Showing posts with label காமதேனு. Show all posts
Showing posts with label காமதேனு. Show all posts

Wednesday, May 20, 2015

தென்திசையைத் தாங்குபவள் ஹம்சிகை! - உத்யோக பர்வம் பகுதி 102

Hansika supports the southern quarter! | Udyoga Parva - Section 102 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –31)

பதிவின் சுருக்கம் : மாதலிக்கு நாரதர் ரசாதலத்தைச் சுற்றிக் காட்டி விளக்கியது; சுரபி, சுரூபை, ஹம்சிகை, சுபத்ரை, சர்வகாமதுகை போன்ற பசுக்களையும், பாற்கடலைச் சுற்றி வசிக்கும் பேனபர்கள் என்ற முனிவர்களைக் குறித்தும் மாதலிக்கு நாரதர் சொன்னது...

நாரதர் {இந்திரனின் தேரோட்டி மாதலியிடம்} சொன்னார், "நான் இப்போது இருக்கும் இடம் ரசாதலம் என்று அழைக்கப்படுகிறது. இது பூமிக்கு அடியில் ஏழாவது அடுக்காக இருக்கிறது. அமிர்தத்தில் இருந்து பிறந்தவளும், பசுக்கள் அனைத்திற்கும் தாயானவளுமான சுரபி {காமதேனு} இங்கே வசிக்கிறாள். பூமியில் உள்ள சிறந்த பொருட்களின் சாரத்தால் {பூமியின் சாரமான புலம் முதலியவற்றில் உண்டான ஆறு ரசங்களின் சாரத்தால்} அவள் எப்போதும் பாலைத் தருகிறாள். (பேசப்பட்டுவரும்) ஆறு வெவ்வேறு வகையான சுவைகளின் சாரத்தில் இருந்து எழுந்த அது {பால்}, அற்புத சுவை கொண்டதாக இருக்கிறது. அமிர்தத்தைக் குடித்து நிறைந்து, சிறந்த பொருட்களைக் கக்கும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} வாயில் இருந்து பழங்காலத்தில் எழுந்தவள் இந்தக் களங்கமற்ற சுரபியாவாள்.


இவளது பாலின் ஒரு தாரை மட்டுமே, பூமியில் விழுந்தது. அதுவே, தற்போது புனிதமானதாகவும், அற்புதமானதாகவும் அறியப்படும் "பாற்கடலை" உண்டாக்கியது. அந்தக் கடலின் விளிம்புகள். மலர்களின் கச்சையை {மலர்மாலையை} ஒத்திருக்கும் வெண்ணுரையால் எப்போதும் மூடப்பட்டிருக்கின்றன. நுரையைக் குடிப்பவர்கள் {பேனபர்கள்} என்ற பெயரில் அறியப்படும் சிறந்த தவசிகள், அந்த நுரையை மட்டுமே உண்டு இந்தக் கடலைச் சுற்றி வசிக்கின்றனர். ஓ! மாதலி, அந்த நுரையைத் தவிர வேறு எதையும் உண்டு வாழாததால், அவர்கள் நுரையைக் குடிப்பவர்கள் {பேனபர்கள்} என்று அழைக்கப்படுகிறார்கள் [1]. கடுமையான தவங்களில் ஈடுபடும் அவர்களைக் கண்டு தேவர்களும் அஞ்சுவார்கள் என்று அறியப்படுகிறது.

