Saturday, November 23, 2013

என் வார்த்தைகள் பொய்க்காது என்றான் கிருஷ்ணன் - வனபர்வம் பகுதி 12இ

My words shall never be futile said Krishna | Vana Parva - Section 12c | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

திரௌபதி கிருஷ்ணனிடம் தனது துயரை உரைத்தல்; கிருஷ்ணன் திரௌபதிக்கு சமாதானம் கூறுதல்; அர்ஜுனன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகியோர் உறுதி கூறுதல்…

திரௌபதி தொடர்ந்தாள், "*1வாரணாவதத்தில் தங்கள் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை {பாண்டவர்களை} எரித்துக் கொல்ல எண்ணி, அவனே {துரியோதனனே} அந்த வீட்டுக்குத் தீ வைத்தான். இத்தகு செயலை யாரால் செய்ய முடியும்? பிறகுதான் சிறப்புவாய்ந்த குந்தி பேரிடரால் தாக்கப்பட்டு, நெருப்பு சூழ, பயங்கரமாகக் கதற ஆரம்பித்தாள். தனது பிள்ளைகளிடம், "ஐயோ, கெட்டேன்! இந்த நெருப்பில் இருந்து நாம் இன்று தப்பிப்பது எவ்வாறு! ஐயோ எனது பாலகர்களுடன் நான் அழிந்து போகப் போகிறேனே!" என்றாள். பிறகு, பலம் நிறைந்த கரங்களும், காற்றின் சக்தியைப் போன்ற வீரத்தையும் கொண்ட பீமர், தனது தாய்க்கும் சகோதரர்களுக்கும் "*2பறவைகளின் மன்னனான வினதையின் மகன் கருடனைப் போல நான் ஆகாயத்தில் எழும்புவேன். நமக்கு இந்த நெருப்பிடம் இருந்து பயமில்லை" என்று ஆறுதல் கூறினார். பிறகு தனது தாயை இடது புற இடுப்பிலும், மன்னரை {யுதிஷ்டிரரை} வலது புற இடுப்பிலும், இரட்டையர்களைத் தனது தோள்களிலும், விவத்சுவை {அர்ஜுனரை தனது முதுகிலும் தாங்கிய பெரும் பலம் வாய்ந்த விருகோதரர் {பீமசேனர்}, அவர்கள் அனைவரையும் தூக்கிக் கொண்டு, ஒரே தாவலில் நெருப்பைக் கடந்து, தனது தாயையும், சகோதரர்களையும் நெருப்பில் இருந்து காப்பாற்றினார்.


அதே இரவில் அங்கிருந்து தங்கள் தாயுடன் கிளம்பி, ஹிடிம்பனின் காட்டிற்கருகே வந்தனர். களைத்துப் போய் துயரத்துடன் தங்கள் தாயுடன் உறங்கிக் கொண்டிருக்கும்போது, ஹிடிம்பை என்ற ராட்சச பெண் ஒருத்தி அவர்களை அணுகினாள். தங்கள் தாயுடன் தரையில் படுத்து தூங்கும் பாண்டவர்களைக் கண்டு, ஆசையால் உந்தப்பட்டு, பீமசேனரைத் தனது தலைவராகக் கொள்ள நினைத்தாள். அந்தப் பலவீனமானவள் பீமரின் பாதங்களை எடுத்து தனது மடியில் வைத்து, தனது மிருதுவான கரங்களால் அழுத்திக் கொடுத்தாள். அளவிடமுடியா சக்தியும் பெரும் பலமும், வீழ்த்த முடியா வீரமும் கொண்ட பீமர், உறக்கத்தில் இருந்து எழுந்து அவளிடம், "களங்கமற்ற குணம் கொண்டவளே, நீ இங்கு என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார். இப்படிக் கேட்கப்பட்ட அந்தக் களங்கமற்ற, நினைத்த உருவை எடுக்கக்கூடிய ராட்சசப் பெண் மறுமொழியாக அந்த உயர் ஆன்ம பீமரிடம், "இந்த இடத்தில் இருந்து விரைவாக ஓடுங்கள்! பெரும் பலம் கொண்ட எனது தமையன் உங்களைக் கொல்ல வருவான்! ஆகையால் தாமதிக்காமல் விரைந்து செல்லுங்கள்" என்றாள். பீமர் கர்வத்துடன், "நான் அவனிடம் அச்சம் கொள்ளவில்லை! அவன் இங்கு வந்தால், நான் அவனைக் கொல்வேன்!" என்றார். இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டே அந்தப் பயங்கரமான நரமாமிச உண்ணி {ஹிடிம்பன்} அந்த இடத்தில் வந்தான்.

