Saturday, December 07, 2013

துவைத வனம் சென்ற பாண்டவர்கள் - வனபர்வம் பகுதி 24

The Pandavas went to Dwaitavana | Vana Parva - Section 24 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்கள் தங்கள் பனிரெண்டு வருட வனவாசத்தைக் கழிக்க துவைத வனத்தை அடைதல்...

வைசம்பாயனர் சொன்னார், "அவர்கள் எல்லாம் சென்ற பிறகு, குந்தியின் உறுதி குலையாத அறம்சார்ந்த மகனான யுதிஷ்டிரன், தனது தம்பிகளிடம், "நாம் இந்தத் தனிமையான வனத்தில் பனிரெண்டு வருடங்கள் வசிக்க வேண்டும்.ஆகையால், இந்தப் பெரும் வனத்தில், காண்பதற்கினிய பறவைகளும், மான்களும், மலர்களும், கனிகளும் இருக்கும் இடத்தைத் தேடுங்கள். இந்த வருடங்கள் முழுவதையும் அறம்சார்ந்த மனிதர்கள் வசிக்கும் அதிர்ஷ்டகரமான இடத்தில் இனிமையாக வசிக்கலாம்!" என்றான் {யுதிஷ்டிரன்}.


இப்படி யுதிஷ்டிரன் சொன்னதும், தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} குருவை வணங்குவது போல வணங்கி அந்தச் சிறப்பு வாய்ந்த மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} மறுமொழி கூற ஆரம்பித்தான். "அனைத்து பழம்பெரும் ரிஷிகளிடமும் நீர் மரியாதையுடன் காத்திருந்திருக்கிறீர். இந்த மனிதர்களின் உலகில் நீர் அறியாத ஒன்றும் கிடையாது. ஓ பாரத குலத்தின் காளையே, எப்போதும் நீர் துவைபாயனர்{வியாசர்} உள்ளிட்ட அந்தணர்களிடமும் மற்றவர்களிடமும் மரியாதையுடன் காத்திருந்திருக்கீறர்.
பெரும் ஆன்மத் தகுதி படைத்து, புலன்களைத் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்து எல்லா உலகங்களின் வாசலுக்கும், கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் உலகங்களுக்கும், தேவர்களின் உலகத்திலிருந்து பிரம்மலோகத்திற்கும், செல்லும் சக்தி படைத்த நாரதரிடமும் மரியாதையுடன் காத்திருந்திருக்கின்றீர். அந்தணர்களின் கருத்துகளையும், அவர்களது வீரத்தையும் சந்தேகமற நீர் அறிந்து வைத்திருக்கின்றீர்! ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நமக்கான நன்மைகளை அடைவதையும் அறிவீர்!  ஓ பெரும் மன்னா, நீர் எப்படி விரும்புகிறீரோ அப்படியே நாங்கள் வாழ்வோம்! இதோ இந்த தடாகம் முழுவதும் புனித நீர் இருக்கின்றது. மலர்கள் நிறைந்து, காண்பதற்கினியதாகவும், பல்வேறு வகையான பறவைகள் உள்ளதாகவும் இந்தத் துவைத வனம் இருக்கிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமக்கு விருப்பம் இருந்தால், பனிரெண்டு வருடங்களும் {12} நாம் இங்கேயே வசிக்கலாம்! இல்லையென்றால்?" என்ற கேள்வியோடு நிறுத்தினான் அர்ஜுனன். அதற்கு மறுமொழியாக யுதிஷ்டிரன், "ஓ பார்த்தா {அர்ஜுனா}, நீ ஒன்றைப் பரிந்துரைக்கிறாய் என்பதே அதன் தன்மையை எனக்கு விளக்குகிறது! நாம் அந்தப் புனிதமான, கொண்டாடப்படும் துவைதவனம் என்று அழைக்கப்படும் தடாகத்திற்குச் செல்வோம்." என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு பாண்டுவின் அறம்சார்ந்த மகன் {யுதிஷ்டிரன்} எண்ணற்ற அந்தணர்களுடன், துவைதவனம் என்று அழைக்கப்படும் அந்த புனிதமான தடாகத்திற்குச் சென்றான். நெருப்பு வேள்வி செய்யும அந்தணர்களும், அப்படி இல்லாதவர்களும், பிச்சை எடுத்து வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களும், வானப்பிரஸ்தர்களும் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து இருந்தனர். கடும் நோன்பு நோற்று தவ வெற்றி கண்ட நூற்றுக்கணக்கான மகாத்மாக்களால் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} சூழப்பட்டு இருந்தான். பாண்டுவின் மகன்களாகிய அந்த பாரத குலத்தின் காளைகள் எண்ணற்ற அந்தணர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சிகரமான புனித வனமான துவைத வனத்திற்குள் நுழைந்தனர். வசந்த காலத்தின் நெருக்கத்தில் அந்தப் பெரும் வனம் {துவைத வனம்}, சால மரம், பனை, மா, மாதுகம் {இலுப்பை}, நிபம் {அடம்பு}, கதம்பம் {கடம்பு}, சர்சம், அர்ஜுனம் {மருத மரம்}, கார்னிகரம் {கோங்கு}, ஆகிய பூக்களுடன் கூடிய மரங்களுடன் இருந்தது. அந்த வனத்தில் மயில்களும், தத்யுஹங்களும் {நீர்க்கோழிகளும்}, சக்கோரங்களும் {புராண காலத்துப் பறவை}, வார்ஹின்களும்{புராண காலத்துப் பறவை}, கோகிலங்களுமான {குயில்களுமான} பறவைகளின் கூட்டங்கள் மரங்களின் உச்சியில் இருந்து மகிழ்விக்கும் குரலுடன் கூவிக் கொண்டிருந்தன. அதிக மதம் கொண்ட பெரும் மலை போன்ற யானைகள், பெண்யானைகளுடன் கூட்டமாக இருப்பதை அங்கே மன்னன் கண்டான்.

