Showing posts with label குபேரன். Show all posts
Showing posts with label குபேரன். Show all posts

Tuesday, October 09, 2018

சுக்கிராச்சாரியார்! - சாந்திபர்வம் பகுதி – 290

Sukracharya! | Shanti-Parva-Section-290 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 117)


பதிவின் சுருக்கம் : சுக்கிராச்சாரியார் தேவர்களின் பக்கம் சேராமல் அசுரர்களின் நன்மையை நாடிய காரணம்; சுக்கிரன் என்ற பெயர் தோன்றியதற்கான காரணம் ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, இந்த ஆவல் எப்போதும் என் மனத்தில் இருக்கிறது. ஓ! குருக்களின் பாட்டா, அது குறித்த அனைத்தையும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்.(1) தெய்வீக முனிவரும், கவி என்றும் அழைக்கப்படுபவரும், உயர் ஆன்மா கொண்டவருமான உசனஸ், அசுரர்களுக்கு ஏற்புடையதையும், தேவர்களுக்கு ஏற்பில்லாததையும் செய்வதில் ஏன் ஈடுபட்டார்?(2) தேவர்களின் சக்தியை மங்கச் செய்வதில் அவர் ஏன் ஈடுபட்டார்? தானவர்கள், தேவர்களில் முதன்மையானோரிடம் ஏன் எப்போதும் பகைமையில் ஈடுபட்டனர்.(3) ஒரு தேவனைப் போன்ற காந்தியைக் கொண்ட உசனஸ் என்ன காரணத்தால் சுக்ரன் என்ற பெயரை அடைந்தார்? இக்காரியங்கள் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக.(4) பெருஞ்சக்தியைக் கொண்டவராக இருப்பினும், அவர் ஏன் ஆகாய மத்தியில் பயணிப்பதில் வெல்லவில்லை? ஓ! பாட்டா, இக்காரியங்கள் அனைத்தையும் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்[1].(5)

Wednesday, January 24, 2018

முசுகுந்தனும், குபேரனும்! - சாந்திபர்வம் பகுதி – 74

Muchukunda and Kuvera! | Shanti-Parva-Section-74 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 74)


பதிவின் சுருக்கம் : மன்னன் முசுகுந்தனுக்கும், குபேரனுக்கும் இடையில் நடந்த மோதலையும் உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; புரோகிதரால் மன்னனுக்கு நேரும் நன்மைகளை எடுத்துச் சொன்னது...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] "நாட்டைப் பேணிக் காத்து, வளர்ச்சியடையச் செய்வது மன்னனைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. மன்னனைப் பேணிக் காத்து, அவனை வளர்ச்சியடையச் செய்வது அம்மன்னனின் புரோகிதரைச் சார்ந்தது.(1) எங்குக் குடிமக்களின் கண்ணுக்குப் புலப்படாத அச்சங்கள் களையப்பட்டு, கண்ணுக்குப் புலப்படும் அச்சங்கள் அனைத்தும் மன்னனின் கர வலிமையால் களையப்படுகின்றனவோ அந்த நாடே உண்மையான இன்பத்தை அனுபவிக்கும்.(2) இது தொடர்பாக மன்னன் முசுகுந்தனுக்கும், வைஸ்ரவணனுக்கும் {குபேரனுக்கும்} இடையில் நடைபெற்ற ஒரு பழைய உரையாடல் தென்படுகிறது.(3)

Thursday, September 07, 2017

அக்னி, குபேரத் தீர்த்தங்கள்! - சல்லிய பர்வம் பகுதி – 47

Agni and Kuvera Tirthas! | Shalya-Parva-Section-47 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 16)


பதிவின் சுருக்கம் : நீர்நிலைகளின் தலைவனாக வருணனை நிறுவிய தேவர்கள்; அக்னி தீர்த்தம் மற்றும் கௌபேர தீர்த்தம் ஆகியவற்றுக்குச் சென்ற பலராமன்; அத்தீர்த்தங்களின் மகிமை...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, முறையான சடங்குகளுடன் ஸ்கந்தன் பட்டமேற்றதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து கேட்ட இந்த வரலாறு மிக அற்புதமானதாகும்.(1) ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, இந்த விவரிப்பைக் கேட்டதனால் தூய்மையடைந்தவனாக என்னை நான் கருதுகிறேன். என் மனம் மிகவும் உற்சாகமடைவதால், எனக்கு மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.(2) குமாரனின் பட்டமேற்பையும், தைத்தியர்களின் அழிவையும் கேட்ட பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனினும், எனக்கு மற்றொரு காரியம் குறித்து மிகுந்த ஆவல் ஏற்படுகிறது.(3) பழங்காலத்தில் நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} எவ்வாறு அந்தத் தீர்த்ததில் வைத்து பட்டமேற்கச் செய்யப்பட்டான்? ஓ மனிதர்களில் சிறந்தவரே, பேரறிவையும், உரைப்பதில் திறனையும் கொண்டுள்ள நீர் அவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)