[1] நுரை எனும் பேனத்தைக் குடிப்பவர்கள், ஆதலால், இம்முனிவர்கள் பேனபர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

ஓ! மாதலி, அவளிடம் {சுரபியிடம்} இருந்து, நான்கு திக்குகளைத் தாங்கும் நான்கு பிற பசுக்களும் பிறந்தன. எனவே அவர்கள் திக்குகளைத் தாங்குபவர்கள் என்று (திக்பலி என்று) அழைக்கப்படுகிறார்கள். சுரபியிடம் பிறந்து கிழக்குத் திசையைத் தாங்குபவள் சுரூபை {Surupa} என்று அழைக்கப்படுகிறாள். தென்திசையைத் தாங்குபவள் ஹம்சிகை {Hansika} என்று அழைக்கப்படுகிறாள். ஓ! மாதலி, வருணனால் ஆளப்படும் மேற்குத் திசையைத் தாங்கும் அண்ட வடிவு கொண்ட ஒப்பற்ற பசு, சுபத்ரை என்ற பெயரால் அறியப்படுகிறாள். அறம் சார்ந்த பகுதியை {தர்மம் சார்ந்த பகுதியை} உள்ளடக்கியதும், பொக்கிஷங்களின் தலைவன் குபேரன் பெயரால் அழைக்கப்படுவதுமான வட திசை, சர்வகாமதுகை என்ற பெயருடைய பசுவால் தாங்கப்படுகிறது.

அசுரர்களோடு சேர்ந்த தேவர்கள், மந்தரமலையை மத்தாகக் கொண்டு, கடலின் நீரைக் கடைந்து, வருணி எனும் மது, லட்சுமி {என்றழைக்கப்படும் செழிப்பு மற்றும் அருளின் தேவி), அமிர்தம், குதிரைகளின் இளவரசன் உச்சைஸ்ரவம், ரத்தினங்களில் சிறந்த கௌஸ்துபம் ஆகியவற்றை அடைந்தனர். ஓ! மாதலி, இந்த அருமையான பொருட்களைத் தந்த அந்த நீர் {பாற்கடலின் நீர்} இந்த நான்கு பசுக்களின் பால் கலந்தவையே ஆகும்.

சுரபியைப் பொறுத்தவரை, அவள் தரும் பால் சுவாகாவில் {சுதை = நாகர் உணவு} வாழ்பவர்களுக்குச் சுவாகாவாவும், சுவாதாவில் {சுவதை = பிதிரர் [பிதிர் தேவதை] உணவு} வாழ்பவர்களுக்குச் சுவாதாவாவும், அமிர்தத்தில் {தேவர் உணவு} வாழ்பவர்களுக்கு அமிர்தமாகவும் ஆகிறது. பழங்காலத்தில் ரசாதலத்தில் வாழ்ந்தவர்களால் பாடப்பட்ட ஈரடிச் செய்யுளொன்றைக் கல்விமான்கள் இந்த உலகத்தில் உரைப்பதை இன்னும் கேட்க முடிகிறது. "நாகர்கள் பகுதியிலோ, சொர்க்கத்திலோ, விமானத்திலோ, திரிபிஸ்தபத்திலோ இருப்பவர்கள் கூட ரசாதலவாசிகள் போல இன்பமாக இருப்பதில்லை" என்பதே அந்த ஈரடிச் செய்யுளாகும். 


Monday, November 11, 2013

பலவீனனிடம் அதிக பாசம் கொள்! - வனபர்வம் பகுதி 9

Show greater affection towards the weak | Vana Parva - Section 9 | Mahabharata In Tamil

(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)

வியாசர் திருதராஷ்டிரனுக்கு சுரபியின் கதையைச் சொல்லி, துரியோதனனைப் பாண்டவர்களுடன் சமாதானமாக இருக்கச் சொன்னது.

திருதராஷ்டிரன் சொன்னான், "ஓ புனிதமானவரே {வியாசரே}, நான் சூதாட்டத்தை விரும்பவில்லை. ஆனால், ஓ முனிவரே {வியாசரே}, நான் விதியால் ஈர்க்கப்பட்டு சம்மதித்தேன் என்று நினைக்கிறேன். பீஷ்மரோ, துரோணரோ, விதுரனோ, காந்தாரியோ இந்தப் பகடையாட்டத்தை விரும்பவில்லை. சந்தேகமில்லாமல், அறியாமையால் {முட்டாள்த்தனத்தால்} இவை நடந்துவிட்டன. ஓ நோன்புகள் நோற்பதால் மகிழ்பவரே, ஓ சிறந்தவரே, அனைத்தையும் அறிந்தும், பிள்ளை பாசத்தால், எனது புத்திகெட்ட மகனான துரியோதனனை என்னால் கைவிட முடியவில்லை!" என்றான்.


