Wednesday, January 31, 2018

கைகேய மன்னனும், ராட்சசனும்! - சாந்திபர்வம் பகுதி – 77

The king of Kaikeyas and the Rakshasa! | Shanti-Parva-Section-77 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 77)


பதிவின் சுருக்கம் : எவருடைய செல்வத்துக்கெல்லாம் அரசன் தலைவனாகக் கருதப்படுகிறான் என்பதையும், மன்னன் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்துக் கேகய மன்னனுக்கும் ராட்சசனுக்கும் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்துக் காளையே, எவருடைய செல்வத்திற்கு மன்னன் தலைவனாகக் கருதப்படுகிறான்? மன்னன் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன? ஓ! பாட்டா, இது குறித்து என்னிடம் உரைப்பீராக" என்று கேட்டான்.(1)

பிராமணப் பண்புகள்! - சாந்திபர்வம் பகுதி – 76

The charecteristics of a Brahmana! | Shanti-Parva-Section-76 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 76)


பதிவின் சுருக்கம் : பிராமணனின் பண்புகளையும், அவன் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, பிராமணர்களில் சிலர் தங்கள் வகைக்குரிய கடமைகளில் ஈடுபடுகின்றனர், அதே வேளையில் வேறு சிலரோ வேறு கடமைகளில் ஈடுபடுகின்றனர். இந்த இரண்டு வகையினருக்கிடையிலான வேறுபாட்டை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

Tuesday, January 30, 2018

அரசவொழுக்கம்! - சாந்திபர்வம் பகுதி – 75

The conduct of the King! | Shanti-Parva-Section-75 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 75)


பதிவின் சுருக்கம் : அரசன் எவ்வாறான நடத்தைகளைக் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, தன் குடிமக்களை மேன்மையடையச் செய்வதிலும், மறுமையில் புகழுலகங்களை ஈட்டுவதிலும் எந்த மன்னன் வெல்கிறான் என்பதைச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

Wednesday, January 24, 2018

முசுகுந்தனும், குபேரனும்! - சாந்திபர்வம் பகுதி – 74

Muchukunda and Kuvera! | Shanti-Parva-Section-74 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 74)


பதிவின் சுருக்கம் : மன்னன் முசுகுந்தனுக்கும், குபேரனுக்கும் இடையில் நடந்த மோதலையும் உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; புரோகிதரால் மன்னனுக்கு நேரும் நன்மைகளை எடுத்துச் சொன்னது...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] "நாட்டைப் பேணிக் காத்து, வளர்ச்சியடையச் செய்வது மன்னனைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. மன்னனைப் பேணிக் காத்து, அவனை வளர்ச்சியடையச் செய்வது அம்மன்னனின் புரோகிதரைச் சார்ந்தது.(1) எங்குக் குடிமக்களின் கண்ணுக்குப் புலப்படாத அச்சங்கள் களையப்பட்டு, கண்ணுக்குப் புலப்படும் அச்சங்கள் அனைத்தும் மன்னனின் கர வலிமையால் களையப்படுகின்றனவோ அந்த நாடே உண்மையான இன்பத்தை அனுபவிக்கும்.(2) இது தொடர்பாக மன்னன் முசுகுந்தனுக்கும், வைஸ்ரவணனுக்கும் {குபேரனுக்கும்} இடையில் நடைபெற்ற ஒரு பழைய உரையாடல் தென்படுகிறது.(3)

பிராமண க்ஷத்திரிய ஒற்றுமை! - சாந்திபர்வம் பகுதி – 73

Unity of Brahmana and Kshatriya! | Shanti-Parva-Section-73 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 73)


