Showing posts with label நரன். Show all posts
Showing posts with label நரன். Show all posts

Sunday, December 09, 2018

பித்ரு வழிபாடு! - சாந்திபர்வம் பகுதி – 346

Pitri worship! | Shanti-Parva-Section-346 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 173)


பதிவின் சுருக்கம் : பித்ருக்களுக்குச் செய்யும் சடங்குகளின் சிறப்பை நாரதருக்குச் சொன்ன நரனும், நாராயணனும்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஒரு சமயத்தில் பரமேஷ்டியின் மகனான நாரதர், நர நாரயணரின் ஆசிரமத்தில் வசித்து வந்தபோது, தேவர்களை மதிக்கும் சடங்குகளையும், நோன்புகளையும் முறையாகச் செய்துவிட்டு, பித்ருக்களைக் கௌரவிக்கும் சடங்கைச் செய்வதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(1) இவ்வாறு அவர் ஆயத்தமாவதைக் கண்ட தர்மனின் மூத்த மகனான பலமிக்க நாராயணர், "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தேவர்கள் மற்றும் பித்ருக்கள் தொடர்புடைய இந்தச் சடங்குகள் மற்றும் நோன்புகளில் யாரை நீர் வழிபடுகிறீர்? ஓ! புத்திமான்கள் அனைவரிலும் முதன்மையானவரே, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் எனக்கு இது குறித்துச் சொல்வீராக. நீர் செய்வது என்ன? நீர் செய்யும் இந்தச் சடங்குகளால் என்ன கனிகளை {பலன்களை} நீர் விரும்புகிறீர்" என்று கேட்டார்.(2,3)

Saturday, December 08, 2018

பதரியில் வசிக்கும் நாரதர்! - சாந்திபர்வம் பகுதி – 345

Narada resides at Vadari! | Shanti-Parva-Section-345 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 172)


பதிவின் சுருக்கம் : பரமாத்மாவின் மகிமையைச் சொன்ன நரனும், நாராயணனும்; தவத்தில் ஈடுபட்ட நாரதர்...


நரனும், நாராயணனும் {நாரதரிடம்}, "(அநிருத்தனின் வடிவில்) பலமிக்க நாராயணனை நீர் கண்டதால் உயர்ந்த அருளைக் கொண்டவராகவும், உயர்ந்த புகழுக்குத் தகுந்தவராகவும் இருக்கிறீர். வேறு எவராலும், ஏன் ஆதி தாமரையில் பிறந்த பிரம்மனாலும் கூட அவனைக் காண முடிந்ததில்லை.(1) பலமிக்கவனும், புனிதம் நிறைந்தவனுமான அந்தப் புருஷர்களில் முதன்மையானவன், வெளிப்படாத மூலத்தையும், காணப்பட முடியாதவனாகவும் இருக்கிறான் ஓ! நாரதரே, நாங்கள் உமக்குச் சொல்லும் இந்த வார்த்தைகள் உண்மையே.(2) அர்ப்பணிப்புடன் அவனைத் துதிப்பவனைவிட இந்த அண்டத்தில் வேறு எவனும் அவனுக்கு அன்புக்குரியவன் இல்லை. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இதன் காரணமாகவே அவன் உம்மிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(3) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தவங்கள் நோற்பதில் ஈடுபட்டுவரும் அந்தப் பரமாத்மாவின் ஆட்சிப்பகுதிக்கு எங்கள் இருவரைத் தவிர வேறு எவராலும் செல்ல முடியாது.(4) அந்த இடம் அவனால் அலங்கரிக்கப்பட்டிருப்பதன் விளைவால், அஃது {அவ்விடம் / வெண்தீவு / ஸ்வேதத்வீபம்} ஆயிரம் சூரியர்கள் ஒன்றுதிரண்டதற்கு ஒப்பான காந்தியைக் கொண்டிருக்கிறது.(5)

நாரதரும் நரநாராயணர்களும்! - சாந்திபர்வம் பகுதி – 344

Narada and NaraNarayana! | Shanti-Parva-Section-344 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 171)


பதிவின் சுருக்கம் : நாரதர் ஸ்வேதத்வீபத்தில் இருந்து திரும்பியது; அவர் மீண்டும் பதரியை அடைந்தது; நாரதருக்கும் நரநாராயணர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல்...


