Wednesday, February 26, 2014

பெண்களையேக் காணாத ரிஷ்யசிருங்கர்! - வனபர்வம் பகுதி 110ஆ

Rishyashringa know nothing of women! | Vana Parva - Section 110b| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

விபாண்டகருக்கும் பெண்மானுக்கும் ரிஷ்யசிருங்கர் பிறப்பது; அங்கதேசத்தின் மழையின்மை; லோமபாதன் ஆலோசனை; ரிஷ்யசிருங்கரைத் தன் நாட்டுக்கு வரவழைக்க லோமபாதன் திட்டம்; விலைமாதர்களிடம் பேசுதல்; திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதிய மங்கை...

யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், "காசியபரின் மகனான {பேரனான} ரிஷ்யசிருங்கர் எப்படிப் பெண்மானுக்குப் பிறந்தார்? வெறுக்கத்தக்க பாலியல் உறவில் பிறந்த அவர் புனிதத்தன்மையை எப்படி அடைந்தார்? {அசுரர்கள்} பலனையும் விருத்திரனையும் கொன்ற இந்திரன் எக்காரணத்தால் அவ்விளம் பிள்ளைக்குப் பயந்து, பஞ்ச காலத்தில் மழையைப் பொழிந்தான்? மானாக இருந்தவரின் மனதை ஆசைப்படும்படி செய்த புனித வாழ்வு வாழ்ந்த இளவரசி சாந்தை எவ்வளவு அழகாக இருந்தாள்? அரசமுனியான லோமபாதன் அறம்சார்ந்தவனாகச் சொல்லப்படுகிறானே, அவ்வாறிருக்க, பகனைத் தண்டித்தவனான இந்திரன் அவனது நாட்டில் ஏன் மழையைப் பொழியவில்லை? ஓ! புனிதமான தவசியே! {லோமசரே} இவை அனைத்தையும் விவரமாக, நடந்த படியே எனக்கு உரைக்க வேண்டும். ரிஷ்யசிருங்கரின் வாழ்வில் நடந்த சாதனைகளை நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.


லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்தண சாதியைச் சார்ந்த தவசியும், ஆன்மசாதனைகளால் தனது ஆன்மாவை பக்குவப்படுத்தியிருந்தவரும், பிறப்பைக் கொடுக்கத்தவறாத வித்துடையவரும், கற்றவரும், உயிரினங்களின் தலைவர் போலப் பிரகாசிப்பவருமான விபாண்டகருக்கு, அச்சமூட்டும் பெயர் கொண்ட ரிஷ்யசிருங்கர் எப்படிப் பிறந்தார் என்பதைக் கேள். தந்தை {விபாண்டகர்} உயர்ந்த மதிப்புக்குரியவர். அதே போல மகனும் {ரிஷ்யசிருங்கர்} பெரும் பலம்வாய்ந்த ஆவி கொண்டவர். ஆகையால் அவர் சிறியவனாக இருந்த போதிலும் முதிர்ந்தவர்களால் மதிக்கப்பட்டார்.

காசியபரின் மகனான விபாண்டகர் ஒரு பெரும் தடாகத்திற்குச் சென்று நோன்பு பயில தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தேவர்களுக்கு ஒப்பான அந்தத் தவசி இப்படியே நீண்ட காலம் நோன்பிருந்தார். ஒரு முறை நீரில் {தடாகத்தில்} தனது வாயைக் கழுவி கொண்டிருந்த போது, தேவலோக மங்கையான ஊர்வசியைக் கண்டார். அதன்காரணமாக அவரது {விபாண்டகரின்} உயிர்நீர் வெளியேறியது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே {அத்தடாகத்தில்} நீர் குடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மான், தாகமிகுதியால், தண்ணீருடன் சேர்த்து அதையும் அருந்தியது. அதன்காரணமாக அந்தப் பெண்மான் ஒரு பிள்ளையைப் பெற்றது. அந்தப் பெண்மான் உண்மையில் தேவர்களின் மகளாவாள். உலகங்களைப் படைத்த புனிதமான பிரம்மன் பழங்காலத்தில் அவளிடம், "நீ ஒரு பெண் மானாவாய். அந்த உருவத்தில் இருக்கும்போது, நீ ஒரு தவசியைப் பெற்றெடுப்பாய். அன்றே நீ விடுதலை அடைவாய்" என்றான்.

