Showing posts with label ஆடியோ. Show all posts
Showing posts with label ஆடியோ. Show all posts

Sunday, November 02, 2014

விராட பர்வம் 01 முதல் 07 பகுதிகளின் ஆடியோ கோப்புகள்

விராட பர்வம் பகுதி 01 - அசல் பதிவுக்குச் செல்ல

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க



விராட பர்வம் பகுதி 02 - அசல் பதிவுக்குச் செல்ல

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க



விராட பர்வம் பகுதி 03 - அசல் பதிவுக்குச் செல்ல

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க



விராட பர்வம் பகுதி 04 - அசல் பதிவுக்குச் செல்ல

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க



விராட பர்வம் பகுதி 05 - அசல் பதிவுக்குச் செல்ல

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க



விராட பர்வம் பகுதி 06 - அசல் பதிவுக்குச் செல்ல

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க



விராட பர்வம் பகுதி 07 - அசல் பதிவுக்குச் செல்ல

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க



விராட பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Wednesday, October 29, 2014

ஆடியோ கோப்பு - விராட பர்வம் பகுதி 8

நண்பர் திரு.ஜெயவேல் அவர்களின் மனைவி திருமதி.தேவகிஜெயவேலன் அவர்கள் விராட பர்வப் பகுதிகளை ஆடியோவாகப் பதிந்திருக்கிறார். "Live-ஆ பதிவுகளுக்கு ஆடியோ இருந்தா நல்லா இருக்குங்க!" என்று அடிக்கடி குறைபடுவார் நண்பர் ஜெயவேல். இப்போது அவரது மனைவி தேவகி அவர்களே Live பதிவைப் படித்திருக்கிறார். இது தொடர்ந்தால் நன்றாக இருக்கும். ஆடியோ கோப்புகள் செய்யும் முயற்சியை மேற்கொண்டிருக்கும்  தீபாநடராஜன், ஜெயாஅருண் மற்றும் தேவகிஜெயவேலன் ஆகிய நண்பர்களுக்கு நன்றி.

விராட பர்வம் பகுதி 8 - அசல் பதிவுக்குச் செல்ல



பதிவிலிருந்து சில வரிகள்: இப்படி மன்னன் விராடனால் கட்டளையிடப்பட்டதும், வேகமான கால்களையுடைய தூதுவர்கள் குந்தியின் மகனிடம் {பீமனிடம்} சென்று, அந்த யுதிஷ்டிரனின் தம்பியிடம் {பீமனிடம்} மன்னன் சொன்ன யாவற்றையும் சொன்னார்கள். பிறகு அந்த உயர் ஆன்ம பாண்டுவின் மகன் {பீமன} விராடனை அணுகி, தன் நோக்கத்திற்கு ஏற்ற வார்த்தைகளில், “ஓ !மன்னர்களில் முதன்மையானவரே {விராடரே}, நான் ஒரு சமையற்காரன். என் பெயர் வல்லவன் [Vallava; ballavo]{வல்லன்}ஆகும். உணவுகளைப் பக்குவப்படுத்துவதில் நான் நிபுணன். என்னைச் சமையலறையில் நியமிப்பீராக! [1]” என்றான். - See more at: http://mahabharatham.arasan.info/2014/10/Mahabharatha-Virataparva-Section8.html

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



விராட பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Friday, October 24, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி 16-18

ஆதிபர்வம் பகுதி 16 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: வெகு காலத்திற்குப் பிறகு, கத்ரு ஆயிரம் முட்டைகளையும், வினதை இருமுட்டைகளையும் இட்டனர். அவர்களது பெண் உதவியாளர்கள் அந்த முட்டைகளைத் தனியாக வெதுவெதுப்பான பாத்திரங்களின் வைத்தனர். ஐநூறு {500} வருடங்கள் இப்படியே சென்றன, கத்ருவால் இடப்பட்ட ஆயிரம் முட்டைகளும் வெடித்து, குஞ்சுகள் வெளியே வந்தன. ஆனால் வினதையின் இரட்டையர்கள் வெளிப்படவில்லை. பொறாமையால் உந்தப்பட்ட வினதை, தனது முட்டையில் ஒன்றை உடைத்தாள். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section16.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