பதிவின் சுருக்கம் : புரூரவஸுக்கும், கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுக்கிடையில் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தைச் சொன்ன கசியபர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] "ஓ! மன்னா, அறத்தகுதி மற்றும் செல்வம் ஆகிய இரண்டிலும் கண் கொண்டவனும், மிகச் சிக்கலான கருத்துகளைக் கொண்டவனுமான மன்னன், கல்வியறிவு பெற்றவரும், வேதங்களையும், பிற சாத்திரங்களையும் மிக நெருக்கமாக அறிந்தவருமான ஒரு புரோகிதரைத் தாமதமில்லாமல் நியமித்துக் கொள்ள வேண்டும்.(1) நல்லான்மா கொண்டோரும், கொள்கை அறிந்தவர்களுமான புரோகிதர்களையுடைய மன்னர்கள், தாங்களே அத்தகைய பண்புகளைக் கொண்டோராகி, திசைகள் அனைத்திலும் செழிப்பை அனுபவிப்பார்கள்.(2) மதிக்கத்தக்க பண்புகளைக் கொண்ட புரோகிதர், மற்றும் மன்னன் ஆகிய இருவரும், நோன்புகள் மற்றும் தவங்களை நோற்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் குடிமக்களையும், தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிள்ளைகளையும் பெருக்கிக் கொள்ள முடியும் {அல்லது அவர்களின் தரத்தை உயர்த்த முடியும்}.(3) அவர்கள் ஒரே இதயங்களைக் கொண்டவர்களாகவும், ஒருவருக்கொருவர் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கும், க்ஷத்திரியனுக்கும் இடையில் உண்டாகும் அத்தகு நட்பின் விளைவாகக் குடிமக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.(4) அவர்கள் ஒருவரையொருவர் மதிக்கவில்லையெனில் மக்களுக்கு அழிவே ஏற்படும். பிராமணனும், க்ஷத்திரியனும் தான் அனைத்து மனிதர்களுக்கும் மூதாதையர்கள் என்று சொல்லப்படுகிறது.(5) இது தொடர்பாக இளையின் மகனுக்கும் {புரூரவஸுக்கும்}, கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலொன்று பழங்கதையில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(6)

Tuesday, January 23, 2018

வாயு சொன்ன நால்வர்ண தாரதம்மியம்! - சாந்திபர்வம் பகுதி – 72

Comparitive values of four varnas said by Vayu deva! | Shanti-Parva-Section-72 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 72)


பதிவின் சுருக்கம் : புரூரவஸுக்கும், வாயு தேவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; நான்கு வர்ணங்களின் ஓப்பீட்டு மதிப்பையும், புரோகிதராக இருக்கத் தகுந்த பிராமணனின் பண்புகளையும் புரூரவஸுக்கு விளக்கிய வாயு தேவன்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] "ஓ! மன்னா, எந்த மனிதன் நல்லோரைப் பாதுகாத்துத் தீயோரைத் தண்டிப்பானோ, அவன் மன்னனால் அவனது புரோகிதராக நியமிக்கப்பட வேண்டும்.(1) இது தொடர்பாக, இளையின் மகனான புரூரவஸுக்கும், மாதரிஸ்வானுக்கும் {வாயுவுக்கும்}[2] இடையில் நடந்த உரையாடல் பழங்காலக் கதையில் தென்படுகிறது.(2)

Monday, January 22, 2018

கடமையைப் புறக்கணிக்காதே! - சாந்திபர்வம் பகுதி – 71

Don't avoid duty! | Shanti-Parva-Section-71 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 71)


பதிவின் சுருக்கம் : அறப்பிழையேற்படாமல் குடிமக்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; வழிமுறைகளைச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, துயரத்தைத் தவிர்க்கும் வகையிலும், அறத்திற்கு எதிராகக் குற்றமிழைக்காத வகையிலும் ஒரு மன்னன் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய வழியை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்[1].(1)

Friday, January 12, 2018

அரச பண்புகள்! - சாந்திபர்வம் பகுதி – 70

The virtues of a king! | Shanti-Parva-Section-70 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 70)


பதிவின் சுருக்கம் : மன்னர்களுக்குரிய முப்பத்தாறு {36} பண்புகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! அனைத்துவகை நடத்தைகளையும் அறிந்தவரே, அந்நடத்தையைப் பின்பற்றுவதால் ஒரு மன்னனால் இம்மையையும், மறுமையையும், முடிவில் மகிழ்ச்சியை அளிக்கும் பொருட்களையும் அடைவதில் வெல்ல முடியுமா?" என்று கேட்டான்.(1)

Thursday, January 11, 2018

அரசாட்சி முறை! - சாந்திபர்வம் பகுதி – 69

The method of governance! | Shanti-Parva-Section-69 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 69)


