் செய்தல் ஆகியவற்றில் இருந்து எழும் தகுதிகளை {புண்ணியங்களைப்} பகிர்ந்து கொடுப்பவன் அவனே. வெல்லப்பட முடியாதவனாகவும், பெரும் வலிமை கொண்டவனாகவும் இருந்து, அறச்செயல்கள் செய்த முனிவர்களின் ஆன்மாவால் மட்டுமே அணுகக்கூடிய கதியை எப்போதும் விதிப்பவனும் அவனே.(18) உலகங்களின் சாட்சி அவனே. பிறப்பில்லாதவன் அவனே. புராதனப் புருஷன் அவனே. சூரியனின் நிறத்திலான உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்} அவனே, அனைத்தின் புகலிடமும் அவனே. நீரில் இருந்து எழுந்தவனே (நாராயணனே) அவனுக்கு {வாசுதேவனுக்குத்} தலைவணங்குவதால் நீங்கள் அனைவரும் அவனுக்கு {வாசுதவேனுக்குத்} தலைவணங்குவீராக.(18) அண்டத்தின் தோற்றுவாய் அவனே. அமிர்தம் என்றழைக்கப்படும் இருப்பு அவனே. நுட்பமானவன் அவனே. அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் புகலிடம் அவனே. மாற்றமில்லாத தன்மை பொருந்திய ஒருவன் அவனே. சாங்கியர்களும், ஆன்மக்கட்டுப்பாடு கொண்ட யோகியரும் நித்தியமான அவனையே தங்கள் புத்திகளில் தாங்கியிருக்கின்றனர்" {என்றார் சௌதி}[3].(20)

[3] சாந்தி பர்வம் பகுதி 335 முதல் இந்தப் பகுதி {சாந்தி பர்வம் பகுதி 347} வரையுள்ள பகுதிகளை நாராயணீயம் என்ற சாத்திரமாகவோ, அதன் சுருக்கமாகவோ கொள்ளலாம்.

சாந்திபர்வம் பகுதி – 347ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்