ஆதிபர்வம் பகுதி 17 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: காந்தி மிக்க தோற்றத்துடன் தங்கம் போன்ற சூரியக் கதிர்களைத் தன்னகத்தே அடக்கிக் கொண்டு வெளியே விடாத மேரு என்ற பெயர் கொண்ட மலை ஒன்று இருந்தது. அது தங்கத்தால் நிறைந்த அழகான மலை. அதில் தேவர்களும், கந்தர்வர்களும் வசித்தனர். பாவங்கள் நிறைந்த மனிதர்களால் அந்த மலையை நெருங்கக்கூட முடியாது. பயங்கரமான மிருகங்கள் அந்த மலையின் மார்பில் அலைந்து கொண்டிருந்தன. சாதாரண மக்கள் அந்த மலையில் ஏற சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாது. மரங்களும், அருவிகளும், இனிய குரலில் மெல்லிசை பாடும் பறவைகளும் அந்த மலையில் நிறைந்திருந்தன. தேவர்கள் அதன் உச்சியில் அமர்ந்து கொண்டு அமுதத்திற்காக தவம் இருந்தனர். தேவர்களின் இந்த ஊக்கத்தைக் கண்ட நாராயணர் பிரம்மனிடம், "தேவர்களையும் அசுரர்களையும் கொண்டு அந்த பாற்கடலைக் கடையச் செய்யும். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section17.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 18 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: அந்தக் கடினமானப் பணியைப் பாம்புகளின் இளவரசனான ஆனந்தனுக்கு (பாம்புக்கு) கொடுத்தான், தாமரைக்கண்ணன் (விஷ்ணு). ஓ அந்தணரே {சௌனகரே}, பிரம்மனாலும், நாராயணனாலும் வழிகாட்டப்பட்ட அந்த பலம்பொருந்திய ஆனந்தன், அந்த மலையை, அதன் கானகங்களுடனும், அவற்றில் வசித்த உயிர்களுடனும் பெயர்த்தெடுத்தான். தேவர்கள், பாற்கடலின் கரைக்கு ஆனந்தனுடன் வந்து, கடலிடம், "ஓ கடலே; நாங்கள் உன்னைக் கடைந்து, அமுதத்தை எடுக்க வந்துள்ளோம்", என்றனர், அதற்கு அந்தக் கடல், "அப்படியே ஆகட்டும், ஆனால் கிடைப்பனவற்றில் எனக்கும் பங்கு வேண்டும். கடையும்போது, அந்த மலையின் சுழற்சியால் ஏற்படும் நீரடிப்பையும், நீர் சுழற்சியையும் (நீர் கலங்குதல்) என்னால் தாங்கிக் கொள்ள முடியும்", என்றது. அதன்பிறகு தேவர்கள், ஆமை மன்னனிடம் (திருமாலின் கூர்ம அவதாரம்) சென்று, "ஓ ஆமை மன்னா, நீ அந்த மலையை உன் முதுகில் தாங்கிக் கொள்ள வேண்டும்." என்றனர். ஆமை மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டதால், இந்திரன் மந்தர மலையை ஆமையின் முதுகில் எடுத்து வைத்தான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section18.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Thursday, September 11, 2014