Wednesday, July 29, 2015

ஸ்தூணனைப் பீடித்த சாபம்! - உத்யோக பர்வம் பகுதி 195

The curse on Sthuna! | Udyoga Parva - Section 195 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 22)

பதிவின் சுருக்கம் : சிகண்டினிக்கு அந்த யக்ஷன் ஒரு நிபந்தனையின் பேரில் தனது ஆண் தன்மையைக் கொடுப்பது; சிகண்டி மகிழ்ச்சியுடன் தனது நகரத்திற்குத் திரும்புவது; சிகண்டியைப் பரிசோதித்த ஹிரண்யவர்மன் மகிழ்ந்து, தனது மகளைக் கண்டித்து விட்டுச் சென்றது; ஸ்தூணனின் மாளிக்கைக்குக் குபேரன் வந்தது; பெண்தன்மையை அடைந்த ஸ்தூணனைக் குறித்துக் குபேரன் அறிவது; அந்தப் பெண்மை அப்படியே நிலைத்துப் போகட்டும் எனக் குபேரன் ஸ்தூணனைச் சபித்தது; ஹிரண்யவர்மன் சென்றதும் ஸ்தூணனிடம் திரும்பிய சிகண்டி; நடந்தவற்றைச் சொன்ன ஸ்தூணன், சிகண்டியை வாழ்த்தி அனுப்பியது; இந்தக் கதையைத் துரியோதனனிடம் சொன்ன பீஷ்மர், அந்த அம்பையே சிகண்டி என்றும், பெண்ணைத் தான் கொல்வதில்லை என்றும் சொன்னது; பீஷ்மரின் நடத்தை சரியானதே என்று துரியோதனன் நினைத்தது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, சிகண்டினியின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், விதியால் பீடிக்கப்பட்டவனுமான அந்த யக்ஷன் {ஸ்தூணாகர்ணன்}, தனது மனதில் ஆலோசித்த பிறகு இவ்வார்த்தைகளைச் சொன்னான்; உண்மையில், அஃது அப்படியே விதிக்கப்பட்டது. மேலும், ஓ! கௌரவா {துரியோதனா}, அஃது எனது துக்கத்திற்காகவே விதிக்கப்பட்டதுமாகும். அந்த யக்ஷன் {ஸ்தூணாகர்ணன் சிகண்டினியிடம்}, "ஓ! அருளப்பட்ட மங்கையே {சிகண்டினியே}, நீ விரும்புவதை நிச்சயம் நான் செய்வேன்! எனினும், நான் விதிக்கும் நிபந்தனையைக் கேள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நான் உனக்கு எனது ஆண் தன்மையைக் கொடுப்பேன். எனினும், குறித்த காலத்தில் நீ என்னிடம் திரும்ப வேண்டும். அப்படிச் செய்வதாக உறுதியேற்றுக் கொள்வாயாக! மகத்தான சக்தி கொண்ட நான், என் விருப்பப்படி வானில் திரிந்து, நான் நினைப்பதை ஈடேற்றிக் கொள்ள இயன்றவனாவேன். என் அருளால், நகரத்தையும், உனது இரத்த உறவினர்கள் அனைவரையும் காத்துக் கொள்! ஓ! இளவரசி {சிகண்டினியே}, நான் உனது பெண்தன்மையைச் சுமப்பேன்! உனது சத்தியத்தை என்னிடம் வாக்குறுதியாக அளிப்பாயாக! நான் உனக்கு ஏற்புடையதைச் செய்வேன்!" என்றான் {யக்ஷன் ஸ்தூணாகர்ணன்}.