அழகான போகவதியை {சரஸ்வதி நதியை} அணுகிய மன்னன், அங்கே ஆன்ம வெற்றி அடைந்த பல தவசிகளும், தலையில் ஜடாமுடியுடன், மரவுரி அணிந்து தூய ஆன்மா கொண்ட அறம் சார்ந்த மனிதர்களும் அந்தக் காட்டில் வசிப்பதைக் கண்டான். அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையான மன்னனும் {யுதிஷ்டிரனும்}, அவனது தம்பிகளும், தொடர்ந்து வந்தவர்களும், தாங்கள் வந்த தேர்களில் இருந்து இறங்கி, அளவற்ற சக்தி கொண்ட இந்திரன் சொர்க்கத்திற்குள் நுழைவது போல அந்த வனத்திற்குள் நுழைந்தனர். உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஏகாதிபதியைக் காண விரும்பி சாரணர்களும் சித்தர்களும் பெருங்கூட்டமாக அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} வந்தனர். பெரும் புத்திகூர்மை கொண்டவனும், மன்னர்களில் சிம்மத்தைப் போன்றவனுமானவனைகச் {யுதிஷ்டிரனை} சுற்றி அந்தக் கானகவாசிகள் நின்றனர். சித்தர்களை வணங்கியும், மன்னனுக்குரிய அல்லது தேவர்களுக்குரிய மதிப்புடன் அவர்களால் வணங்கப்பட்ட அந்த மன்னன், அந்த அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} முதன்மையானவர்களுடனும் கூப்பிய கரங்களுடனும் அந்தக் கானகத்திற்குள் நுழைந்தான். தன்னை நாடி வந்த அறம் சார்ந்த தவசிகளை வணங்கியும் அவர்களால் வணங்கப்பட்டும் இருந்த அந்த மன்னன், மலர்கள் நிறைந்த ஒரு பெரும் மரத்தினடியில் பழங்காலத்தில் தனது தந்தை அமர்ந்தது போல அமர்ந்தான். பாரத குலத்தின் தலைவர்களான பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, இரட்டையர்கள், கிருஷ்ணை {திரௌபதி}, மற்றும் அவர்களைத் தொடர்ந்தவர்கள் அனைவரும் மிகுந்த களைப்படைந்து, தங்கள் வாகனங்களை விட்டு, மன்னர்களில் சிறந்தவனைச் {யுதிஷ்டிரனைச்} சுற்றி அமர்ந்து கொண்டனர். அந்த ஐந்து சிறந்த வில்லாளிகள் கொடிகளின் எடை தாங்காமல் வளைந்து நின்ற அந்தப் பெரும் மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தபோது, ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் (ஐந்து) பெரும் யானைகளுடன் கூடிய மலை போல அந்த மரம் தெரிந்தது.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்