Saturday, March 23, 2019

மதங்கன் பெற்ற வரம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 29

The boons acquired by Matanga! | Anusasana-Parva-Section-29 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 29)


பதிவின் சுருக்கம் : பிராமண நிலை அடைய தவம் செய்த மதங்கன்; இந்திரனால் தடுக்கப்பட்டது; மீண்டும் தவம் செய்தது; பிராமண நிலையன்றி வேறு வரங்களைக் கேட்டுப் பெற்ற மதங்கன்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு இந்திரனால் சொல்லப்பட்ட மதங்கன், அவன் சொன்னதைக் கேட்க மறுத்தான். மறுபுறம், ஒழுங்கமைக்கப்பட்ட நோன்புகள் மற்றும் தூய ஆன்மாவுடன் கூடிய அவன், ஓராயிரம் வருடங்கள் ஒற்றைக்காலில் நின்று கொண்டு, தன் ஆன்மாவை ஆழமான தியான யோகத்தில் ஈடுபடுத்தி, கடுந்தவங்களைப் பயின்று வந்தான்.(1) ஓராயிரம் வருடங்கள் கடந்ததும், மீண்டும் அவனைக் காண சக்ரன் அங்கே வந்தான். உண்மையில், பலனையும், விருத்திரனையும் கொன்றவனான அவன் {இந்திரன்} அதே சொற்களையே மீண்டும் அவனிடம் சொன்னான்.(2)


மதங்கன் {இந்திரனிடம்}, "நான் பிரம்மச்சரிய நோன்பை நோற்று, தியானத்தில் குவிந்த ஆன்மாவுடன் ஒற்றைக் காலில் நின்று ஓராயிரம் ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன். பிராமண நிலையை அடைவதில் நான் இன்னும் ஏன் வெல்லாமல் இருக்கிறேன்?" என்று கேட்டான்.(3)

சக்ரன், "சண்டாளனாகப் பிறந்தவனால் எந்த வழிமுறைகளின் மூலமும் பிராமண நிலையை அடைய முடியாது. எனவே, நீ வேறேதேனும் வரங்களைக் கேட்பாயாக. உன் கடும் உழைப்புக் கனியற்றதாகிவிடக்கூடாது" என்று சொன்னான்.(4)

தேவர்களின் தலைவனால் இவ்வாறு சொல்லப்பட்ட மதங்கன் துயரால் நிறைந்தான். அவன் கயைக்குச் சென்று ஒற்றைக் காலில் நின்றபடியே நூறாண்டு காலத்தைக் கழித்தான்.(5) பொறுத்துக் கொள்ள மிகக் கடினமான அத்தகைய யோகத்தை நோற்றதன் விளைவால் தன் நாடி நரம்புகள் புடைத்து, கண்ணுக்குத் தெரியும் வகையில் மிகவும் மெலிந்து போனான். வெறும் தோலும் எலும்புகளும் கொண்டவனாக அவன் குறைந்து போனான். உண்மையில், அந்த அற ஆன்மா கொண்ட மனிதன் {மதங்கன்}, கயையில் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்த போது, மிகவும் சோர்வடைந்து கீழே தரையில் விழுந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். வரங்களை அளிப்பவனும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையை அளிப்பதில் ஈடுபடும் தலைவனுமான வாசவன் {இந்திரன்}, அவன் விழுவதைக் கண்டு, விரைவாக அந்த இடத்திற்கு வந்து உடனே அவனைத் தாங்கிக் கொண்டான்[1].(7)

