நீதிமொழிகள்

நாடாளும் மன்னனிடம் அருகில் இருப்பவர்கள் எப்படி பழகவேண்டும்?
நாட்டை ஆட்சி செய்பவரின் {அரசை வழிநடத்துபவரின்} அருகில் இருப்பவர்கள் அந்த அதிகாரத்தில் இருப்பவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?


 **********************************************************************
எந்த வரலாற்றைக் கேட்டால் மனிதன் பூரண மன அமைதியை அடைவான்?


வனபர்வத்தின் கடைசி பர்வமான - ஆரண்யப் பர்வத்தினை படிக்கும் மனிதனுக்கு பூரண மன அமைதி கிடைக்கும்.

அரணிகளைத் தூக்கிச் சென்ற மான்! - வனபர்வம் பகுதி 309

.........(பாண்டவர்கள்) புத்துயிர் பெறுவதும், தந்தையும் {தர்மன்} மகனும் {யுதிஷ்டிரனும்} சந்திப்பதும், ஒப்பற்றதும், புகழை அதிகரிப்பதுமான இந்தக் கதையை நாடிய {கேட்ட [அ] படித்த} மனிதன், பரிபூரண மன அமைதியையும், மகன்கள் மற்றும் பேரர்களையும், நூறு வருடங்களைத் தாண்டி நீளும் வாழ்வையும் அடைவார்கள்! இந்தக் கதையை மனதில் நிறுத்தும் மனிதன், அநீதி {அதர்மம்}, நண்பர்களுக்குள் பூசல் {மித்ரபேதம்}, பிறன் உடைமையை மோசடி செய்வது; பிறர் மனைவியைக் களங்கப்படுத்தல் {தொடுதல்}, தவறான {தீய} எண்ணங்கள் {அற்பத்தனங்கள்} ஆகியவற்றில் மகிழ்வடைய மாட்டார்கள்! {பற்றுதல் கொள்ள மாட்டார்கள்!}” {என்றார் வைசம்பாயனர்}. - See more at: http://mahabharatham.arasan.info/2014/10/Mahabharatha-Vanaparva-Section312.html#sthash.J8GSfF05.dpuf

****************************************************************
எந்த வரலாற்றைக் கேட்டால் மனிதனின் ஆசைகள் காமவிகார முடிவை நோக்கி ஓடாது? நோக்கி ஓடாது?


.....அர்ஜுனனின்} இந்த வரலாற்றைக் கேட்கும் எந்த மனிதனின் ஆசைகளும் காமவிகார முடிவை நோக்கி ஓட முடியாது {ஆசையால் உண்டாகும் காம விகாரங்கள் முழுவதும் தொடராமல் முடிவடையும்} [The desires of the man that listeneth to this history of the son of Pandu never run after lustful ends]. தேவர்கள் தலைவனின் மகனான பல்குணனின் {அர்ஜுனனின்} இந்த சுத்தமான நடத்தையை பரிதாபத்துடன் கேட்கும் மனிதர்களில் முதன்மையானவர்கள், கர்வம், அகந்தை, கோபம் மற்றும் பிற குறைகளையெல்லாம் களைந்து, சொர்க்கத்தை அடைந்து, பேரின்பத்துடன் அங்கே விளையாடுவார்கள்."

*******************************************************************
அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் தன்மைகள் என்ன? இவற்றினால் உண்டாகும் பயன்கள் என்ன?

அறம்பயில்பவன் ஏன் துன்புறுகிறான்? - வனபர்வம் பகுதி 33அ
வைசம்பாயணர் சொன்னார், "யக்ஞ்சேனியின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமசேனன், கோபத்தால் பெருமூச்சுவிட்டபடி, மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகி, அவனிடம், "ஓ ஏகாதிபதி {அண்ணா யுதிஷ்டிரரே}, (உமக்கு முன்பாக) நாடுகள் சம்பந்தமான காரியங்களில் நல்ல மனிதர்கள் வழக்கமாகச் செல்லும் பாதையில் நடந்து செல்லும். இப்படி அறம், இன்பம் மற்றும் பொருளை இழந்து, தவசிகளின் ஆசிரம வாழ்க்கை வாழ்வதால் நமக்கு என்ன லாபம்? அறத்தாலோ, நேர்மையாலோ, பலத்தாலோ துரியோதனன் நம்மிடம் இருந்து நாட்டைப் பறிக்கவில்லை. அவன் நியாயமற்ற பகடையாட்டம் மூலம் பறித்தான். கழிவுகளை உண்ணும் பலவீனமான குள்ளநரி, சிங்கத்திடம் இருந்து அதன் இரையைப் பறிப்பது போல, அவன் நமது நாட்டை நம்மிடம் இருந்து பறித்தான்.

