Showing posts with label சுவாகா. Show all posts
Showing posts with label சுவாகா. Show all posts

Thursday, August 07, 2014

சிவனுக்கு மகன் கந்தன்! - வனபர்வம் பகுதி 230அ

Skanda is a son of Siva!  | Vana Parva - Section 230a | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சுவாகாவை அக்னியுடன் இணைத்த ஸ்கந்தன்; ஸ்கந்தனின் தந்தை சிவன் என்று பிரம்மன் ஸ்கந்தனிடம் சொன்னது; சிவனால் பெறப்பட்ட மிஞ்சிகையும், மிஞ்சிகனும்; ஆவிகளை வழிபட வேண்டியதற்கான தேவைகள்; குஹன் அமர்ந்திருந்த அந்த மலையின் அழகு ...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஸ்கந்தன் {அந்த அன்னையருக்கு} இந்தச் சக்திகளை எல்லாம் அளித்த போது, சுவாகா அவன் முன் தோன்றி, "இயற்கையாகவே {உண்மையில்} நீ எனது மகன். நீ எனக்கு அற்புதமான மகிழ்ச்சியை அருள வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றாள்.

ஸ்கந்தன், "எந்த மாதிரியான மகிழ்ச்சியை நீ விரும்புகிறாய்?" என்று கேட்டான்.

சுவாகா {ஸ்கந்தனிடம்}, "ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா}, நான் தக்ஷனின் அன்புக்குரிய மகளான சுவாகா என்ற பெயர் கொண்டவள் ஆவேன்; எனது இளமையில் நான் ஹுதாசனனிடம் (அக்னி தேவன்) காதல் கொண்டேன். ஆனால், என் மகனே, அந்தத் தேவன் {அக்னி தேவன்} எனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. நான் அவருடையே (அவரது மனைவியாக) எப்போதும் வாழ விரும்புகிறேன்" என்றாள்.

Sunday, August 03, 2014

கந்தனுக்கு அமுதூட்டிய அன்னையர்! - வனபர்வம் பகுதி 225

The mothers who nursed Skanda!  | Vana Parva - Section 225 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சுவாகா ஸ்கந்தனிடம் தானே அவனது தாய் என்பதைச் சொன்னது; ஏழு முனிவர்களும் தங்கள் மனைவியரைத் தள்ளிவைத்தது; அனைத்தையும் அறிந்த விஸ்வாமித்திர் ஸ்கந்தனைத் தஞ்சமடைந்து பிறப்புச் சடங்குகளைச் செய்து வைத்தது; தேவர்கள் இந்திரனிடம் ஸ்கந்தனைக் கொல்லும்படி சொல்வது; இந்திரன் அஞ்சுவது; லோகமாதாக்கள் ஸ்கந்தனிடம் சென்றது; அவனைத் தங்களது பிள்ளையாகச் சுவீகரித்து அமுதூட்டியது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்தப் பலமிக்க, உயர்ஆன்மா கொண்டவன் {ஸ்கந்தன்} பிறந்த போது, பல்வேறு வகையான அச்சம் தரும் நிகழ்வுகள் நடந்தன. ஆண்கள் மற்றும் பெண்களின் இயல்புள், வெப்பம் மற்றும் குளிர், மேலும் இதுபோன்ற முரண்பட்ட ஜோடிகளின் இயல்புகள் தலைகீழாக மாறின. கோள்கள், திசைப்புள்ளிகள், ஆகாயம் ஆகியன வெளிச்சத்தால் ஒளிர்ந்தன. பூமியும் கதறத் தொடங்கியது. உலக நன்மையை விரும்பும் முனிவர்களும் கூட இந்தப் பயங்கர அதிசயங்களை எல்லாப் புறமும் கண்டு, அண்டத்தின் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இதயப்பூர்வமாக முனைந்தனர். சைத்திரரத வனத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும், "ஏழு முனிவர்களின் ஆறு மனைவிகளுடன் கூடிய அக்னியினால் நமக்கு இந்த மிக மோசமான நிலை ஏற்பட்டது" என்றனர்.