ஆடியோ கோப்பு - சபா பர்வம் பகுதி 13 -14

சபா பர்வம் பகுதி 13 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அனைவரையும் தனது குடும்பத்தில் ஒருவரைப் போலப் பாதுகாத்தான். பீமன் அனைவரையும் நீதியுடன் ஆண்டான். அர்ஜுனன் தனது இரு கரங்களையும் பயன்படுத்தி, மக்களை (வெளிப்புற/வெளிநாட்டு) எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தான். ஞானம் கொண்ட சகாதேவன் நடுநிலையாக {பாரபட்சம் இல்லாமல்} நீதியுடன் நிர்வாகம் செய்தான். நகுலன் அனைவரிடமும் பணிவான தனது இயற்கை குணத்துடன் நடந்து கொண்டான். மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும்  கலகங்களிலும், அனைத்துவிதமான பயங்களில் இருந்தும் நாடு விடுபட்டது. அனைத்து மக்களும் தங்களுக்குரிய தொழிலில் கவனம் செலுத்தினர். மேலும் வேண்டும் என்று விரும்பாத அளவுக்கு மழை நிறைந்திருந்தது. நாடும் வளமையில் வளர்ந்தது. மன்னனின் அற ஒழுக்கத்தால், கடன் கொடுப்பவர்களும்,  வேள்விக்குத் தேவையான பொருட்களும், கால்நடை வளர்த்தலும், உழுதலும், வணிகமுமான அனைத்துத் தொழில்களும் வளம் பெற்றன. உண்மையில், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் ஆட்சிகாலத்தில், அச்சுறுத்திப் பணம் பறித்தலோ, வாடகை பாக்கிக்காகத் துன்புறுத்துதலோ, நோய், நெருப்பு, விஷம் அல்லது மந்திரத்தால் உண்டாகும் மரணத்தைக் குறித்த பயமோ, அந்த நாட்டில் இல்லாதிருந்தது. திருடர்களோ, ஏமாற்றுப் பேர்வழிகளோ, அரசுகுல நண்பர்கள் மன்னிடமோ அல்லது தங்களுக்குள்ளோ தவறாக நடந்து கொண்டார்கள் என்று, யாரும் எப்போதும் கேள்விப்படவில்லை. - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section13.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



சபா பர்வம் பகுதி 14அ - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: இருப்பினும், தற்போது, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, மன்னன் ஜராசந்தன், அவர்கள் அனைவரையும் விட வளமையில் அதிகரித்தும், பலத்தில் அதிகரித்தும், அனைத்து மன்னர்களுக்கும் தலைவனாகத் தன்னை நிறுவிக் கொண்டான். மேலும் ஜராசந்தன் பூமியின் மத்தியப் பகுதியை {மதுராவை} ஆட்சி செய்து நமக்குள் ஒற்றுமையின்மையைத் தோற்றுவிக்கிறான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அந்த மன்னன் {ஜராசந்தன்}, மன்னர்களில் உயர்ந்த மன்னாக இருந்து, இந்த அண்டத்தின் ஆட்சியே அவனை மையப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அவன் {ஜராசந்தன்} மாமன்னன் {சக்கரவர்த்தி} என்று அழைக்கப்படக்கூடிய தகுதியுடன் இருக்கிறான். மேலும், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி படைத்த மன்னன் சிசுபாலன் {Sisupala}, அவனது {ஜராசந்தனின்} பாதுகாப்புக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு, அவனது {ஜராசந்தனது} படைகளுக்குத் தளபதியாகச் செயல்படுகிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section14.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


சபா பர்வம் பகுதி 14ஆ - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்களது பெரும் செல்வத்தைப் பிரித்து, சிறு சிறு பகுதிகளாக்கி, ஒவ்வொரு பகுதியையும் எளிதாக சுமந்து செல்லும்படியாக்கி, ஜராசந்தனுக்குப் பயந்து மதுராவை விட்டு எங்கள் மைத்துனர்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு ஓடினோம். அனைத்தையும் சிந்தித்து நாங்கள் மேற்கு நோக்கி ஓடினோம்.

மேற்கில் ரைவத மலைகளால் அலகங்கரிக்கப்பட்டிருந்த குசஸ்தலி {Kusasthali} என்ற அழகான நகரத்தை அடைந்தோம். அந்த நகரத்தில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டோம். நாங்கள் அதன் கோட்டைகளை தேவர்களும் புகமுடியாதபடி மறுபடி கட்டினோம். அதன் உள் இருந்து பெண்கள் கூட சண்டையிடமுடியும் எனும் போது, அச்சமற்ற யாதவ வீரர்கள் எப்படிப் போரிடுவார்கள்? ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் இப்போது அந்த நகரத்தில்தான் வாழ்கிறோம். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section14b.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Tuesday, September 02, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி 13-15

