Monday, June 30, 2014

பரீக்ஷித்தின் மகன்களும்! வாமதேவரும்!! - வனபர்வம் பகுதி 191ஆ

The sons of Parikshit and Vamadeva! | Vana Parva - Section 191b | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

பரிக்ஷித்தின் மகனான சலன் வாமதேவரிடம் இரண்டு வாமிக் குதிரைகளைப் பெறுவது; சலன் அக்குதிரைகளை மீண்டும் வாமதேவரிடம் கொடுக்க மறுப்பது; வாமதேவர் சலனை நான் ராட்சசர்கள் மூலம் கொல்வது; சலனின் தம்பி தளன் மன்னனாவது; அவனும் குதிரைகளைக் கொடுக்காமல் வாமதேவரிடம் மோதுவது; வாமதேவர் அவனைச் செயல்பட விடாமல் தடுத்தது; ராணி பெற்ற வரம்...

சில காலம் கழித்து அம்மன்னன் {பரிக்ஷித்} மூன்று மகன்களை அவளிடம் {தவளை இளவரசியிடம்} பெற்றான். அவர்களுக்குச் சலன், தளன், பலன் பெயரிட்டான். அதற்குச் சில காலம் கழித்து அவர்களது தந்தை {பரிக்ஷித்} மூத்தவனை {சலனை} அரியணையில் அமர்த்தி விட்டு, இதயத்தைத் தவத்தில் நிறுத்தி, கானகத்தில் ஓய்ந்தான். ஒரு நாள் சலன் வேட்டையாடச் சென்ற போது, ஒரு மானைக் கண்டு, தனது தேரில் அதைத் தொடர்ந்து சென்றான். அந்த இளவரசன் {சலன்} தனது தேரோட்டியிடம், "விரைவாக ஓட்டு" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி, மன்னனிடம் {சலனிடம்}, "இக்காரியத்தில் ஊக்கமடையாதீர். இந்த மான் உம்மால் பிடிக்கத்தக்கது அல்ல. உண்மையில் வாமி குதிரைகள் உமது தேரில் பூட்டப்பட்டிருந்தால் உம்மால் அந்த மானைப் பிடிக்க இயலும்" என்றான். அதன்பேரில் மன்னன் {சலன்} தனது தேரோட்டியிடம், "வாமி குதிரைகளைக் குறித்து எனக்குச் சொல், இல்லையென்றால் நான் உன்னைக் கொல்வேன்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட தேரோட்டி மிகவும் பயந்தான். அவன் மன்னனுக்கும் பயந்தான், வாமதேவரின் சாபத்துக்கும் அஞ்சினான். எனவே மன்னனுக்கு அவன் எதையும் சொல்லவில்லை. உடனே மன்னன் தனது குறுவாளை எடுத்து அவனிடம் {தேரோட்டியிடம்}, "விரைவாகச் சொல். இல்லையெனில் நான் உன்னைக் கொல்வேன்" என்றான். மன்னனுக்கு {சலனுக்கு} அஞ்சிய அந்தத் தேரோட்டி கடைசியாக, "வாமி குதிரைகள் வாமதேவருக்குச்1சொந்தமானவை; அவை மனோ வேகம் கொண்டவை" என்றான் {தேரோட்டி}.


இதைச் சொன்ன தனது தேரோட்டியிடம் அம்மன்னன் {சலன்}, "வாமதேவரின் ஆசிரமத்திற்குச் செல்" என்றான். வாமதேவரின் ஆசிரமத்தை அடைந்த மன்னன் அம்முனிவரிடம் {வாமதேவரிடம்}, "ஓ! புனிதமானவரே {வாமதேவரே}, என்னால் அடிக்கப்பட்ட மான் ஒன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உமது இரண்டு வாமி குதிரைகளை எனக்குக் கொடுத்து, அந்த மான் பிடிபட ஆவன செய்வதே உமக்குத் தகும்" என்றான். அம்முனிவர் {வாமதேவர்} அவனிடம் {சலனிடம்}, இவ்விரண்டு வாமி குதிரைகளை நான் உனக்குத் தருவேன். ஆனால் உனது நோக்கம் நிறைவேறியதும், எனது வாமி குதிரை ஜோடியானது விரைவாக என்னை வந்து அடைய வேண்டும்" என்று பதிலளித்தார். இந்தக் குதிரைகளை எடுத்துக் கொண்ட மன்னன் {சலன்} முனிவரிடம் {வாமதேவரிடம்} விடைபெற்றுக் கொண்டு, தனது தேரில் வாமி குதிரைகளைப் பூட்டி மானைத் தொடர்ந்து சென்றான். ஆசிரமத்தை விட்டு அகன்றதும், அவன் தனது தேரோட்டியிடம், "இந்தக் குதிரை ரத்தினங்களை வைத்துக் கொள்ள அந்தணர்களுக்குத் தகுதியில்லை. இவற்றை வாமதேவருக்குத் திருப்பித் தரக்கூடாது" என்றான். இதைச் சொன்ன அவன் {மன்னன் சலன்} மானைப் பிடித்துக் கொண்டு தனது தலை நகருக்குத் திரும்பினான். அங்கே தனது அரண்மனையின் உள்ளறைகளில் {அந்தப்புரத்தில்} அந்தக் குதிரைகளை நிறுத்தினான்.

அதே வேளையில் முனிவர் {வாமதேவர்}, "இளவரசன் இளைஞன். எனவே அற்புதமான இரண்டு விலங்குகளை அடைந்து, திரும்ப என்னிடம் கொடுக்காமல் அதனுடன் இன்பமாக விளையாடிக் கொண்டிருக்கிறான். அந்தோ, என்ன பரிதாபம்!" என்று நினைத்தார். பிறகு ஒரு மாதம் கழித்து, தனது சீடனொருவனிடம், "ஓ! ஆத்ரேயா, நீ மன்னிடம் {சலனிடம்} சென்று, வாமி குதிரைகளால் ஆக வேண்டிய காரியங்கள் முடிந்து விட்டால், அதை உனது குருவுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்று அவனிடம் {மன்னன் சலனிடம்} சொல்" என்றார். அதன்பேரில் சீடனான ஆத்ரேயரும், மன்னனிடம் சென்று, அவருக்குச் சொல்லப்பட்டதைச் சொன்னார். அதற்கு மன்னன் {சலன்}, "இந்த இரண்டு குதிரைகளை உரிமை கொள்ள மன்னர்ககளுக்கே தகுதியுண்டு. ரத்தினங்கள் போன்ற மதிப்புக் கொண்ட இவற்றை உரிமைகொள்ள அந்தணர்களுக்குத் தகுதி கிடையாது. குதிரைகளைக் கொண்டு அந்தணர்களுக்கு என்ன காரியம் ஆகப் போகிறது? திருப்தியுடன் திரும்பிச் செல்லும்" என்றான் {மன்னன் சலன்}.

மன்னனால் {சலனால்} இப்படிச் சொல்லப்பட்ட ஆத்ரேயர், தனது குருவிடம் {வாமதேவரிடம்} திரும்பி நடந்தது அத்தனையும் சொன்னார். விரும்பத்தகாத காரியத்தைக் கேட்ட வாமதேவரின் இதயம் கோபத்தால் நிறைந்தது. தானே நேரடியாக மன்னனிடம் {மன்னன் சலனிடம்} சென்று தனது குதிரைகளைக் கேட்டார் {வாமதேவர்}. அவர் கேட்டதைக் கொடுக்க மன்னன் {சலன்} மறுத்தான். வாமதேவர், "ஓ பூமியின் அதிபதியே {சலனே}, எனது வாமி குதிரைகளை எனக்குக் கொடு. உன்னால் முடிக்க முடியாத காரியத்தை அவற்றைக் {எனது குதிரைகளைக்} கொண்டு முடித்தாய். பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் செயல்களில் குறுக்கிட்டு, ஓ! மன்னா {சலனே}, வருணனின் சுருக்கு {பாசக்} கயிற்றால் மரணத்திற்கு ஆட்படாதே" என்றார் {வாமதேவர்}.

இதைக் கேட்ட மன்னன் {சலன்}, "ஓ! வாமதேவரே, இந்த இரண்டும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அற்புதமான சாந்தமான காளைகளே அந்தணர்களுக்குத் தகுதியான விலங்குகள். ஓ! பெரும் முனிவரே (அவற்றை எடுத்துக் கொண்டு) நீர் நினைத்த எந்த இடத்திற்கும் செல்லும். உண்மையில், உம்மைப் போன்றோரை {அந்தணர்களை} வேதங்களே சுமக்கின்றன" என்றான். பிறகு வாமதேவர் {மன்னன் சலனிடம்} , "ஓ! மன்னா {சலனே}, எங்களைப் போன்றோரை {அந்தணர்களை} வேதங்கள் சுமக்கின்றன என்பது உண்மையே. ஆனால் அது இந்த உலகத்திற்குப் பின்னர் வரும் உலகத்திலேயே நடக்கும். இருப்பினும் இவ்வுலகில், ஓ! மன்னா {சலனே}, இதைப் போன்ற விலங்குளே {குதிரைகளே} என்னையும், நம்மைப் போன்றோரையும், இன்னும் பலரையும் சுமக்கின்றன" என்றார். அதற்கு மன்னன் {சலன்}, "நாலு கழுதைகளோ, அற்புதமான வகையில் வந்த நாலு கோவேறு கழுதைகளோ, காற்றைப் போன்ற வேகம் கொண்ட நான்கு குதிரைகளோ உம்மைச் சுமக்கட்டும். இவற்றுடன் செல்லும். இந்த இரண்டு வாமி குதிரைகளும் க்ஷத்திரியர்கள் உரிமைகொள்ளத் தக்கவை. எனவே, இவை {வாமி குதிரைகள்} உமதில்லை என்பதை அறிந்து கொள்ளும்" என்று பதிலளித்தான்.

வாமதேவர் {மன்னன் சலனிடம்}, "ஓ! மன்னா {சலனே}, அந்தணர்களுக்குக் கடுமையான நோன்புகள் விதிக்கப்பட்டுள்ளன. நான் அவற்றை {சரியாக} நோற்று வாழ்ந்திருக்கிறேன் என்றால், என்னால் கட்டளையிடப்பட்ட பயங்கரமான முகம் கொண்ட பலம்வாய்ந்த நான்கு கடும் ராட்சசர்கள், கொல்லும் விருப்பத்துடன் உன்னைத் தொடர்ந்து, தங்கள் கூர்மையான ஈட்டியில் உன்னைச் சுமந்து சென்று, உனது உடலை நான்காக வெட்டிப் போடட்டும்" என்றார். இதைக் கேட்ட மன்னன் {சலன்}, "ஓ! வாமதேவரே, எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் எனது உயிரை எடுக்க விரும்பும் அந்தணன் என்று உம்மை நினைப்பவர்கள், எனது கட்டளையின் பேரில், பிரகாசமிக்க ஈட்டிகளையும் வாள்களையும் எடுத்து உம்மையும் உமது சீடர்களையும் எனது முன்பாக {அடித்து} வீழ்த்தட்டும்" என்றான்.

அதற்கு வாமதேவர் {மன்னன் சலனிடம்}, "ஓ! மன்னா, இந்த எனது வாமி குதிரைகளை அடைந்து "நான் அவற்றைத் திரும்பத் தருவேன்" என்று நீ சொல்லியிருக்கிறாய். எனவே, எனது வாமி குதிரைகளைக் கொடுத்து, உனது உயிரைப் பாதுகாத்துக் கொள்" என்று பதிலுரைத்தார். இதைக் கேட்ட மன்னன் {சலன்}, மான்களைத் தொடர்வது அந்தணர்களுக்கு விதிக்கப்படவில்லை. உமது பொய்மைக்காக நான் உம்மைத் தண்டிக்க வேண்டும். ஓ! அந்தணரே, இன்று முதல் உமது கட்டளைகள் அனைத்துக்கும் கீழ்ப்படிந்து அருள் உலகங்களை அடைவேன்" என்றான். பிறகு வாம தேவர், "ஒரு அந்தணன் எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் தண்டிக்கப்படக்கூடாது. கற்றறிந்த எவன் இப்படிப்பட்ட அந்தணர்களைத் தவத்தால் அறிகிறானோ, அவன் இவ்வுலகில் முக்கியத்துவம் அடைவதில் தோற்பதில்லை" என்று பதிலுரைத்தார் {வாமதேவர்}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "வாமதேவர் இப்படிச் சொன்னதும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே பயங்கர முகம் கொண்ட நான்கு ராட்சசர்கள் கைகளில் ஈட்டிகளுடன் அங்கே எழுந்து, மன்னனைக் {சலனைக்} கொல்ல {அவனை} அணுகினர். அப்போது அம்மன்னன் {சலன்}, "இக்ஷவாகு குலத்தில் பிறந்தவர்களும், (எனது தம்பி) தளனும், இந்த அனைத்து வைசியர்களும் எனது அதிகாரத்தை ஏற்றுக் கொண்டவர்களானால், வாமதேவருடைய இரண்டு வாமி குதிரைகளையும் நான் கொடுக்க மாட்டேன். இப்படிப்பட்டவர்கள் அறம் சார்ந்தவர்களாக மாட்டார்கள்" என்று கதறினான். அவன் இப்படிப்பட்ட வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்த போது, அந்த ராட்சசர்கள் அவனை {மன்னன் சலனைக்} கொன்றனர். அந்தப் பூமியின் தலைவன் {சலன்} விரைவில் பூமியில் கிடத்தப்பட்டான். தங்கள் மன்னன் {சலன்} கொல்லப்பட்டதை அறிந்த இக்ஷவாகு குலத்தினர், {சலனின் தம்பி} தளனை அரியணையில் அமர்த்தினர்.