வியாசர், "ஓ மன்னா {திருதராஷ்டிரா}, ஓ விசித்திரவீரியனின் மகனே, நீ சொல்வது உண்மைதான்! அனைத்துப் பொருட்களைவிடவும் மகனே சிறந்தவன் என்பதையும், மகனைக் காட்டிலும் மேன்மையானது எதுவும் இல்லை என்பதையும் நாம் அறிவோம். சுரபியின் {காமதேனுவின்} கண்ணீர் போதனையால், மதிப்பு நிறைந்த பொருட்களைவிட மகனே மேன்மையானவன் என்பதை இந்திரன் அறிய வந்தான். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, இது தொடர்பாக அற்புதமானதும் கதைகளில் சிறந்ததுமான, இந்திரனுக்கும் சுரபிக்கும் நடந்த உரையாடலை இப்போது சொல்கிறேன். பழங்காலத்தில் பசுக்களின் தாயான சுரபி தேவ லோகத்தில் அழுது கொண்டிருந்தாள். ஓ குழந்தாய் {திருதராஷ்டிரா}, இந்திரன் அவளிடம் {சுரபியிடம்} இரக்கம் கொண்டு, அவளிடம், "ஓ மங்களகரமானவளே, நீ ஏன் அழுகிறாய்? தேவர்கள் நன்றாக இருக்கிறார்களா? மனிதர்களின் உலகிலோ, நாகங்களின் உலகிலோ ஏதும் தீயூழ் {துரதிர்ஷ்டம்} விழுந்ததா?" என்று கேட்டான். அதற்கு சுரபி, "உனக்கு {தேவர்களுக்கு} எந்தத் தீங்கையும் நான் காணவில்லை. ஆனால் எனது மகன் நிமித்தமாக துயரத்தில் இருக்கிறேன். ஓ கௌசிகா {இந்திரா}, அதனால்தான் அழுகிறேன். ஓ தேவர்கள் தலைவனே {இந்திரனே}, அதோ அங்கிருக்கிற கொடுமைக்கார உழவன், மரக்குச்சியால் என் பலவீனமான மகனை நையப்புடைக்கிறான். மேலும் (எடை அதிகமான) கலப்பையால் அவனைக் கொடுமைப்படுத்துகிறான். அதன் காரணமாக எனது பிள்ளை வேதனையால் துடித்து, தரையில் விழுந்து மரணத் தருவாயில் இருக்கிறான். இந்தக் காட்சியால், ஓ தேவர்கள் தலைவனே, நான் பாசத்தால் துடிக்கிறேன். அந்த ஜோடியில் வலுத்தவன் அதிக சுமையைத் தாங்கிக் கொள்கிறான். ஓ வாசவா {இந்திரா}, இருப்பினும் மற்றவன் மெலிந்து பலவீனமாகி, உடலில் உள்ள நரம்புகள் எல்லாம் தெரியும் வண்ணம் இருக்கிறான். அவன் தனது சுமையைச் சிரமத்துடன் சுமக்கிறான். அவனுக்காகவே நான் வருந்துகிறேன். ஓ வாசவா, சாட்டையடியாலும் மிகவும் துன்புறுத்தப்பட்டு சுமையைச் சுமக்க முடியாமல் அவன் இருப்பதைப் பார். அவனுக்காகவே துயரத்தால் ஆட்கொள்ளப்பட்டு, இதய பாரம் தாங்காமல், கண்களில் நீர் கொட்ட பாசத்தால் அழுகிறேன்" என்றாள் {பசுக்களின் தாயான சுரபி எனும் காமதேனு}.