ஆதிபர்வம் பகுதி 13 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: ஆஸ்தீகரின் தந்தை, பிரஜாபதியை {தக்‌ஷனை} போன்ற சக்தி படைத்தவர். அவர் பக்தியில் உறுதிமிக்க ஒரு பிரம்மச்சாரி. காமத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்த மிகப்பெரிய துறவியான அவர் எப்போதாவதுதான் சாப்பிடுவார். அவர் ஜரத்காரு {Jaratkaru} என்ற பெயரால் அறியப்பட்டிருந்தார். யயவரர்களில் முதன்மையான அவர் {ஜரத்காரு}, அறம்சார்ந்த கடுமையான விரதங்களில் (தர்மம் சார்ந்த கடுமையான விரதங்களில்) உறுதிமிக்கவர். பெரும் ஆன்மசக்திகளைக் கொண்டு, பெரிய ஆசி பெற்று, ஒரு முறை உலகம் முழுவதும் பயணம் செய்தார். வித்தியாசமான இடங்களுக்குச் சென்றார், புனித ஆறுகளில் நீராடினார். பொழுது எங்கே இருட்டுகிறதோ அங்கே இளைப்பாறினார். இயல்பான மனிதர்களால் செய்ய முடியாத கடும் விரதங்களை பெரும் சக்தியோடு செய்தார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section13.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



ஆதிபர்வம் பகுதி 14 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: அந்தக் கடுமையான விரதங்களை மேற்கொள்ளும் அந்தணன் {ஜரத்காரு}, உலகம் முழுதும் மனைவியைத் தேடி அலைந்தார். கிடைத்தாளில்லை. ஒருநாள், அடர்ந்த கானகத்திற்குள் சென்று தனது மூதாதையர் சொன்னதை நினைவுகூர்ந்து உரமில்லாக்குரலில் தனக்கு மனைவி வேண்டும் என்று மூன்று முறை வேண்டினார். அப்போது வாசுகி {ஆண் பாம்பு} எழுந்து, தனது தங்கையை அந்த முனிவருக்கு {ஜரத்காருவிற்குக்} கொடுத்தான். ஆனால், அந்தப் அந்தணர் அவளுக்கும் தனது பெயர் {ஜரத்காரு என்று} இருக்க வேண்டுமே என்று நினைத்து அவளைப் பெற்றுக் கொள்ளத் தயங்கினார். அந்த உயரான்ம ஜரத்காரு தனக்குள் 'எனது பெயரில்லாத எந்தப் பெண்ணையும் நான் ஏற்க மாட்டேன்.' என நினைத்துக் கொண்டு வாசுகியிடம், "உமது தங்கையின் பெயர் என்ன என்று உண்மையைக் கூறு, ஓ பாம்பே" என்று கேட்டார் {ஜரத்காரு}. - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section14.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 15 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: பின்பு வெகு காலத்திற்குப் பிறகு, பாண்டவ வழியில் வந்த ஒரு மன்னன் {ஜனமேஜயன்} ஒரு பெரிய நாக வேள்வியை நடத்தினான். அந்த {நாக} வேள்வி பாம்புகளின் அழிவிற்காக நடத்தப்பட்டது. ஆஸ்தீகர், தனது சகோதரர்களும், தாய்வழி மாமன்களுமான அந்தப் பாம்புகளையும் மற்ற பாம்புகளையும் (நெருப்பு மரணத்திலிருந்து) காப்பாற்றினார். தான் பிள்ளைப் பேறு பெற்றதால் அவரது மூதாதையர்களையும் விடுவித்தார். ஓ அந்தணரே {சௌனகரே}, ஜரத்காரு, தனது கடுமையான விரதங்களாலும், தவத்தாலும், ஆழ்ந்த வேத கல்வியினாலும், தனது கடமைகள் அனைத்திலுமிருந்து விடுபட்டார். வேள்விகளால் தேவர்களைத் திருப்தி செய்து, பிரம்மச்சரியத்தால் முனிவர்களைத் திருப்தி செய்து, ஒரு மகனை {ஆஸ்தீகரை} பெற்றதால் தனது மூதாதையர்களையும் {யயவரர்களையும்} திருப்தி செய்தார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section15.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Friday, August 22, 2014