அந்தணரான வாமதேவர், (இக்ஷவாகு குலத்தவரின்) நாட்டுக்குச் சென்று புதிய ஏகாதிபதியிடம் {தளனிடம்}, "ஓ! மன்னா, மனிதர்கள் அந்தணர்களுக்குத் தானமளிக்க வேண்டும் என்று புனித நூல்கள் தீர்மானித்திருக்கின்றன. நீ பாவத்திற்கு அஞ்சினால், ஓ! மன்னா {தளனே}, தாமதமில்லாமல் எனது வாமி குதிரைகளைக் கொடுத்துவிடு" என்று கேட்டார். வாமதேவரின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் கோபத்துடன் தனது தேரோட்டியிடம், "நான் வைத்திருக்கும் அம்புகளில் ஒன்றில் அழகானதைக் கண்டு அதில் நஞ்சு பூசி என்னிடம் எடுத்து வா. அதனால் துளைக்கப்பட்ட இந்த வாமதேவர் வலியால் தரையில் விழுந்து, நாய்களால் கிழிக்கப்படட்டும்" என்றான். இதைக் கேட்ட வாமதேவர், "ஓ மன்னா {தளனே}, உனக்கு உனது ராணி மூலம் சயேனஜித் என்ற பெயர் கொண்ட பத்து வயது மகன் உண்டு என்பதை நான் அறிவேன். எனது வார்த்தைகளின் உந்துதலால், அந்த உனது அன்பு பிள்ளையை அந்தப் பயங்கரக் கணைகளால் தாமதமில்லாமல் கொல்வாய்" என்றார் {வாமதேவர்}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "வாமதேவரின் இந்த வார்த்தைகளால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏகாதிபதியால் {மன்னன் தளனால்} அடிக்கப்பட்ட அந்தக் கடும் கணை, அந்தப்புரத்தில் இருந்த இளவரசனைக் கொன்றது. இதைக் கேட்ட தளன் அப்போது, "இக்ஷவாகு குலத்தோரே, நாம் உங்களுக்கு நல்லது செய்வேன். நான் எனது சக்தியைக் கொண்டு இந்த அந்தணனைக் கொல்வேன். எனக்கு மற்றுமொரு கடும் கணையைக் கொண்டு வாரும். பூமியின் தலைவர்களே, எனது பராக்கிமத்தை இப்போது பாரும்" என்றான். தளனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வாமதேவர், "நஞ்சு பூசி பயங்கரமான தோற்றம் கொண்டு இந்தக் கணையை எனக்குக் குறிவைக்கிறாய். ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {தளனே}, உன்னால் குறி வைக்கவோ அல்லது அதை அடிக்கவோ கூட இயலாது" என்றார். அதன்பேரில் மன்னன் {தளன்} "இக்ஷவாகு குலத்தோரே, என்னால் எடுக்கப்பட்ட கணையை அடிக்க இயலாமல் நான் இருப்பதைக் கண்டீர்கள். நான் இந்த அந்தணனுக்கு மரணமளிப்பதில் தோல்வியுற்றேன். நீண்ட வாழ்நாள் கொண்டு வாமதேவர் வாழட்டும்" என்றான். வாமதேவர், "இந்தக் கணையால் நீ உனது ராணியைத் தொட்டால், நீ பாவத்திலிருந்து (அந்தணரைக் கொல்ல முயற்சித்த பாவத்திலிருந்து) தூய்மையடைவாய்" என்றார்.

மன்னன் தளன் தனக்குச் சொல்லப்பட்டது போலவே செய்தான். பிறகு ராணி முனிவரிடம் {வாமதேவரிடம்}, "ஓ! வாமதேவரே, இந்த எனது கொடிய கணவரிடம் நாளுக்கு நாள் நல்ல வார்த்தகளைச் சொல்லத்தக்கவளாகவும், அந்தணர்களுக்காகக் காத்திருந்து அவர்களுக்குச் சேவை செய்பவர்களாகவும் நான் ஆகக் கடவேன். இதனால், ஓ! அந்தணரே, நான் இதற்குப் பிறகு புண்ணிய உலகங்களை அடைவேன்" என்றாள். ராணியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வாமதேவர், "ஓ! அழகிய கண்கள் கொண்டவளே, நீ இந்த அரச குலத்தைக் காத்தாய். ஒப்பற்ற ஒரு வரத்தை இரந்து கேள். நீ என்ன கேட்டாலும் நான் உனக்கு அதைத் தருவேன். ஓ! களங்கமற்றவளே, ஓ! இளவரசியே, உனது இனத்தாரையும், இக்ஷவாகு குலத்தவரின் பெரும் நாட்டையும் ஆட்சி செய்வாயாக" என்றார். வாமதேவரின் வார்த்தைகளைக் கேட்ட அந்த இளவரசி {தளனின் மனைவியான ராணி}, "ஓ! புனிதமானவரே, எனது கணவர் இந்தப் பாவத்தில் இருந்து விடுபட வேண்டும். இதுவே நான் வேண்டும் வரம். நீர் அவரது மகனுக்கு அவரது இனத்தாருக்கும் செழிப்பை நினைப்பதில் ஈடுபட வேண்டும். ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே. இதுவே நான் உம்மிடம் கேட்கும் வரம்!" என்று கேட்டாள்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ராணியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட முனிவர் {வாமதேவர்}, ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, "அப்படியே ஆகட்டும்" என்றார். அதனால் மன்னன் தளன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, அம்முனிவரை வணங்கி, அவரது வாமிக் குதிரைகளை மரியாதையுடன் கொடுத்தான்.

1.வாமதேவர், பெருமுனிவரான கௌதமருக்கும் அகலிகைக்கும் பிறந்த மகனாவார்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


ஆடியோ கோப்பு - புதிய முயற்சி

நண்பர்களே,

மகாபாரதம் போன்ற இதிகாசத்தைப் படிப்பதைவிட, ஒருவர் படிக்கும்போது அதைக் கேட்பது நன்றாக இருக்கும் என்று சொல்வார் என் அன்பப்பா {தாய் வழி தாத்தா}. அவர் காலத்திலெல்லாம் டிவி கிடையாதல்லவா? ஊர்த்திண்ணையில் மகாபாரதம் படிக்கப்படும்போது, அதை ஊர்மக்கள் அனைவரும் கூடி கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம். இன்று நம்மிடையே அந்த நிலையில்லை.

நமது பதிவுகளை ஒலிவடிவத்தில் மக்களுக்குக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நான் கருதியதுண்டு. அதற்காக நானே கூட பதிவுகளைப் படித்து, அதை ஒலிப்பதிவு செய்து முயற்சி செய்து பார்த்தேன். அது கேட்பதற்கு நன்றாக இல்லாததால் அம்முயற்சியைக் கைவிட்டேன்.

முகநூலில்  சமீபத்தில் தீபா நடராஜன் என்ற வாசக நண்பர், மகாபாரதத்தை ஏன் ஒலிவடிவத்தில் கொடுக்கக்கூடாது என்று கேட்டார். நான் செய்த முயற்சியைச் சொல்லி, வேறு யாராவது செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். நான் செய்கிறேன் என்றார். செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்வேன் என்று நான் சொன்னேன்.

சொல்லி சில நாட்களிலேயே முதல் பதிவை ஒலியாகப் பதிந்து, எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள், திருத்தங்கள் வேண்டியிருக்கிறதா என்று கேட்டார். நான் சில திருத்தங்கள் இருந்தாலும் பரவாயில்லை, நாம் அடுத்தடுத்த பதிவுகளுக்குச் சென்றுவிடலாம். திருத்தங்கள் தோன்றும்போது அதை அடுத்த பதிவிலிருந்து திருத்திக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

தீபா நடராஜன் குறித்து ஒரு அறிமுகம்
(இது நான் அவரிடமே கேட்டுப் பெற்றது}

தீபா நடராஜன் பிரஞ்சு மொழி பேராசிரியராவார். தஞ்சாவூர் ஓவியக்கலை நிபுணர். வேலூரில் வசிக்கிறார். இவரது பூர்வீகம் திண்டிவனம். கல்வி {academic}, சான்றிதழ் {certificate}, குடியேற்றும் {immigration} சார்ந்த தேர்வுகளுக்காக மாணவர்களை ஆன்லைன் மூலமாகவும் தனிவகுப்புகள் மூலமும் பயிற்றுவிக்கிறார். மேலும் தஞ்சாவூர் ஓவியக்கலை மற்றும் பிற கலைகளையும் மாணவர்களுக்கு  கற்பிக்கிறார்.

அவர் அனுப்பித் தந்த ஆதிபர்வத்தின் முதல் பதிவை இங்கே பதிவிறக்கத்திற்குக் கொடுக்கிறேன். 

ஆன்லைனிலேயே கேட்க...


யூ-டியூபில்...




இனி அவர் அனுப்பித்தரும் ஒலிப்பதிவுகளை அந்தந்தப் பதிவின் கீழேயே பதிவிறக்கத்திற்குக் கொடுக்க இருக்கிறேன். வாசகர்கள் இம்முயற்சிக்குத் தங்கள் ஆதரவைத் தரவேண்டும்.

எப்படி ஆதரவு தருவது என்று கேட்கிறீர்களா? இந்த ஒலிக்கோப்பை பதிவிறக்கும் செய்து, உங்கள் தாய் தந்தைக்கோ வேறு பெரியோருக்கோ கொடுத்துக் கேட்கச் செய்யுங்கள். அவர்கள் தரும் பின்னூட்டங்களை எனக்கு மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள். அதுவே நீங்கள் எங்களுக்குத் தரும் ஆதரவாகும்.

தானாக முன்வந்து ஆடியோ கோப்பை அனுப்பித் தந்த தீபா நடராஜன் அவர்களுக்கு நன்றி.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்  

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


பரீக்ஷித்தும்! சுசோபனையும்! - வனபர்வம் பகுதி 191அ

Parikshit and Susobhana! | Vana Parva - Section 191a | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

மார்க்கண்டேயர் தவளைக்கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்னது; பரிக்ஷித்து ஒரு பெண்ணை மணந்தது; அப்பெண் நீரில் மறைந்தது; அப்படி மறைந்ததற்குத் தவளைகளே காரணம் என்று பரிக்ஷித்துத் தவளைகளைக் கொல்ல உத்தரவிட்டது; தவளை மன்னன் ஆயு பரிக்ஷித்தைக் கண்டு, தனது மகளான சுசோபனையை அவனுக்கு மணமுடித்துக் கொடுத்தது....

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}  சொன்னான், "அந்தணர்களின் பெருமையைப் பலம்வாய்ந்த தவசியான மார்க்கண்டேயர் பாண்டுவின் மகன்களுக்கு விவரித்தது போன்றே நீர் எனக்கு முழுமையாக உரைப்பதே உமக்குத் தகும்"

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்} மார்க்கண்டேயரிடம், "அந்தணர்களின் பெருமைகளை எனக்கு நீர் விவரிப்பதே உமக்குத் தகும்" என்று கேட்டான். மார்க்கண்டேயர், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் அந்தணர்களின் நடத்தை எவ்வாறு இருந்தது என்பதைக் கேள்" என்றார்.

மேலும் மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்த ஒரு மன்னன், பரிக்ஷித் என்ற பெயரில் அயோத்தியாவில் இருந்தான். ஒருகாலத்தில் அந்தப் பரிக்ஷித் வேட்டையாடச் சென்றான். அவன் ஒரு மானைத் துரத்திக் கொண்டு சென்ற போது, அந்த விலங்கு {குதிரை}, அவனை (மனிதர்களின் வசிப்பிடங்களற்ற ஒரு இடத்துக்கு} நீண்ட தூரத்திற்கு இட்டுச் சென்றது. வெகு தூரம் சென்றதால் களைத்துப் போயிருந்த அவன் {மன்னன் பரிக்ஷித்}, பசியாலும் தாகத்தாலும் துன்புற்று அந்த நாட்டின் ஒரு பகுதியில் இருந்த இருள் நிறைந்த அடர்ந்த கானகத்துக்குச் சென்றான். அக்கானகத்தைக் கண்ட மன்னன் {பரிக்ஷித்}, அதற்குள் நுழைந்து காண்பதற்கினிய ஒரு குளத்தை அங்குக் கண்டான். அவனும் அந்த விலங்கும் {குதிரையும்} அங்குக் குளித்தனர். அங்குக் குளித்த குதிரை புத்துணர்ச்சி பெற்றது. அதன் முன் சில தாமரை இழைகளையும் தண்டுகளையும் இட்டபடி, அம்மன்னன் {பரிக்ஷித்} அந்தக் குளத்தின் அருகில் அமர்ந்தான்.