பயங்கரமான உருவத்துடன் காணச் சகிக்காதபடி காட்சியளித்து, உரத்த கர்ஜனை செய்து கொண்டு வந்த அந்த ராட்சசன், "ஹிடிம்பையே, நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்? அவனை என்னிடம் கொண்டு வா, நான் அவனைச் சாப்பிடுகிறேன். தாமதிப்பது உனக்குத் தகாது" என்றான். ஆனால், களங்கமற்ற அந்த ராட்சசப் பெண் {ஹிடிம்பை} மிகுந்த இரக்கம் கொண்டதாலும், அவர்கள் மீது பரிதாபம் கொண்ட சுத்தமான இதயம் கொண்டதாலும், ஏதும் பேசாமல் இருந்தாள். பிறகு அந்த நரமாமிசம் உண்ணும் கொடிய விலங்கு, பயங்கரமாகக் கர்ஜனை செய்து, பெரும் பலத்துடன் பீமரிடம் விரைந்தான். பெரும் சீற்றத்துடன் அவனை அணுகிய அந்த பலம்வாய்ந்த நரமாமிச உண்ணி, பெரும் கோபம் கொண்டு, பீமரின் கைகளைத் தனது கைகளால் பற்றி, இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போல இறுக்கிக் கடினமாக்கி, திடீரென பீமரை இடிமின்னலின் சக்தியுடன் ஒரு அடி அடித்தான். ராட்சசனிடம் அகப்பட்ட கரங்களுடன் இருந்த பீமர் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பெரும் கோபம் கொண்டார். பிறகு பீமசேனருக்கும் ஹிடிம்பனுக்கும் இடையில் ஒரு பயங்கரமான போர் நடந்தது. அனைத்து ஆயுதங்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த அந்த இருவர் புரிந்த போர், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} விரித்திரனுக்கும் நடந்தப் போரைப் போல இருந்தது.

பாவங்களற்றவனே {கிருஷ்ணா}, அந்த ராட்சசனுடன் நெடுநேரம் விளையாடிய பிறகு பலமும் பெரும் சக்தியும் நிறைந்த பீமர், களைப்புடன் போராடிக் கொண்டிருந்த அந்த நரமாமிச உண்ணியை {ஹிடிம்பனை} கொன்றார். ஹிடிம்பனைக் கொன்ற பிறகு, பிற்பாடு *3கடோத்கசனைப் பெற்ற {அவனது தங்கையான} ஹிடிம்பையை முன் விட்டு, பீமரும் அவரது சகோதரர்களும் சென்றனர். பிறகு அந்த எதிரிகளை ஒடுக்குபவர்கள், தங்கள் தாயை அழைத்துக் கொண்டு, பல அந்தணர்கள் சூழ ஏகசக்கரத்தை நோக்கி முன்னேறினர். அவர்களின் பயணத்திற்கு இடையில், வியாசர் வந்து அவர்களின் நன்மைகள் கருதி அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பிறகு ஏகச்சக்கரத்தை அடைந்ததும், அங்கேயும் கடும் நோன்புகள் நோற்ற பாண்டவர்கள் ஹிடிம்பனைப் போலவே கொடுமையான *4பகன் என்ற பெரும் பலம் வாய்ந்த நரமாமிச உண்ணியைக் கொன்றனர். அடிப்பவர்களில் முதன்மையான பீமர் அந்தக் கொடுமையான நரமாமிச உண்ணியைக் கொன்ற பிறகு, தனது சகோதரர்களுடன் துருபதரின் தலைநகருக்குச் சென்றார். கிருஷ்ணா, நீ பீஷ்மகனின் மகளான ருக்மிணியை அடைந்தது போல, அங்கே தங்கியிருந்த சவ்யசாசின் {அர்ஜுனர்} என்னை அடைந்தார்! மதுசூதனா, *5அர்ஜுனர் மற்றவர்களால் செய்ய முடியாத சாதனையைச் செய்தும், அங்கு கூடிய பல மன்னர்களிடம் போரிட்டும் என்னை சுயம்வரத்தில் வென்றார்.