சௌனகர், "ஓ! சௌதி, நீ சொன்ன இந்தக் கதை சிறப்பானதாகும். உண்மையில், இதைக் கேட்ட தவசிகள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்திருக்கின்றனர்.(1) ஓ! சௌதி, பூமியில் உள்ள புனிதத் தலங்கள், மற்றும் புண்ணிய நீர்நிலைகள் அனைத்திற்கும் சென்று தூய்மைச் சடங்குகளைச் செய்வதால் கிட்டும் தகுதியைவிட {புண்ணியத்தைவிட} நாராயணனைக் குறித்துச் சொல்லும் ஒரு கதை அதிகக் கனிதரும் என்று சொல்லப்படுகிறது.(2) புனிதமானதும், ஒவ்வொரு பாவத்தையும் கழுவ வல்லதும், நாராயணனைக் குறித்ததுமான உனது இவ்வுரையைக் கேட்டு நிச்சயம் நாங்கள் அனைவரும் புனிதமடைந்தோம்.(3) அனைத்து உலகங்களாலும் துதிக்கப்படுபவனும், சிறப்புமிக்கவனும், தேவர்களில் முதன்மையானவனுமான அந்தத் தேவன் {நாராயணன்}, பிரம்மனோடு கூடிய தேவர்களாலும், முனிவர்கள் அனைவராலும் கூடக் காணப்பட இயலாதவனாவான்.(4) இருப்பினும், ஓ! சூதரின் மகனே, ஹரி என்றழைக்கப்படும் நாராயணனை நாரதரால், காண முடிந்தது. தெய்வீகமானவனும், பலமிக்கவனுமான அந்தத் தலைவனின் அருளாலேயே அவரால் காண முடிந்தது.(5) எனினும், அண்டத்தின் உயர்ந்த தலைவனான அவன் அநிருத்த வடிவத்தில் இருந்த காட்சியைப் பெற்ற பிறகும் கூடத் தெய்வீக முனிவரான நாரதர் தேவர்களில் முதன்மையானவர்களான நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரையும் காண (இமயச் சாரலில் உள்ள பதரி ஆசிரமத்தை நோக்கி) ஏன் மீண்டும் விரைந்து வந்தார்? ஓ! சௌதி, நாரதரின் அந்த நடத்தைக்கான காரணத்தை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார்.(6)

Saturday, November 24, 2018

நரநாராயணர்! - சாந்திபர்வம் பகுதி – 335

Nara and Narayana! | Shanti-Parva-Section-335 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 162)


பதிவின் சுருக்கம் : நாரத முனி, நாராயண முனி ஆகியோருக்கிடையிலான உரையாடல்; நரனும் நாராயணனும் செய்த தினசரி சடங்குகள்; நரநாராயணர்களால் துதிக்கப்பட்ட தேவன் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு மனிதன், இல்லறவாசியாகவோ {கிருஹஸ்தனாகவோ}, பிரம்மச்சாரியாகவோ, காட்டுத்துறவியாகவோ {வானப்பிரஸ்தனாகவோ}, சந்நியாசியாகவோ இருந்து வெற்றியடைய விரும்பினால், அவன் எந்தத் தேவனைத் துதிக்க {ஆராதிக்க} வேண்டும்?(1) எங்கிருந்து அவன் சொர்க்கத்தையும், உயர்ந்த நன்மையையும் (விடுதலையையும் {முக்தியையும்}) நிச்சயமாக அடையலாம். எந்த விதிமுறைகளின்படி அவன் தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் ஹோமத்தைச் செய்ய வேண்டும்?(2) ஒருவன் விடுதலை {முக்தியை} அடையும்போது எந்தக் கதியை அடைகிறான்? விடுதலையின் சாரம் என்ன? சொர்க்கத்தை அடைந்த பிறகு, அங்கிருந்து வீழாதிருக்க ஒருவன் என்ன செய்ய வேண்டும்?(3) தேவர்களின் தேவன் யார்? பித்ருக்களின் பித்ரு யார்? தேவர்களின் தேவருக்கும், பித்ருக்களின் பித்ருவுக்கும் மேலானவர் யார்? ஓ! பாட்டா இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்றான்.(4)