அங்கு அந்தக் குளத்தின் அருகில் அவன் {மன்னன் பரிக்ஷித்} இருந்தபோது, குறிப்பிட்ட வகை இனிமையான இசையைக் கேட்டான். அவ்விசையைக் கேட்ட அவன் தனக்குள், "இங்கு மனிதர்களின் கால்தடங்களை நான் காணவில்லை. இந்த இசை எங்கிருந்து யாரால் வருகிறது?" என்று நினைத்தான். அம்மன்னன் விரைவில் பூக்கள் சேகரித்துக் கொண்டு பாடிக்கொண்டிருந்த ஒரு அழகிய மங்கையைக் கண்டான். அம்மன்னன் {பரிக்ஷித்} அவளிடம், "அருளப்பட்டவளே, நீ யார்? நீ யாருடையவள்?" என்று கேட்டான். அதற்கு அவள், "நான் ஒரு கன்னிகை" என்றாள். அதற்கு அம்மன்னன், "நீ என்னுடையவள் ஆகும்படி நான் உன்னைக் கேட்கிறேன்" என்றான். அதற்கு அந்தக் கன்னிகை, "நீர் எனக்கு ஒரு உறுதிமொழி கொடுக்க வேண்டும், அப்போதுதான் என்னால் உம்முடையவள் ஆக முடியும். இல்லாவிட்டால் முடியாது" என்றாள். மன்னன் உறுதிமொழியைக் குறித்து அந்தப் பெண்ணிடம் கேட்க, அவள், "நீங்கள் எனது கண்களால் நீரைக் காணச் செய்யக்கூடாது" என்றாள். மன்னனும் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அவளை மணந்தான். இப்படி அவளை மணந்து கொண்ட பரிக்ஷித் (அவளுடன்} பெரும் மகிழ்ச்சியுடன் விளையாடி, அமைதியாக அவளுடன் அமர்ந்தான். மன்னன் அவளுடன் தங்கியிருந்தபோது, அவனது துருப்புகள் அந்த இடத்தை அடைந்தன. அந்த ஏகாதிபதியை {பரிக்ஷித்தை} கண்ட துருப்புகள் அவனைச் சூழ்ந்து கொண்டன. அவனது துருப்புகளின் இருப்பால் உற்சாகமடைந்த மன்னன், {பரிக்ஷித்} ஒரு அழகான வாகனத்தில் (புதிதாக) தான் மணந்த மனைவியுடன் சென்றான்.

தலை நகரை {அயோத்தியாவை} அடைந்த அவன் {மன்னன் பரிக்ஷித்} அவளுடன் தனிமையில் வாழ ஆரம்பித்தான். மன்னனுக்கு அருகாமையிலேயே இருந்தவர்கள் கூட அவனைக் காண முடியவில்லை. இதுகுறித்துத் தலைமை அமைச்சர் மன்னனைப் பார்த்துக் கொண்ட பெண்களிடம் கேட்டான். அவன், "நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான். அந்தப் பெண்கள், "நாங்கள் இங்கு ஒப்பற்ற அழகுடன் கூடிய ஒரு பெண்ணைக் காண்கிறோம். அவளுக்கு நீரைக் காண்பிப்பதில்லை என்ற உறுதிமொழி கொடுத்து அவளை மணந்து கொண்ட மன்னர் அவளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்" என்றனர். இந்த வார்த்தைகளைக் கேட்ட தலைமை அமைச்சர், பல மரங்களும், அபரிமிதமான மலர்களும் கனிகளும் நிறைந்த ஒரு செயற்கை கானகத்தை உண்டாக்கி, அந்தக் காட்டிற்குள்ளேயே ஒரு பெரிய குளத்தை வெட்டச் செய்து, ஒதுங்கிய இடத்தில் இருந்த அதில் {குளத்தில்} அமிர்தம் போன்ற நீர் இருந்தது.

அந்தக் குளம் முத்து வலைகளால் நன்கு மூடப்பட்டிருந்தது. ஒரு நாள் மன்னனைத் தனிமையில் சந்தித்த அவர் {தலைமை அமைச்சர்}, "இது நீரில்லாமல் இருக்கும் நல்ல காடு. நீர் இங்கு இன்பமாக விளையாடலாம்" என்றான். அமைச்சரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {பரிக்ஷித்} அந்தக் காட்டுக்குள் தனது புகழ்மிக்க மனைவியுடன் நுழைந்தான். அந்தக் காண்பதற்கினிய கானகத்தில் அவளுடன் விளையாடிய மன்னன், பசியாலும், தாகத்தாலும் துன்புற்று, களைத்துப் போனான். அம்மன்னன் {பரிக்ஷித்}, அங்கே ஒரு முல்லைக் கொடிப் பந்தலைக் கண்டு, தனது அன்பிற்குரியவளுடன் அந்தப் பந்தலுக்குள் நுழைந்தான். அங்கே அம்மன்னன், அமிர்தம் போன்ற பிரகாசத்துடன் தெளிவுடனும் நீர் நிரம்பிய ஒரு குளதைக் கண்டான். அந்தக் குளத்தின் கரையில் தன் மனைவியுட்ன அமர்ந்த அவன், தன் வணங்கத்தக்க மனைவியிடம், "இந்த நீரில் உற்சாகமாக மூழ்கு" என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட அவள் அந்தக் குளத்திற்குள் மூழ்கினாள். ஆனால் நீருக்குள் மூழ்கிய அவள் மறுபடியும் மேற்பரப்பில் காணப்படவில்லை. மன்னன் அவளைத் தேடினான், ஆனால் அவளைக் கண்டுபிடிக்க அவனால் முடியவில்லை.

பிறகு மன்னன் {பரிக்ஷித்}, அந்தக் குளத்தின் நீரையெல்லாம் வாரி இரைக்கச் சொன்னான், கடைசியாக ஒரு வளையின் வாயிலில் ஒரு தவளை அமர்ந்திருந்தது. இதனால் கோபம் கொண்ட மன்னன், "எனது ஆட்சிக்குட்பட்ட இடங்கள் அனைத்திலும் உள்ள தவளைகள் கொல்லப்படட்டும். யாரெல்லாம் என்னைச் சந்திக்க விரும்புகிறார்களோ அவர்கள் இறந்த தவளைகளுடன் என்னிடம் வரட்டும்" என்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்தான். இப்படித் தவளைகள் கொல்லப்பட்ட போது, அதற்கு அஞ்சிய அனைத்து தவளைகளும் தங்கள் மன்னனிடம் சென்று நடந்ததைச் சொல்லி முறையிட்டன. பிறகு தவளைகளின் மன்னன் தவசியின் ஆடைகளைத் தரித்துக் கொண்டு மன்னன் பரிக்ஷித்தின் முன்னிலையில் வந்து அந்த ஏகாதிபதியை அணுகிய பிறகு, "ஓ! மன்னா, கோபத்திற்கு ஆளாகாதே! அருள் புரிவாயாக. அப்பாவி தவளைகளைக் கொல்வது உனக்குத் தகாது" என்றது. [இங்கே இரு பாடல்கள் {ஸ்லோகங்கள்} வருகின்றன (அவை): - ஓ மங்கா புகழ் கொண்டவனே, தவளைகளைக் கொல்லாதே! உனது கோபத்தை அடக்கு! தங்கள் ஆன்மாவை அறியாமையில் வைத்திருப்பவர்களின் செழிப்பும் தவத்தகுதிகளும் குன்றும்! தவளைகளிடம் கோபம் கொள்வதில்லை என்ற உறுதிமொழியைக் கொடு! இப்படிப்பட்ட பாவத்தை இழைக்கும் உனக்கு என்ன தேவை இருக்கிறது! தவளைகளைக் கொல்வதால் உனது எந்தக் காரியம் நிறைவேறும்" என்று கேட்டது.

அன்புக்குரியவளின் மரணத்தால் மன்னன் பரிக்ஷித்தின் ஆன்மா துயரத்தில் நிரம்பியிருந்தது. அவன் {மன்னன் பரிக்ஷித்}, "நான் தவளைகளை மன்னிக்க மாட்டேன். மறுபுறம் அவைகளைக் கொல்வேன். இந்த இழிந்த தீயவைகள் {தவளைகள்} எனது அன்பிற்குரியவளை விழுங்கிவிட்டன. எனவே, என்னால் எப்போதும் கொல்லப்பட்ட இந்தத் தவளைகள் தகுந்தனவே. ஓ! கற்றவனே, இதில் உன் சார்பாக நீ தலையிடுவது உனக்குத் தகாது" என்றான். பரிக்ஷித்தின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தவளை மன்னன், மனதால் துன்புற்று, "ஓ மன்னா அருள்புரிவாயாக! நான் ஆயு என்ற பெயர் கொண்ட தவளைகள் மன்னனாவேன். உனது மனைவியாக இருந்தவள், எனது மகளான சுசோபனையே ஆவாள். உண்மையில், இது அவளது கெட்ட நடத்தையாலேயே நிகழ்ந்தது. இதற்கு முன், பல மன்னர்கள் அவளால் {இப்படி} ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அதற்கு அம்மன்னன் {பரிக்ஷித்}, நான் அவளை அடைய விரும்புகிறேன். நீர் அவளை எனக்கு அளிப்பீராக!" என்றான்.

அதன்பேரில் தவளைகள் மன்னன் {ஆயு} தனது மகளைப் பரிக்ஷித்துக்கு அளித்து, அவளிடம் {சுசோபனையிடம்}, "மன்னனுக்காகக் காத்திருந்து அவனுக்குச் சேவை செய்" என்றான். இப்படித் தனது மகளிடம் பேசிய அவன் {தவளை மன்னன்}, மேலும் அவளிடம் கோபமாக, "நீ பல மன்னர்களை ஏமாற்றியிருப்பதால், உனது உண்மையற்ற நடத்தையின் காரணமாக, உனது வாரிசுகள் அந்தணர்களிடம் மரியாதை குறைவாக நடப்பார்கள்" என்றான். ஆனால் அவளை அடைந்த மன்னர் மிகவும் மகிழ்ந்து, மூவுலகங்களும் கிடைத்தது போல இன்புற்று இருந்தான். அவன் {மன்னன் பரிக்ஷித்} தவளைகள் மன்னனை {ஆயுவை} மரியாதையுடன் உரிய முறையில் வணங்கி மகிழ்ச்சியால் ஏற்பட்ட கண்ணீருடனும் அடைபட்ட குரலுடனும், "நான் உம்மால் உதவி பெற்றேன்" என்றான். பிறகு தவளைகள் மன்னன் தனது மகளிடம் விடைபெற்று, அவன் எங்கிருந்து வந்தோனோ அங்கேயே சென்றான். 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, June 29, 2014

கல்கி கானகம் புகுவார்! - வனபர்வம் பகுதி 190

Kalki will enter forest! | Vana Parva - Section 190 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

கல்கியால் கலிகாலத்தின் தீமைகள் அகன்று புதிதாகக் கிருத காலம் மலரும் என்று மார்க்கண்டேயர் சொன்னது; விடாமல் அறம்பயிலும்படி மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொன்னது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "திருடர்கள் மற்றும் கொள்ளையர்களை வேரோடு அழித்த பிறகு, ஒரு பெரும் குதிரை வேள்வியில் {அசுவமேத வேள்வியில்}, இந்தப் பூமியை கல்கி அந்தணர்களுக்குக் கொடுப்பார். புனிதமான காரியங்களைச் செய்து சிறந்த புகழைக் கொண்ட கல்கி, சுயம்புவால் விதிக்கப்பட்ட மங்களகரமான புதிய அருளாட்சியை நிறுவிய பிறகு, காண்பதற்கினிய கானகத்திற்குள் புகுவார். பிராமணர்களால் திருடர்களும், கொள்ளையர்களும் வேரோடு ஒழிக்கப்பட்ட பிறகு, பூமியெங்கும் செழிப்பாக இருக்கும். இந்தப் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் அவரது {கல்கியின்} நடத்தையைப் பின்பற்றுவர். இந்த உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்த்திய பிறகு, பிராமணர்களில் புலியான கல்கி, மான் தோலையும், ஈட்டிகளையும், சூலங்களையும் அங்கேயே விட்டு, அந்தணர்களில் முதன்மையானவர்களால் புகழப்பட்டபடி பூமியெங்கும் சுற்றுவார். அவர் {கல்கி} அந்தணர்களுக்குத் தக்க மரியாதைகளைச் செய்து, திருடர்களையும் கொள்ளையர்களையும் கொல்வதிலேயே முழு நேரமும் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். அவர் {கல்கி}, திருடர்களையும், கொள்ளையர்களையும் கொன்று "ஓ! தந்தையே", "ஓ! தாயே", "ஓ! மகனே" என்று இதயத்திலிருந்து கதற வைப்பார். அதே போல, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, பாவங்கள் வேரோடு ஒழிக்கப்பட்டு, கிருத காலத்தின் தொடக்கத்தில் அறம் தழைக்கும். மனிதர்கள் மீண்டும் அறச் சடங்குகள் பயில ஆரம்பிப்பார்கள்.