இப்படிச் சொல்லப்பட்ட சிகண்டினி அவனிடம் {அந்த யக்ஷனிடம்}, "ஓ! அற்புத நோன்புகளைக் கொண்ட புனிதமானவனே, நான் உனது ஆண்தன்மையைத் திரும்ப அளிப்பேன். இரவுலாவியே {ஸ்தூணாகர்ணா}, குறுகிய காலத்திற்கு எனது பெண்தன்மையைச் சுமப்பாயாக! பொற்கவசம் பூண்ட தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} (எனது நகரத்தில் {காம்பில்யத்தில்} இருந்து) புறப்பட்டதும், மீண்டும் நான் கன்னிகையாவேன், நீயும் ஆடவனாவாய்!" என்றாள் {சிகண்டினி}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "(ஒருவருக்கொருவர்) இப்படிச் சொல்லிக் கொண்ட இருவரும், ஓ! மன்னா {துரியோதனா}, ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, ஒருவரின் உடலுக்கு மற்றொருவரின் பாலினத்தை அளித்தனர். {பாலினப் பரிமாற்றம் செய்து கொண்டனர்}. யக்ஷன் ஸ்தூணன் ஒரு பெண்ணானான், அதே வேளையில், சிகண்டினி அந்த யக்ஷனின் சுடர்விடும் வடிவைக் கொண்டாள். பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, பாஞ்சால குலத்தின் அந்தச் சிகண்டினி ஆண்தன்மையை அடைந்ததும், தனது நகருக்குள் பெருமகிழ்ச்சியோடு நுழைந்து, தனது தந்தையை {துருபதனை} அணுகினான். நடந்தது அனைத்தையும் அவன் {சிகண்டி} துருபதனிடம் தெரிவித்தான். இஃது அனைத்தையும் கேட்ட துருபதன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான். தனது மனைவியோடு சேர்ந்த அந்த மன்னன் {துருபதன்}, மஹேஸ்வரனின் {சிவனின்} வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.

பிறகு அவன் {துருபதன்}, ஓ! மன்னா {துரியோதனா}, தசார்ணக ஆட்சியாளனிடம் {ஹிரண்யவர்மனிடம்} "இந்த எனது பிள்ளை ஆடவனே. இஃது உன்னால் நம்பப்படட்டும்" என்று சொல்லி தூதர்களை அனுப்பினான். அதேவேளையில், சோகம் மற்றும் துக்கத்தால் நிறைந்திருந்த தசார்ணகர்களின் மன்னன் {ஹிரண்யவர்மன்}, திடீரெனப் பாஞ்சாலர்களின் ஆட்சியாளனான துருபதனை அணுகினான். காம்பில்யத்தை அடைந்த அந்தத் தசார்ணக மன்னன் {ஹிரண்யவர்மன்}, வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையான ஒருவரை முறையாகக் கௌரவித்து, தனது தூதராக அனுப்பினான்.

அவன் {ஹிரண்யவர்மன்} அந்தத் தூதரிடம், "ஓ! தூதரே, எனது உத்தரவுக்கிணங்க, பாஞ்சாலர்களின் ஆட்சியாளனான {துருபதன் என்ற} அந்த மன்னர்களில் இழிந்தவனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வீராக. அவனிடம் {துருபதனிடம்}, "ஓ! தீய புரிதல் கொண்டவனே {தீய புத்தி கொண்டவனே}, உனது மகளாக இருக்கும் ஒருத்திக்கு எனது மகளை மனைவியாகத் தேர்ந்தெடுத்த நீ, அந்த வஞ்சகச் செயலுக்கான கனியை இன்று அறுவடை செய்வாய் என்பதில் ஐயமில்லை" என்று சொல்வீராக" என்று சொன்னான் {ஹிரண்யவர்மன் > அந்தணத் தூதரிடம்}.

இப்படிச் சொல்லப்பட்டவரும், அவனால் {ஹிரண்யவர்மனால்} அனுப்பப்பட்டவருமான அந்த அந்தணர், தசார்ணகத் தூதுவராகத் துருபதனின் நகரத்திற்குப் புறப்பட்டார். அந்த நகரத்தை {காம்பில்யத்தை} அடைந்த அந்தப் புரோகிதர், துருபதனின் முன்னிலைக்குச் சென்றார். ஓ! மன்னா {துரியோதனா}, பிறகு அந்தப் பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்} சிகண்டியோடு சேர்ந்து, அந்தத் தூதருக்கு, ஒரு பசுவையும், தேனையும் அளித்தான். எனினும், அவ்வழிபாட்டை ஏற்காத அந்த அந்தணர், பொற்கவசம் பூண்டவனான தசார்ணகர்களின் துணிவுமிக்க ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} தன் மூலம் சொல்லியனுப்பிய வார்த்தைகளை அவனிடம் {துருபதனிடம்} சொன்னார்.

