Monday, August 20, 2018

பிரம்மனின் கோபாக்னி! - சாந்திபர்வம் பகுதி – 256

Brahma's fire of wrath! | Shanti-Parva-Section-256 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 83)


பதிவின் சுருக்கம் : மரணம் குறித்துப் பீஷ்மரிடம் வினவிய யுதிஷ்டிரன்; நாரத முனிவர் மன்னன் அனுகம்பகனுக்குச் சொன்ன கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பிரம்மன் தன் கோபத்தீயால் உயிரினங்களை எரித்தது; அத்தீயைத் தணிக்கப் பிரம்மனிடம் சென்ற ஸ்தாணு...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "தங்கள் தங்கள் படைகளுக்கு மத்தியில் பூமியின் பரப்பில் கிடக்கும் பூமியின் தலைவர்களும், பெரும் வலிமையைக் கொண்டவர்களுமான இந்த இளவரசர்கள் இப்போது அசைவற்றவர்களாக இருக்கிறார்கள்.(1) இந்த வலிமைமிக்க ஏகாதிபதிகள் ஒவ்வொருவரும் பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். ஐயோ, சம ஆற்றலும் வலிமையும் கொண்ட மனிதர்களால் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(2)  இந்த மனிதர்களைப் போரில் கொல்லக்கூடிய ஒருவரையும் நான் (இவ்வுலகத்தில்) காணவில்லை[1]. இவர்கள் அனைவரும் பேராற்றலையும், பெரும் சக்தியையும், பெரும்பலத்தையும் கொண்டவர்களாவர்.(3)  பெரும் ஞானத்தைக் கொண்ட இவர்கள், இப்போது உயிரை இழந்து வெறுந்தரையில் கிடக்கிறார்கள். உயிரை இழந்து கிடக்கும் இந்த மனிதர்கள் அனைவரையும் குறிக்க இறந்தவர்கள் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.(4) பயங்கர ஆற்றலைக் கொண்ட இந்த மன்னர்கள் அனைவரும் இறந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இக்காரியத்தில், என் மனத்தில் ஓர் ஐயம் எழுகிறது. அசைவு எங்கே இருந்து வருகிறது? மரணம் {மிருத்யு} எங்கே இருந்து வருகிறது?(5) இறப்பவன் யார்? (இறப்பது திரள் உடலா? நுண்ணுடலா? அல்லது ஆத்மாவா?) மரணம் எங்கே இருந்து வருகிறது? எக்காரணத்தினால் (வாழும் உயிரினங்களை) மரணம் அபகரித்துச் செல்கிறது? ஓ! பாட்டா, ஓ! தேவனுக்கு ஒப்பானவரே, இஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(6)


[1] "அஃதாவது, அவர்களுடன் போரில் ஈடுபட்டவர்கும், சமபலத்தைக் கொண்டவர்களுமான மிக மேன்மையான மனிதர்களால் மட்டுமே அவர்களைக் கொல்லமுடியும். அவர்கள் எவருடன் போரிட்டு மடிந்தனரோ அவர்களைத் தவிர வேறு எவராலும் அவர்களைக் கொன்றிருக்க முடியாது என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே, பழங்காலத்தில், கிருத யுகத்தில் அனுகம்பகன்[2] என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். போரில் அவனது தேர்கள், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து இறுதியில் அவனும் எதிரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டான்.(7) ஹரி என்ற பெயரில், பலத்தில் நாராயணனுக்கு ஒப்பானவனாக இருந்த அவனது மகன், அந்தப் போரில் தனது பணியாட்கள் மற்றும் துருப்பினருடன் சேர்த்து தனது எதிரிகளால் கொல்லப்பட்டான்.(8) மகனின் மரணத்தால் உண்டான துயரால் பீடிக்கப்பட்டவனும், தானே எதிரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டவனுமான அந்த மன்னன் {அனுகம்பகன்}, அதுமுதல் அமைதியான வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்தான். ஒருநாள் எக்காரியமும் இன்றி உலவிக் கொண்டிருந்தபோது, தவசியான நாரதரைப் பூமியில் சந்தித்தான்.(9) அந்த ஏகாதிபதி {அனுகம்பகன்}, போரில் நேர்ந்த தன் மகனின் மரணம் மற்றும் எதிரிகளால் தான் கைப்பற்றப்பட்டது என நடந்ததனைத்தையும் நாரதரிடம் சொன்னான்.(10) அவனது வார்த்தைகளைக் கேட்டவரும், தவமெனும் செல்வத்தைக் கொண்டவருமான நாரதர், மகனின் மரணத்தால் நேர்ந்த அவனது துயரை விலக்க பின்வரும் கதையை உரைத்தார்.(11)