அந்தத் தேவி {சுவாகா} பறவை உருவை அடைந்ததைக் கண்ட பிறர், "இந்தத் தீமை ஒரு பறவையால் ஏற்பட்டது" என்றனர். எவருமே சுவாகாதான் இந்தத் தீங்குக்குக் காரணமானவள் என்பதை நினைக்கவில்லை. ஆனால் (புதிதாகப் பிறந்த) ஆண்பிள்ளை தனதென்று கேள்விப்பட்ட அவள் {சுவாகா} ஸ்கந்தனிடம் சென்றாள். படிப்படியாக அவனிடம் அவளே அவனது {ஸ்கந்தனின்} அன்னை என்ற உண்மையை வெளிப்படுத்தினாள். அந்த ஏழு முனிவர்களும், (அவர்களுக்கு) ஒரு பலமிக்க மகன் பிறந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டனர். அந்தக் காட்டில் வசிக்கும் அனைவரும் {முனிவர்களின் மனைவியரான} அறுவரும்தான், அந்தப் பிள்ளை பிறக்கக் காரணம் என்று சொல்லி எதிர்த்ததால், அம்முனிவர்கள், வழிபடத்தகுந்த அருந்ததியைத் தவிர்த்துத் தங்கள் ஆறு மனைவியரையும் தள்ளி வைத்தார்கள் {divorced என்கிறார் கங்குலி}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏழு முனிவர்களிடம் சுவாகா, "துறவிகளே {சப்தரிஷிகளே}, இந்தப் பிள்ளை என்னுடையவன். உங்கள் மனைவியர் இவனுக்குத் தாயில்லை" என்று மீண்டும் மீண்டும் சொன்னாள்.

அந்த ஏழு முனிவர்களின் வேள்விகள் முடிந்ததும், பெரும் முனிவரான விஸ்வாமித்திரர், அக்னி தேவன் காமத்தால் துன்பப்பட்டபோது, அவனை {அக்னியை} அவனறியாது பின்தொடர்ந்து சென்றார். எனவே, நடந்தது என்ன என்பது அனைத்தையும் அவர் {விஸ்வாமித்திரர்} அறிவார். மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்} பாதுகாப்புக் கோரியவர்களில் முதல் மனிதன் அவரே. மஹாசேனனுக்கு தெய்வீக துதிகளைக் காணிக்கையாக்கிய பிறகு, பிள்ளைப்பருவத்திற்குரிய, பிறப்பு சார்ந்த பதிமூன்று மங்களச் சடங்குகளும் அந்தப் பெருமுனிவரால் {விஸ்வாமித்திரரால்} அந்தப் பிள்ளைக்குச் {ஸ்கந்தனுக்குச்} செய்யப்பட்டன. பிறகு உலகத்தின் நன்மைக்காக அவர், ஆறு முகம் கொண்ட ஸ்கந்தனுக்குரிய நற்பண்புகளை {அவனுக்கு} அறிவித்தார். சேவல், சக்தி தேவி மற்றும் ஸ்கந்தனின் தொண்டர்களுக்கு மரியாதை செய்யும் சடங்குகளை நடத்தி வைத்தார். {சேவலைக் கொடியாகவும், சக்தியை வேலாகவும், தொண்டர்களைப் பரிவாரங்களாகவும் வைத்துக் கொள்ள வேண்டிய சடங்குகளைச் செய்வித்தார்}. இந்தக் காரணத்திற்காக அவர் அந்தத் தெய்வீக இளைஞனுக்கு மிகவும் பிடித்தமானவராக ஆனார். அந்தப் பெரும் முனிவர் {விஸ்வாமித்திரர்}, அந்த ஏழு முனிவர்களுக்கும் {சப்தரிஷிகளுக்கும்}, சுவாகா மாற்றுரு கொண்டதைச் சொல்லி, அவர்களது மனைவியர் அப்பாவிகள் என்பதையும் சொன்னார். ஆனால், அந்த ஏழு முனிவர்களும் இதை அறிந்து கொண்ட பிறகும் கூடத் தங்கள் துணைகளை நிபந்தனையற்ற முறையில் கைவிட்டனர்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஸ்கந்தனின் பராக்கிரமத்தைக் கேள்விப்பட்ட தேவர்கள் வாசவனிடம் {இந்திரனிடம்} சென்று, "ஓ! சக்ரா {இந்திரா}, தாமதமின்றி அந்த ஸ்கந்தனைக் கொல், அவனது பராக்கிரமம் தாங்க முடியாததாக இருக்கிறது. அவனை நீ அழிக்கவில்லையென்றால், அவன் நம்முடன் கூடிய மூவுலகங்களையும் வென்று, உன்னை வீழ்த்தி, தானே தேவர்கள் தலைவன் ஆகிவிடுவான்" என்றனர். மனதால் குழம்பிய சக்ரன், அவர்களிடம், "இந்தப் பிள்ளை பெரும் பராக்கிரமத்தைக் கொண்டிருக்கிறான். போர்க்களத்தில் தனது பலத்தைக் கொண்டு அண்டத்தைப் படைத்தவனையே {பிரம்மாவையே} இவன் அழித்துவிடுவான். எனவே, அவனிடம் செல்லத் துணிய மாட்டேன்" என்றான். அதற்குத் தேவர்கள் {இந்திரனிடம்}, "உன்னிடம் ஆண்மையில்லாததால் நீ இவ்வகையில் பேசுகிறாய். இந்த அண்டத்தின் பெரும் அன்னையர் {லோகமாதாக்கள்} இன்று ஸ்கந்தனிடம் செல்லட்டும். அவர்கள் எப்படிப்பட்ட சக்தியையும் அடக்குவார்கள். அதன் பிறகு இந்தப் பிள்ளைக் கொல்லப்படட்டும்" என்றனர். அந்தத் தாய்மாரும், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்கள்.