அவர் {அந்தணத் தூதர் துருபதனிடம்}, "ஓ! தீய நடத்தைகளைக் கொண்டவனே {துருபதா}, உனது மகளின் மூலமாக (அவள் வழியாக) உன்னால் நான் வஞ்சிக்கப்பட்டேன்! உனது ஆலோசகர்கள், மகன்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய உன்னை நான் பூண்டோடு அழிப்பேன்" என்று {ஹிரண்யவர்மனின் வார்த்தைகளாக அந்தப் புரோகிதர்} சொன்னார். தசார்ணகர்களின் ஆட்சியாளனால் {ஹிரண்யவர்மனால்} உச்சரிக்கப்பட்டவையான, அந்தக் கண்டனம் நிறைந்த வார்த்தைகளை அந்தப் புரோகிதர் சொல்ல, தனது ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மத்தியில் வைத்து அதைக் கேட்ட மன்னன் துருபதன், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {துரியோதனா}, நட்பு நோக்கங்களின் காரணமாக மென்மையான நடத்தையைக் கைக்கொண்டு, "நீர் சொன்னவையான எனது சம்பந்தியின் இந்த வார்த்தைகளுக்கான மறுமொழியை, ஓ! அந்தணரே, அந்த ஏகாதிபதியிடம் {ஹிரண்யவர்மனிடம்} எனது தூதர்கள் எடுத்துச் செல்வார்கள்!" என்றான் {துருபதன்}.

பிறகு மன்னன் துருபதன், வேதங்களைக் கற்ற அந்தணர் ஒருவரைத் தனது தூதராக ஏற்படுத்தி, உயர் ஆன்ம ஹிரண்யவர்மனிடம் அனுப்பி வைத்தான். அந்தத் தூதர், தசார்ணக ஆட்சியாளனான மன்னன் ஹிரண்யவர்மனிடம் சென்று, அவனிடம், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, துருபதன் சொன்ன வார்த்தைகளைச் சொன்னார். அவர் {துருபதனின் தூதர் ஹிரண்யவர்மனிடம்}, "இந்த எனது பிள்ளை உண்மையில் ஆடவனே. சாட்சிகளின் மூலம் இது தெளிவாக்கப்படட்டும்! யாரோ உன்னிடம் பொய்யுரைத்திருக்கிறார்கள். அதை நீ நம்பக்கூடாது!" என்று {துருபதனின் வார்த்தைகளைத் தூதனாகச் சென்ற அந்த அந்தணர்} சொன்னார்.

துருபதனின் வார்த்தைகளைக் கேட்ட தசார்ணகர்க்களின் மன்னன் {ஹிரண்யவர்மன்}, பிறகு, சோகத்தால் நிறைந்து, சிகண்டி ஆணா? பெண்ணா? என்பதை உறுதி செய்யும்பொருட்டு, பெரும் அழகு படைத்த இளம் மங்கையர் பலரை அவனிடம் அனுப்பி வைத்தான். ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, அவனால் {ஹிரண்யவர்மனால்} அனுப்பி வைக்கப்பட்ட அந்த மங்கையரும், (உண்மையை) உறுதி செய்து கொண்டு, ஆண் பாலினத்தோரில் வலிமைமிக்கவன் சிகண்டி என்று தசார்ணகர்களின் மன்னனிடம் {ஹிரண்யவர்மனிடம்} மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர்.

அந்தச் சான்றைக் கேட்ட தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்}, பெருமகிழ்ச்சியால் நிறைந்து, தனது சம்பந்தியான துருபதனிடம் சென்று, சில நாட்களை அவனுடன் {துருபதனுடன்} மகிழ்ச்சியாகக் கழித்தான். {சில நாட்கள் அங்கே தங்கியிருந்தான்}. மகிழ்ச்சியுடன் இருந்த அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்} சிகண்டிக்கு அபரிமிதமான செல்வத்தையும், பல யானைகளையும், குதிரைகளையும், பசுக்களையும் அளித்தான். (அங்கே தங்கியிருந்த காலம் வரை) துருபதனால் வழிபடப்பட்ட அந்தத் தசார்ணக மன்னன் {ஹிரண்யவர்மன்}, தனது மகளைக் கண்டித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டான். கோபம் தணிந்தவனும், தசார்ணகர்களின் ஆட்சியாளனுமான மன்னன் ஹிரண்யவர்மன், மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றதும், சிகண்டி மிகவும் மகிழத் தொடங்கினான்.

இதற்கிடையில், (பாலினப் பரிமாற்றம் நடந்த) சில நாட்களுக்குப் பிறகு, மனிதர்களின் தோள்களில் எப்போதும் சுமக்கப்படும் குபேரன், (பூமியின் ஊடான) தனது பயணத்தின் போது, ஸ்தூணனின் வசிப்பிடத்திற்கு வந்தான். {ஸ்தூணனின்} அந்த மாளிகைக்கு மேலே (ஆகாயத்தில்) நின்ற அந்தப் பொக்கிஷப் பாதுகாவலன் {குபேரன்}, அழகிய மலர்மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டதும், நறுமணமிக்கப் புற்களின் வேர்களாலும், பல இனிய நறுமணத் தைலங்களாலும் மணமூட்டப்பட்டிருந்த யக்ஷன் ஸ்தூணனின் அற்புத வீட்டைக் கண்டான்.