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, சத்தியத்துடன் ஒட்டிக் கொள்ளும் வெற்றுத் தகுதிக்குக் {அறத்திற்குக்} கீழ்ப்படிந்து, துன்பத்தினை அனுபவித்து, அறம் மற்றும் இன்பத்திற்கு ஊற்றுக்கண்ணான செல்வத்தை ஏன் கைவிட வேண்டும்.......


*******************************************************************
செயல்படுதலின்/முயற்சி செய்தலின் பலன்கள் எத்தகையது?

செயல்பாடில்லா வாழ்வு சாத்தியமற்றது! - வனபர்வம் பகுதி 32
திரௌபதி சொன்னாள், "ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, நான் தர்மத்தை அவமதிக்கவோ பழிக்கவோ இல்லை. அனைத்து உயிரினங்களின் தலைவனான கடவுளை நான் ஏன் அவமதிக்க வேண்டும்? ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, துயரத்தால் தாக்கப்பட்டு நொந்து போயிருப்பதால் நான் மீண்டும் புலம்புகிறேன் என்பதை அறிந்து கொள்ளும். ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, உலகில் உள்ள உணர்வுள்ள எவ்வுயிரும் எப்படிச் செயல்படும் என்று நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். அசையாத உயிரினங்களைத் தவிர்த்து வேறு எந்த உயிரினமும் செயல்படாமல் இருக்காது. ஒரு கன்றுக்குட்டி, தான் பிறந்த உடனேயே, தாயின் மடியை அடைந்து பால் குடிக்கிறது. தங்கள் சிலைகளை வைத்து மந்திரங்கள் ஓதப்படுவதன் விளைவாக மனிதர்கள் வலியை உணர்கிறார்கள்.

முழுவதும் மேலும் படிக்க>>>
********************************************************************
கோபத்தின் தன்மைகள் எத்தகையது?

கோபம் அனைத்தையும் அழித்துவிடும் - வனபர்வம் பகுதி 29
யுதிஷ்டிரன் சொன்னான், "கோபமே மனிதனைக் கொல்லும், அதே வேளை கோபமே மனிதனை வளம்பெற வைக்கும். ஓ பெரும் ஞானம் கொண்டவளே {திரௌபதியே}, கோபமே செழிப்பு மற்றும் துரதிர்ஷ்டங்களுக்கு வேர்க்காரணமாகும். ஓ அழகானவளே, எவன் கோபத்தை அடக்குகிறானோ அவன் செழிப்பை அடைகிறான். கோபத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் மனிதன், தனது கடும் கோபத்தின் விளைவாக துரதிர்ஷ்டத்தை வரவழைத்துக் கொள்கிறான். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் அழிவுக்கும் கோபமே காரணமாக இருக்கிறது. உலகத்திற்கே அழிவைக் கொண்டுவரும் கோபத்தை......

முழுவதும் மேலும் படிக்க>>>

****************************************************************
மன்னிக்கும் தன்மை மெச்சத்தகுந்ததா? அல்லது பலமும் சக்தியும் மெச்சத்தகுந்ததா? 
பணிவே சாதிக்கும்! - வனபர்வம் பகுதி 28
பாட்டன் பிரகலாதனும்
பேரன் பலிச்சக்கரவர்த்தியும்
திரௌபதி தொடர்ந்தாள், "இவ்விஷயத்தில், பிரகலாதனுக்கும், விரோசனனின் மகனான பலிக்கும் {பலிசக்கரவர்த்திக்கும்} இடையே பழங்காலத்தில் நடந்த உரையாடல் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. ஒரு நாள் பலி {பலிச்சக்கரவர்த்தி}, அசுரர் மற்றும் தானவர்களின் தலைவனும், பெரும் ஞானம் கொண்டவனும், கடமை குறித்த அறிவியலின் புதிர்களை நன்கு அறிந்தவனுமான தனது பாட்டன் பிரகாலதனிடம், "ஓ தாத்தா, மன்னிக்கும் தன்மை மெச்சத்தகுந்ததா? அல்லது பலமும் சக்தியும் மெச்சத்தகுந்ததா? இது குறித்து எனக்குப் புதிராக இருக்கிறது. ஓ தாத்தா, உம்மிடம் கேட்கும் எனக்கு இது குறித்துத் தெளிவுபடுத்தும்! ஓ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, உண்மையில் எது மெச்சத்தகுந்தது என்பதை எனக்குச் சொல்லும்! உமது கட்டளை எதுவானாலும் நான் அதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வேன்!" என்றான் {பலி-பலிச்சக்கரவர்த்தி}........................