கிருத காலத்தில், நன்றாகப் பதியமிட்ட தோட்டங்களும், வேள்வி மண்டபங்களும், பெரிய குளங்களும், அந்தணப் புராணங்களை வளர்க்கும் கல்விச்சாலைகளும், தடாகங்களும், கோவில்களும் எங்கும் மீண்டும் தோன்றும். விழாக்களும், வேள்விச்சடங்குகளும் மீண்டும் செய்யத்தொடங்கப் படும். அந்தணர்கள் நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் ஆவார்கள். மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்}, தவச்சடங்குகளுக்குத் தங்களை அர்ப்பணித்து முனிவர்களாவார்கள். இழிந்தவர்களால் நிரம்பியிருந்த தவசிகளின் ஆசிரமங்கள் மீண்டும் உண்மை நிறைந்த மனிதர்களின் இல்லங்களாகும். பொதுவாக மனிதர்கள் உண்மையை {சத்தியத்தை} போற்றவும் புகழவும் செய்வார்கள். நிலத்தில் தூவப்படும் விதைகள் அனைத்தும் முளைக்கும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அனைத்து வகைப் பயிர்களும் எல்லாக் காலங்களிலும் வளரும். தானம், தவங்கள், நோன்புகள் ஆகியவற்றுக்கு மனிதர்கள் தங்களை அர்ப்பணிப்பார்கள். அந்தணர்கள் தியானத்துக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். அறம்சார்ந்த ஆன்மாக்களாலும், எப்போதும் உற்சாகமாக இருக்கும் மனிதர்களாலும் வேள்விகள் நடத்தப்படும். பூமியின் ஆட்சியாளர்கள் தங்கள் நாடுகளை அறம் சார்ந்து அரசாள்வார்கள். அப்படிப்பட்ட கிருத காலத்தில் வைசியர்கள் தங்கள் வகைக்கு உண்டான செயல்களுக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். அந்தணர்கள் ஆறு வகைக் கடமைகளுக்கு (கற்பது, கற்பிப்பது, தானாக முன்வந்து வேள்விகள் நடத்துவது, பிறர் செய்யும் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, அறப்பணிகள் செய்வது, பரிசுகளை ஏற்பது ஆகிய ஆறு வகைக் கடமைகளுக்குத்) தங்களை அர்ப்பணிப்பார்கள். க்ஷத்திரியர்கள் பராக்கிரமச் செயல்களுக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். சூத்திரர்கள், மூன்று (உயர்ந்த) வகையினருக்கும் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணிப்பார்கள்.

இவையே, ஓ! யுதிஷ்டிரா, கிருத, திரேதா, துவாபர மற்றும் தொடரும் {கலி} காலங்களின் வழிகளாகும். இப்போது நான் உனக்கு அனைத்தையும் விவரித்து விட்டேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, பலதரப்பட்ட யுகங்களால் அணைக்கப்படும் காலங்களைப் பொதுவாக நான் உனக்குச் சொல்லிவிட்டேன். முனிவர்களால் வழிபடப்படும் {வாயு} புராணத்தில் வாயுவால் சொல்லப்பட்ட கடந்த கால மற்றும் எதிர்கால நிலைகளை நான் இப்போது உனக்குச் சொன்னேன். இறப்பற்றவனான {சிரஞ்சீவியான} நான் உலகத்திற்கு விதிக்கப்பட்ட மற்றும் விதிக்கப்படாத வழிகளையும் பல முறை கண்டிருக்கிறேன். உண்மையில் நான் கண்ட அனைத்தையும், உணர்ந்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! மங்காத புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரா}, தர்மம் குறித்த உனது சந்தேகங்களை விலக்கவல்லதான வேறொன்றை நான் சொல்வேன். இனி நீ உன் தம்பிகளுடன் சேர்ந்து அதைக் கேள். ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, நீ உனது ஆன்மாவை அறத்தில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்த ஆன்மா கொண்ட மனிதன், இவ்வுலகிலும் மறு உலகிலும் அருளைப் பெறுகிறான். ஓ பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, நான் சொல்லப்போகும் மங்களகரமான வார்த்தைகளைக் கேள். ஒருபோதும் அந்தணர்களை அவமதிக்காதே. கோபம் கொண்ட அந்தணன், தனது நோன்புகளால் மூன்று உலகங்களையும் அழிக்க வல்லவன்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மார்க்கண்டேயரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட புத்திக்கூர்மையும் பெரும் பிரகாசமும் படைத்த குருக்களின் அரசத் தலைவன் {யுதிஷ்டிரன்} பெரும் விவேகம் கொண்ட வார்த்தைகளைப் பேசலானான். {யுதிஷ்டிரன்}, "ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, நான் எனது குடிகளைக் காக்க வேண்டும் என்றால், நான் எதுபோன்ற நடத்தை வழிகளைப் பின்பற்ற வேண்டும்.? நான் எனது வகைக்கான {க்ஷத்திரியர்களின்} கடமைகளில் இருந்து வழுவாமல் இருக்க நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?" என்று கேட்டான்.

இதைக் கேட்ட மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "அனைத்து உயிரனங்களுக்கும் நன்மை செய்ய உன்னை நீ அர்ப்பணித்து, அவற்றிடம் கருணையோடு இரு. அனைத்து உயிரினங்களிடமும் அன்பு செலுத்து, எதையும் வெறுக்காதே. பேச்சில் உண்மையுடனும், எளிமையாகவும், ஆசைகளை முழுக் கட்டுக்குள் வைத்துக் கொண்டும், எப்போதும் உனது மக்களைப் பாதுகாப்பதில் உன்னை அர்ப்பணித்துக் கொள். அறம் பயின்று, பாவங்களைக் கைவிடு. மூதாதையரையும், தெய்வத்தையும் வழிபடு. அறியாமையிலும் கவனமின்மையாலும் நீ எதையெல்லாம் செய்தாயோ, அவற்றையெல்லாம் நீ செய்யும் அறப்பணிகளால் கழுவு. பெருமை மற்றும் கர்வத்தைக் கைவிட்டு, பணிவு மற்றும் நன்னடத்தையைக் கைக்கொள். முழு உலகத்தையும் அடிபணியச் செய்து இன்புற்றிரு, மகிழ்ச்சி உனதாகட்டும். இதுவே அறத்திற்கு உடன்படும் நடத்தை போக்காகும் {நடத்தையாகும்}. அறம் சார்ந்ததாக இதுவரை கருதப்பட்டு வந்ததையும், இனிமேல் கருதப்படப் போவதையும் நான் உனக்கு உரைத்துவிட்டேன். கடந்த காலம் சம்பந்தமாகவோ எதிரகாலம் சம்பந்தமாகவோ நீ அறியாதது எதுவுமில்லை. எனவே, ஓ! மகனே {யுதிஷ்டிரா}, தற்போதைய உனது இடர்க் காலத்தை மனதில் கொள்ளாதே. காலத்தால் துன்புறுத்தப்படும்போது, விவேகிகள் {ஞானம் கொண்டோர்} அதில் மூழ்கிப் போய்விடுவதில்லை. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, சொர்க்கவாசிகளும்கூட {தேவர்களும்கூட} காலத்தை விஞ்ச முடியாது. காலம் அனைத்து உயிரினங்களையும் துன்புறுத்துகிறது. ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, உண்மை {சத்தியம்} சம்பந்தமாக நான் சொன்னவற்றில் உனது மனது சந்தேகம் கொள்ள வேண்டாம். சந்தேகம் உனது இதயத்தை அடைய நீ அனுமதித்தால், உனது அறம் குறையும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நீ கொண்டாடப்படும் குடும்பமான குருக்களின் குடும்பத்தில் பிறந்திருக்கிறாய். அப்படிப்பட்ட நீ, நான் சொன்னவற்றை எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் கடைப்பிடிக்க வேண்டும்" என்று பதிலுரைத்தார் {மார்க்கண்டேயர்}.

யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, உமது கட்டளையின் பேரில், காதுக்கு இனிமையான வகையில் நீர் எனக்குச் சொன்னவற்றின்படி நிச்சயமாக நடந்து கொள்வேன். ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, பேராசையும் காமமும் என்னிடம் கிடையாது. அச்சமோ, கர்வமோ, பெருமையோ என்னிடம் கிடையாது. எனவே, ஓ! தலைவா {மார்க்கண்டேயரே}, நான் நீர் எனக்குச் சொன்ன அனைத்தையும் கடைப்பிடிப்பேன்", என்று பதிலுரைத்தான்.

வைசம்பாயனர் {ஜனமேஜனிடம்} தொடர்ந்தார், "புத்திக்கூர்மையுடைய மார்க்கண்டேயரின் வார்த்தைகளைக் சாரங்கம் என்ற வில்லைத் தாங்கியிருப்பவனுடன் {கிருஷ்ணனுடன்} சேர்ந்து கேட்ட பாண்டுவின் மகன்களும் {பாண்டவர்கள்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கே இருந்த அந்தணர்களில் காளைகளும், மற்றுப் பிறரும் மகிழ்ச்சியால் நிரம்பினார்கள். பழங்காலம் தொடர்பான இந்த அருள் நிறைந்த வார்த்தைகளை, ஞானத்தைக் கொடையாகக் கொண்ட மார்க்கண்டேயரிடம் இருந்து கேட்ட அவர்களின் இதயங்கள் ஆச்சரியத்தால் நிரம்பின".
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, June 28, 2014

யுகமுடிவும் கல்கி அவதாரமும்! - வனபர்வம் பகுதி 189

The end of yuga and the Kalki avatar! | Vana Parva - Section 189 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

கலிகாலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குத் தீர்க்கத்தரிசனமாகச் சொல்லல்; கலிகாலத்தின் முடிவில் வரும் கல்கி அவதாரம் குறித்து யுதிஷ்டிரனுக்கு மார்க்கண்டேயர் விளக்கியது...

வைசம்பாயனர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "குந்தியின் மகனான யுதிஷ்டிரன், பெருமுனிவரான மார்க்கண்டேயரிடம் எதிர்காலத்தில் வரப்போகும் பூமியின் அரசாங்கம் குறித்து மீண்டும் கேட்டான்.

யுதிஷ்டிரன், "ஓ! பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஓ! பிருகு குலத்தின் முனிவரே {மார்க்கண்டேயரே}, யுகத்தின் முடிவில் ஏற்படும் அனைத்தின் அழிவையும், மீள்பிறப்பையும் குறித்துக் கேட்டோம். உண்மையில் அவை அற்புதமாக இருந்தன. இருப்பினும், கலிகாலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துக் கேட்க இன்னும் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். அறமும், அறநெறிகளும் நிலைகுலைந்த நேரத்தில், எதுதான் எஞ்சியிருக்கும்! அந்தக் காலத்தின் மனிதர்களின் பராக்கிரமம், உணவு மற்றும் அவர்களின் கேளிக்கைகள் {நடையுடைகள்} ஆகியன எவ்வாறு இருக்கும்? அந்த யுகத்தின் முடிவில், வாழ்வின் காலம்தான் எவ்வளவு? எந்த எல்லையை அடைந்த பிறகு, மீண்டும் புதிதாகக் கிருத காலம் தொடங்கும்? ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, இவையனைத்தையும் விவரமாகச் சொல்லும். இதுவரை நீர் சொன்னது அனைத்தும் வித்தியாசமாகவும் இனிமையாகவும் இருந்தன" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

இப்படிச்சொல்லப்பட்ட முனிவர்களில் முதன்மையானவர் {மார்க்கண்டேயர்}, விருஷ்ணி குலத்தின் புலிக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பாண்டுவின் மகன்களுக்கும் ஆனந்தம் உண்டாகும்படி தனது சொற்பொழிவை மீண்டும் தொடங்கினார். மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, என்னால் கேட்கப்பட்ட, காணப்பட்ட அனைத்தையும் சொல்கிறேன் கேள். ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களுக்குத் தேவனின் அருளால் நான் அறிந்ததைச் சொல்கிறேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, கிருதகாலத்தில் அனைத்தும், ஏமாற்று, சதி, தீமை, பேராசை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு இருந்தன. அறநெறி என்பது  முழுதாக நாலு கால் கொண்ட காளையைப் போல மனிதர்களிடையே இருந்தது. திரேதா காலத்தில், பாவம் ஒரு காலை எடுத்துவிட்டது, அறநெறி மூன்று கால்களைக் கொண்டிருந்தது. துவாபர யுகத்தில், பாவமும், அறநெறியும் பாதிப் பாதியாகக் கலந்திருக்கிறது; அதனால் அறநெறி என்பது இரண்டு கால்களே கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. இருண்ட காலத்தில் (கலி காலத்தில்), ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அறநெறியென்பது மூன்று பங்கு பாவத்துடன் கலந்து, மனிதர்களுக்கு அருகில் வாழ்கிறது. ஓ! யுதிஷ்டிரா, மனிதர்களின் வாழ்வின் காலமும், சக்தியும், புத்திக்கூர்மையும், உடல் பலமும் ஒவ்வொரு யுகமும் குறையும் என்பதை அறிந்து கொள்வாயாக.

ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் அறத்தையும், அறநெறிகளையும் ஏமாற்றுகரமாகப் பயில்வார்கள். பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் அறம் என்ற வலையைப்பின்னி தங்கள் சகாக்களை ஏமாற்றுவார்கள். கற்றலில் {கல்வியில்} பொய்ப்புகழ் கொண்ட மனிதர்கள், தங்கள் செயல்கள் மூலமாக உண்மையை {சத்தியத்தை} குறுக்கி மறைத்து வைக்க ஏற்பாடு செய்வார்கள். வாழ்நாள் குறைவதன் தொடர்ச்சியாக, அவர்களால் பெரிதாக ஞானத்தை அடைய இயலாது. புத்தி குறைவின் தொடர்ச்சியாக அவர்களுக்கு ஞானம் இருக்காது. இதனால் பொருளாசையும் பேராசையும் அவர்கள் அனைவரையும் மூழ்கடிக்கும். பேராசை, கோபம், அறியாமை, காமம் ஆகியவை கொண்ட மனிதர்கள், ஒருவர் இன்னொருவரின் உயிரை எடுக்க விரும்பி ஒருவருக்கொருவர் பகைமை பாரட்டுவார்கள். அறங்கள் குறுகி, தவத்தையும், உண்மையையும் கைவிடும் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களுக்குச் சமானமாகக் குறைக்கப்படுவார்கள். தாழ்ந்த வகை மனிதர்கள் அனைவரும், இடைநிலை மனிதர்களின் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். இடைநிலை மனிதர்கள் அனைவரும் நிச்சயமாகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஓ! யுதிஷ்டிரா, யுகத்தின் முடிவில் உலகத்தில் நிலை இவ்வாறே இருக்கும்.

{கலி}யுக முடிவு காலத்தில், ஆடைகளில் மிகச் சிறந்தவையாகச் சணல் மற்றும் நாரால் நெய்யப்பட்ட கோணிகளால் (கோரதூஷகங்கள் = Paspalum frumentacea = Kora-dushakas} ஆன ஆடைகள் கருதப்படும். அந்தக் {கலி} காலத்தின் மனிதர்கள் தங்கள் மனைவியரை தங்கள் (ஒரே} நண்பராகக் கருதுவார்கள். பசுக்கள் இல்லாததால் மனிதர்கள் மீன்களையும், வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளின் பாலையும் உண்டு வாழ்வார்கள். அந்தக் காலத்தில் நோன்பு நோற்பவர்கள் கூடப் பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள். மனிதர்கள் ஒருவரை ஒருவர் எதிர்ப்பார்கள். ஒருவர் மற்றவரின் உயிரை எப்போதும் பறிப்பதற்காகக் காத்திருப்பார்கள். {அந்த} யுகத்தால் தள்ளப்பட்ட மனிதர்கள் நாத்திகர்களாகவும், திருடர்களாகவும் இருப்பார்கள். அக்காலத்தில், ஓடைகளின் கரைகளைக் கூடத் தங்கள் மண்வெட்டிகளால் தோண்டி, அதில் தானியங்களை விதைப்பார்கள். அந்த இடம் கூட அவர்களுக்கு அந்தக்காலத்தில் தரிசாகத்தான் இருக்கும். இறப்பவர்ளுக்கு {மனிதர்களுக்குத்} தேவர்களுக்கும் சடங்குகள் செய்வதில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்கள் கூடப் பேராசை கொண்டவர்களாகவும், அடுத்தவர்களின் உடைமைகளை அனுபவிப்பவர்களாகவும் இருப்பார்கள். தந்தை மகனுக்கு உரியதை அனுபவிப்பான், மகன் தந்தையின் உடைமைகளை அனுபவிப்பான். அக்காலத்தில் சாத்திரங்களால் விலக்கப்பட்ட இன்பங்களைக் கூட மனிதர்கள் அனுபவிப்பார்கள்.

அந்தணர்கள் வேதங்களை மரியாதைகுறைவாகப் பேசி, நோன்புகளை நோற்காமல், வீண் தர்க்கத்திற்கு அடிமையாகி, வேள்விகளையோ ஹோமங்களையோ செய்யாதிருப்பார்கள். யுக்திவாதங்களான போலி அறிவியலால் ஏமாற்றப்பட்டு, தாழ்ந்த குறுகிய அனைத்திலும் தங்கள் இதயத்தை நிலைக்கச் செய்வார்கள். பயிரிடுவதற்குத்தகாத தாழ்ந்த நிலங்களை {களர்நிலங்களை} உழுது, ஒரு வயது கொண்ட கன்றுகளையும் மாடுகளையும், கலப்பையை இழுக்கவும், சுமைகள் சுமக்கவும் பயன்படுத்துவார்கள். மகன்கள் தங்கள் தந்தைகளைக் கொல்வார்கள்; தந்தைகள் தங்கள் மகன்களைக் கொன்று எந்த மானக்கேடும் அடையாமல் இருப்பார்கள். இத்தகு செயல்கள் செய்து, துயரங்களில் இருந்து தங்களைக் காத்துக் கொண்டு, அதைப் {அச்செயலை} புகழவும் செய்வார்கள். முழு உலகமும் மிலேச்ச வகை நடத்தைகள், கருத்துகள், விழாக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வேள்விகள் நின்று போகும், மகிழ்ச்சி எங்குமிருக்காது. பொதுமகிழ்ச்சி என்பது மறைந்தே போகும். ஆதரவற்றவர்கள், நண்பர்களற்றவர்கள் ஆகியோரிடம் இருந்து அவர்களது உடைமைகளையும் அறிவையும் மனிதர்கள் திருடுவார்கள்.

குறைந்த சக்தியும் பலமும் கொண்டு, ஞானமற்று, பேராசையும், முட்டாள்த்தனமும் கொண்டு, பாவச் செயல்கள் செய்யும் மனிதர்கள், அலட்சியமான வார்த்தைகளைச் சொல்லி, தீயவர்கள் கொடுக்கும் பரிசுகளைப் பெற்றுக் கொள்வார்கள். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, பூமியின் மன்னர்களின் இதயம் ஞானமற்றுப் பாவத்திலேயே லயித்திருக்கும், அவர்கள் தங்கள் ஞானம் குறித்துக் கர்வமாகப் பேசி, ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி சவால் விடுப்பார்கள். அந்தக் காலத்தின் முடிவில் க்ஷத்திரியர்களும் பூமியின் முட்களாவார்கள். பேராசை கொண்டு, கர்வம் பெருகி, தீமை செய்து, (தங்கள் குடிகளைக்) காக்க விரும்பாமல், தண்டனை கொடுப்பதில் மட்டும் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். நல்லவர்கள், நேர்மையானவர்கள் ஆகியோர், துயரத்தால் அழுதாலும், அவர்களிடம் இரக்கம் காட்டாமல் தொடர்ச்சியாகத் தாக்கும் க்ஷத்திரியர்கள், அவர்களது மனைவியரையும், செல்வத்தையும் கொள்ளையடிப்பார்கள். எவனும் எந்தப் பெண்ணையும் (திருமணத்திற்காக) கேட்கமாட்டான். எவனும் எந்தப் பெண்ணை (திருமணத்திற்காக) கொடுக்கவும் மாட்டான். ஆனால் பெண்கள், யுகத்தின் முடிவு வரும்போது, தாங்களாகவே தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

அறியாமையில் மூழ்கிய ஆன்மாக் கொண்ட புவியின் மன்னர்கள், தாங்கள் கொண்டிருப்பதில் அதிருப்தி கொண்டு, அது போன்ற நேரத்தில் {கலிகாலத்தில்}, தங்கள் பலத்தைப் பிரயோகித்து எல்லா வழிகளிலும் குடிமக்களிடம் இருந்து திருடுவார்கள். சந்தேகமற முழு உலகமும் மிலேச்சமயமாகும். யுக முடிவின் போது, வலக்கை இடதையும், இடம் வலத்தையும் ஏமாற்றும். போலிப் புகழ் கொண்ட கல்வியாளர்கள் உண்மையைச் சுருக்குவார்கள். முதியவர்கள் புத்தியற்ற இளைஞர்களையும், இளைஞர்கள் மனத்தளர்ச்சி கொண்ட முதியவர்களையும் வஞ்சிப்பார்கள். கோழை, வீரன் என்ற போலிப்புகழ் பெற்றிருப்பான். வீரர்கள், கோழைகளைப் போல உற்சாகமற்று இருப்பார்கள். யுக முடிவின் போது, மனிதர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கையற்று இருப்பார்கள். பேராசையும், முட்டாள்தனமும் உலகம் முழுவதும் இருக்கும். அனைவரும் ஒரே வகை உணவை உண்பார்கள். பாவம் வளர்ந்து செழிப்படையும், அதே வேளையில் அறம் மங்கி, பிரகாசம் இழக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோர் தங்கள் வகைக்கு யாரையும் மிச்சம் வைக்காமல் மறைந்து போவார்கள். யுக முடிவின் போது, மனிதர்கள் அனைவரும், எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே வகையின் உறுப்பினர்களாவார்கள். தந்தைகள் மகன்களை மன்னிக்க மாட்டார்கள், பிள்ளைகள் தந்தைகளை மன்னிக்க மாட்டார்கள். முடிவு நெருங்கும்போது, மனைவியர் தங்கள் கணவர்களுக்காகக் காத்திருந்து சேவை செய்ய மாட்டார்கள்.

மேலும், இது போன்ற ஒரு நேரத்தில், மனிதர்கள், கோதுமை மற்றும் யவை {பார்லி} ஆகியவற்றை முதன்மையான உணவாகக் கொண்டிருக்கும் நாடுகளைத் தேடிச் செல்வார்கள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஆண்களும் பெண்களும், தங்கள் நடத்தைகளில் சுதந்திரமானவர்களாக இருந்து, அடுத்தவர் குறையைப் பொறுக்க முடியாதவர்களாக இருப்பார்கள். ஓ யுதிஷ்டிரா, இப்படி முழு உலகமும் மிலேச்சமயமாகும். மனிதர்கள் ஸ்ரார்த்தக் கொடை கொடுத்துத் தேவர்களைத் திருப்தி செய்வதை நிறுத்திவிடுவார்கள். எவரும் யாருடைய வார்த்தைகளையும் கேட்கமாட்டார்கள். ஒருவரும் மற்றவரால் குருவாகக் கருதப்பட மாட்டார்கள். ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, உலகம் முழுவதையும் அறிவிலித்தனம் எனும் இருள் மூழ்கடிக்கும். மனிதர்களின் வாழ்நாள் பதினாறு வருடங்களால் அளக்கப்படும், அந்த வயதை அடையும்போது இறப்பு அவர்களுக்கு ஏற்படும். ஐந்து அல்லது ஆறு வயதுடைய சிறுமிகள் பிள்ளைகளைப் பெறுவார்கள். ஏழு அல்லது எட்டு வயதுடைய சிறுவர்கள் தந்தைகளாவார்கள். ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, யுக முடிவின் போது மனைவியானவள் கணவனிடமோ, கணவன் மனைவியிடமோ திருப்தியடைய மாட்டார்கள்.

மனிதர்களுக்கு உடைமைகள் குறைவாகவே இருக்கும், மனிதர்கள் போலியாக மதக்குறிகளைத் தாங்கி நிற்பார்கள். பொறாமையும், தீய குணமும் உலகம் முழுதும் நிறைந்திருக்கும். யாரும் யாருக்கும் (செல்வத்தையோ அல்லது வேறு எதையுமோ) தானம் செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். உலகத்தில் குடியேற்றும் இல்லாத பகுதிகள் {மக்கள் தொகை குறைந்த பகுதிகள்} பற்றாக்குறை மற்றும் பஞ்சத்தால் துன்புறும். நெடுஞ்சாலைகள் அனைத்தும், காமம் நிறைந்த தீய குணம் கொண்ட ஆண்களாலும், பெண்களாலும் நிறைந்திருக்கும். அது போன்ற நேரத்தில், பெண்கள் தங்கள் கணவர்கள் மீது வெறுப்பைக் காட்டி மகிழ்வார்கள். யுக முடிவு வரும்போது, சந்தேகமற மனிதர்கள் அனைவரும் மிலேச்ச முறையைக் கைக்கொண்டு, அவர்களிடம் இருந்து வேறுபாடு இல்லாமல் அனைத்தையும் உண்பவர்களாகி, தங்கள் செயல்கள் அனைத்திலும் கடுமையாக இருப்பார்கள். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா} பேராசையால் உந்தப்பட்ட மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி விற்கவும், வாங்கவும் {கொள்முதல் செய்தலையும்} செய்வார்கள். கட்டளைகளை {ஆசாரம்} அறியாத மனிதர்கள், சடங்குகளையும், விழாக்களையும் நடத்துவார்கள். யுக முடிவு நெருங்கும்போது நிச்சயம் மனிதர்கள் மேற்கண்டவாறே நடப்பார்கள்.