கிருஷ்ணா இப்படியே எண்ணிலடங்கா துயரங்களுடனும், பெரும் சோகத்துடன் தௌமியரைத் தலைமையாகக் கொண்டு, இனிமையான குந்தியின் துணையின்றி வாழ்ந்து வருகிறேன். பெரும் பலத்தையும் சிங்கம் போன்ற வீரத்தையும் கொடையாகக் கொண்டிருந்தும், எதிரிகளிடம் நான் கேவலப்படும்போது இவர்கள் ஏன் இப்படி அமர்ந்திருந்தார்கள்? பலம் குறைந்த தீய கொடும் எதிரிகளின் கையால் தீங்கிழைக்கப்பட்டு, நான் நீண்ட காலம் எரிந்து கொண்டிருக்க வேண்டியதுதானா? நான் பெருமைமிக்க குலத்தில் பிறந்தேன். *6இயல்புக்கு மிக்க வழியில் இந்த உலகத்துக்கு வந்தேன். பாண்டவர்களின் அன்பு மனைவியாக இருக்கிறேன், சிறப்பு மிக்க பாண்டுவின் மருமகளாக இருக்கிறேன்! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா} இப்படி பெண்களில் முதன்மையானவளாக, கணவர்களுக்கு என்னை அர்ப்பணித்தவளாக நான் இருப்பினும், இந்திரர்களுக்கு ஒப்பான பாண்டவர்களின் கண்ணெதிரிலேயே கூந்தலைப் பற்றி இழுத்து வரப்பட்டேன்." என்றாள் {திரௌபதி}.

மென்மையாகப் பேசும் கிருஷ்ணை {திரௌபதி} இப்படிச் சொல்லிவிட்டு தாமரை மொட்டுகளைப் போல இருக்கும் மென்மையான கைகளால் தனது முகத்தை மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள். அப்படி பாஞ்சாலி {திரௌபதி} வடித்த கண்ணீர் அனைத்து நற்குறிகளும் பெற்ற அவளது ஆழமான, பருத்த, அழகான மார்பகங்களைக் கழுவிச் சென்றது. பிறகு அவள் தனது கண்களைத் துடைத்துக் கொண்டு, அடிக்கடி பெருமூச்சுவிட்டபடி கோபம் நிறைந்த வார்த்தைகளுடனும் தடைபட்ட குரலுடனும், "கணவர்கள், அல்லது மகன்கள், அல்லது நண்பர்கள், அல்லது சகோதரர்கள், அல்லது தந்தையோ அற்றவளாக நான் இருக்கிறேன். மதுசூதனா எனக்கு நீயும் இல்லாது போனாய். தாழ்ந்த எதிரிகளால் நான் கடுமையாக நடத்தப்பட்ட போது, நீங்கள் அனைவரும் அதைக் கண்டும் அசையாமல் அமர்ந்திருந்தீர்கள்! கர்ணன் செய்த கேலியால் ஏற்பட்ட வருத்தம் தணிக்கப்பட முடியாததாக இருக்கிறது! இவற்றின் அடிப்படையில், உறவினராக, மரியாதைக்காக, நமது நட்புக்காக, உனக்கு என் மீது இருக்கும் தலைமைத் தன்மைக்காக நான் எப்போதும் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டியவள்" என்றாள்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், அந்த வீரர்களின் கூட்டத்தில் அழுது கொண்டிருந்த திரௌபதியிடம் வாசுதேவன் {கிருஷ்ணன்}, "அழகான மங்கையே, நீ யார் மீது கோபத்துடன் இருக்கிறாயோ அவர்களின் மனைவிமார், விவத்சுவின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்குண்டு இரத்தத்தில் நனைந்து தரையில் கிடக்கும் தங்கள் கணவர்களைக் கண்டு, நீ இப்போது எப்படி அழுகிறாயோ அதே போல அழுவார்கள். பெண்ணே, அழாதே, பாண்டுவின் மகன்களுக்காக நான் எனது முழு சக்தியையும் பயன்படுத்துவேன்! நீ (மறுபடியும்) மன்னர்களுக்கு ராணியாவாய் என்பதை நான் உனக்கு உறுதி கூறுகிறேன். வானம் இடிந்து விழலாம், இமயம் பிளந்து போகலாம், கடல் நீர் வற்றிப் போகலாம், ஆனால் எனது வார்த்தைகள் பலனற்று போகாது {பொய்க்காது}!" என்றான். அச்யுதனின் மறுமொழியைக் கேட்ட திரௌபதி தனது மூன்றாம் கணவனை (அர்ஜுனனை} சாய்ந்தபடி பார்த்தாள். பலம்வாய்ந்த மன்னா {ஜனமேஜயா}, அர்ஜுனன் திரௌபதியிடம், "தாமிரம் போன்ற அழகான கண்களை உடையவளே வருந்தாதே! சிறப்புமிக்கவளே, மதுவைக் கொன்றவன் {மதுசூதனன் = கிருஷ்ணன்} சொல்வது போலவே நடக்கும்! அழகானவளே, வேறு மாதிரியாக நடக்காது!" என்றான்.