பதிவின் சுருக்கம் : மன்னர்களுக்கான குறிப்பிட்ட கடமைகள்; பலமிக்க ஏகாதிபதி ஒருவன் தன் நாட்டின் மீது படையெடுத்து வரும்போது அதைத் தடுப்பதற்கு ஒரு மன்னன் ஆற்ற வேண்டிய கடமைகள்; கோட்டை பாதுகாப்பு; ஆறு குண்யங்களும், மூன்று வர்க்கங்களும்; நான்கு யுகங்களை உண்டாக்கும் மன்னனின் செயல்கள்; தண்ட நீதியின் அருள்நிலை...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மன்னன் வெளிப்படுத்த வேண்டிய வேறு சிறப்புக் கடமைகள் என்னென்ன? அவன் தன் நாட்டை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? எவ்வாறு தன் எதிரிகளை அடக்க வேண்டும்?(1) அவன் எவ்வாறு தன் ஒற்றர்களை நியமிக்க வேண்டும்? ஓ! பாரதரே {பீஷ்மரே}, தன் நால்வகைக் குடிமக்கள், தன் பணியாட்கள், மனைவியர் மற்றும் மகன்கள் ஆகியோருக்கு அவன் எவ்வாறு நம்பிக்கையளிக்க வேண்டும்?" என்று கேட்டான்.(2)

Monday, January 08, 2018

அரசனின் இன்றியமையாத்தன்மை! - சாந்திபர்வம் பகுதி – 68

The importance of a king! | Shanti-Parva-Section-68 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 68)


பதிவின் சுருக்கம் : மன்னர்கள் தேவர்களுக்கு இணையாகப் போற்றப்படுவது ஏன் என்று கேட்ட யுதிஷ்டிரன்; ஒரு நாட்டுக்கு மன்னன் ஏன் அவசியம் என்று வசுமனஸுக்குப் பிருஹஸ்பதி சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஒரு தேவன் என்று ஏன் பிராமணர்கள் சொன்னார்கள்?" என்று கேட்டான்.(1)

Friday, January 05, 2018

அரசற்ற நிலையும், மனுவும்! - சாந்திபர்வம் பகுதி – 67

Manu and anarchy! | Shanti-Parva-Section-67 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 67)


பதிவின் சுருக்கம் : அரசற்ற நாட்டின் நிலையை வர்ணித்த பீஷ்மர்; மன்னனால் உண்டாகும் நன்மையையும், அரசற்ற நிலையால் உண்டாகும் தீமையையும் சொன்னது; பழங்காலத்தில் அரசற்ற நிலையில் எவ்வாறு மனு மன்னனானான் என்பதைச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "{இதுவரை} நான்கு வாழ்வு முறைகள் மற்றும் நான்கு வகையினரின் கடமைகள் குறித்து நீர் சொன்னீர். ஓ! பாட்டா, ஒரு நாட்டின் முக்கியக் கடமைகள் என்னென்ன என்பதை எனக்கு இப்போது சொல்வீராக" என்று கேட்டான்.(1)

Thursday, January 04, 2018

அம்பை - சிகண்டி | கிண்டில் மின்புத்தகம்




புத்தகத்தை வாங்க - https://www.amazon.com/dp/B078SJ3Z7F
பீஷ்மர் பிரம்மச்சரியம் ஏற்காமல் இருந்திருந்தால் மஹாபாரதம் நேர்ந்திருக்காது.  தமது தந்தையின் உயிரைக் காக்கவும், ஹஸ்தினாபுரத்தின் அரியணைக்காக போட்டி ஏற்படாதிருக்கவும் பீஷ்மர் பிரம்மச்சரியத்தை ஏற்றார். உன்னத நோக்கத்திற்காக அவரால் ஏற்கப்பட்ட அந்நோன்பு ஒரு பெண்ணின் வாழ்வை பாதித்தது. அவள்தான் அம்பை.