Sunday, May 17, 2015

தம்போத்பவன் மற்றும் நரன் நாராயணன்! - உத்யோக பர்வம் பகுதி 96

Dambhodbhava and Nara Narayana! | Udyoga Parva - Section 96 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –25)

பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்குத் தம்போத்பவனின் கதையைப் பரசுராமர் சொல்வது; உலகை ஒரே குடையின் கீழ் ஆண்ட தம்போத்பவன் தனக்கு நிகர் எவனும் இல்லை என்ற அகந்தையுடன் அனைவரிடமும் பேசுவது; தொடர்ச்சியாக இந்தப் பேச்சைக் கேட்கும் அந்தணர்களில் சிலர், நரன் மற்றும் நாராயணனைக் குறித்துத் தம்போத்பவனுக்குச் சொன்னது; அவர்களுடன் போரிட்ட தம்போத்பவன் அகந்தை அழிந்து, அறவழி திரும்பியது; அந்த நரனும் நாராயணனும் தான் இப்போது அர்ஜுனனும் கிருஷ்ணனுமாக அவதரித்திருக்கிறார்கள் என்று பரசுராமர் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சபையில் அமர்ந்திருந்த நபர்கள் அனைவரும் உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டதும், மயிர்ச்சிலிர்த்தபடி அமைதியாக நீடித்தனர். அந்த மன்னர்கள் அனைவரும் தங்களுக்குள், 'இந்தப் பேச்சுக்கு மறுமொழி சொல்ல, துணிவு கொண்ட மனிதன் எவனும் இல்லை' என்று நினைத்தனர்.

மன்னர்கள் அனைவரும் அமைதியாக இருப்பதைக் கண்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, அந்தக் குருக்களின் சபையில் (துரியோதனனிடம்) இந்த வார்த்தைகளைச் சொன்னார். அவர் {பரசுராமர் துரியோதனனிடம்}, "ஓர் உதாரணம் மூலம் தெளிவை உண்டாக்கும், எனது வார்த்தைகளை நம்பிக்கையோடு கேட்டு, எனது பேச்சு உனக்கு நன்மையைச் செய்யுமென்றால், உன் நன்மையை நாடுவாயாக.


பழங்காலத்தில் பூமியின் தலைவனாக {சார்வபௌமனாக} தம்போத்பவன் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவனது அரசுரிமை உலகம் முழுவதும் பரந்திருந்தது {ஒரு குடையின் கீழ் உலகை ஆண்டான்} என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்தப் பலமிக்கத் தேர்வீரன், தினமும் காலையில் எழுந்ததும், அந்தணர்களையும், க்ஷத்திரியர்களையும் தன்னிடம் அழைத்து, "சூத்திரனிலோ, வைசியனிலோ, க்ஷத்திரியனிலோ, அல்லது அந்தணரிலோகூடப் போரில் எனக்கு மேன்மையாகவோ, இணையாகவோ எவனாவது இருக்கிறானா?" என்று எப்போதும் கேட்பான். இந்த வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டே அந்த மன்னன், செருக்கால் போதையுண்டு, வேறு எதையும் நினைக்காமல் உலகம் எங்கும் திரிந்து கொண்டிருந்தான்.