[2] இப்பெயர் கும்பகோணம் பதிப்பில் அகம்பனன் என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில் அபிகம்பகன் என்றும் குறிப்பிடப்படுகிறது.

நாரதர், "ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, நீண்ட விவரங்களைக் கொண்ட பின்வரும் கதையை அது நேர்ந்தவாறே இப்போது கேட்பாயாக. ஓ! மன்னா, நானே இதை முன்பு கேட்டிருக்கிறேன்(12) பெரும் சக்தியைக் கொண்ட பெரும்பாட்டன் {பிரம்மன்}, அண்டத்தைப் படைத்த வேளையில் பெரும் எண்ணிக்கையிலான உயிரினங்களைப் படைத்தான். அவை பல்கிப் பெருகின, அவற்றில் ஒன்றும் மரணமடையவில்லை.(13) ஓ! மங்கா மகிமை கொண்டவனே {அனுகம்பகா}, அண்டத்தில் உயிரினங்களால் நிரம்பாத எந்தப் பகுதியும் இருக்கவில்லை. உண்மையில், ஓ! மன்னா {அனுகம்பகா}, மூவுலகங்களும் உயிரினங்களால் நிறைந்து, மூச்சுவிடக் கூட இடமில்லாமல் இருந்ததாகத் தெரிந்தது.(14) அப்போது, ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, பல்கிப்பெருகியிருக்கும் உயிரினங்களின் தொகையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மனத்தில் உதித்தது.(15)



ஓ! மன்னா, அதன்பேரில் பிரம்மன் கோபமடைந்ததால், அந்தக் கோபத்தின் விளைவாக அவனது உடலில் இருந்து ஒரு நெருப்பு வெளிப்பட்டது. ஓ! ஏகாதிபதி, பெரும்பாட்டன் {பிரம்மன்}, தனது கோபத்தில் பிறந்த நெருப்பைக் கொண்டு அண்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் எரித்தான்.(16) உண்மையில், ஓ! மன்னா, தெய்வீகத் தலைவனின் {பிரம்மனின்} கோபத்தில் பிறந்த அந்த நெருப்பானது, சொர்க்கம், பூமி மற்றும் ஆகாயத்தையும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்துடன் கூடிய மொத்த அண்டத்தையும் எரித்தது.(17) உண்மையில், இவ்வாறு பெரும்பாட்டன் கோப வசப்பட்டபோது, அந்த ஆசையின் தடுக்கப்பட முடியாத சக்தியால் அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் எரியத் தொடங்கின.(18)

அப்போது, தெய்வீகமானவனும், மங்கலமானவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் தலைவனுமான ஸ்தாணு {சிவன்}, கருணையால் நிறைந்து, பிரம்மனை நிறைவு செய்ய முனைந்தான்.(19) ஸ்தாணு, நன்மைக்கான நோக்கங்களுடன் பிரம்மனிடம் வந்தபோது, சக்தியுடன் எரிந்து கொண்டிருந்த அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்} அவனிடம் {சிவனிடம்},(20) "என்னிடம் இருந்து வரங்களுக்குத் தகுந்தவன் நீ. உனது எந்த விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும்? உன் இதயத்தில் இருக்கும் எதையும் நிறைவேற்றுவதன் மூலம் நான் உனக்கு நன்மை செய்வேன்" என்றான் {பிரம்மன்}.(21)

சாந்திபர்வம் பகுதி – 256ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்