ஆடியோ கோப்பு - சபா பர்வம் பகுதி 10 -12

சபா பர்வம் பகுதி 10 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: மேலும், ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரா}, உமையின் சிறப்புவாய்ந்த கணவனும் , படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் தலைவனுமான திரிசூலத்தைத் தாங்கி பாகநேத்ரன் என்ற அசுரனைக் கொன்றவனும், கடுமையான வில்லைக் கொண்ட வலிமை மிக்க தெய்வமுமான முக்கண் மகாதேவன் {சிவன்}, குள்ளமான உருவம் கொண்டவையாக சிலவும், கடுமையான முகம் கொண்டவையாக சிலவும், கூன் முதுகு கொண்டவையாக சிலவும், சிவந்த கண்கள் கொண்டவையாக சிலவும், பயங்கர ஓலமிடும் சிலவும், கொழுப்பையும் சதையையும் {இறைச்சியையும்} உண்ணும் சிலவும், காண்பதற்கு பயங்கரமான சிலவும் என நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆவிகளால் சூழப்பட்டு, பலவகையான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, காற்றின் {வாயு} வேகம் கொண்டு, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண் தெய்வத்துடன் {பார்வதியுடன்}, களைப்பறியாது, அங்கே தனது நண்பனான கருவூலத் தலைவன் குபேரனுக்காகக் காத்திருக்கிறான்.

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



சபா பர்வம் பகுதி 11 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த சபை விவரிக்க இயலாதது. நாம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அது வேறு உருவை எடுக்கும். அதை வார்த்தைகளால் விவரிப்பது முடியாதது. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அதன் நீள அகலங்களையும், உருவத்தைக் குறித்துச் சொல்வதும் இயலாது. நான் அதுபோன்ற ஒன்றை என்றும் கண்டதில்லை. அதற்குள் இருப்பவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பர். அங்கே குளிரும் இல்லாமல், வெப்பமும் இல்லாமல் ரம்மியமான சூழ்நிலை இருக்கும். பசி, தாகம், களைப்பு ஆகியவை அங்கு சென்றாலே காணாமல் போய்விடும். அந்தச் சபை பலவகைப்பட்ட பிரகாசமான ரத்தினங்களால் ஆனது. அது தூண்களால் தாங்கப்படுவதாகத் தெரியவில்லை. அது அழிவற்ற நிலைத்த தன்மை கொண்டது. அந்த சுய ஒளி கொண்ட மாளிகை, தனது பல எண்ணற்ற பிரகாசிக்கும் தன்மைகளாலும், ஒப்பற்ற பிரகாசம் கொண்ட தெய்வீகத்தன்மையாலும் சந்திரன், சூரியன், மற்றும் நெருப்பையே விஞ்சி நிற்கிறது. விண்ணுலகில் நிலைத்து, பகலை உண்டாக்குபவன் {சூரியனைப்} போல எரிந்து கொண்டிருக்கிறது. அந்த மாளிகையில் ஓ மன்னா, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெருந்தகப்பன், மாயையினால் தன்னை உருவாக்கிக் கொண்டு அனைத்தையும் உருவாக்கி அங்கே நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்.

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


சபா பர்வம் பகுதி 12 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உனது தந்தையின் {பாண்டுவின்} விருப்பத்தை நிறைவேற்று. நீ அந்த வேள்வியைச் செய்தாயானால், நீயும் உனது இறந்த முன்னோர்களுடன் சேர்ந்து இறவாதவர்கள் தலைவனின் {இந்திரனின்} பகுதியில் மகிழ்ச்சியுடன் இருப்பாய். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் தடைகளுக்குப் பிறகே அந்த வேள்வியைச் செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. ஒரு வகை ராட்சசர்களான பிரம்ம ராட்சசர்கள் என்போர், இது போன்ற வேள்விகளைத் தடைசெய்ய எப்போதும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து, அந்தப் பெரும் வேள்வியில் ஏதாவது குறையைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அது போன்ற ஒரு வேள்வியை நடத்துவதால் பெரும் போர் ஏற்பட்டு க்ஷத்திரிய குலமே உலகத்திலிருந்து அழியும் நிலை ஏற்படலாம். ஒரு சின்ன தடை கூட உலகத்தைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும். இதையெல்லாம் சிந்தித்து, ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, உனது நன்மைக்கான செயலைச் செய்.

