Wednesday, December 12, 2018

வைஜயந்த மலை! - சாந்திபர்வம் பகுதி – 351

Mountain Vaijayanta! | Shanti-Parva-Section-351 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 178)


பதிவின் சுருக்கம் : பரமாத்மாவின் மகிமை குறித்துப் பிரம்மனுக்கும் சிவனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, புருஷர்கள் பலரா? அல்லது ஒரே ஒருவரா? அண்டத்தில் புருஷர்களில் முதன்மையாவன் எவன்? அனைத்துப் பொருட்களின் மூல காரணம் எனச் சொல்லப்படுவது எது?" என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சாங்கியம் மற்றும் யோக அமைப்புகளின் ஊகங்களில் பல்வேறு புருஷர்கள் பேசப்படுகிறார்கள். ஓ! குரு குலத்தின் ஆசானே, இவ்வமைப்புகளைப் பின்பற்றுவோர் அண்டத்தில் ஒரே புருஷனே இருக்கிறான் {வேறு எவரும் இல்லை} என்பதை உறுதிப்படுத்த விரும்பவில்லை[1].(2) இதே வகையிலேயே பரம புருஷன் எனும் ஒரே மூலத்தில் இருந்து பல புருஷர்கள் வந்ததாகச் சொல்லப்படுவதில், இந்த மொத்த அண்டமும் மேன்மையான குணங்களைக் கொண்ட அந்த ஒரே புருஷனோடு அடையாளம் காணப்படுவதே என்றும் சொல்லலாம். முனிவர்களில் முதன்மையானவரும், ஆன்மாவைக் குறித்து அறிந்தவரும், தவங்கள், தற்கட்டுப்பாடு மற்றும் மதிக்கத்தக்க வழிபாட்டுக்குத் தகுந்தவரும் என் ஆசானுமான வியாசரை வணங்கி, இப்போது இதைக் குறித்து விளக்கப் போகிறேன்.(3,4)

[1] "உரையாசிரியர் இந்த ஸ்லோகத்தைப் பின்வருமாறு விளக்கியிருக்கிறார். ’சாதாரணக் காரியங்களைப் பொறுத்தவரையில் சாங்கியர்கள் மற்றும் யோகியராகிய இருவரும் பல புருஷர்களைக் குறித்துப் பேசுகின்றனர். எனினும் உண்மையில் உயர்ந்த உண்மையான காரியத்தில் ஒரே புருஷனே இருக்கிறான்’. உரையாசிரியர் சொல்லும் இந்தச் செய்தி அடுத்த ஸ்லோகத்தில் வருகிறது" எனக் கங்குலி விளக்குகிறார்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, புருஷனைக் குறித்த இந்த ஊகம் வேதங்கள் அனைத்திலும் நேர்கிறது. அது ரிதம் மற்றும் வாய்மையுடன் அடையாளம் காணப்படுவதாக நன்கறியப்பட்டிருக்கிறது. முனிவர்களில் முதன்மையான வியாசர் இது குறித்துச் சிந்தித்தார்.(5) ஓ! மன்னா, அத்யாத்மா என்றழைக்கப்படுவதைக் குறித்துச் சிந்திப்பதில் ஈடுபட்டவர்களும், கபிலரைத் தங்களில் முதல்வராகக் கொண்டவர்களுமான பல்வேறு முனிவர்கள், இக்காரியத்தில் பொதுவாகவும், குறிப்பிட்ட வகையிலும் தங்கள் கருத்துகளை அறிவித்திருக்கின்றனர்.(6) அளவிலா சக்தி கொண்ட வியாசரின் அருளின் மூலம், புருஷனின் ஒருமையைக் குறித்த கேள்வியை விளக்க வியாசர் சொன்னதை விவரிக்கப் போகிறேன்.(7) ஓ! மன்னா, இது தொடர்பாகப் பிரம்மனுக்கும், முக்கண் மஹாதேவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) ஓ! ஏகாதிபதி, பாற்கடலுக்கு மத்தியில் வைஜயந்தம் என்ற பெயரில் தங்கத்தைப் போன்ற பெரும் பிரகாசமுடைய மலை ஒன்று இருக்கிறது.(9) சிறப்புமிக்கவனான பிரம்ம தேவன் பெருங்காந்தியும், இன்பநிலையையும் கொண்ட தன் வசிப்பிடத்தில் இருந்து தனியாக அங்கே சென்று அத்யாத்ம நடைமுறை குறித்துச் சிந்திப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(10)

பெரும் நுண்ணறிவைக் கொண்ட நான்முகப் பிரம்மன் அங்கே அமர்ந்திருக்கையில், ஒருநாள் அவனது {பிரம்மனது} நெற்றியில் இருந்து பிறந்தவனும், அவனுடைய மகனுமான மஹாதேவன் அண்டத்தில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைச் சந்தித்தான்.(11) பலமிக்கவனும், உயர்ந்த யோகத்தைக் கொண்டவனுமான முக்கண்ணனான சிவன், பழங்காலத்தில் வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்தபோது, அந்த மலையில் அமர்ந்திருக்கும் பிரம்மனைக் கண்டதால் அதனுச்சியில் விரைவாக இறங்கினான்.(12) தன் மூதாதையின் முன் உற்சாகமிக்க இதயத்துடன் சென்று அவனது பாதங்களை வழிபட்டான். மஹாதேவன் தன் பாதத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்ததைக் கண்ட பிரம்மன், அவனைத் தன் இடது கையால் உயர்த்தினான்.(13) பலமிக்கவனும், அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே தலைவனுமான பிரம்மன் இவ்வாறு மஹாதேவனை உயர்த்தி, நீண்ட காலம் கழித்துக் கண்ட தன் மகனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(14)

