Sunday, October 06, 2013

சகுனியின் திட்டம் - சபாபர்வம் பகுதி 47

The plan of Sakuni | Sabha Parva - Section 47 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : சகுனி, யுதிஷ்டிரனைப் பார்த்துப் பொறாமை கொள்ளாதே என்று துரியோதனனுக்கு அறிவுறுத்துவது; தனது நண்பர்களுக்கும், தனது அணி தலைவர்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல், பாண்டவர்களின் செல்வத்தை அபகரிக்க துரியோதனன் திட்டம் கேட்பது; சகுனி அதற்கு ஒரு வழி சொல்வது...

Sakuni

சகுனி சொன்னான், "ஓ துரியோதனா, நீ யுதிஷ்டிரனிடம் பொறாமை கொள்ளக் கூடாது. பாண்டுவின் மகன்கள் அவர்களுக்குத் தகுதியான நற்பேறையே அனுபவிக்கிறார்கள்.(1) ஓ எதிரிகளைக் கொல்பவனே {துரியோதனா}, ஓ பெரும் மன்னா, எண்ணற்ற திட்டங்களைத் தீட்டினாலும் உன்னால் அவர்களை {பாண்டவர்களை} அழிக்க முடியவில்லை. அத்திட்டங்களில் பலவற்றை உன்னால் செயல்படுத்தவே முடியவில்லை. அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} நற்பேற்றால் அவை அனைத்திலும் இருந்து தப்பித்தனர்.(2,3) அவர்கள் {பாண்டவர்கள்} திரௌபதியை மனைவியாய் அடைந்து, துருபதன், துருபதனின் மகன்கள், வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகியோரை கூட்டாளிகளாய் அடைந்து, இந்த உலகத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வர அவர்கள் உதவியைப் பெற்றிருக்கிறார்கள்.(4) 

ஓ மன்னா {துரியோதனா}, அவர்கள் வஞ்சனையின்றி தங்கள் தந்தைவழி {பாண்டுவின்} நாட்டின் பங்கை அடைந்து தங்கள் சக்தியாலேயே வளர்ந்திருக்கிறார்கள். இதில் நீ வருத்தமடைய என்ன இருக்கிறது?(5) ஹஸ்தாசனனை {அக்னியை}[1]  நிறைவடையச் செய்த தனஞ்சயன் {அர்ஜுனன்} காண்டீபத்தையும், வற்றாத அம்பறாத்தூணிகள் இரண்டையும், பல தெய்வீக ஆயுதங்களையும் அடைந்தான்.(6) அந்தத் தனித்தன்மை வாய்ந்த வில்லுடன், தனது கரத்தின் பலத்தையும் சேர்த்து உலக மன்னர்கள் அனைவரையும் அவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறான். இதில் நீ வருத்தமடைய என்ன இருக்கிறது?(7)

[1] ஹுதாசனனைத் {அக்னியைத்} திருப்தி செய்த தனஞ்சயன் {அர்ஜுனன்} காண்டிபத்தையும், இரு வற்றாத அம்பறாத்தூணிகளையும்,.... பார்க்க: ஆயுதங்கள் கேட்ட அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 226 ; கிருஷ்ணனுக்குக் கிடைத்த சக்கரம் - ஆதிபர்வம் பகுதி 227

எதிரிகளைக் கொல்பவனும், இருகைகளையும் சம திறனுடன் இயக்குபவனுமான அர்ஜுனன், மயாசுரனைத்[2] தீயில் இருந்து காப்பாற்றி, தனக்கு அந்த சபா மண்டபத்தைக் கட்டித் தர அவனை ஏற்பாடு செய்தான்.(8) இதனாலேயே மயனின் கட்டளையின் பேரில், கடும் முகம் கொண்ட ராட்சசர்களும், கின்னரர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும் அந்த சபா மண்டபத்தைக் கட்டுவதில் அவர்களை ஆதரித்தனர். இதில் நீ வருத்தப்பட என்ன இருக்கிறது?(9) ஓ மன்னா, உனக்கு கூட்டாளிகளே இல்லை என்று நீ சொன்னாய். ஓ பாரதா {துரியோதனா}, இது உண்மை இல்லை. உனது தம்பிகளான இவர்கள் அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்.(10) பெரும் வில்லைத் தாங்கும் துரோணர், அவரது மகன் {அஸ்வத்தாமன்}, ராதையின் மகன் கர்ணன், பெரும் போர் வீரரான கௌதமர் (கிருபர்),(11) நானும் எனது சகோதரர்களும், மன்னன் சௌமதத்தி ஆகியோர் உனக்குக் கூட்டாளிகளாக இருக்கிறோம். இவர்கள் அனைவருடன் ஒன்றிணைந்து இந்த முழு உலகத்தையும் வெற்றி கொள்வாயாக" என்றான் {சகுனி}.(12)