யுக முடிவு வரும்போது, தங்கள் தேவைகளால் உந்தப்பட்ட மனிதர்கள், கடுஞ்செயல் புரிந்து, ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசுவார்கள். மனிதர்கள் ஈவிரக்கம் இல்லாமல் மரங்களையும் தோப்புகளையும் அழிப்பார்கள். வாழ்வு குறித்த கவலையில் மூழ்கியபடியே மனிதர்கள் இருப்பார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பேராசையில் மூழ்கும் மனிதர்கள் அந்தணர்களைக் கொல்வார்கள். அதன்பிறகு, தங்களுக்குப் பொருத்தமான அவர்களது {அந்தணர்களின்} உடைமைகளை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். சூத்திரர்களால் ஒடுக்கப்படும் மறுபிறப்பாளர்கள், அச்சத்தால் துயருற்று, "ஓ", "அய்யோ" என்று கதறியபடி, பாதுகாக்க யாருமின்றி உலகத்தில் திரிவார்கள். யுக முடிவு வரும்போது, மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொல்லத் தொடங்கி, தீயவர்களாகவும், கடுமையானவர்களாகவும் ஆகி, விலங்கு வாழ்வு வாழ்வார்கள்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்கள் கூட, கள்வர்களால் துன்புற்று, காக்கைகளைப் போலப் பயத்தால் வேகமாகப் பறந்து, நதிகளிலும், மலைகளிலும், அடையமுடியாத கடினமான பகுதிகளிலும் தஞ்சமடைவார்கள். தீய ஆட்சியாளர்களால் கடுமையான வரிச்சுமைக்கு எப்போதும் உட்படுத்தப்படும் மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்கள், ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தப் பயங்கரமான நேரங்களில், அனைத்து பொறுமையையும் இழந்து, தகாத செயல்கள் புரிந்து, சூத்திரர்களின் சேவகர்கள் ஆவார்கள். சூத்திரர்கள் சாத்திரங்களை விளக்குவார்கள், அந்தணர்கள் அவர்களுக்காகக் காத்திருந்து அதைக் கேட்பார்கள். அது போன்ற விளக்கவுரைகளைக் கேட்டு, அவற்றைத் தங்கள் வழிகாட்டிகளாக எண்ணி, தங்கள் கடமைக்கான வழிகளை நிர்ணயிப்பார்கள். தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்களாவார்கள், அனைத்துப் பொருட்களின் வழிகளும் முரண்பாடாகவே இருக்கும். தேவர்களைக் கைவிடும் {துறந்த} மனிதர்கள், எலும்புகளையும், சுவரில் பதிக்கப்பட்ட பிற பீடங்களையும் வணங்குவார்கள். யுக முடிவின் போது, சூத்திரர்கள், பிராமணர்களுக்காகக் காத்திருந்து சேவை செய்வதை நிறுத்துவார்கள். பெரு முனிவர்களின் ஆசிரமங்கள், அந்தணர்களின் கல்விக்கூடங்கள், தேவர்களுக்குப் புனிதமான இடங்கள், வேள்வி மண்டபங்கள், புனிதமான குளங்கள் மற்றும் பூமி ஆகியவற்றை மறைத்து கல்லறைகளும், எலும்புகள் கொண்ட நினைவுச்சின்னங்களும், சிதைவடைந்த தூண்களுமே இருக்கும். தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் எதுவும் அங்கே இருக்காது. இவை அனைத்தும் யுகமுடிவின் போது நடைபெறும், இவை அனைத்தும் யுக முடிவின் குறீயீடுகள் என்பதை அறிந்து கொள்வாயாக.

{கலி} யுக முடிவு வரும்போது, கடுமையாகும் மனிதர்கள், அறத்தை இழந்து, அனைத்தையும் உண்ணும் ஊனுண்ணிகளாகி {புலால் உண்பவர்களாகி}, போதைதரும் பானங்களுக்கு அடிமையாவார்கள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மலருக்குள் மலரும், கனிக்குள் கனியும் உண்டாகும் அப்போது யுகம் ஒரு முடிவுக்கு வரும். யுக முடிவு நெருங்கும்போது, காலமற்ற காலத்தில் மேகங்கள் மழையைப் பொழியும். அந்நேரத்தில், மனிதர்களின் விழாச் சடங்குகள் சரியான உரிய வரிசையில் நடக்காது. சூத்திரர்கள் பிராமணர்களுடன் மோதுவார்கள். உலகம் முழுவதும் மிலேச்சர்கள் நிறைந்ததாகும். வரிச்சுமையின் காரணமாக அந்தணர்கள் பயத்தில் அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடுவார்கள். மனிதர்களுக்குள் இருந்த வேற்றுமைகள் அனைத்தும் மறைந்து அவர்கள் நடத்தைகள் அனைத்தும் ஒன்றாகும். கௌரவப் பணிகள் மற்றும் அலுவல்களால் துன்புற்ற மனிதர்கள், வனம் நிறைந்த பகுதிகளுக்குப் பின்வாங்கி, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு வாழ்வார்கள். இப்படிப் பாதிப்படைந்த உலகத்தில், நடத்தையில் நேர்மையற்ற காட்சிகள் எங்கும் காணப்படும். சீடர்கள் குருவின் அறிவுரைகளை இல்லாமல் செய்து {ஏற்காமல்}, அவர்களை {குருக்களை} காயப்படுத்தக்கூட முயல்வார்கள். வறிய நிலையிலுள்ள குருக்களை மனிதர்கள் அவமதிப்பார்கள். நண்பர்கள், உறவினர்கள், சம்பந்திகள் ஆகியோர், ஒரு மனிதன் சேகரித்த செல்வத்துக்காக அவனிடம் நட்புடன் இருப்பார்கள்.

யுக முடிவு வரும்போது, அனைவரும் தேவையில் இருப்பார்கள். தொடுவானத்தின் அனைத்துப் புள்ளிகளும் சுடர்விட்டபடி இருக்கும். நட்சத்திரங்களும், நட்சத்திரக்கூட்டங்களும் ஒளியற்றே இருக்கும். கோள்களும் கோள் சேர்க்கைகளும் அமங்களமாக இருக்கும். காற்றின் பாதைகள் குழப்பமுற்று கலங்கிப் போகும், தீமையை முன் குறித்தபடி எண்ணிலடங்கா எரிகற்கள் வானத்தில் ஒளிர்ந்தபடி செல்லும். சூரியன், அதே வகைக் கொண்ட மேலும் ஆறு சூரியன்களுடன் தோன்றும். சுற்றிலும் முழக்கங்களும், நெருப்பும் ஏற்படும். சூரியன் எழும் மணியிலிருந்து மறைவது வரை ராகுவால் மறைக்கப்பட்டிருப்பான். ஆயிரம் கண் கொண்ட தெய்வம் {இந்திரன்}, காலமற்ற காலத்தில் மழையைப் பொழிவான். யுக முடிவு வரும்போது, பயிர்கள் அபரிமிதமாக வளராது. பெண்கள் எப்போதும் கூர்மையான பேச்சு கொண்டவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும், அழுவதில் விருப்பமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் கணவர்களின் கட்டளைகளைப் பின்பற்றவே மாட்டார்கள்.

யுக முடிவு வரும்போது, மகன்கள் தந்தைகளையும், தாய்களையும் கொல்வார்கள். பெண்கள் கட்டுபாடற்றவர்களாகி, தங்கள் கணவர்களையும், மகன்களையும் கொல்வார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, யுக முடிவு வரும்போது, ராகு சூரியனை காலமற்ற காலத்தில் விழுங்குவான். அனைத்துப் புறங்களிலும் நெருப்புகள் சுடர்விட்டு எரியும். பயணிகளுக்கு, அவர்கள் கேட்டாலும் உணவும், குடிநீரும், உறைவிடமும் கிடைக்காததால், தங்கள் தேவைகளால் உந்தப்பட்டு வழியில் படுத்துக் கிடப்பார்கள். யுக முடிவு வரும்போது, காகங்கள், பாம்புகள், கழுகுகள், ராஜாளிகளும் பிற விலங்குகளும் பறவைகளும் முரண்பட்ட பயங்கராமன ஒலியெழுப்பும். யுக முடிவு வரும்போது, மனிதர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பணியாட்களைக் கைவிட்டுத் துறப்பார்கள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, யுகத்தின் முடிவு வரும்போது, மனிதர்கள், தாங்கள் தொழில் செய்யும் நாடுகள், திசைகள், நகரங்களை விட்டு, புதியவற்றை {புதிய நாடு, திசை, நகரம் ஆகியவற்றை} ஒன்றன் பின் ஒன்றாக அடைவார்கள். மனிதர்கள் "ஓ பிதாவே" {தந்தையே}, "ஓ சுதனே" {மகனே} என்று உச்சரித்தவாறு உலகமெங்கும் திரிந்து, அதே போன்ற இன்னும் பல பயங்கரமான அலறல்களை ஒலிப்பார்கள்.

அந்தப் பயங்கராமன காலங்கள் முடிந்த பிறகு, புதிய படைப்புகள் தொடங்கும். மனிதர்கள் மீண்டும் படைக்கப்பட்டுப் பிராமணர்களில் தொடங்கும் நால்வகையாகப் பிரிவார்கள். அந்நேரத்தில், மனிதர்கள் அதிகரிக்கவும், மகிழ்ச்சிக்குத்தக்க முன்ஜாக்கிரதையோடு, மீண்டும் அனுகூலம் பெற்றவர்களாவார்கள். சூரியன், சந்திரன், பிருஹஸ்பதி {குரு = வியாழன் = jupiter} ஆகியவை ஒரே ராசிக்குள் {கடக ராசிக்குள்} புகுந்து பூச நட்சத்திரத்தில் {எட்டாவது நட்சத்திரத்தில்} ஒன்றாக இருக்கும்போது கிருத காலம் தொடங்கும். காலத்துக்குகந்த மழை பொழிய மேகங்கள் கூடும். நட்சத்திரங்களும், நட்சத்திரக்கூட்டங்களும் மங்களகரமான நிலையை அடையும். கோள்களும், தங்கள் சுற்றுப்பாதையில் முறையாகச் சுழன்று, மிகவும் மங்களகரமாக நிலையை அடையும். சுற்றிலும் செழுமையும், அபரிமிதமான ஆரோக்கியமும் அமைதியும் இருக்கும். பிறகு, நியமிக்கப்பட்ட நேரத்தில் கல்கி என்ற பெயர் படைத்த அந்தணர் பிறப்பார். அவர் விஷ்ணுவைப் புகழ்ந்தபடி, பெரும் சக்தியும், புத்திக்கூர்மையும், பெரும் பராக்கிரமும் கொண்டவராக இருப்பார். அவர் ஒரு மங்களகரமான அந்தணக் குடும்பத்தில் சம்பலம் என்ற கிராமத்தில் பிறப்பார். வாகனங்கள், ஆயுதங்கள், வீரர்கள், தளவாடங்கள், பாதுகாப்புக் கவசங்கள் போன்றவை அவர் நினைக்கும்போது அவருக்குக் கிடைக்கும். அவர் {கல்கி} மன்னர்களுக்கெல்லாம் மன்னராகி, அறத்தின் பலத்தால் எப்போதும் வெற்றி பெறுபவராக இருப்பார். அவர் மீண்டும் வகைகளை {வர்ணங்களை} மீட்டு, உயிரினங்கள் நிறைந்த, போக்கில் முரண்பாடு கொண்ட பூமியில் அமைதியை ஏற்படுத்துவார். பெரும் அறிவாற்றல் கொண்ட அந்தப் பிரகாசமிக்க அந்தணர் {கல்கி} தோன்றியதும், அனைத்தையும் அழிப்பார். அவரே அனைத்தையும் அழிப்பவராகவும், புதிய யுகத்தைத் தொடங்கி வைப்பவராகவும் இருப்பார். பிராமணர்கள் சூழ இருக்கும் அந்த அந்தணர் {கல்கி}, தாழ்ந்த இழிவான மனிதர்கள் எங்கெல்லாம் தஞ்சமடைந்திருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று அந்த மிலேச்சர்கள் அனைவரையும் அடியோடு அழிப்பார். 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Thursday, June 26, 2014

நான் நாராயணன்! - வனபர்வம் பகுதி 188

I am Narayana! | Vana Parva - Section 188 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சிறுவனாக இருந்த நாராயணன் தன்னைக் குறித்துச் சொல்லி மறைந்து போதல்; மார்க்கண்டேயர் அந்த நாராயணன் கிருஷ்ணனே என்று பாண்டவர்களுக்குச் சொல்லி, அவரிடம் புகலிடம் கோரச் சொல்லல்; கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல்...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிறகு அந்தத் தெய்வம், "ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, உண்மையில் தேவர்களும் என்னை அறிய மாட்டார்கள். இருப்பினும், நான் உம்மிடம் திருப்தி கொண்டிருப்பதால், இப்அண்டத்தை எப்படி உருவாக்கினேன் என்பதை உமக்குச் சொல்கிறேன்! ஓ! மறுபிறப்பாள முனிவரே {பிராமண முனிவரே மார்க்கண்டேயரே}, நீர் உமது மூதாதையர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து கொண்டு, எனது பாதுகாப்பையும் கோரினீர் {என்னைச் சரணடைந்தீர்}. நீர் என்னை உமது கண்களால் கண்டிருக்கிறீர்! உமது ஆன்மத் தகுதியும் அதிகமானதே! பழங்காலத்தில் நீர் என்பது நாரம் என்று அழைக்கப்பட்டது. நீரே எனது வசிப்பிடமாக {அயணமாக} இருப்பதால், நான் நாராயணன் (நீரை வசிப்பிடமாகக் கொண்டவன்) என்று அழைக்கப்படுகிறேன்.


ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {மார்க்கண்டேயரே} அனைத்துக்கும் மூலமாக, நித்தியமானவனாக, மாறாதவனாக இருக்கும் நானே நாராயணன். நானே அனைத்தையும் படைக்கிறேன்; நானே அனைத்தையும் அழிக்கிறேன். நானே விஷ்ணு, நானே பிரம்மன், நானே தேவர்கள் தலைவனான சக்ரன் {இந்திரன்}, நானே மன்னன் வைஸ்ரவணன், நானே இறந்த ஆவிகளின் தலைவனான யமன். நானே சிவன், நானே சோமன், நானே படைக்கப்பட்டவற்றுக்குத் தலைவனான காசியபர். மேலும், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, நானே தத்ரியும் விதத்ரியுமாவேன்; நானே உருவம் கொண்ட வேள்வியுமாவேன். நெருப்பே எனது வாய், பூமி எனது பாதம், சூரியனும் சந்திரனும் எனது கண்கள்; சொர்க்கம் எனது தலையில் இருக்கும் கிரீடம், ஆகாயமும், திசைப் புள்ளிகளும் எனது காதுகள்; எனது வேர்வையில் இருந்தே நீர் பிறக்கிறது. திசைப் புள்ளிகளுக்கு மத்தியில் இருப்பதே எனது உடல்; காற்றே எனது மனமாகும்.

நான் அபரிமிதமான பரிசுகள் கொடுத்து பல நூற்றுக்கணக்கான வேள்விகளைச் செய்திருக்கிறேன். நான் தேவர்களின் வேள்விகளில் எப்போதும் இருக்கிறேன்; வேதங்களை அறிந்து வேள்வியை நடத்துபவர்கள் எனக்குக் காணிக்கைகளைக் கொடுக்கின்றனர். இப்பூமியில் மனிதர்களை ஆளும் க்ஷத்திரியத் தலைவர்கள், சொர்க்கமடைய விரும்பி வேள்விகளைச் செய்கின்றனர். அதே மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளை அடைவதற்கு விரும்பியே வைசியர்களும் தங்கள் வேள்விகளைச் செய்கின்றனர். அனைவரும் அது போன்ற நேரங்களில் சடங்குகளுடன் என்னை வழிபடுகின்றனர். சேஷனின் உருவத்தைக் கொண்டு நான்கு கடல்களையும், மேருவையும், மந்தரத்தையும் கொண்ட பூமியை (எனது தலையில்) நானே தாங்குகிறேன்.

ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே, மார்க்கண்டேயரே}, பன்றி உரு கொண்டு, நீரில் மூழ்கிய பூமியை பழங்காலத்தில் உயர்த்தியவன் நானே. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, குதிரையின் வாயில் வரும் நெருப்பாக {வடவாமுகாக்னி} மாறி, நீரை {கடலை} குடித்து, மீண்டும் அவற்றை உருவாக்குவது நானே. என் சக்தியின் தொடர்ச்சியாக, எனது வாய், கரங்கள், தொடைகள், பாதங்கள் ஆகியவற்றில் இருந்து பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் படிப்படியாகத் தோன்றினார்கள். என்னிடமிருந்தே ரிக், சாமம், யஜூர், அதர்வன வேதங்கள் எழுந்தன. நேரம் வரும் போது இவை அனைத்தும் என்னுள்ளேயே நுழைகின்றன. தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் அந்தணர்களும், அமைதியையே உயர்ந்த பண்பாக மதிப்பவர்களும், தங்கள் ஆன்மாக்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், ஞானத்தை விரும்புபவர்களும், காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, புவிசார்ந்த பொருட்களைத் துறந்தவர்களும், தங்கள் பாவங்களை முழுமையாகக் கழுவிக் கொண்டவர்களும், கனிவும் நல்லொழுக்கமும் கொண்டு கர்வம் அகன்றவர்களும், ஆன்மா குறித்த முழு அறிவு கொண்டவர்களும் ஆழ்ந்த தியானத்துடன் என்னையே வழிபடுகிறார்கள்.

சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும் நெருப்பு {பிரளய கால நெருப்பு} நானே, அப்பெயரில் {சம்வர்த்தகம் என்ற பெயரில்} அழைக்கப்படும் காற்றும் நானே, அப்பட்டத்தைச் சூட்டியிருக்கும் {சம்வர்த்தகம் என்ற பட்டத்தைச் சூட்டியிருக்கும்} சூரியனும் நானே, அந்தப் பதவியைக் {சம்வர்த்தகம் என்ற பதவியைக்} கொண்ட நெருப்பும் நானே. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரங்கள் அனைத்தும் எனது தோலில் உள்ள துளைகள் {நுண்துளைகள்} என்பதை அறிவீராக. ரத்தினங்களின் சுரங்கங்களான கடலும், நான்கு திசைப்புள்ளிகளும், ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, எனது உடையும், படுக்கையும், இல்லமும் ஆகும் என்பதை அறிவீராக. தேவர்களின் காரியங்களுக்குச் சேவை செய்யவே அவை என்னால் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, காமம், கோபம், மகிழ்ச்சி, அச்சம், புத்திமயக்கம் {மோகம்} ஆகியனவும் என்னுடைய பல உருவங்களே என்பதை அறிவீராக.

ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, உண்மை, தானம், கடுந்தவம், அமைதி, எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமை {அஹிம்சை} ஆகியவற்றைப் பயில்வதால் மனிதர்கள் அடையும் எதுவும், அது போன்ற நற்காரியங்களும், எனது ஏற்பாட்டாலேயே அடையப்படுகின்றன. என் கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு, என் உடலுக்குள் திரியும் மனிதர்களின் உணர்வுகள் என்னால் அதிகப்படுத்தப்படுகின்றன. அவர்கள் தங்கள் விருப்பப்படி திரிவதில்லை, மாறாக என்னாலே அவர்கள் திரிய வைக்கப்படுகின்றனர். வேதங்கள் முழுமையும் கற்ற ஆன்ம அமைதி கொண்ட மறுபிறப்பாள அந்தணர்கள், தங்கள் கோபத்தை அடக்கி, பல்வேறுபட்ட வேள்விகளின் மூலம் உயர்ந்த வெகுமதியை அடைந்திருக்கின்றனர். இருப்பினும் அவ்வெகுமதியானது, பேராசை, குறுகிய மனம், அருளற்ற அசுத்தமான ஆன்மாக்கள் ஆகியற்றால் பீடிக்கப்பட்ட மதிப்பற்றவர்களாலும், தீச்செயல் செய்யும் மனிதர்களாலும் அடையமுடியாததாகும். எனவே, ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, ஆன்மாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பவர்களால் இவ்வெகுமதி அடையப்படும். மூடர்களாலும் அறியாமை கொண்டவர்களாலும் தவத்தால் மட்டுமே அடையக்கூடிய உயர்ந்த தகுதியின் கனியான அதை {அவ்வெகுமதியை} அடைய முடியாது.

ஓ! மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, அறமும், அறநெறிகளும் குறைந்து, பாவங்களும், ஒழுக்கமின்மையும் {அறநெறிமீறலும்} அதிகரிக்கும் நேரத்தில், நான் என்னைப் புதிய உருவங்களில் படைத்துக் கொள்கிறேன். ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, தேவர்களில் முதன்மையானவர்களாலும் கொல்லப்பட முடியாத தீங்கிழைக்கும் கடுமையானவர்களுமான தைத்தியர்களும் ராட்சசர்களும் பூமியில் பிறக்கும்போது, தீமைகளை அகற்றி, அமைதியை மீட்க நான் அறம்சார்ந்த மனிதர்களின் குடும்பங்களில் மனித உரு கொண்டு பிறக்கிறேன். என் மாயையால், நான் தேவர்களையும், மனிதர்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும், அனைத்து அசையாதவைகளையும் படைத்து, பிறகு அவை அனைத்தையும் (நேரம் வரும்போது) அழிக்கிறேன். அறம் மற்றும் நன்னெறிகளைக் காக்க நான் மனித உருவம் கொள்கிறேன். செயலுக்கான காலம் வரும்போது, மீண்டும் நான் கற்பனைக்கெட்டாத வடிவங்களை எடுக்கிறேன்.

கிருத யுகத்தில் நான் வெண்மையாகவும், திரேதா யுகத்தில் மஞ்சளாகவும், துவாபர யுகத்தில் சிவப்பாகவும், கலி யுகத்தில் கறுப்பாகவும் ஆகிறேன். கலி காலத்தில், நாலில் மூன்று பங்கு அறமீறல்கள் நடக்கின்றன. (கால் பங்கே அறநெறி இருக்கிறது). அந்த யுகத்தின் முடிவில், மரணத்தின் கடுமையான உருவத்தைக் கொண்டு நான் தனியாக அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட மூன்று உலகங்களையும் அழிக்கிறேன். மூன்று அடிகளால் நான் முழு அண்டத்தையும் அடக்குகிறேன். நானே இப்அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறேன்; நானே மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறேன்; நானே கர்வபங்கம் செய்பவனாக இருக்கிறேன்; நான் எங்கும் இருக்கிறேன்; நான் எல்லையற்றவனாக இருக்கிறேன்; நான் புலன்களின் தலைவனாக இருக்கிறேன்; என் வலிமை பெரிதானது. ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, தனியாகவே நான் காலச்சக்கரத்தைச் சுழற்றுகிறேன்; நான் உருவமற்றவனாக இருக்கிறேன்; நான் அனைத்து உயிர்களையும் அழிப்பவனாக இருக்கிறேன்; எனது படைப்புகளின் அனைத்து முயற்சிகளுக்கும் நானே காரணனாக இருக்கிறேன். ஓ! முனிவர்களின் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, எனது ஆன்மா அனைத்து உயிரினங்களிலும் ஊடுருவியிருக்கிறது {அனைத்திலும் நான் வியாபித்திருக்கிறேன்}. ஆனால், ஓ! அனைத்து மறுபிறப்பாளர்களிலும் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, என்னை ஒருவரும் அறிவதில்லை. அனைத்து உலகங்களிலும் பக்தியுடனும் அர்பணிப்புடனும் நானே வணங்கப்படுகிறேன்.

ஓ! மறுபிறப்பாளரே {மார்க்கண்டேயரே}, எனது வயிற்றில் நீங்கள் என்னவெல்லாம் வலியை உணர்ந்திரோ, ஓ! பாவமற்றவரே {மார்க்கண்டேயரே, அவை அனைத்தும் உமது மகிழ்ச்சிக்காகவும், நற்பேறுக்காகவுமே என்பதை அறிவீராக. அவ்வுலகத்தில் என்னவெல்லாம் அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கண்டீரோ அவை அனைத்தும் எனது ஆன்மாவால், இருப்புக்குக் கொண்டு வந்து எழுப்பப்பட விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} எனது உடலில் பாதியாவான்; நான் நாராயணன் என்று அழைக்கப்படுகிறேன். நான் சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தாங்கி நிற்கிறேன். ஓ! மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, யுகங்களின் நீளத்தில் ஆயிரம் மடங்கு அளக்கக்கூடிய காலத்திற்கு, அண்டத்தின் ஆன்மாவான நான், உயிரினங்களை உணர்வற்றதாக இருக்கச் செய்து {பிரம்மனான நான்} உறங்குகிறேன். ஓ! மறுபிறப்பாள முனிவர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இப்படியே அந்த முழுக் காலமும், நான் முதிர்ந்தவனாக இருந்தும் சிறுபிள்ளையின் உருவத்தில், பிரம்மன் விழிக்கும் வரை எப்போதும் இங்கேயே இருக்கிறேன்.

ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, நான் உம்மிடம் திருப்தி கொண்டிருக்கிறேன். ஓ! மறுபிறப்பாள  முனிவர்களில் வழிபடத்தகுந்தவரே {மார்க்கண்டேயரே} பிரம்மமான நான் உமக்குத் திரும்பத் திரும்ப வரங்களை அளித்திருக்கிறேன். அசைவன, அசையாதன என அனைத்தும் அழிக்கப்பட்டதையும், ஒரே பெரும் நீர் பரப்பையும் கண்ட நீர் துன்பத்தால் தாக்கப்பட்டீர். நான் அதை அறிந்தேன், எனவேதான் நான் உமக்கு (எனது வயிற்றுக்குள் இருக்கும்) அண்டத்தைக் காட்டினேன். நீர் எனது உடலுக்குள் இருந்து முழு உலகத்தையும் கண்ட போது, உணர்விழந்து, ஆச்சரியத்தில் மூழ்கினீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, இதன் காரணமாகவே நீர் விரைவாக எனது வாய்வழியாக வெளியேற்றப்பட்டீர். நான் (இப்போது) உம்மிடம், தேவர்களாலும், அசுரர்களாலும் புரிந்து கொள்ள இயலாத ஆன்மாவைக் குறித்துச் சொன்னேன். பெரும் தவசியான, புனிதமான பிரம்மா விழிக்காத வரை, ஓ! மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் இங்கேயே வசிக்கலாம். அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} விழித்த பிறகு, ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, நான் தனியாக உடலுடன் கூடிய அனைத்து உயிர்களையும் படைத்து, ஆகாயம், பூமி, ஒளி, வளிமண்டலம், நீர் என உண்மையில் அனைத்து அசைவன மற்றும் அசையாதன ஆகிய (நீர் கண்டிருக்கக்கூடிய) உயிரினங்களையும் பூமியில் படைப்பேன்!" என்றான் {சிறுவனாக இருந்த நாராயணன்}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்ன அந்த அற்புத தெய்வம் {நாராயணன்}, ஓ! மகனே {யுதிஷ்டிரா}, எனது காட்சியில் இருந்து மறைந்து போனான்! பிறகு தான் நான் இந்தப் பலதரப்பட்ட அற்புதமான படைப்பு உயிர் பெறுவதைக் கண்டேன். ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இந்த அற்புதமான அனைத்தையும் யுகத்தின் முடிவில், ஓ! அறம்சார்ந்த அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, சாட்சியாக இருந்து நான் கண்டேன். பழங்காலத்தில் என்னால் பார்க்கப்பட்ட, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தத் தெய்வம், உனது உறவினனாக இருக்கும் இந்த ஜனாதர்த்தனனே {கிருஷ்ணனே}. எனக்கு அளிக்கப்பட்ட வரத்தின் தொடர்ச்சியாகவே, எனது ஞாபக சக்தி குறையவில்லை. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, மரணத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் எனது வாழ்வின் காலம் மிக நீண்டது. பழமையான பெருந்தலைவனான இந்த ஹரியே, வலிமை நிறைந்த கரங்கள் கொண்டவனாக விருஷ்ணி குலத்தில் கிருஷ்ணனாகப் பிறந்து இவ்வுலகில் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலக் காணப்படுகிறான். இவனே தத்ரியும், விதத்ரியும் ஆவான். அனைத்து நித்தியமானவைகளையும் அழிப்பவன் இவனே. மார்பில் ஸ்ரீவத்சம் என்ற மருவைக் கொண்டவன் இவனே. அனைத்து உயிர்களின் தலைவனுக்குத் தலைவன் இவனே, உயர்ந்தவர்களில் உயர்ந்தவனான இவன் கோவிந்தன் என்று அழைக்கப்படுகிறான். மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்தி, எப்போதும் வெல்பவனும் அனைத்து தேவர்களிலும் முதன்மையானவனுமான இவனைக் கண்டதாலேயே எனக்குப் பழைய நினைவுகள் மீண்டும் வந்தன! இந்த மாதவனே {கிருஷ்ணனே}, அனைத்து உயிர்களுக்கும் தந்தையும் தாயுமானாவன்! குரு குலத்தின் காளைகளே {பாண்டவர்களே}, இந்தப் பாதுகாவலனிடம் உங்கள் பாதுகாப்பைக் கோருங்கள். {ரட்சகனான இவனைச் சரணடையுங்கள்}" என்றார் {மார்க்கண்டேயர்}

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட பிருதையின் மகன்களும், மனிதர்களில் காளையரான இரட்டையர்களும், திரௌபதியுடன் கூடி ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வணங்கினர். மதிப்புக்குத் தகுந்த மனிதர்களில் புலியான அவன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகன்களால் இப்படி மதிக்கப்பட்டதும், இனிமை நிறைந்த வார்த்தைகளால் அவர்களுக்கு ஆறுதல் கூறினான்"
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Wednesday, June 25, 2014

அளவிலா சக்தி மிக்கவன்! - வனபர்வம் பகுதி 187ஈ

A being of immeasurable energy! | Vana Parva - Section 185d | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சிறுவனின் வயிற்றுக்குள் மார்க்கண்டேயர் அண்டசராசரங்களையும் காணுதல்; ஆறுகள், மலைகள், விலங்குகள், பறவைகள், மிருகங்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைத்தையும் காணுதல்; வயிறு முழுமையும் திரிந்தும், அதன் எல்லையை அடையமுடியாத மார்க்கண்டேயர் அச்சிறுவனை ஒப்பற்ற தெய்வம் என்ற தீர்மானத்திற்கு வந்து அவனைச் சரணடைதல்; சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து மார்க்கண்டேயர் வெளியேறுதல்

{மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொல்லுதல்}: ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்த ஒப்பற்றவனின் வயிற்றுக்குள் திரிந்து கொண்டிருந்த போது, நான் கங்கை, சதத்ரு, சீதை, யமுனை, கௌசிகி, சர்மண்வதி, வேதரவதி, சந்திரபங்கை, சரஸ்வதி, சிந்து, விபாசை, கோதாவரி, வஸ்வோகாசரை, நளினி, நர்மதை, தமரா, காண்பதற்கினிய ஓட்டமும் புனிதமான நீரும் கொண்ட வேணை, சுவேணை, கிருஷ்ணவேணை, இராமை, மஹாநதி, விதஸ்தை ஆகிய நதிகளையும், ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் நதியான காவேரியையும், ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, விசால்யை, கிம்புருனை ஆகிய நதிகளையும் அவனுள் கண்டேன். இந்த அனைத்து நதிகளையும், பூமியின் இன்னபிற நதிகளையும் நான் அங்குக் கண்டேன்.


ஓ! பகைவர்களை அழிப்பவனே {யுதிஷ்டிரா}, முதலைகளும், சுறாக்களும் நிறைந்து, ரத்தினங்களின் சுரங்கமாகவும், நீரின் அற்புத கொள்ளிடமாகவும் இருக்கும் பெருங்கடலை நான் அங்குக் கண்டேன். சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சூரியன் மற்றும் சந்திரனோடு கூடிய ஆகாயம், சூரியனின் நெருப்பு போன்ற காந்தியுடன் அங்கு இருப்பதை நான் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கானகங்கள் மற்றும் தோப்புகளுடன் கூடிய பூமியையும் நான் அங்குக் கண்டேன். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பலதரப்பட்ட வேள்விகளில் ஈடுபட்டிருக்கும் பல அந்தணர்களையும், அனைத்து வகை மக்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபட்டிருக்கும் க்ஷத்திரியர்களையும், விவசாயம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் வைசியர்களையும், மறுபிறப்பாள வகையினர் அனைவருக்கும் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்திருக்கும் சூத்திரர்களையும் நான் அங்குக் கண்டேன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் ஆன்மா கொண்டவனின் வயிற்றில் உலவிக்கொண்டிருந்த போது, நான் இமயத்தையும், ஹேமகூட மலைகளையும் கண்டேன். மேலும் நிஷதம் மற்றும் வெள்ளி நிறைந்த ஸ்வேத மலைகள் ஆகியவற்றையும் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே கந்தமாதன மலையையும் கண்டேன். மேலும், ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, உயர்ந்த மலைகளான நீல மலைகளையும் நான் அங்குக் கண்டேன். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே மேருவின் தங்க மலைகளையும், மகேந்திரத்தையும், அற்புதமான மலைகளான விந்திய மலைகளையும் கண்டேன். மேலும், மலையம், பரிபாத்ரம் ஆகிய மலைகளையும் நான் அங்கே கண்டேன். இவையும், பூமியின் இன்ன பிற மலைகளும் அவனது வயிற்றுக்குள் என்னால் காணப்பட்டன. இவை அனைத்தும் ரத்தினங்களுடனும் தங்கங்களுடனும் இருந்தன.

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நான் அவனது வயிற்றில் உலவிய போது, சிங்கங்கள், புலிகள், பன்றிகள் ஆகியவற்றையும், உண்மையில், பூமியில் உள்ள பிற விலங்குகளையும் கண்டேன். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, ஓ! மனிதர்களில் புலியே, அவனது வயிற்றில் நுழைந்த நான், சுற்றித்திரிந்து, சக்ரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களின் குலம், சத்யஸ்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், குஹ்யர்கள், பித்ருக்கள், பாம்புகள், நாகங்கள், இறகு படைத்த குலங்கள், வசுக்கள், அசுவினிகள், கந்தர்வர்கள், அசுவினிகள், யக்ஷர்கள், முனிவர்கள், தைத்திய-தானவ-நாகக் கூட்டங்கள் ஆகியவர்களைக் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிங்கிகையின் மகன்களையும், தேவர்களின் அனைத்து எதிரிகளையும், உண்மையில் பூமியில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தும், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் வயிற்றில் என்னால் காணப்பட்டன.

ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, பழங்களை உண்டு, அவனது உடலில் பல நூற்றாண்டுகள் வசித்துக் கொண்டே அங்கிருந்த முழு அண்டத்தையும் சுற்றித் திரிந்தேன். இருப்பினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, என்னால் அவனது உடலின் எல்லைகளைக் காண இயலவில்லை. ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனது உடலின் எல்லைகளைக் காண்பதில் நான் தோல்வியுற்றபோதும், மனதில் பெரும் துன்பத்துடன் நான் தொடர்ந்து சுற்றித் திரிந்தேன். பிறகு, சிந்தனையாலும் செயலாலும் நான் அந்த வரம் தரும் ஒப்புயர்வற்ற தெய்வத்திடம், அவனது மேன்மையை ஏற்றுச் சரண்டைந்தேன். நான் அப்படிச் செய்ததும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, திறந்திருந்த அந்த உயர் ஆன்மா கொண்டவனின் வாய் வழியாகக் காற்றின் பலத்தால் திடீரென நான், (அவனது உடலுக்குள் இருந்து) வெளியேற்றப்பட்டேன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு நான், முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு சிறுவனின் உருவில், (மார்பில்) ஸ்ரீவத்ச மருவுடன் இருந்த அந்த அளவிடமுடியாத சக்தி கொண்டவன், ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அதே ஆலமரக் கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். மஞ்சள் ஆடையுடனும் {பீதாம்பரத்துடனும்}, சுடர் மிகும் பிரகாசத்துடனும், ஸ்ரீவத்ச மருவுடனும் கூடிய அந்தச் சிறுவன், என்னில் திருப்தி அடைந்து, புன்னகைத்தவாறே, "ஓ! மார்க்கண்டேயரே, ஓ! முனிவர்களில் சிறந்தவரே, எனது உடலில் சிறிது காலம் வசித்து மிகவும் களைத்திருக்கிறீர்! இருப்பினும் நான் உம்மிடம் பேசுவேன்" என்றான். என்னிடம் அவன் இப்படிச் சொன்னதும், எனக்குப் பேசுமளவுக்குப் புதிய பார்வை கிடைத்தது. அதைக் கொண்டு உலக மாயையில் இருந்து விடுபட்டு உண்மையான அறிவைப் பெற்றேன். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, அந்த அளவிட முடியாத சக்தி கொண்டவனின் வற்றாத பலத்தைச் சாட்சியாகக் கண்ட நான், அவனை வணங்கி, தாமிரம் போன்று பிரகாசமாகவும், கட்டுக்கோப்பாகவும், லேசான சிவப்பு நிறத்தில் விரல்களையும் கொண்டிருந்த அவனது உள்ளங்கால்களைக் கவனமாக எடுத்து எனது தலையில் வைத்து, அடக்கத்துடன் என் கரங்களைக் குவித்து, அவனை மரியாதையுடன் அணுகினேன். தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய, அனைத்திற்கும் ஆன்மாவான அந்தத் தெய்வீகமானவனை நான் மீண்டும் கண்டேன்.

குவிந்த கரங்களுடன் அவன் முன் வணங்கிய நான், அவனிடம், "ஓ! தெய்வீகமானவனே, நான் உன்னையும், உனது உயர்ந்த அற்புதமான மாயையும் அறிய விரும்புகிறேன். ஓ! சிறப்புமிக்கவனே, நான் உனது வாய்வழியாக உனது உடலுக்குள் நுழைந்ததும், முழு அண்டத்தையும் உனது வயிற்றில் கண்டேன். ஓ தெய்வீகமானவனே, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என உண்மையில் முழு அண்டத்திலும் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிர்கள் அனைத்தையும் உனது உடலில் கண்டேன். உனது அருளால், நிற்காமல் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் நான் உனது உடலில் திரிந்தாலும், எனது ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. ஓ! பெரும் தலைவா, நான் உனது விருப்பத்தாலேயே உனது உடலைவிட்டு வெளியே வந்தேன். எனது விருப்பத்தாலல்ல. ஓ! தாமரை இதழ் கண்கள் கொண்டவனே, குறைகளற்ற உன்னை நான் அறிய விரும்புகிறேன்! முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு, நீ ஏன் இங்குச் சிறுவனின் உருவத்தில் இருக்கிறாய்? இவை அனைத்தையும் எனக்கு விவரித்துச் சொல்வதே உனக்குத் தகும். ஓ! பாவமற்றவனே, முழு அண்ட மும் ஏன் உனது வயிற்றில் இருக்கிறது? ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, எவ்வளவு காலம் நீ இங்கிருப்பாய்? அந்தணர்களுக்குத் தகுந்த ஆவலால் உந்தப்பட்டே, ஓ அனைத்து தேவர்களுக்கும் தலைவா, இவை அனைத்தையும் உன்னிடம் இருந்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே அனைத்தையும் சரியாக அது நிகழ்ந்தவாறே, அனைத்து விவரங்களுடனும் சொல்வீராக. ஓ! தலைவா, புத்திக்கு எட்டாத அற்புதமான அவற்றை நானும் கண்டிருக்கிறேன்" என்றேன். இப்படி என்னால் சொல்லப்பட்டதும், தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான, அனைத்துப் பேச்சாளர்களில் முதன்மையான அவன், சுடரும் பிராகசத்துடனும், பெரும் அழகுடனும், எனக்குச் சரியாக ஆறுதல் அளிக்கும் வகையில் என்னிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்