[1] கும்பகோணம் பதிப்பில், "மதங்கன் மிகத் துயரமுற்றவனாகி, கயைக்குச் சென்று, நூறு வர்ஷகாலம் காற்கட்டைவிரலால் நின்றான். யாருக்கும் செய்ய முடியாத தவத்தை மேற்கொண்ட இளைத்து உடம்பெல்லாம் நரம்புகளோடித் தோலும் எலும்புமாயிருந்து தர்மத்திலேயே மனம் வைத்து அவன் தவம் புரிந்தானென்று நமக்குக் கேள்வி. வரன் கொடுக்கவல்லவனும், கொடுப்பவனும், எல்லாப்ராணிகளுக்கும் நன்மையைக் கருதுகிறவனுமான தேவந்த்ரன், தவம் செய்யும் மதங்கன் முன் வந்து அவன் கையைப் பிடித்து" என்றிருக்கிறது. மதங்கள் சோர்வடைந்து விழுந்தான் என்ற குறிப்புக் கும்பகோணம் பதிப்பில் இல்லை. பிபேக் திப்ராயின் பதிப்பில், "இதைக் கேட்ட மதங்கன் பெருந்துயரில் மூழ்கினான். அவன் கயைக்குச் சென்று நூறு வருட காலம் கட்டை விரலில் நின்றான். பல்வேறு வகையான கடுமையான யோகங்களைச் செய்தான். நரம்புகள் மட்டுமே தெரிபவனாக அவன் உடல் மெலிந்து போனான். தர்மத்தையே தன் ஆன்மாவாகக் கொண்ட அவன், வெறும் எலும்புகளாகக் குறைந்தவனாகி கீழே விழுந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அவன் விழுந்து கொண்டிருந்தபோது, வாசவன் வந்து அவனைப் பிடித்துக் கொண்டான். வரங்களை அளிக்கும் அந்தத் தலைவன் உயிரினங்கள் அனைத்தின் நன்மையில் ஈடுபடுபவனல்லவா?" என்றிருக்கிறது. ஆகப் பிபேக் திப்ராயின் பதிப்பிலும் மதங்கன் சோர்வடைந்து விழுந்தான் என்றிருக்கிறது.

சக்ரன், "ஓ! மதங்கா, நீ நாடும் பிராமண நிலை உனக்குத் தகுந்ததாகத் தெரியவில்லை. அந்நிலை உன்னால் அடையப்பட முடியாததாக இருக்கிறது. உண்மையில் உன் வழக்கில் அது பல ஆபத்துகள் சூழப்பட்டதாக இருக்கிறது.(8) ஒரு மனிதன் ஒரு பிராமணரை வழிபடுவதால் மகிழ்ச்சியை அடைகிறான்; அவ்வாறு வழிபடுவதைத் தவிர்க்கும்போது அவன் துயரத்தையும் இடர்களையும் அடைகிறான். அனைத்து உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை வெகுமதியாகக் கருதுவதை, அல்லது ஆசைப்படுவதைக் கொடுப்பவனாகவும், அவர்கள் ஏற்கனவே கொண்டுள்ளதைக் காப்பவனாகவும் பிராமணன் இருக்கிறான்.(9) பிராமணர்கள் மூலமே பித்ருக்களும், தேவர்களும் நிறைவை அடைகின்றனர். ஓ! மதங்கா, படைக்கப்பட்டவற்றுள் முதன்மையானவனாகப் பிராமணன் சொல்லப்படுகிறான். ஆசைப்படும் பொருட்கள் யாவையும், ஆசைப்படப்பட்ட அதே வகையிலேயே பிராமணன் அருள்கிறான்[2].(10) எண்ணற்ற வகையில் இருக்கும் படைப்புகளில் திரிந்து, மீண்டும் மீண்டும் மறுபிறவிகளில் சுழலும் ஒருவன், அடுத்தடுத்த பிறவிகளிலேயே பிராமண நிலையை அடைவதில் வெல்கிறான்.(11) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் உண்மையில் அந்நிலையை அடைய முடியாது. நீ வேறேதேனும் வரங்களைக் கேட்பாயாக. நீ வேண்டிக் கேட்கும் இந்தக் குறிப்பிட்ட வரமானது, உனக்குக் கொடுக்கப்பட இயலாததாக இருக்கிறது" என்றான் {இந்திரன்}.(12)

[2] கும்பகோணம் பதிப்பில், "எல்லாப்ராணிகளிலும் ப்ராம்மணன் உயர்ந்தவனென்று சொல்லப்படுகிறான். ப்ராம்மணன் எதைஎதை எப்படி எப்படி நினைக்கிறானோ அதைஅதை அப்படிஅப்படியே செயக்கூடியவன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அனைத்து உயிரினங்களிலும் பிராமணன் உயர்ந்தவனாக இருக்கிறான். நீ கேட்பதைக் கொடுக்கவல்லவர்கள் பிராமணர்களே ஆவர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இதில் உள்ள உட்குறிப்புத் தேற்றம் செய்யப்பட வேண்டும். மதங்கன் ஒரு பிராமணனாக இருந்தால், அவன் வேறு யாரிடம் இருந்தும் வரங்கள் கேட்க வேண்டியதில்ல. மதங்கன் வேறு யாரிடமாவது வரம் கேட்கலாம் என்றால், அஃது ஒரு பிராமணனாகவே இருக்க முடியும்" என்றிருக்கிறது.