Wednesday, January 03, 2018

வர்ணாசிரமங்களில் ராஜதர்மம்! - சாந்திபர்வம் பகுதி – 66

Kingly duties in orders and modes of life! | Shanti-Parva-Section-66 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 66)


பதிவின் சுருக்கம் : வாழ்வுமுறைகள் அனைத்தின் கடமைகளையும் மீண்டும் விரிவாகச் சொல்லும்படி பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிற கடமைகள் அனைத்தும் அரச கடமைகளிலேயே அடங்கியிருக்கின்றன என்ற பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மனித வாழ்க்கையின் வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைக்} குறித்து நீர் என்னிடம் சொன்னீர். நான் அவற்றைக் குறித்து அதிகம் அறிய விரும்புகிறேன். அவற்றை விரிவாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

Monday, January 01, 2018

கள்வர்களின் கடமைகள்! - சாந்திபர்வம் பகுதி – 65

The duties of robbers! | Shanti-Parva-Section-65 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 65)


பதிவின் சுருக்கம் : க்ஷத்திரியக் கடமைகளின் மேன்மை; கள்வர்களும் பின்பற்ற வேண்டிய கடமைகள்; அரசகடமைகள் மற்றும் தண்டநீதியின் முக்கியத்துவம் ஆகியவற்றை மாந்தாதாவுக்குச் சொன்ன இந்திரன்; பழங்காலத்தில் நடந்த இந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


இந்திரன் {மந்தாதாவிடம்}, "ஓ! மன்னா {மந்தாதா}, இத்தகு சக்தியைக் கொண்டவையும், பிற கடமைகள் அனைத்தையும் உள்ளடக்கியவையும், கடமைகள் அனைத்திலும் முதன்மையானவையுமான க்ஷத்திரியக் கடமைகள், உலகின் நன்மையை நாடுபவர்களும், உயர் ஆன்மா கொண்டோர்களுமான உன்னைப் போன்ற மனிதர்களால் நோற்கப்பட வேண்டும். அந்தக் கடமைகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லையென்றால், அனைத்து உயிரினங்களும் அழிவையடையும்.(1) அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட மன்னன், உழவுக்கான நிலத்தை மீட்பது, அதற்கு உரமிடுவது, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளப் பெரும் வேள்விகளைச் செய்வது, கையேந்துவதைப் புறக்கணிப்பது {துறவைப் புறக்கணிப்பது}, குடிமக்களைப் பாதுகாப்பது போன்றவற்றையே தன் முதன்மையான கடமைகளாகக் கருத வேண்டும்.(2) (கொடைபெறுதலைக்) துறப்பதே அறங்களில் முதன்மையானது எனத் தவசிகள் சொல்கின்றனர். அனைத்து வகைத் துறவுகளிலும், போரில் உடலைக் கைவிடுவதே முதன்மையானது. எப்போதும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்றவர்களும்,(3) தங்கள் ஆசான்களிடம் முறையாகக் காத்திருந்தவர்களும், பெரும் கல்வி பெற்றவர்களுமான பூமியின் ஆட்சியாளர்கள், ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டு, இறுதியில் எவ்வாறு தங்கள் உடல்களைத் துறந்தனர் என்பதை உன் கண்களாலேயே கண்டாய். அறத்தகுதி ஈட்ட விரும்பும் க்ஷத்திரியன், பிரம்மச்சரிய வாழ்வுமுறையை வாழ்ந்து, பிறகு எப்போதும் தகுதியைத் தரக்கூடியதான இல்லற வாழ்வையே நோற்க வேண்டும்.(4) (குடிமக்களுக்கிடையே) நீதி தொடர்புடைய சராசரி கேள்விகளின் வழக்கில் தீர்ப்பளிப்பதில் அவன் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். அனைத்து வகையினரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்வதற்கும், அனைவரையும் பாதுகாப்பதற்கும், பல்வேறு திட்டங்கள், வழிமுறைகள், ஆற்றல்,(5) (நோக்கங்கள் நிறைவடைய நாடும்) உழைப்பு ஆகியவற்றுக்கும், அனைத்துக் கடமைகளையும் தங்கள் இலக்கினுள் கொண்ட க்ஷத்திரியக் கடமைகளே முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன. அரச கடமைகளின் விளைவாகவே பிற வகையினர் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்ற இயலும். இதன்காரணமாகவே தகுதியை உண்டாக்குவதில் அரச கடமைகளைச் சார்ந்தே பிற கடமைகள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.(6)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்