திருஷ்டத்யும்னன், "நான் துரோணரைக் கொல்வேன், சிகண்டின் பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வான். பீமசேனர் துரியோதனனைக் கொல்வார், தனஞ்செயர்{அர்ஜுனன்} கர்ணனைக் கொல்வார். தங்கையே, ராமன் {பலராமன்} மற்றும் கிருஷ்ணனின் துணையாகக் கொண்ட எங்களை விரித்திரனைக் கொன்றவனால் கூட வீழ்த்த முடியாது. அப்படி இருக்கும்போது திருதராஷ்டிரனின் மகன்களால் என்ன செய்ய முடியும்?" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகள் பேசப்பட்ட பிறகு, அனைத்து வீரர்களும் தங்கள் முகங்களை வாசுதேவன் பக்கமாக திருப்பினர். அவன், அவர்களுக்கு மத்தியில் இருந்து பின்வருமாறு பேசினான்.

தொடர்வது.......
சூது பெருந்தீங்கானது - வனபர்வம் பகுதி 13 

-------------------------------------------------------------------------------------------

*1-வாரணாவதத்தில் தங்கள் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை {பாண்டவர்களை} எரித்துக் கொல்ல எண்ணி,

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
மாளிகைக்கு தீயிட்டான் பீமன் - ஆதிபர்வம் பகுதி 150
-------------------------------------------------------------------------------------------
*2-பறவைகளின் மன்னனான வினதையின் மகன் கருடனைப்

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
பிறந்தான் கருடன் | ஆதிபர்வம் - பகுதி 23
-------------------------------------------------------------------------------------------
*3கடோத்கசனைப் பெற்ற {அவனது தங்கையான} ஹிடிம்பையை....

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
பீமனிடம் பேசிய ராட்சசி - ஆதிபர்வம் பகுதி 154
பீமன் ஹிடிம்பன் மோதல் - ஆதிபர்வம் பகுதி 155
ஹிடிம்பனைக் கொன்றான் பீமன் - ஆதிபர்வம் பகுதி 156-----------------------------------------------------------------------------------------------------------
*4 பகன் என்ற பெரும் பலம் வாய்ந்த நரமாமிச உண்ணியைக் கொன்றனர்.

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:

பீம பகாசுர மோதல் - ஆதிபர்வம் பகுதி 165 

------------------------------------------------------------------------------------------
*5அர்ஜுனர் , பல மன்னர்களிடம் போரிட்டும் என்னை சுயம்வரத்தில் வென்றார்.
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:

------------------------------------------------------------------------------------------
*6இயல்புக்கு மிக்க வழியில் இந்த உலகத்துக்கு வந்தேன்.
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
-----------------------------------------------------------------------------------------

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்