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Sunday, August 17, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி 6-12

ஆதிபர்வம் பகுதி 6 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: துயரத்தால் தடுமாறிப் போயிருந்த அந்த அழகிய புலோமா, பிருகு மைந்தனான தனது குழந்தை சியவனனை எடுத்துக் கொண்டு நடந்துசென்றாள். தனது மைந்தனின் களங்கமற்ற மனைவி அழுதுகொண்டிருப்பதைப் பெருந்தகப்பன் பிரம்மா கண்டான். அவளது {புலோமாவின்} கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த்துளிகள் ஒரு பெரிய நதியை உருவாக்கியது. அந்த ஆறு பெரும் துறவியான பிருகுவின் மனைவியின் பாதங்களில் உருண்டோடியது. எல்லா உலகங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} தனது மகனின் {பிருகுவின்} மனைவியால் {புலோமாவால்} உற்பத்தியான அந்த ஆற்றைக் கண்டு, அதற்கு வதூசரை என்று பெயர் வைத்தான் {பிரம்மன்}. அது சியவனனின் ஆசிரமத்தைக் கடந்து சென்றது. இந்த விதத்தில்தான் பிருகுவின் மைந்தனான பெரும் ஆன்ம சக்தியுள்ள சியவனன் பிறந்தான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section6.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