இப்படியிருக்கையில், உயர் ஆன்மா கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், பூமியில் எதற்கும் அஞ்சாதவர்களுமான சில அந்தணர்கள், திரும்பத் திரும்பத் தனது ஆற்றல் குறித்துத் தற்பெருமை பேசும் அவனது செருக்குக்குக் கடிவாளம் இடும்படி, அந்த மன்னனிடம் ஆலோசித்தனர். அவ்வாறு தற்பெருமை பேச வேண்டாம் என அந்த அந்தணர்களால் தடுக்கப்பட்டும், அந்த மன்னன் {தம்போத்பவன்} அவர்களிடம் தினம் தினம் அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தான். பெரும் தவத் தகுதியையும், வேதங்களால் அளிக்கப்படும் ஆதாரங்களையும் அறிந்த சில உயர் ஆன்ம அந்தணர்கள் கோபத்தால் தூண்டப்பட்டு, அந்தச் செருக்கு நிறைந்தவனும், தற்பெருமை மிக்கவனும், செழிப்பால் போதையுண்டிருந்தவனுமான அந்த மன்னனிடம் {தம்போத்பவனிடம்}, "மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாக இரு நபர்கள் இருக்கின்றனர். அவர்கள் எப்போதும் போரில் வெற்றிபெற்றே வருகின்றனர். ஓ! மன்னா {தம்போத்பவா}, அவர்களில் ஒருவருடன் மோத முயன்றால், நீ அவர்களுக்கு நிகராக இருக்கமாட்டாய்" என்றனர்.

இப்படி அவர்களால் சொல்லப்பட்ட அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்தணர்களிடம், "அந்த வீரர்கள் இருவரும் எங்குக் காணப்படுவார்கள்? அவர்கள் எந்தக் குலத்தில் பிறந்திருக்கிறார்கள்? அவர்களது சாதனைகள் என்ன? அவர்கள் யார்?" என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்கள், "அந்த இரு நபர்களும் நரன் மற்றும் நாராயணன் என்று அழைக்கப்படும் இரு தவசிகளாவர் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்த இருவரும் மனித குலத்திலேயே தங்கள் பிறப்பை அடைந்திருக்கின்றனர். ஓ! மன்னா {தம்போத்பவா}, நீ அவர்களிடம் சென்று போரிடுவாயாக. அந்த ஒப்பற்ற இணையான நரனும் நாராணயனனும், கந்தமாதன மலைகளின் மறைவான பகுதியில் இப்போதும் கடும் தவத்தைப் பயின்று கொண்டிருக்கிறார்கள்" என்றனர்.

அந்த அந்தணர்களின் வார்த்தைகளைக் கேட்ட அம்மன்னன் {தம்போத்பவன்}, அவர்களது பெருமைகளைத் தாங்கிக் கொள்ள இயலாமல், ஆறு அங்கங்களோடு [1] கூடிய தன் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, வீழாத அந்தத் தவசிகள் இருந்த இடத்திற்கு அணிவகுத்து சென்று, மேடு பள்ளம் நிறைந்த பயங்கரமான கந்தமாதன மலைகளை அடைந்தான். அந்த முனிவர்களைத் தேடத் தொடங்கிய அவன் {தம்போத்பவன்}, மறைக்கப்பட்டிருந்த ஒரு காட்டுக்கு வந்து சேர்ந்தான். பசி மற்றும் தாகத்தால் மெலிந்து, தங்கள் தடித்த நரம்புகள் தெரிய, குளிர், காற்று, சூரியனின் வெப்பக் கதிர்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான அந்த இருவரையும் கண்டு, அவர்களது பாதங்களைத் தொட்டு, அவர்களது நலத்தை விசாரித்தான்.

[1] தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தேர்களல்லாத வேறு வாகனங்களின் படை, ஒட்டகங்களின் முதுகில் இருந்து போரிடும் வீரர்களைக் கொண்ட படை என ஆறு அங்கங்கள் கொண்டது ஒரு படை என்கிறார் கங்குலி.