பிறகு அவர்கள் {லோகமாதாக்கள்} சென்றுவிட்டனர். ஆனால் அவனைக் {ஸ்கந்தனைக்} கண்ட மாத்திரத்தில் அவர்கள் ஊக்கமிழந்து, அவன் வெல்லப்பட முடியாதவன் என்று கருதி, அவனை {ஸ்கந்தனை} தஞ்சம் அடைந்து, அவனிடம் {ஸ்கந்தனிடம்}, "ஓ! பலமிக்கவனே, நீ எங்கள் (வளர்ப்பு) மகனாவாய். நாங்கள் உன்னிடம் பாசத்தால் நிறைந்திருக்கிறோம். உனக்குப் பால் கொடுக்க விரும்புகிறோம் {desirous of giving thee suck}. இதோ எங்கள் மார்புகளில் பால் சுரக்கிறது" என்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்க மஹாசேனன் {ஸ்கந்தன்}, அவர்களது முலையுண்ண விரும்பி, அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அவர்களது கோரிக்கைகளை ஏற்றான். பிறகு அந்தப் பலசாலிகளில் பலசாலியானவன் {ஸ்கந்தன்} தனது தந்தையான அக்னி தன்னை நோக்கி வருவதைக் கண்டான். நல்லது அனைத்தையும் செய்யும் அந்தத் தேவன், அவனது தாயார்களுடன் இருந்த தனது மகனால் உரிய முறையில் மதிக்கப்பட்டு, அவனை {ஸ்கந்தனை} வளர்க்க அவனது பக்கத்திலேயே தங்கினான். அந்தத் தாய்மாரில் கோபத்துக்குப் பிறந்தவள் [1], {குரோதசமுத்பவை} கைகளில் சூலத்தை ஏந்தி, தனது சொந்த வாரிசைக் காப்பது போலவே ஸ்கந்தனைக் கண்காணித்தாள். {லோஹிதம் என்கிற} கடலின் மகளானவள் {கரூரை}, சிவப்பு நிறத்துடன், எளிதில் கோபம் கொள்பவளாக இருந்தாள். இரத்தத்தை உண்டு வாழும் அவள், மஹாசேனனை {கந்தனை} மார்போடு அணைத்து தாயைப் போல அவனுக்குப் பாலூட்டினாள். அக்னி, பல பிள்ளைகள் தன்னைத் தொடர, ஆட்டுவாய்க் கொண்ட ஒரு வணிகனைப் போலத் தன்னை மாற்றிக் கொண்டான். தன் வசிப்பிடமான அந்த மலையில் பொம்மைகளைக் கொண்டு அந்தப் பிள்ளையைத் {ஸ்கந்தனைத்} திருப்தி செய்யத்தொடங்கினான்.