ஆதிபர்வம் பகுதி 7 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: நான் என்னைப் பெருக்கிக் கொண்டு, பல உருவங்களில் இருக்கிறேன். வருடக் கணக்காக நடைபெறும் வேள்விகளில் இருக்கிறேன். புனித சடங்குகள் எங்கெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இருக்கிறேன். வேத மந்திரங்களுடன் எனதுச் சுடர்களின் மேல் இடப்படும் நெய்யை தேவர்களும், பித்ருக்களும் பெற்று சாந்தம் அடைகின்றனர். தேவர்களும், பித்ருக்களும் நீர் ஆவர். வேள்விகளில் அளிக்கப்படுவனவற்றில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் சம பங்கு உரிமை உள்ளது. ஆகையால் தேவர்களும், பித்ருக்களும் வேறுவேறாகார். அவர்களைச் சேர்த்து வைத்தும், பிரித்தும் சந்திரனின் மாறுதல்களுக்கு ஏற்ப வழிபடப்படுகிறார்கள். அந்த தேவர்களும் பித்ருக்களும் என் மீது ஊற்றப்படுவதையே உண்கின்றனர். அதனால், என்னை தேவர்களின் வாய் என்று சொல்வர். முதல்மதியில் (அமாவாசையில்) பித்ருக்களும், முழுமதியில் (பௌர்ணமியில்) தேவர்களும், சுத்திகரிக்கப்பட்ட நெய்யை, எனது வாய்மூலமாகத்தான் உண்கிறார்கள். அவர்களின் வாயாக இருப்பதால், எப்படி எல்லாவற்றையும் (சுத்தமானதும், சுத்தமில்லாததும்) என்னால் சாப்பிட முடியும்?" என்றான் {அக்னி} - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section7.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 8 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: முன்பொரு காலத்தில் தவச்சக்தியும், கல்வியும், எல்லா உயிரிடமும் அன்பு செலுத்தும் குணமும் கொண்ட ஸ்தூலகேசா என்ற ஒரு முனி இருந்தார். ஓ அந்தண முனிவரே {சௌனகரே}, அந்த நேரத்தில், கந்தர்வர்களின் மன்னன் விஸ்வாவசு, தேவலோக மங்கை மேனகையுடன் நெருக்கமாக இருந்தான். ஓ பிருகுவின் வழித்தோன்றலே, அந்த அப்சர மேனகை, அவளது நேரம் நெருங்கியதும், ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கருகே ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள். அந்தப் புதிதாகப் பிறந்த குழந்தையை அவள் ஆற்றங்கரையிலேயே விட்டுவிட்டாள். ஓ அந்தணரே {சௌனகரே}, மேனகை என்ற அந்த அப்சரஸ் பாசத்தையும் அவமானத்தையும் துறந்து அங்கிருந்து சென்றுவிட்டாள். அந்த அந்தண முனி ஸ்தூலகேசர் அந்தக் குழந்தையைக் கண்டார். அது ஒரு பெண்குழந்தை என்பதைக் கண்டார். அதன் அழகையும், காந்தியையும் கண்டு அதன் மீது பரிவு ஏற்பட்டு, அந்தக் குழந்தையை எடுத்துச் சென்றார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section8.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 9 - அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: "தனது துணையை இழந்த ருரு இப்படி கதறிக்கொண்டிருக்கையில், தேவலோகத் தூதுவன் {a messenger from heaven} ஒருவன், அந்தக் கானகத்துக்கு வந்து, அவனிடம் {ருருவிடம்}, "ஓ ருருவே, உனது துயர் மேலீட்டால் நீ இப்போது உச்சரித்தாயே வார்த்தைகள், அவை பயனற்றவை. ஓ நல்லவனே, இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு நாட்கள் முடிந்தால், அவர்கள் திரும்பி வருவதில்லை. கந்தர்வருக்கும், அப்சரசுக்கும் பிறந்த இந்த அப்பாவிக் குழந்தையின் நாட்கள் முடிந்துவிட்டன. அதனால் மகனே, நீ உனது இதயத்தைத் துயருக்குப் பறிகொடுக்காதே. இருந்தாலும், ஒப்பற்ற தேவர்கள் முன்பே அவளது உயிரின் மீட்பைப் பற்றி சொல்லி வைத்துள்ளனர். நீ அதன்படி நடந்தால் பிரம்மத்வாரா கிடைக்க வாய்ப்பிருக்கிறது," என்றான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section9.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 10 - அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: அதற்கு துந்துபா, "ஓ அந்தணா, மனிதர்களைக் கடிக்கும் பாம்பினம் வேறு வகை. பெயரளவிலேயே பாம்புகளாக இருக்கும் துந்துபாக்களை {நீர்பாம்புகளை} நீ கொல்லுதல் கூடாது. மற்ற பாம்பு வகைகளிலும் கடிக்கும் வகையுள்ளன. அவற்றின் நற்பேறுகள் எங்களுக்கு {நீர் பாம்புகளுக்கு} கிடைப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு நேரும் கெடுதிகள் அனைத்தும் எங்களுக்கும் {நீர் பாம்புகளுக்கு} நேருகின்றன. அவர்களின் துயரம் எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் அவர்களின் மகிழ்ச்சி எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆகையால் இதையறியாமல் துந்துபாக்களைக் {நீர் பாம்புகளைக்} கொன்றுவிடாதே," என்றது. - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section10.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 11 - அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: துந்துபா வகை பாம்பு {சஹஸ்ரபத்} ருருவிடம், "முன்பு ஒரு காலத்தில், எனக்கு காகமா என்ற நண்பன் இருந்தான். அவன் பேச்சில் வல்லவனாக, கடுந்தவங்களின் பயனால் ஆன்மிக சக்தியுடன் இருந்தான். ஒருநாள் அவன் {காகமா} நெருப்பு வேள்வி (அக்னி ஹோத்ரம்) செய்து கொண்டிருக்கும்போது, புற்களால் பாம்பு போன்ற தோற்றத்தைச் செய்து, அதைக்காட்டி அவனை {காகமாவை} பயமுறுத்தினேன்.  அவன் மயக்கமுற்று விழுந்தான். உண்மை பேசும், தனது உறுதிகளில் உறுதியாய் இருக்கும் துறவியான அவனுக்கு புலனுணர்வு மீண்டவுடன், கோபம் கொண்டு, "சக்தியில்லாத பொய்ப்பாம்பைக் காட்டி என்னை பயமுறுத்தியதால், நீ நஞ்சில்லாப் பாம்பாகப் போ" என்ற சபித்தான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section11.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 12 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: மறைந்த முனிவரைத் {சஹஸ்ரபத்தைத்} தேடி ருரு ஓடினான். அந்தக் கானகத்தில் அவரைக் கண்டுபிடிக்கமுடியாமல், களைத்து, சோர்வடைந்து தரையில் விழுந்தான். முனிவர் {சஹஸ்ரபத்} சொன்னதை மனதில் நினைத்துப் பார்த்தான். மிகவும் குழம்பிப் போய் புலன் உணர்வை இழந்தான். உணர்வு மீண்டதும், ருரு தனது இல்லத்திற்கு வந்து, தனது தந்தையிடம் {பிரம்மாதியிடம்} இந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டான். அப்படிக் கேட்கப்பட்டதால், அந்த தந்தையும் {பிரம்மாதியும்} கதையைச் சொன்னார்." - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section12.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 

ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Sunday, August 10, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 8 & 9

சபா பர்வம் பகுதி 8 | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: அந்தச் சபா மண்டபத்தில், துக்கமோ, வயதால் ஏற்படும் பலவீனமோ, தாகமோ, பசியோ ஏற்படாது. ஏற்றுக் கொள்ள முடியாத எந்தப் பொருளுக்கும் அங்கே இடம் கிடையாது. எந்த வகையான தீய உணர்வுகளும் அங்கே எழாது. தேவர்களாலும், மனிதர்களாலும் விரும்பப்படும் அனைத்துப் பொருட்களும் அந்த மாளிகையில் உள்ளன. ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரனே}, இனிப்பான, நீர்த்தன்மையுள்ள, ஏற்புடைய, நக்கி, உறிஞ்சி, குடிக்கக்கூடிய ருசியான உணவு வகைகளும், சுவை மிகுந்த இன்பத்துக்குகந்த அனைத்துப் பொருட்களும் அபரிமிதமாக அங்கே இருக்கின்றன. அந்த மாளிகையை அலங்கரிக்கும் மலர் மாலைகளின் நறுமணம் அலாதியானது. அங்கே அந்த மண்டபத்தைச் சுற்றி நிற்கும் மரங்கள் விரும்பும் கனியைக் கொடுக்கவல்லவை. அங்கே இனிமையான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க குளிர்ந்த மற்றும் வெப்ப நீர்கள் உள்ளன. அந்த மாளிகையில் புனிதம் மிகுந்த அரச முனிகளும், தூய்மை மிகுந்த பிரம்ம முனிவர்களும் மகிழ்ச்சியுடன் காத்திருந்து, விவஸ்வத்தின் மகனான யமனை வழிபடுகின்றனர். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section8.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண



மேற்க்கண்ட வீடியோ கோப்பில் சபாபர்வப் பகுதியின் எண் தவறாக இருக்கிறது. இருப்பினும் அதில் உள்ள ஒலிப்பதிவு பகுதி 8 தான்.

எம.பி.3-ஆக பதிவிறக்க



சபா பர்வம் பகுதி 9 | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: வருணனின் தெய்வீக சபை பிரகாசத்தில் இணையற்றதாக உள்ளது. அது நீள அகலங்களில் யம சபையைப் போன்றே உள்ளது. அதன் சுவர்களும், வளைவுகளும் தூய வெள்ளை நிறத்தில் உள்ளன. அது விஸ்வகர்மனால் (தேவ தச்சன்) நீருக்குள் கட்டப்பட்டது. அது சுற்றிலும் அற்புதமான கனிகளையும் மலர்களையும் கொடுக்கவல்ல தங்கத்தாலும் ரத்தினங்களாலும் ஆன மரங்களால் சூழப்பட்டுள்ளது. நீலமும் மஞ்சளும், கருப்பும் கருமையும், வெள்ளையும் சிவப்பும் ஆகிய நிறங்களில் பூங்கொத்துகள் மிகுந்து இருக்கும் பல மரங்கள் அங்கே இருந்தன. அந்த மரங்களில், பல வண்ணங்களில் அழகாக இருக்கும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள், தங்கள் இனிய இசையை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த மாளிகை குளிர்ச்சியாகவும் இல்லாமல், வெப்பமாகவும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சிகரமான சூழ்நிலை கொண்டதாக இருந்தது. வருணனுக்குச் சொந்தமான அந்த சபா மண்டபத்தில் பல இருக்கைகளுடன் கூடிய, பல வெண்ணிற அறைகளும் இருக்கின்றன. அங்கே வருணன் தெய்வீக ஆடைகள் உடுத்தி, தெய்வீக ஆபரணங்களும், நகைகளும் பூண்டு, தெய்வீக வாசனைப் பொருட்களை மேனியில் தரித்து, தனது ராணியுடன் அமர்ந்திருக்கிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section9.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க

சபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்