Saturday, August 25, 2018

மிருத்யு - மரணதேவி! - சாந்திபர்வம் பகுதி – 257

The goddess death - Mrityu! | Shanti-Parva-Section-257 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 84)


பதிவின் சுருக்கம் : பிரம்மன் மிருத்யுவைப் படைத்து உயிரினங்களைக் கொல்ல ஏவிய கதையை அனுகம்பகனுக்குச் சொன்ன நாரதர்...


ஸ்தாணு, "ஓ! தலைவா {பிரம்மனே}, அண்டத்தில் படைக்கப்பட்ட உயிரினங்களின் சார்பாக என் வேண்டுதலை அறிவாயாக. இந்த உயிரினங்கள் உன்னாலேயே படைக்கப்பட்டன. ஓ! பாட்டா, அவற்றிடம் கோபங்கொள்ளாதே.(1) ஓ! சிறப்பானவனே, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும், உன் சக்தியில் பிறந்த நெருப்பின் மூலம் எரிக்கப்படுகின்றன. இத்தகைய அவல நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் அவற்றைக் கண்டு நான் கருணை கொள்கிறேன். ஓ! அண்டத்தின் தலைவா, அவற்றிடம் கோபங்கொள்ள வேண்டாம்" என்றான்.(2)

படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தின் தலைவன் {பிரம்மன்}, "நான் கோபமடையவில்லை; படைக்கப்பட்டவை அழிய வேண்டும் என்பது என் விருப்பமுமல்ல. பூமியின் கனத்தைக் குறைப்பதற்காக மட்டுமே இந்த அழிவு விரும்பத்தக்கதாகிறது.(3) ஓ மஹாதேவா, உயிரினங்களின் கனத்தால் பீடிக்கப்பட்டவளும், நீரில் மூழ்கி விடும் வகையில் காணப்பட்டவளுமான பூமாதேவியே, அவற்றை அழிக்குமாறு என்னிடம் வேண்டினாள்.(4) நீண்ட காலம் இது குறித்துச் சிந்தித்த பிறகும், இப்படிப் பல்கிப் பெருகியிருக்கும் தொகைக்கு அழிவை உண்டாக்கும் வழிமுறையேதும் அகப்படாததால், என் இதயத்தைக் கோபம் தன் உடைமையாக்கியது" என்றான்.(5)

ஸ்தாணு, "ஓ! தேவர்களின் தலைவா, உயிரினங்களை அழிக்கும் இக்காரியத்தில் கோபவசப்படாதே. நிறைவு கொள்வாயாக. அசைவனவாகவும், அசையாதனவாகவும் இருக்கும் இவ்வுயிரினங்கள் அழிய வேண்டாம்.(6) அனைத்துக் குளங்களும், அனைத்து வகைப் புல் மற்றும் தாவரங்களும், அசைவற்ற அனைத்து இனங்களும், அசையும் நால்வகை உயிரினங்கள் அனைத்தும் எரிக்கப்படுகின்றன.(7) மொத்த அண்டமும் உயிரினங்களற்றதாகப் போகிறது. ஓ! தெய்வீகத் தலைவா, நிறைவு கொள்வாயாக. ஓ! நீதிமிக்க இதயம் கொண்டவனே, இதுவே உன்னிடம் நான் கேட்கும் வரமாகும்.(8) இவ்வுயிரனங்கள் அழிக்கப்பட்டால் மீண்டும் திரும்பாது. எனவே, இந்த உனது சக்தி அதனிலேயே தணிவடையட்டும்.(9) ஓ! பாட்டா, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தினிடமும் கருணை கொண்டு, இவை எரியாத வேறு வழிவகைகளைக் காண்பாயாக. ஓ! அண்டத் தலைவர்கள் அனைவருக்கும் தலைவா {பிரம்மா}, அனைத்து உயிரினங்களின் நனவுநிலைகளுக்குத் தலைமைதாங்குபவனாக என்னை நீயே நியமித்தாய்.(11) ஓ! அண்டத்தின் தலைவா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் கொண்ட இந்த அண்டம் உன்னில் இருந்தே பிறந்தது. ஓ தேவர்களின் தேவா, இந்த உயிரினங்கள் மீண்டும் மீண்டும் பிறந்த இறக்கும் தன்மையுடன் இவ்வுலகில் மீண்டும் தோன்றச் செய்து நீ அமைதியடைய வேண்டும் என நான் உன்னை வேண்டிக் கேட்கிறேன்" என்றான் {ஸ்தாணு}".(12)