[1] தெய்வமாக உருவகப்படுத்தப்பட்ட கோபம் = குரோதசமுத்பவை
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, August 02, 2014

கந்தன் பிறந்தான்! - வனபர்வம் பகுதி 224

The Birth of Skanda!  | Vana Parva - Section 224 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சுவாகா, ஏழு முனிவர்களின் மனைவியரில் அருந்ததியைத் தவிர மற்றவர்களுடைய உருவங்களில் சென்று அக்னியுடன் கூடியது; அக்னியின் உயிரணுக்களை வெள்ளை மலையில் உள்ள தங்கத் தடாகத்தில் சுவாகா வீசியது; அதிலிருந்து ஸ்கந்தன் உண்டானது; ஸ்கந்தன் கணைகளால் கிரௌஞ்ச மலையைப் பிளந்தது; ஸ்கந்தன், வேல் கொண்டு வெள்ளை மலையின் சிகரங்களை இரண்டாகப் பிளந்தது…


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, பெரும் நற்பண்புகளும், எந்தக் களங்கமும் அற்ற தன்மை கொண்ட அழகான சிவை {Siva} (ஏழு முனிவர்களில் ஒருவரான) அங்கிரசின் மனைவியாவாள். அந்த அற்புதமான மங்கை (சுவாகா}, முதலில் சிவையின் உருவம் கொண்டு, அக்னியின் முன்னிலையை அடைந்து, அவனிடம் {அக்னியிடம்} அவள், "ஓ! அக்னி, நான் உன் மீது கொண்ட காதலால் துன்புறுகிறேன். நீ என்னுடன் ஊடாடுவதே உனக்குப் பொருந்தும் என நான் நினைக்கிறேன். முனிவர்களின் மனைவியர் உரிய கவனத்திற்குப் பிறகு என்னை இங்கே அனுப்பினார்கள். நான் அவர்களின் ஆலோசனைப் படியே இங்கே வந்திருக்கிறேன்" என்றாள் {சுவாகா}.

அத்புதனும்! சுவாஹாவும்!! - வனபர்வம் பகுதி 223

Adbhuta and Swaha!  | Vana Parva - Section 223 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

பிரஜாபதியின் மகளான தேவசேனை, இந்திரனிடம் ஒரு பலமிக்கக் கணவனை வேண்டுவது; சூரியனும் சந்திரனும் சேர்ந்த ரௌத்திர முகூர்த்தத்தில் உண்டாகும் குழந்தையே அவளுக்குச் சிறந்த கணவனாக இருப்பான் என்று இந்திரன் பிரம்மனிடம் கோருவது; அத்புதன் என்ற நெருப்பானவன் சப்த ரிஷிகளின் மனைவியரிடத்தில் மையல் கொள்வது; காமத்தால் எரிந்த  அவன் தன்னை அழித்துக் கொள்ளக் கானகம் சென்றது; அவன் மீது மையல் கொண்ட சுவாகா அவனை அடைய ஒரு தந்திரத்தைச் சிந்தித்தது...