அதற்கு சக்ரன் {இந்திரன்}, "ஓ அழகானவளே, ஆயிரக்கணக்கான உனது மகன்கள் (தினமும்) ஒடுக்கப்படுகின்றனர். இருப்பினும் துன்பப்படும் இவன் ஒருவனுக்காக ஏன் வருந்துகிறாய்?" என்று கேட்டான். சுரபி, "எனக்கு ஆயிரம் வாரிசுகள் இருந்தாலும், எனது பாசம் அனைவரிடமும் சமமாகவே இருக்கிறது! இருப்பினும், ஓ சக்ரா {இந்திரா}, பலவீனமாக அப்பாவியாக இருப்பவன் மேல் அதிக பாசத்தை உணர்கிறேன்" என்றாள்.

வியாசர் தொடர்ந்தார், "சுரபியிடம் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட இந்திரன் மிகவும் ஆச்சரியப்பட்டான். ஓ குரு குலத்தவனே {திருதராஷ்டிரனே}, அவன் {இந்திரன்}, மகனே ஒருவனின் உயிரைவிட மேலானவன் என்று உணர்ந்து சமாதானமானான். பகனைத் தண்டித்த அந்த சிறப்புமிக்கவன், அடர்த்தியான மழையைப் பொழிந்து, அந்த உழவனின் வேலைக்கு தடையை விளைவித்தான். சுரபி சொன்னது போலவே, ஓ மன்னா {திருதராஷ்டிரா} உனது மகன்களிடம் சமமான பாசம் இருக்க வேண்டும். அந்தப் பாசம் பலவீனமானவர்கள் மீது அதிகம் இருக்கட்டும். எனது மகன் பாண்டு எனக்கு எப்படியோ அதேபோலத்தான் எனக்கு நீ. ஓ மகனே {திருதராஷ்டிரா}, அதே போலத்தான் ஆழமான ஞானம் கொண்ட விதுரனும். பாசத்தாலேயே இவற்றையெல்லாம் உன்னிடம் சொல்கிறேன்! ஓ பாரதா, நீ நூறு {100} மகன்களைப் பெற்றிருக்கிறாய். ஆனால் பாண்டுவுக்கோ ஐந்துதான். மேலும் அவர்கள் மோசமான நிலையில் இருக்கிறார்கள். தங்கள் நாட்களைக் கவலையுடன் கடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் உயிரை எப்படிக் காத்துக் கொள்வார்கள் என்றும், எப்படி விருத்தியடைவார்கள் என்றும் பிருதையின் {குந்தியின்} மகன்களைக் குறித்த நினைவுகள் எனது ஆன்மாவை கலக்குகின்றன! ஓ பூமியின் மன்னா {திருதராஷ்டிரா}, அனைத்து கௌரவர்களும் வாழ வேண்டும் என்று நீ விரும்பினால், உனது மகன் துரியோதனனை பாண்டவர்களுடன் சமாதானமாக இருக்கச் சொல்" என்றார் {வியாசர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, August 11, 2013

விஷ்வாமித்திரரை வீழ்த்திய வசிஷ்டர்! - ஆதிபர்வம் பகுதி 177

Viswamitra defeated by Vasishta! | Adi Parva - Section 177 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 11)

பதிவின் சுருக்கம் : வசிஷ்டரின் ஆசிரமத்திற்குச் சென்ற விஷ்வாமித்திரர்; வசிஷ்டரின் விருந்தோம்பல்; வசிஷ்டரிடம் அவரது பசுவைக் கேட்ட விஷ்வாமித்திரர்; வசிஷ்டரின் சக்தி; தவம் செய்து பிராமணரான விஷ்வாமித்திரர்...

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைக் கேட்ட அர்ஜுனன், "ஓ கந்தர்வா, தெய்வீக ஆசிரமங்களில் வசித்த விஷ்வாமித்திரர், வசிஷ்டர் ஆகிய இருவருக்குமிடையில் எப்போது பகை ஏற்பட்டது? இதைக்குறித்து எங்களுக்கு அனைத்தையும் சொல்வாயாக" என்று கேட்டான்.(1)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்