உலகப் படைப்பாளனின் வார்த்தைப் பொய்யாகாது; ஆகையால் விதியும் அவ்வாறே ஆயிற்று. அந்தப் பெண்மானிடம் பெரும் தவசியான அவரது {விபாண்டகரின்} மகன் {ரிஷ்யசிருங்கர்} பிறந்தார். தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்த ரிஷ்யசிருங்கர், தனது நாட்களைக் கானகத்திலேயே கழித்தார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}! அந்தப் பெருமைமிக்கத் தவசியின் {ரிஷ்யசிருங்கரின்} தலையில் ஒரு கொம்பு இருந்தது. அதன் காரணமாகவே, அந்தக் காலத்தில் அவர் ரிஷ்யசிருங்கர் {தலையில் கொம்புடையவர்} என்று அழைக்கப்பட்டார். தனது தந்தையைத் தவிர வேறு யாரையும் அவர் {ரிஷ்யசிருங்கர்} கண்டதில்லை ஆகையால், அவரது மனம் எப்போதும் கடமையிலேயே முழுதும் லயித்திருந்தது.

இதே காலத்தில் அங்கம் என்ற நாட்டின் {அங்கதேசத்தின்} ஆட்சியாளனாக, தசரதனின் {ரகுராமனின் தந்தையின்} நண்பனான லோமபாதன் என்ற பெயர் கொண்ட மன்னன் இருந்தான். இன்பத்தின் மீதிருந்த நாட்டத்தால் அவன் பொய்யுரைத்த குற்றத்தை அந்தணர்களுக்கு இழைத்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்தக் காலத்தில் உலகத்தின் ஆட்சியாளனான அவனை {லோமபாதனை} புரோகித வகுப்பில் {அந்தணர்கள்} அனைவரும் புறக்கணித்தனர். அவன் {அறச்சடங்குகளில் துணை புரிந்து} ஆலோசனை கூறும் புரோகிதர் இல்லாமல் இருந்தான். ஆயிரம் கண்கள் கொண்ட தேவனும் {இந்திரனும்} அவனது நாட்டில் {லோமபாதன் நாடான அங்கதேசத்தில்} மழை பொழிவதைத் திடீரென நிறுத்தினான். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அவனது மக்கள் {குடிமக்கள்} பாதிப்படையத் தொடங்கினர். தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்த மதிப்பும் திறனும் மிக்க, பண்பட்ட மனதுடைய பல அந்தணர்களிடம் சென்று, தேவர்கள் மழையைப் பொழியும்படியான உதவிக்காக, "வானம் நமக்கு எப்படி மழையை அருளும்? (இக்காரியத்துக்கு} உகந்த ஒன்றைச் சிந்தியுங்கள்" என்று கேட்டான் {லோமபாதன்}.