அந்த முனிவர்கள் இருவரும், கனிகள், கிழங்குகள், இருக்கை மற்றும் நீர் கொடுத்து விருந்தோம்பலுடன் அம்மன்னனை {தம்போத்பவனை} வரவேற்றார்கள். பிறகு, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிய அவர்கள், அம்மன்னனின் தொழில் குறித்து விசாரித்தனர். {அவன் வந்த நோக்கம் குறித்து விசாரித்தனர்}. அவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அம்மன்னன் {தம்போத்பவன்}, அவர்களிடம், தான் அனைவரிடமும் சொல்லிச் சொல்லி பழக்கப்பட்ட அதே வார்த்தைகளைச் சொன்னான். பிறகு அவன், "எனது கரங்களின் பலத்தால் முழு உலகமும் வெல்லப்பட்டது. எனது எதிரிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். உங்கள் இருவருடன் போரிட விரும்பியே நான் இந்த மலைக்கு வந்திருக்கிறேன். இந்த விருந்தோம்பலை எனக்கு அளியுங்கள். இஃது எனது நெடுநாளைய விருப்பமாகும்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட நரனும் நாராயணனும், "ஓ! மன்னர்களில் சிறந்தவனே {தம்போத்பவா}, இந்தப் பின்வாங்கலில் {எங்கள் தவ வாழ்வில்} கோபத்திற்கும், பொருளாசைக்கும் இடம் கிடையாது. எனவே, இங்கே போர் எப்படிச் சாத்தியமாகும்? இங்கே ஆயுதங்களோ, அநீதியோ, தீமையோ ஏதுமில்லை. போரை வேறெங்காவது தேடு. பூமியில் பல க்ஷத்திரியர்கள் இருக்கிறார்கள்" என்றனர் {நரனும் நாராயணனும்}.

ராமர் {பரசுராமர்} தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்டும், அந்த மன்னன் {தம்போத்பவன்} போருக்காக மேலும் அழுத்தம் கொடுத்தான். எனினும், அந்த முனிவர்கள் தொடர்ச்சியாக அவனைத் தணித்து, அவனது தொந்தரவைச் சகித்தனர். போரில் விருப்பமுடைய மன்னன் தம்போத்பவனோ அந்த முனிவர்களை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகப் போருக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.

ஓ! பாரதா {துரியோதனா}, பிறகு, நரன், தன் கைநிறைய புற்குச்சிகளை {சீழ்கம்புல் ஈர்க்குகளை} எடுத்து, "ஓ! க்ஷத்திரியா, போருக்கு விரும்பி இங்கு வந்திருக்கிறாய். வா, வந்து போரிடு! உனது ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள். உனது துருப்புகளைச் சேர். இனிமேல் போர் செய்வதற்கான உனது ஆவலை நான் அடக்குகிறேன்" என்றார். அதற்குத் தம்போத்பவன், "ஓ! தவசியே, எங்களுக்கு எதிராகப் போரிடுவதற்கு இந்த உமது ஆயுதம் தகுந்ததென்று நீர் நினைக்கிறீர். போரில் விருப்பம் கொண்டு நான் இங்கு வந்திருப்பதால், அவ்வாயுதத்தையே நீர் பயன்படுத்தினாலும், நான் உம்மிடம் போரிடுவேன்" என்றான். இதைச் சொன்ன தம்போத்பவன், தனது துருப்புகளை அனைத்தையும் கொண்டு, அந்தத்தவசியைக் {நரனைக்} கொல்ல விரும்பி, கணைகளின் மழையால் அனைத்துப் புறங்களையும் மறைத்தான்.

எனினும், அந்தத் தவசி {நரன்}, அந்தக் குச்சிகளால், பகைவீரர்களின் உடலைச் சிதைக்கவல்ல அந்த மன்னனின் பயங்கரக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தார். அந்த ஒப்பற்ற முனிவர் {நரன்}, பதில்தொடுக்க முடியாததும் குச்சிகளால் ஆனதுமான ஒரு பயங்கர ஆயுதத்தை அந்த மன்னனை {தம்போத்பவனை} நோக்கிச் செலுத்தினார். அங்கே அப்போது நடந்தது, மிகுந்து அற்புதம் நிறைந்ததாக இருந்தது. ஏனெனில், இலக்குத் தவறாதவரான அந்தத் தவசி {நரன்}, தனது மாய சக்தியின் உதவியால், தனது குச்சிகளை மட்டுமே பயன்படுத்தி, பகைவீரர்களின் கண்கள், காதுகள் மற்றும் மூக்குகளைத் துளைக்கவும் அறுக்கவும் செய்தார்.