நாரதர் {அனுகம்பகனிடம்} தொடர்ந்தார், "ஸ்தாணுவின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வாக்கு மற்றும் மனக் கட்டுப்பாடு கொண்டவனுமான தெய்வீகப் பிரம்மன், அந்தச் சக்தியைத் தன் இதயத்திற்குள்ளேயே ஒடுக்கினான்.(13) இந்த அண்டத்தை அழித்துக் கொண்டிருந்த அந்நெருப்பை ஒடுக்கிய சிறப்புமிக்கவனும், அனைவராலும் துதிக்கப்படுபவனும், எல்லையற்ற பலம் கொண்டவனுமான பிரம்மன், அதன் பிறகு அனைத்து உயிரினங்களுக்கும் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய இரண்டையும் ஏற்பாடு செய்தான்.(14) சுயம்பு {பிரம்மன்} அந்நெருப்பை ஒடுக்கி விலக்கிக் கொண்ட பிறகு, கருப்பு மற்றும் சிவப்பாடைகள் உடுத்தியவளும், கரிய கண்களைக் கொண்டவளும், கரிய உள்ளங்கைகளைக் கொண்டவளும், சிறந்த காதுகுண்டலங்கள் இரண்டை அணிந்தவளும், தெய்வீக ஆபரணங்கள் சூடியவளுமாக, அவனது உடலின் அனைத்துத் துளைகளில் இருந்தும் ஒரு பெண் வெளியே வந்தாள்.(15,16) பிரம்மனின் உடலில் பிறந்த அந்தப் பெண், அவனது வலப்புறத்தில் நின்றாள்[1]. முதன்மையானவர்களான அந்த இரு தேவர்களும் {பிரம்மனும், ஸ்தாணுவும்} அவளைக் கண்டனர்.(17)

[1] கும்பகோணம் பதிப்பில், "கோபத்தாலுண்டான அந்த அக்கினியை அவர் அடக்கும்பொழுது கறுப்பும் சிவப்புமான ஆடை உடுத்தவளும், கண்களின் நடுவில் கறுத்தவளும், திவ்யமான குண்டலம் பூண்டவளும், திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளுமான ஒரு பெண் மஹாத்மாவான அவருடைய எல்லா இந்திரியங்களினின்றும் தோன்றினாள். இந்திரியங்களிலிருந்து வெளியில் வந்ததும் அவள் தென் திசையில் நின்றாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் "அவள் அவனது வலப்புறத்தில் நின்றாள்" என்றிருக்கிறது.

அப்போது, ஓ! மன்னா{அனுகம்பகா}, பலமிக்கவனும், உலகங்கள் அனைத்திற்கும் மூல காரணனுமான சுயம்பு {பிரம்மன்} அந்தப் பெண்ணை வணங்கி அவளிடம், "ஓ! மரணமே {மிருத்யு}, இந்த அண்டத்தின் உயிரினங்களைக் கொல்வாயாக.(18) கோபத்தில் நிறைந்து, படைப்புகளுக்கு அழிவைக் கொண்டுவரும் தீர்மானத்துடனே நான் உன்னை அழைத்தேன்.[2] எனவே, மூடராகவோ கல்விமானாகவோ உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கத் தொடங்குவாயாக.(19) ஓ! பெண்ணே, எவருக்கும் உதவுவதை {அனுகூலம் செய்வதைத்} தவிர்த்து, அனைத்து உயிரினங்களையும் கொல்வாயாக. என் ஆணையின் பேரில் பெருஞ்செழிப்பை வெல்வாயாக" என்றான்.(20)

[2] "தேவர்கள் மற்றும் முனிவர்களின் வழக்கில், நினைத்தலும், அழைத்தலும் ஒன்றே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஓ மிருத்யுவே, இந்தப்பிரஜைகளைக் கொல். கோபங்கொண்ட என்னால் ஸம்ஹாரஞ்செய்ய வேண்டுமென்ற புத்தியுடன் நினைக்கப்பட்டாயன்றோ" என்றிருக்கிறது.

இவ்வாறு சொல்லப்பட்டவளும், தாமரை மாலையால் அலங்கரிக்கப்பட்டவளுமான அந்த மரணதேவி {மிருத்யு}, கவலையுடன் சிந்திக்கத் தொடங்கிக் கண்ணீரை அபரிமிதமாகச் சிந்தினாள்.(21) எனினும், ஓ! மன்னா {அனுகம்பகா}, அந்தக் கண்ணீர் கீழே சிந்தாமல் அதைத் கூப்பிய கரங்களில் ஏந்தினாள். பிறகு அவள், மனிதகுலத்துக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டுச் சுயம்புவிடம் வேண்டினாள்" என்றார் {நாரதர்}.(22)

சாந்திபர்வம் பகுதி – 257ல் உள்ள சுலோகங்கள் : 22

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்