மதங்கன் {இந்திரனிடம்}, "ஓ! சக்ரா, ஏற்கனவே துன்பத்தில் இருக்கும் என்னை, (இத்தகைய சொற்களால்) நீ மேலும் துன்புறுத்துகிறாயா? இந்நடத்தையால், ஏற்கனவே இறந்துவிட்டவனை நீ அடித்துக் கொண்டிருக்கிறாய். பிராமண நிலையை அடைந்தும் அதைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறிய (என்னைப் போன்ற ஒருவனுக்குக் கருணைக் காட்டாமல் இருக்கும்) உனக்காக நான் பரிதாபப்படுகிறேன்[3].(13) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, மூன்று வகையினர் எவராலும் பிராமண நிலையை உண்மையில் அடைய முடியாது என்றால், ஐயோ, அந்த உயர்ந்த நிலையை (இயற்கையான வழிமுறைகளின் மூலம்) அடைவதில் வென்றவர்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லையே (பிராமணர்கள் எந்தப் பாவத்தைச் செய்யவில்லை)?(14) அடைதற்கரிதான செல்வத்தைப் போன்ற பிராமண நிலையை அடைந்தும், (தேவையான கடமைகளைச் செய்வதன் மூலம்) அதைத் தக்க வைத்துக் கொள்ள முனையாதவர்கள் இம்மையில் இழிந்த ஈனர்களாகக் கருதப்பட வேண்டும்.(15) பிராமண நிலையை அடைவது மிகக்கடினமானது, அடைந்த பிறகு அதைத் தக்க வைத்துக் கொள்வதும் கடுமையானது என்பதில் ஐயமில்லை. அஃது அனைத்து வகைத் துன்பத்தையும் போக்கவல்லதாகும். ஐயோ, மனிதர்கள் அஃதை அடைந்தும் (அதற்குண்டான அறத்தையும் பிற கடமைகளையும் செய்வதன் மூலம்) அதைத் தக்க வைத்துக் கொள்ள எப்போதும் முனைவதில்லையே.(16)

[3] கும்பகோணம் பதிப்பில், "நீயும் பிராமணத்தன்மையையடைந்து மேலாக விரும்பாமலிருப்பதற்காக, உன்னைப் பற்றியே நான் துயரப்படுகிறேன்" என்றிருக்கிறது.

அத்தகைய மனிதர்களும் பிராமணர்களாகக் கருதப்படும்போது, தன்னில் நிறைவடைந்தவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்திற்கும் மேம்பட்டவனும், உலகப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்தவனும், அனைத்து உயிரினிங்களிடமும் கருணை என்ற கடமையை நோற்பவனும், தற்கட்டுப்பாடு எனும் ஒழுக்கத்துடன் கூடியவனுமான நான் ஏன் அந்த நிலைக்குத் தகுந்தவனாகக் கருதப்படவில்லை?(17) ஓ! புரந்தரா, நான் நடத்தையில் ஒழுக்கம் கொண்டவனாக இருப்பினும், என் தாயின் குற்றத்தால் இந்த நிலைக்குக் குறைக்கப்பட்டிருக்கிறேனே, எவ்வளவு கெடுபேறு கொண்டவன் நான்?(18) ஓ! தலைவா, அடைய வேண்டிய நோக்கம் என இதயத்தில் நிலைநிறுத்தி, தொடர்ந்து இவ்வளவு முயற்சிகளைச் செய்த போதிலும் என்னால் அஃதை அடையமுடியவில்லை என்றால், விதியைத் தவிர்க்க முடியாது, அல்லது தனிப்பட்ட முயற்சிகளால் வெல்ல முடியாது என்பதில் ஐயமில்லை.(19) ஓ! அறவோனே, நிலை இவ்வாறிருக்கையில், உண்மையில் நான் உன் அருளுக்குத் தகுந்தவன் என்றால், அல்லது சிறு தகுதியையேனும் கொண்டிருந்தால் வேறு வரங்களை அளிப்பதே உனக்குத் தகும்" என்றான் {மதங்கன்}".(20)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பலனையும், விருத்திரனையும் கொன்றவன் {இந்திரன்}, அவனிடம் {மதங்கனிடம்}, "வேண்டும் வரத்தைச் சொல்வாயாக" என்றான். இவ்வாறு பெரும் இந்திரனால் தூண்டப்பட்ட மதங்கன் பின்வரும் சொற்களைச் சொன்னான்.(21)