அந்த மங்கை {இந்திரனிடம்}, "நான் (அனைத்து உயிர்களின் தலைவனான பிரம்மனின்) பிரஜாபதியின் மகள். என் பெயர் தேவசேனை. எனது தங்கையான தைத்தியசேனை இந்தக் கேசினால் நாசம் செய்யப்பட்டாள் {ravished}. நாங்கள் இரு சகோதரிகளும் எங்கள் பணிப்பெண்களுடன் இந்த மானஸ மலைகளில் இன்பமாக இருப்பதற்காகப் பிரஜாபதியின் அனுமதி பெற்று இங்கு வருவது வழக்கம். பெரும் அசுரனான கேசின் எங்களுக்குத் தினமும் தனது மரியாதையைச் செலுத்திவந்தான். ஓ! பகனை விழ்த்தியவனே {இந்திரா}, தைத்தியசேனை அவனுக்கு {அசுரன் கேசினுக்குச்} செவிமடுத்தாள். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. எனவே, தைத்தியசேனை அவனாள் எடுத்துச் செல்லப்பட்டாள். ஆனால், ஓ! சிறப்புமிக்கவனே {இந்திரா}, நீ உனது பலத்தால் என்னைக் காத்தாய். இப்போது, ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, நீ எனக்கு யாராலும் வெல்லமுடியாத கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்றாள் {தேவசேனை}. இதற்கு இந்திரன் {தேவசேனையிடம்}, "நீ எனக்குச் சித்தியின் மகளாவாய். உனது அன்னை, எனது தாயான தாக்ஷாயணிக்கு {தக்ஷனின் மகள் என்பதால் தாக்ஷாயணி} சகோதரி ஆவாள். இப்போது நான் உனது பராக்கிரமத்தைக் {பலத்தைக்} குறித்துக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.

Monday, July 28, 2014

பிருஹஸ்பதியின் நெருப்புப் பிள்ளைகள்! - வனபர்வம் பகுதி 218

The fire children of Vrihaspati!  | Vana Parva - Section 218 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

பிருஹஸ்பதியின் பிள்ளைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்கு விளக்கியது....

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிருஹஸ்பதிக்குச் {பிரகஸ்பதிக்கு} சந்திரலோகத்தைச் சேர்ந்த (தாரா என்று அழைக்கப்பட்ட) ஒரு மனைவி இருந்தாள். அவள் {தாரா} மூலமாக அவருக்கு {பிருஹஸ்பதிக்கு} நெருப்பின் சக்தி கொண்ட ஆறு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். சஞ்சு {சம்யு} {1} என்ற பெயர் கொண்ட ஒரு மகன் பிருஹஸ்பதிக்கு இருந்தான். நெருப்பாக இருந்த அவன் {சம்யுவின்} மீதிருக்கும் மரியாதையால், பௌர்ணமஸ்ய மற்றும் இதர வேள்விகளில் அவனுக்கு காணிக்கையாக தெளிந்த நெய் அளிக்கப்படுகிறது. அவன் {சஞ்சு} பெரும் தவத்தகுதி கொண்டவனாக இருந்தான். சதுர்மாஸ்யம் (நான்கு மாத வேள்வி} மற்றும் அஸ்வமேத (குதிரை) வேள்விகளில், அவனுக்கே {சஞ்சுவுக்கே} முதல் மரியாதை செய்யப்படுகிறது. இந்தப் பலமிக்க நெருப்பானவன் {அக்னி} எண்ணற்ற சுடர்களால் குறிக்கப்படுகிறான். சஞ்சுவின் மனைவி சத்யை என்று அழைக்கப்பட்டாள். அவள் ஒப்பற்ற அழகு படைத்தவளாக இருந்தாள். உண்மையின் {சத்தியத்தின்} பொருட்டு அவள் தர்மத்தில் (நீதியில்) இருந்து உதித்தாள்.




அந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பானவன், அவரது {பிருஹஸ்பதியின்} மகனாவான் {சஞ்சு}, அவனுக்கு {சஞ்சுவுக்குப்} பெரும் அறத்தகுதிகள் கொண்ட மூன்று மகள்களும் இருந்தனர். வேள்விக் காணிக்கைகளில் முதல் மரியாதை செய்யப்படும் நெருப்பானவனான, அவனது {சஞ்சுவின்} முதல் மகன் பரத்வாஜன் என்று அழைக்கப்பட்டான். சஞ்சுவின் இரண்டாவது மகன் பரதன் என்று அழைக்கப்பட்டான். அனைத்து முழு நிலவு நாட்களிலும் செய்யப்படும் (பௌர்ணமாஸ்ய} வேள்விகளில் (சுருவம் என்று அழைக்கப்படும்) வேள்வி அகப்பையால் நீர்க்காணிக்கையான தெளிந்த நெய் அவனுக்கு {பரதனுக்கு} மரியாதை செய்யவே காணிக்கையிடப்படுகிறது. இதைத் தவிர்த்து உள்ள மூன்று மகன்களில் அந்தப் பரதனே மூத்தவன். அந்தப் பரதனுக்கு, பரதன் என்ற {தன்} பெயரிலேயே ஒரு மகனும், பாரதி என்று அழைக்கப்பட்ட மகளும் இருந்தனர். அந்தப் பரத நெருப்பானவர், பிரஜாபதியான பரத அக்னியின் {நெருப்பின்} மகனாவார்.