**********************************************************************

அழியப் போகும் ஒருவனுக்கு ஆண்டவன் முதலில் எதைக் கொடுப்பான்?

சஞ்சயன், "ஓ மன்னா {திருதராஷ்டிரா},யாருக்கு தோல்வியையும் அவமானத்தையும் தேவர்கள் கொடுக்கப்போகிறார்களோ, அவர்களுக்கு முதலில் மதிமயக்கத்தை {தேவர்கள்} ஏற்படுத்திவிடுவார்கள். இதன் காரணமாகத் தான் அப்படிப்பட்ட மனிதன் அனைத்தையும் வித்தியாசமாகப் பார்க்கிறான். அழிவு அருகில் இருக்கும் போது, தீமையையும், அடக்கமின்மையையும், நேர்மையின்மையையுமே அவன் விரும்புவான். அழிவைக் கொண்டு வரும் காலம் கைகளில் தண்டத்தைக் கொண்டு வந்து தலையில் அடிப்பதில்லை. மாறாக, அந்த குறிப்பிட்ட காலத்தில், தீமையை நன்மையாகவும், நன்மையைத் தீமையாகவும் அந்த மனிதனைக் காண வைக்கும்".


*********************************************************************

யாரையெல்லாம் மகன்களாக {வாரிசாகக்} எற்றுக் கொள்ளலாம்?
பாண்டு சொன்ன கதை - ஆதிபர்வம் பகுதி 120

தர்மத்தின் விதிகள் முதல் ஆறு {6} வகை மகன்களை வாரிசுகளாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் ஒப்புக் கொள்கின்றன. அடுத்த ஆறு {6} வகை மகன்கள் குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தற்போதுள்ள வழக்கத்தின்படி நான் அதைச் சொல்கிறேன். ஓ பிருதா {குந்தி}, நான் சொல்வதைக் கேள்.

{1}அவை, தானே, தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் பெறும் மகன் முதல் வகை, 
{2} அன்பு நிமித்தமாக திறமைமிகுந்த மனிதர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் இரண்டாம் வகை,
{3} பணத்தின் நிமித்தமாக ஒருவர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் மூன்றாம் வகை,
{4} கணவன் இறந்தபிறகு மனைவியால் பெறப்படும் மகன் நான்காவது வகை, {5} திருமணம் ஆகும் முன்பு மனைவி பெறும் மகன் ஐந்தாவது வகை,
{6} கற்பற்ற மனைவியிடம் பெறும் மகன் ஆறாவது வகை,
{7} சுவீகாரமாகப் பெறப்படும் மகன் ஏழாவது வகை,
{8} சில காரணத்திற்காக பொருள் கொடுத்து வாங்கப்படும் மகன் எட்டாவது வகை,
{9} தானே முன்வந்து மகனாகுபவன் ஒன்பதாம் வகை,
{10} கற்பிணி மணமகளுடன் பெறப்பட்ட மகன் பத்தாவது வகை,
{11} சகோதரன் மகன் பதினோராவது வகை,
{12} தாழ்ந்த சாதி மனைவியிடம் பெறப்படும் மகன் பனிரெண்டாவது வகை. 

முழுவதும் மேலும் படிக்க >>>

*****************************************************************

யாரை அதிகாரத்தில் வைத்திருக்கும் அரசாட்சி நீடித்திருக்கும்?

அங்காரபர்ணனும் {சித்திரரதனும்} அர்ஜுனனும் - ஆதிபர்வம் பகுதி 172


சித்ரரதனும் -அர்ஜுனனும்
............ஆகையால் மனிதர்கள், எப்போதும் கற்ற புரோகிதர்களை தாங்கள் செய்ய விரும்பும் அனைத்து நற்காரியங்களிலும் நியமித்துக்கொள்ள வேண்டும். வேதங்களை அதன் ஆறு கிளைகளுடன் அறிந்து, சுத்தமாகவும், உண்மையாகவும், அறம்சார்ந்த ஆன்மாக கொண்டு, சுயகட்டளை கொண்ட பிராமணன், ஒரு மன்னனுக்கு புரோகிதனாக இருக்கத் தகுதி வாய்ந்தவன்.