மதங்கன், "விரும்பிய வடிவை ஏற்கும் சக்தியுடன், வானத்தின் ஊடாகப் பயணிக்கவும், என் இதயத்தில் நான் நிலைநிறுத்தும் எந்த இன்பத்தை அனுபவிக்கவும் கூடிய வல்லமை எனக்கு வேண்டும். பிராமணர்கள், மற்றும் க்ஷத்திரியர்களின் விருப்பத்துடன் கூடிய துதிகள் எனக்கு வேண்டும்.(22) ஓ! தேவா, நான் உனக்குத் தலை வணங்குகிறேன். ஓ! புரந்தரா, இவ்வுலகில் என் புகழை எப்போதும் வாழச் செய்யவும் வேண்டும்" என்றான்.(23)

சக்ரன் {மதங்கனிடம்}, "ஒரு குறிப்பிட்ட மந்திரத்தின் தேவனாக {சந்தோதேவனாகக்} கொண்டாடப்பட்டு, அனைத்துப் பெண்களாலும் நீ வழிபடப்படுவாய். ஓ! மகனே, உன் புகழ் மூவுலகங்களிலும் ஒப்பற்றதாக இருக்கும்" என்றான்[4].(24) அவனுக்கு இவ்வரங்களை அளித்த வாசவன் அங்கேயே, அப்போதே மறைந்து போனான். மதங்கனும் தன் உயிர் மூச்சைக் கைவிட்டு உயர்ந்த இடத்தை அடைந்தான்.(25) ஓ! பாரதா, பிராமண நிலை எவ்வளவு உயர்ந்தது என்பதை நீ இவ்வாறு காணலாம். பெரும் இந்திரனால் சொல்லப்பட்டதைப் போல அந்த நிலையானது (இயற்கையான பிறப்பு வழியாலன்றி) இம்மையில் அடையக்கூடியதல்ல" என்றார் {பீஷ்மர்}[5].(26)

[4] கும்பகோணம் பதிப்பில், "நீ கேட்டது கேட்டபடியே உடனே நடக்கும். உலகத்திலுள்ள ஸ்த்ரீகளனைவரும் செல்வத்தைக் குறித்துச் செய்யும் கர்மங்களில் உன்னையே பூஜிக்கப் போகின்றனர். சந்தோதேவன் என்று க்யாதிபெற்று ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படத்தக்கவனாவாய். புத்ரனே, உனது கீர்த்தியும் ஒப்பற்றதாக மூவுலகங்களிலும் பரவும்" என்றிருக்கிறது.

[5] இராமாயண ஆரண்யகாண்டத்தில் ஒரு மதங்கர் சொல்லப்படுகிறார். வாலிக்குச் சாபம் கொடுத்தவரும், சபரியின் குருவுமாக இருந்தவர் அவர். மஹாபாரதச் சாந்திபர்வம் பகுதி 297ல் ஒரு மதங்கர் சொல்லப்படுகிறார். அவர் இங்கே இந்த அநுசாஸன பர்வப் பகுதியில் குறிப்பிடப்படும் மதங்கராகவே இருக்க வேண்டும். ஆனால் அங்கே அவர் தவச் சக்தியின் மூலம் முனிவர் என்ற நிலையை அடைந்தவர்கள் பட்டியலில் அவர் வருகிறார். சபா பர்வம் பகுதி 8ல் யம சபையில் இருந்த முனிவர்களின் பட்டியலில் ஒரு மதங்கர் இருக்கிறார். புகழ்பெற்ற சமணக் குகையான எல்லோராவில் செழிப்பின் தேவனாக மதங்கன் என்ற பெயரில் யக்ஷன் ஒருவன் சித்தரிக்கப்படுகிறான். அவன் அருகிலேயே சித்தைகை யக்ஷினியும் இருக்கிறாள். இப்பதிவின் தொடக்கத்தில் இருப்பது எல்லோராவில் உள்ள படம் தான். ஒருவேளை இவர்கள் அனைவரும் ஒருவராகவே இருக்கவும் கூடும்.

அநுசாஸனபர்வம் பகுதி – 29ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்