அந்தக் குச்சிகளால் வெண்ணிறமடைந்த முழு வானத்தையும் கண்ட அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்த முனிவரின் {நரனின்} பாதத்தில் விழுந்து, "என்னை அருளப்பட்டவனாக இருக்கச் செய்யும்" என்று கேட்டான். ஓ! மன்னா {துரியோதனா}, பாதுகாப்பை அளிக்க எப்போதும் தயங்காத நரன், அந்த ஏகாதிபதியிடம் {தம்போத்பவனிடம்}, "அந்தணர்களுக்குக் கீழ்ப்படிந்து அறம் சார்ந்தவனாக இருப்பாயாக. மீண்டும் இப்படிச் செய்யாதே. ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் புலியே {தம்போத்பவா}, பகை நகரங்களையும் வெல்பவனும் மனம் நிறையத் தன் கடமைகளைக் கொண்டுள்ள ஒரு க்ஷத்திரியனுமான மனிதன் ஒருவன், நீ இப்போது இருப்பதைப் போல இருக்கக்கூடாது. உனக்குத் தாழ்ந்தோ, உயர்ந்தோ இருப்பவர்களை, உனது செருக்கின் நிறைவால் எச்சந்தர்ப்பத்திலும் அவமதிக்காதே. அத்தகு நடத்தையே உனக்குத் தகும்.

ஓ! மன்னா {தம்போத்பவா}, அறிவை அடைந்து, பேராசையையும், செருக்கையும் கைவிட்டு, உனது ஆன்மாவை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி, மன்னிக்கும் தன்மை {பொறுமை} மற்றும் பணிவைப் பயின்று, இனிமையானவனாகி, உனது குடிமக்களைப் பேணிக் காப்பாயாக. மனிதர்களின் பலத்தையோ, பலவீனத்தையோ உறுதி செய்து கொள்ளாமல், எத்தகு சூழ்நிலையிலும் யாரையும் அவமதிக்காதே. நீ அருளப்பட்டிருப்பாயாக! எனவே நீ சென்று, மீண்டும் இந்த வழியில் எப்போதும் நடக்காதே. எங்கள் உத்தரவின் பேரில், எப்போதும் உனக்கு நன்மையானவற்றையே அந்தணர்களிடம் விசாரிப்பாயாக" என்றார் {நரன்}.

அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்த ஒப்பற்ற முனிவர்கள் இருவரின் பாதங்களையும் வழிபட்டு தனது நகரத்திற்குத் திரும்பினான். அக்காலத்தில் இருந்து அவன் நீதிபயிலத் தொடங்கினான். உண்மையில், பழங்காலத்தில் நரனால் அடையப்பட்ட சாதனை பெரிதே. மேலும், இன்னும் பல குணங்களின் விளைவாக நரனுக்கு நாராயணன் மேன்மையானவரானார்.

எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, உனது செருக்கையெல்லாம் அகற்றிவிட்டு, காகுதிகம், சுகம், நாகம், அக்ஷிசந்தர்ஜனம், சந்தானம், நர்த்தனம், கோரம் மற்றும் அசியமோதகம் [2] ஆகிய ஆயுதங்களைத் தவிர, இன்னும் பல ஆயுதங்களை விற்களில் சிறந்ததான காண்டீவத்தில் பொருத்தும் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} செல்வாயாக. இந்த ஆயுதங்களால் அடிக்கப்பட்டால், மனிதர்கள் எப்போதும் தங்களது உயிரை விட்டுவிடுவார்கள். உண்மையில் இந்த ஆயுதங்கள் அனைத்தும் {எட்டும்}, காமம், கோபம், பொருளாசை, மாயை, செருக்கு, தற்பெருமை, அகந்தை, தன்னலம் ஆகிய எட்டு உணர்வுகளுடன் பிற வழிகளில் தொடர்புடையவையாகும். இவற்றின் தாக்கத்தில் உள்ள மனிதர்கள் எப்போதும் அதிகளவு உறக்கம், துள்ளுதல், கக்குதல் {வாந்தி எடுத்தல்}, சிறுநீர் மற்றும் மலங்கழித்தல், அழுதுபுலம்புதல், தொடர்ச்சியாகச் சிரித்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள்.