ஓ! பாரதக் குலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, அவன் {பரதன்} பெரிதும் மதிக்கப்படுவதால், அவர் பெரியவன் {பாவகன்} என்று அழைக்கப்பட்டான். வீரை என்பவள் பரத்வாஜனின் மனைவியாவாள்; அவள் வீரன் என்பவனைப் பெற்றெடுத்தாள். அவன் {வீரன்} சோமனைப் போலத் தெளிந்த நெய்யால் வழிபடப்படுகிறான் என்று அந்தணர்களால் சொல்லப்படுகிறது. இரண்டாம் கட்ட தெளிந்த நெய் காணிக்கைகளில் அவன் {வீரன்} சோமனுடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறான். அவன் {வீரன்} ரதப்பிரபு, ரதத்வானன், கும்பரேதன் என்றும் அழைக்கப்படுகிறான். அவன் {வீரன்} தனது மனைவியான சரயு மூலம் சித்தி என்ற மகனைப் பெற்றெடுத்தான். அவன் தனது ஒளியினால் சூரியனையே மறைத்தான். நெருப்பு வேள்விக்குத் தலைமையேற்கும் மேதையாக இருப்பதால், அவன் {சித்தி} நெருப்புக் குறித்த துதிகளில் எப்போதும் குறிக்கப்படுகிறான்.

நிஸ்சயவனன் {2} {பிருஹஸ்பதியின் இரண்டாவது மகன்} என்ற நெருப்பானவன் பூமியை மட்டும் புகழ்கிறான்; அவன் புகழ், பகட்டு மற்றும் செழிப்பால் பாதிக்கப்படுவதில்லை. சுத்தமான சுடரால் ஒளிரும் பாவமற்ற நெருப்பான சத்யன் அவனது மகனாவான். இவன் சுவடுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டவன். பாவங்களால் இவன் தீட்டுப்படுவதில்லை. காலத்தைச் சீராக்குபவன் இவனே {சத்யனே}. அந்த நெருப்புக்கு {சத்யனுக்கு} நிஷ்கிருதி என்ற மற்றொரு பெயரும் உண்டு. அவன் இங்கிருக்கும் அனைத்து வெளிப்படையான உயிரினங்களுக்கும் நிஷ்கிருதியை {நிவாரணத்தை} அளித்ததால் அவனுக்கு அப்பெயர் உண்டானது. சரியாக வழிபடப்படும்போது அவன் {சத்யன்} நற்பேறை அளிக்கிறான். அனைத்து நோய்களையும் உருவாக்கும் அவனது {சத்யனின்} மகன் சுவனன் என்று அழைக்கப்படுகிறான். அவனால் கடுமையாகப் பாதிக்கப்படும் மக்கள் சத்தம் போட்டு அழுகிறார்கள். அவன் {சுவனன்} புத்திக்கூர்மையுடன் இந்த அண்ட ம் முழுவதும் உலவுகிறான். மற்றுமொரு நெருப்பு (பிருஹஸ்பதியின் மூன்றாவது மகன்), ஆன்ம ஞானம் கொண்ட மனிதர்களால் விஸ்வஜித் {3} என்று அழைக்கப்படுகிறான்.