இப்படிக் கேட்கப்பட்ட அந்தப் பண்பட்ட மனிதர்கள் தாங்கள் கருதியதைச் சொன்னார்கள். அந்தத் தவசிகளில் ஒருவர் அம்மன்னனிடம் {லோமபாதனிடம்}, "ஓ! மன்னர்களின் தலைவா (லோமபாதா}, அந்தணர்கள் உன்னிடம் கோபமாக இருக்கின்றனர். (ஆகையால்) அவர்களைச் சாந்தப்படுத்த ஏதாவது செய். ஓ! பூமியின் ஆட்சியாளனே, பெண்களைப் பற்றியே அறியாது, எளிமையில் இனிமை கண்டு, கானகத்தில் வசிக்கும் தவசியின் மைந்தனான ரிஷ்யசிருங்கருக்கு ஆள் அனுப்பு. ஓ! மன்னா {லோமபாதா}, தவப்பயிற்சிகளில் பெருமைவாய்ந்த அவர் {ரிஷ்யசிருங்கர்}, உனது நாட்டுக்கு {அங்கதேசத்திற்கு} வந்தால், வானம் உடனே மழையை அருளும். இதில் எனக்குச் சந்தேகமே இல்லை" என்றார்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்த வார்த்தைகளைக் கேட்ட லோமபாதன், தனது பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்தான். அந்தணர்களைச் சமாதானப்படுத்திய பிறகு அவன் நாடு திரும்பினான். மன்னன் திரும்பி வந்ததைக் கண்ட மக்கள் இதயத்தில் மகிழ்ந்தனர். பிறகு அந்த அங்க மன்னன் {லோமபாதன்}, ஆழ்ந்த ஆலோசனைகள் வழங்கும் தனது அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டினான். ரிஷ்யசிருங்கரைச் சந்திப்பதற்கான திட்டத்தை வகுக்க அவன் பெரும் வலிகளைச் சந்தித்தான்.

ஓ! வழிதப்பாதவனே (இளவரசனே) {யுதிஷ்டிரனே}! அனைத்து கிளைகளிலும் ஞானம் கொண்டு, உலகக் காரியங்களில் பெரும் நிபுணத்துவம் வாய்ந்த அவனது அமைச்சர்களுடன் விவாதித்து, சாத்தியங்களை ஆராய்ந்து, கடைசியாக (தனது நோக்கம் வெற்றியடைய) ஒரு திட்டத்தை வகுத்தான். பிறகு அவன் {லோமபாதன்} நகரத்தில் இருந்த அனைத்திலும் புத்திசாலித்தனத்துடன் இருந்த விலைமகள்கள் பலருக்குச் சொல்லி அனுப்பினான். அவர்கள் வந்ததும், அந்தப் பூமியின் ஆட்சியாளன் அவர்களிடம், "அழகான பெண்களே! தவசியின் மகனான ரிஷ்யசிருங்கரின் நம்பிக்கையைப் பெற நீங்கள் ஏதாவது மயக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவரை நீங்கள் எனது நாட்டிற்கு அழைத்துவர வேண்டும்" என்றான். மன்னனின் கோபம் ஒரு புறம், தவசியின் சாபம் ஒரு புறம் எனக் கண்ட அப்பெண்கள் மிகவும் துக்கத்துடன் குழம்பி, இது தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது என்று தீர்மானித்தனர்.

இருப்பினும், அவர்களில் ஒருத்தியான ஒரு கிழட்டுப் பெண் {நரைத்த தலை கொண்டவள் என்றும் கொள்ளலாம்}, அம்மன்னனிடம் {லோமபாதனிடம்}, தவத்தையே செல்வமாகக் கொண்டவரை, இங்குக் கொண்டு வர நான் முயற்சிக்கிறேன். எனினும், அந்தத் திட்டத்திற்காக எனக்கு நீர் சில குறிப்பிட்ட {நான் விரும்பும்} பொருட்களைக் கொடுக்க வேண்டும். அப்படியென்றால்தான், தவசியின் மகனான ரிஷ்யசிருங்கரை என்னால் அழைத்துவர முடியும்" என்றாள். அதன்காரணமாக மன்னன் அவள் கேட்ட அனைத்தையும் கொடுத்தான். மேலும் அவன் {லோமபாதன்} ஏராளமான செல்வங்களையும், விதவிதமான ரத்தினங்களையும் கொடுத்தான். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு அவள் மேலும் தாமதிக்கமால், தன்னுடன் அழகும் இளமையும் நிறைந்த பல பெண்களைக் காட்டுக்கு அழைத்துச் சென்றாள்" என்றார் {லோமசர்}


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்