நீதிகளின் விதிகளை அறிந்த பிராமணனைப் புரோகிதனாக அடைந்த ஒரு ஏகாதிபதி என்றும் வெற்றி வாகை சூடுபவனாக இருந்து, தனது வார்த்தைகளுக்குத் தலைவனாக இருந்து, நன்னடத்தையோடு இருந்து, இறுதியில் சொர்க்கத்தை அடைவான். கிடைக்காதது கிடைக்க, தான் கொண்டதைக் காக்க ஒரு மன்னன் எப்போதும் தகுதி வாய்ந்த ஒரு புரோகிதரை அடைய வேண்டும். தனது வளமையை விரும்பும் ஒருவன் எப்போதும் புரோகிதரின் வழிநடத்துதலோடு செயல்பட்டால், அவன் கடலை கச்சையாக அணிந்திருக்கும் முழு உலகத்தையும் அடைவான். ஓ தபதியின் மைந்தனே {அர்ஜுனனே}, பிராமணன் இல்லாத ஒரு மன்னன், தனது வீரத்தால் நிலத்தையோ அல்லது, பிறப்பால் மட்டுமே புகழையோ அடைய முடியாது. ஆகையால், ஓ குரு குலத்தை தழைக்க வைப்பவனே, பிராமணர்களை அதிகாரத்தில் வைத்திருக்கும் அரசாட்சி நீடித்திருக்கும் என்பதை அறிந்து கொள்", என்றான் {சித்ரரதன்}.

முழுவதும் மேலும் படிக்க >>>

********************************************************************
திருமணங்களின் வகைகள்:
சகுந்தலையை மயக்கிய துஷ்யந்தன் | ஆதிபர்வம் - பகுதி 73

துஷ்யந்தன் சகுந்தலையிடம் "அழகானவளே, கந்தர்வ முறைப்படி என்னை மணந்து கொள். ஓ கூராக இறங்கிச் செல்லும் தொடைகளைக் கொண்டவளே, திருமண முறைகள் எல்லாவற்றிலும் கந்தர்வ முறையே முதன்மையானதாக மதிக்கப்படுகிறது", என்றான் {துஷ்யந்தன்}.

மொத்தம் எட்டு {8} வகை திருமணங்கள் இருக்கின்றன. அவை, பிரம்மம், தெய்வ, அர்ஷ, பிரஜாபத்ய, அசுர, கந்தர்வ, ராட்சத, பைசாச என்ற வகைகளாகும். சுயும்புவின் மகன் மனு, இவற்றின் எல்லா தகுதிகளையும் அவற்றின் ஒழுங்குக்கேற்ப சொல்லயிருக்கிறார். ஓ களங்கமற்றவளே {சகுந்தலையே}, பிராமணர்களுக்கு முதல் நான்கு {4} வகையும் பொருந்தும், சத்திரியர்களுக்கு முதல் ஆறு {6} வகையும்  பொருந்தும். மன்னர்களுக்கு இராட்சத வகையும் அனுமதிக்கப்படுகிறது. அசுர வகை வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் அனுமதிக்கப்படுகிறது. முதல் ஐந்தில் மூன்று சரியானவை, மீதம் இரண்டும் சரியில்லாதவை. பைசாச மற்றும் அசுர வகைகள் நடைமுறையில் செய்யப்படவே கூடாது. இவையே தர்மத்தின் அங்கங்களாகும். எவனொருவனும் அதன்படி நடக்க வேண்டும். கந்தர்வ மற்றும் இராட்சத வகை சத்திரியர்களுக்கு ஏற்றது. நீ இதனால் சிறு பயமும் அடையத் தேவையில்லை. கடைசியில் சொன்ன இருவகையில் எந்த ஒரு வகையும், அல்லது இருவகையும் கலந்து நமது திருமணம் நடைபெறலாம். ஓ அழகான நிறம் கொண்டவளே {சகுந்தலையே}, ஆசையால் நிறைந்திருக்கிறேன் நான். நீயும் அவ்வாறே இருக்கிறாய். கந்தர்வ முறைப்படி நீ எனது மனைவியாகு", என்றான் {துஷ்யந்தன்}.

முழுவதும் மேலும் படிக்க >>>

*******************************************************************

திருமணமான பெண்களுக்கான நீதிகள்:

துஷ்யந்தனிடம் சென்றாள் சகுந்தலை | ஆதிபர்வம் - பகுதி 74அ

கன்வர் {கன்வ முனிவர்-சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை} தனது சீடர்களிடம், "சகுந்தலையையும், அவள் மகனையும், அனைத்து அதிர்ஷ்ட குறிகளையும் கொண்ட அவளது கணவனிடம் {துஷ்யந்தனிடம்} தாமதிக்காமல் தாங்கிச் செல்லுங்கள். பெண்கள் தன் தந்தைவழி அல்லது தாய்வழி உறவினர்களிடம் வெகு காலம் வாழக்கூடாது. அப்படித் தங்குவது,  அவர்களது நற்பெயருக்கும், நன்னடத்தைக்கும், அறத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும்.


அதனால் தாமதிக்காமல் உடனே அவளை {சகுந்தலையை} தாங்கிச் செல்லுங்கள்'', என்றார்.

முழுவதும் மேலும் படிக்க >>>
******************************************************************

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்