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அனைத்து உயிரினங்களிலும் உணவைச் செரிக்கச் செய்யும் அகவெப்பமாக அறியப்படும் அந்த நெருப்பான பிருஹஸ்பதியின் நான்காவது மகனானவன் அனைத்து உலகங்களாலும் விஸ்வபுக் {4} என்ற பெயரால் அறியப்படுகிறான். இவன் சுயக்கட்டுப்பாடு, பெரும் அறத்தகுதி கொண்ட பிரம்மச்சாரியாவான். இவன் பக வேள்விகளில் அந்தணர்களால் வழிபடப்படுகிறான். புனித நதியான கோமதி இவனது {விஸ்வபுக்கின்} மனைவியாவாள். அவள் மூலமாகவே அறமனம் கொண்ட மனிதர்கள் தங்கள் சடங்குகளைச் செய்கிறார்கள். நீரைக் குடிக்கும் பயங்கரமான கடல் நெருப்பான வடவன் {படபன்} {5} பிருஹஸ்பதியின் ஐந்தாவது மகனாவான். இந்தப் பிரம்ம நெருப்புக்கு மேல்நோக்கி நகரும் ஆற்றல் இருக்கிறது. அதனால் அவன் {வடவன்} உத்திரபாக் என்று அழைக்கப்படுகிறான். உயிர்க்காற்றாக அழைக்கப்படும் பிராணனில் அவன் அமர்ந்திருக்கிறான்.

{பிருஹஸ்பதியின்} ஆறாவது மகன் பெரும் சுவிஸ்டகிருதன் {6} என்று அழைக்கப்படுகிறான். அவனுக்குக் காணிக்கைகள் சுவிஷ்டமாகின்றன (சு என்றால் அற்புதமாக, இஷ்டம் என்று காணிக்கை). உதக்தாரக் காணிக்கையின் போது அவன் எப்போதும் மதிக்கப்படுகிறான். அனைத்து உயிரினங்களும் பொறுமையற்றுப் போகும்போது, மன்யௌதி {Manyauti} என்று அழைக்கப்படும் நெருப்பு பெரும் கோபத்தால் நிறைகிறது. இந்தத் தவிர்க்க முடியாத கொடூரமான மற்றும் எளிதில் மிகவும் கோபம் கொள்ளும் நெருப்பான இவள் பிருஹஸ்பதியின் மகளாவாள். சுவாகா {1} என்று அறியப்படும் இவள் அனைத்துப் பொருட்களிலும் இருக்கிறாள். (சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களின் ஆதிக்கத்தால் சுவாகாவுக்கு மூன்று மகன்கள் இருந்தனர்). முதல் காரணத்தால் அவள் தேவலோகத்திலும் நிகரற்ற அழகு படைத்த மகனைப் பெற்றாள். இதன் காரணமாக அவன் காம நெருப்பு என்று தேவர்களால் அழைக்கப்பட்டான். {காமன் என்பவன் காதல் தேவன் என்கிறார் கங்குலி}. (இரண்டாம் காரணத்தால்) அவள் அமோகன் அல்லது வெல்ல முடியாத நெருப்பு என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றாள். அவன் போரில் எதிரிகளை அழிப்பவனாக இருந்தான். வெற்றியில் உறுதிகொண்டு, தனது கோபத்தைத் தடுக்கும் அவன் {அமோகன்}, வில் தாங்கியவனாகவும், தேரில் அமர்ந்தவனாகவும், மலர்மாலைகள் அணிந்தவனாகவும் காட்சி தருகிறான். (மூன்றாவது குணத்தின் செயலால்) அவள், மூன்று உக்தங்களால் புகழப்பட்டு உக்தன் (முக்தி) என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றாள். {நமது செயல்களுக்கு அற்புதமான காரணமான உடலே உக்தம், உடலுக்கு உயிரூட்டுகிற ஆன்மா இரண்டாவது உக்தம், ஆன்மாவைத் தூண்டும் பரமாத்மா மூன்றாவது உக்தம் என்று இந்த இடத்தில் சொல்கிறார் கங்குலி}. இவனே {உக்தனே} பெரிய வார்த்தையை {கடவுள் என்ற பெரிய வார்த்தை என்கிறார் கங்குலி} தோற்றுவித்தவன். எனவே இவன் சமஸ்வாசன் அல்லது ஓய்வுக்கான {முக்திக்கான} வழி என்று அறியப்படுகிறான்" என்றார் {மார்க்கண்டேயர்}. 



{ } என்ற அடைப்புக்குறிக்குள் இருக்கும் எண்கள் பிருஹஸ்பதியின் பிள்ளைகளைக் குறிப்பதாகும்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்