துரியோதனன், "ஓ மன்னா, உமக்குத் நிறைவுண்டாகுமானால், நான் உம்மையும் இந்த வீரர்களையும் வைத்து பாண்டவர்களை வெற்றி கொள்வேன்.(13) நான் அவர்களை {பாண்டவர்களை} இப்போது வீழ்த்தினால், இந்த உலகமும் அதில் இருக்கும் அனைத்து ஏகாதிபதிகளும் எனதாவார்கள், அனைத்து செல்வங்களும் நிரம்பிய அந்த சபா மண்டபத்துடன் கூடிய வீடும் எனதாகும்", என்றான் {துரியோதனன்}.(14)

சகுனி, "தனஞ்சயன் {அர்ஜுனன்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, பீமசேனன், யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன், தனது மகன்கள் இருவருடன் கூடிய துருபதன்(15) ஆகியோரை தேவர்களாலும் போரில் வீழ்த்த முடியாது. அவர்கள் போரில் திளைப்பவர்களும், பெரும் வில் படைத்தவர்களும், பெரும் வீரர்களுமாவர்.(16) ஆனால், ஓ மன்னா {துரியோதனா}, யுதிஷ்டிரனை வீழ்த்தும் வழிகள் எனக்குத் தெரியும். அதைக் கேட்டு, அதன்படியே நடப்பாயாக", என்று பதிலுரைத்தான் {சகுனி}.(17)

துரியோதனன், "ஓ மாமா, நமது நண்பர்களுக்கும், சிறப்புமிக்க மனிதர்களான வேறு சிலருக்கும் ஆபத்தில்லாமல் அவர்களை வீழ்த்த ஏதாவது வழியிருந்தால் எனக்குச் சொல்வீராக" என்றான்.(18)

சகுனி, "குந்தியின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, பகடை விளையாட்டில் விருப்பம் அதிகம், ஆனால் எவ்வாறு விளையாடுவது என அவனுக்குத் தெரியாது. அந்த மன்னனை {யுதிஷ்டிரனை} விளையாட அழைத்தால், அவனால் மறுக்க முடியாது.(19) நான் பகடையில் திறன் பெற்றவன். இக்காரியத்தில் {பகடை விளையாட்டில்} உலகத்தில் எனக்கு நிகர் யாருமில்லை. ஏன், ஓ குருவின் மகனே {துரியோதனா}, மூவுலகத்திலும் கிடையாது. எனவே, அவனை {யுதிஷ்டிரனை} பகடை விளையாட அழைப்பாயாக.(20) பகடையில் திறன் பெற்ற நான், ஓ மனிதர்களில் காளையே {துரியோதனா}, அவனது {யுதிஷ்டிரனது} நாட்டையும், அவனது {யுதிஷ்டிரனது} செல்வங்களையும் உனக்காக வெல்வேன்.(21) ஆனால், ஓ துரியோதனா, இவை அனைத்தையும் மன்னரிடம் (திருதராஷ்டிரரிடம்) சொல்வாயாக. உனது தந்தையின் {திருதராஷ்டிரனின்} ஆணையின் பேரில், நான் யுதிஷ்டிரனின் உடைமைகள் அனைத்தையும் நிச்சயம் வெல்வேன்", என்றான்.(22)

துரியோதனன், "ஓ சுபலரின் மகனே {சகுனி மாமனே}, குருக்களின் தலைவரான திருதராஷ்டிரரிடம் நீரே முறையாக இவை யாவற்றையும் சொல்வீராக. என்னால் அவ்வாறு செய்ய இயலாது" என்றான்.(23)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்