[2] காகுதிகாஸ்திரம் = இந்த ஆயுதத்தை வில்லில் பொருத்தி இழுத்தாலே யானை, குதிரை ஆகியவற்றை இது தூங்கச் செய்துவிடும். இதற்குப் பிரஸ்வாபம் என்ற பெயரும் சொல்லப்படுகிறது.

சுகாஸ்திரம் = பீரங்கி போன்ற ஒலியால், கூட்டில் பதுங்கும் கிளி போலத் தேர்களில் பதுங்கச் செய்யும் ஆயுதம். இதற்கு மோஹனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

நாகாஸ்திரம் = சொர்க்கத்தைக் கண்ணில் காட்டுவதாகும். நிச்சயம் உயிரைக் கொல்வதாகும். இதற்கு உன்மாதனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

அக்ஷிசந்தர்ஜனாஸ்திரம் = அடித்தவுடன் அடிக்கப்பட்டவர் மேல் மலஜலங்களைப் பொழியும் ஆயுதம். இதற்குத் தராசனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

சந்தானாஸ்திரம் = இடைவிடாமல் ஆயுதங்களைப் பொழியும் ஆயுதம்.

நர்த்தகாஸ்திரம் = அடிக்கப்பட்டவரை நாட்டியமாடச் செய்யும். இதற்குப் பைசாசம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

கோராஸ்திரம் = அழிவை உண்டாக்கும் ஆயுதம். இதற்கு ராக்ஷசம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

அசியமோதகாஸ்திரம் = உலோகங்களை வாயில் போட்டுக் கொண்டு இறக்கச் செய்யும் ஆயுதம். இதற்கு யாமயம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

படைப்பாளனும், உலகங்கள் அனைத்தின் தலைவனும், அனைத்தின் போக்கையும் முழுமையாக அறிந்தவனுமான நாராயணனைத் தனது நண்பனாகக் கொண்டிருப்பவனுமான அந்த அர்ஜுனன், உண்மையில், போரில் வெல்லப்படமுடியாதவன் ஆவான். ஓ! பாரதா {துரியோதனா}, போரில் இணையற்றவனும், குரங்கு {அனுமன்} கொடியைக் கொண்ட வீரனுமான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} வெல்ல மூவுலகிலும் எவன் இருக்கிறான்? பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} குடிகொண்டுள்ள அறங்கள் எண்ண முடியாதவையாகும். மேலும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அவனிலும் சிறந்தவனாவான். குந்தியின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனை} நீயே கூட நன்கறிந்தவனாகவே இருக்கிறாய்.

பழங்காலத்தில் நரனும், நாராயணனுமாக இருந்தவர்கள், இப்போது அர்ஜுனனும் கேசவனுமாக {கிருஷ்ணனுமாக} இருக்கிறார்கள். ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, மனிதர்களில் முதன்மையானவர்களும், வீரமிக்கவர்களுமான அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வாயாக. என்னிடம் நம்பிக்கையேற்பட்டு, இதை நீ நம்பினால், நல்ல ஒரு தீர்மானத்தை அடைந்து, பாண்டுவின் மகன்களிடம் சமாதானம் செய்து கொள்வாயாக. உனது குடும்பத்தில் `ஒற்றுமையின்மை கூடாது’ என்ற இதுவே உனது நன்மை என நீ கருதினால், ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாமல், சமாதானம் கொள்வாயாக. குரு பரம்பரையில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ சார்ந்திருக்கும் குலம் உலகத்தில் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்த மதிப்பு அப்படியே தொடரும்படி செய்வாயாக. நீ அருளப்பட்டிருப்பாயாக. உனக்கான நலனை எது விளைவிக்கும் என்பதைச் சிந்திப்பாயாக" என்றார் {பரசுராமர்}. 


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்