பெரும்பாட்டன் {பிரம்மன் சிவனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உனக்கு நல்வரவு. நற்பேற்றாலேயே நீண்ட நாள் கழித்து என் முன்னிலையில் உன்னைக் காண்கிறேன். ஓ! மகனே, உன் தவங்கள், வேத கல்வி மற்றும் பாராயணம் ஆகியவை அனைத்தும் சரியாக நடைபெறுகின்றன என நம்புகிறேன். நீ எப்போதும் கடும் தவங்களைச் செய்பவன். எனவேதான் நான் உன் தவங்களின் முன்னேற்றம் மற்றும் நன்னிலை குறித்து உன்னிடம் கேட்கிறேன்" என்றான்.(15,16)

ருத்திரன் {தன் தந்தையான பிரம்மனிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, உமது அருளால் வேதகல்வி மற்றும் என் தவங்கள் அனைத்தும் நன்றாக நடைபெறுகின்றன. மேலும் அண்டமும் நன்றாகவே இருக்கிறது.(17) சிறப்புமிக்கவரான உம்மை நீண்ட காலத்திற்கு முன்பு இன்பமும், பிரகாசமும் நிறைந்த உமது இல்லத்தில் கண்டேன். இப்போது உமது பாதத்தின் வசிப்பிடமாக இருக்கும் இந்த மலைக்கு வந்திருக்கிறேன்.(18) இன்பமும், காந்தியும் நிறைந்த உமது வழக்கமான இடத்தைவிட்டு இத்தகைய ஒரு தனிமையான இடத்திற்கு நீர் வந்திருப்பது என் மனத்தில் பெரும் ஆவலைத் தூண்டுகிறது. ஓ! பெரும்பாட்டா, நீர் இவ்வாறு செயல்படுவதற்குப் பெருங்காரணம் இருக்க வேண்டும்.(19) வசிப்பிடங்களில் முதன்மையான உமது வசிப்பிட, பசி மற்றும் தாகமெனும் துன்பங்களில் இருந்து விடுபட்டதாகவும், தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவராலும், அளவிலா காந்தி கொண்ட முனிவர்களாலும், கந்தர்வார்களாலும், அப்சரஸ்களாலும் வசிக்கப்படுவதாகவும் இருக்கிறது. அத்தகைய இன்பமான இடத்தைக் கைவிட்டு, இந்த முதன்மையான மலையில் தனிமையில் வசிக்கிறீர். இதற்கான காரணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல் இருக்காது" என்றான்.(21)

பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, "மலைகளில் முதன்மையான இந்த வைஜயந்த மலையே எப்போதும் என் வசிப்பிடமாகும். இங்கே குவிந்த மனத்துடன் முடிவிலா அளவுகளுடன் கூடிய அண்டத்தின் ஒரே புருஷனைத் தியானிக்கிறேன்" என்றான்.(22)

ருத்திரன் {தன் தந்தையான பிரம்மனிடம்}, "நீர் சுயம்பு ஆவீர். உம்மால் படைக்கப்பட்ட புருஷர்கள் பலர் இருக்கிறார்கள். ஓ! பிரம்மாவே, மேலும் பிறரும் உம்மால் படைக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் நீர் சொல்லும் இந்த முடிவிலா புருஷனை தனித்தவனாகவும், ஒருவனாகவும் சொல்கிறீர்.(23) ஓ! பிரம்மாவே, உம்மால் தியானிக்கப்படும் முதன்மையான புருஷன் யார்? இதில் நான் பேராவல் அடைகிறேன். என் மனத்தைப் பீடித்திருக்கும் இந்த ஐயத்தை நீர் கருணையுடன் விலக்குவீராக" என்றான்.(24)

பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, "ஓ! மகனே, நீ சொல்லும் புருஷர்கள் பலர் இருக்கிறார்கள். எனினும், புருஷர்கள் அனைவரையும் விஞ்சியிருப்பவனும், புலப்படாதவனுமான ஒரே புருஷனைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.(25) அண்டத்தில் நீடித்திருக்கும் பல புருஷர்கள் இந்த ஒரே புருஷன் எனும் அடித்தளத்திலேயே அமைந்திருக்கின்றனர்; இந்த ஒரே புருஷன் என்ற மூலத்தில் இருந்தே எண்ணிலடங்கா புருஷர்கள் பிறந்தனர்  என்று சொல்லப்படுகிறது,(26) எனவே, அவர்கள் அனைவரும் குணங்களை இழப்பதில் வென்றால், அண்டத்தோடு அடையாளம் காணப்படுபவனும், உயர்ந்தவனும் {பரமனும்}, முதன்மையிலும் முதன்மையானவனும், நித்தியமானவனும், மேற்கண்ட அனைத்து குணங்களும் இல்லாதவனுமான அந்த ஒரே புருஷனுக்குள் நுழையத் தகுந்தவர்கள் ஆவார்கள்" என்றான்.(27)

சாந்திபர்வம் பகுதி – 351ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்