அங்கே தூப நறுமணங்களும் மற்றும் கவிகைகளும் நிறைந்திருந்தன. கொடிகள் மற்றும் கொடிச்சீலைகளோடு கூடிய அது {அந்த மாளிகை} மிக அழகாக இருந்தது. அனைத்து வகை உணவுப்பொருட்கள் மற்றும் பானத்தால் அது நிறைந்திருந்தது. ரத்தினம் மற்றும் தங்கத்தாலான மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், பல்வேறு விதமான மலர்களின் நறுமணத்தால் தூபம் போடப்பட்டதும், நீர் தெளித்து நன்கு கூட்டப்பட்டதுமான அந்த யக்ஷனின் {ஸ்தூணனின்} அழகிய வீட்டைக் கண்ட அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்}, தன்னைத் தொடர்ந்து வந்த யக்ஷர்களிடம், "அளவிடமுடியா ஆற்றல் கொண்டோரே, ஸ்தூணனின் இந்த மாளிகை நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளதே! எனினும், அந்தத் தீய புரிதல் கொண்டவன் {ஸ்தூணன்} ஏன் என்னிடம் வரவில்லை? எனவே, நான் இங்கிருக்கிறேன் என்பதை அறிந்தும், என்னை அணுகாத அந்தத் தீய ஆன்மா கொண்டவனை {ஸ்தூணனை} ஏதாவது கடுந்தண்டனையால் பீடிக்க வேண்டும்! இதுவே எனது நோக்கமாக இருக்கிறது!" என்றான் {குபேரன்}.

அவனது {குபேரனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த யக்ஷர்கள் {குபேரனிடம்}, "ஓ! மன்னா {குபரரே}, அரசன் துருபதனுக்கு, சிகண்டினி என்ற பெயரில் ஒரு மகள் பிறந்தாள்! ஏதோ காரணத்திற்காக அவளிடம் {சிகண்டினியிடம்} ஸ்தூணன் தன் ஆண்தன்மையைக் கொடுத்திருக்கிறான். அவளது பெண் தன்மையை ஏற்றுக்கொண்ட அவன் {ஸ்தூணனன்}, பெண்ணாக ஆனதால், அவனது வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கிறான்! எனவே, பெண் வடிவைச் சுமந்து கொண்டிருப்பதால், நாணத்தால் அவன் உம்மை அணுகவில்லை! இக்காரணத்திற்காகவே, ஓ! மன்னா {குபேரரே}, அந்த ஸ்தூணன் உம்மிடம் வரவில்லை! இவையாவையும் கேட்ட பிறகு, எது முறையோ அதைச் செய்வீராக!" என்றனர் {யக்ஷர்கள்}.

அப்போது, "தேர் {விமானம்} இங்கேயே நிற்கட்டும்! ஸ்தூணன் என்னிடம் கொண்டு வரப்படட்டும்!" என்ற சொற்களே அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்} உதிர்த்தவையாக இருந்தது. அவன் {குபேரன்}, "நான் அவனைத் {ஸ்தூணனைத்} தண்டிப்பேன்!" என்றே மீண்டும் மீண்டும் சொன்னான்.  ஓ! மன்னா {துரியோதனா}, பிறகு, யக்ஷர்களின் தலைவனால் {குபேரனால்} அழைக்கப்பட்ட ஸ்தூணன், பெண் வடிவைச் சுமந்து கொண்டு, அங்கே வந்து, வெட்கத்துடன் அவன் {குபேரன்} முன்னிலையில் நின்றான். பிறகு, ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, செல்வத்தை அளிப்பவனான அவன் {குபேரன்}, "குஹ்யகர்களே, இந்த இழிந்தவனின் பெண் தன்மை, இப்போது இருப்பது போலவே நீடிக்கட்டும்" என்று கோபத்தால் சபித்தான்.

மேலும் அந்த உயர் ஆன்ம யக்ஷர்களின் தலைவன், "யக்ஷர்கள் அனைவரையும் அவமதித்து, சிகண்டினியிடம் இருந்து அவளது பெண் தன்மையைப் பெற்றுக் கொண்டு, உனது சொந்தப் பாலினத்தை {ஆண்தன்மையை} அவளுக்குக் கொடுத்துவிட்டதால், ஓ! பாவம் நிறைந்த செயல்களைக் கொண்டவனே {ஸ்தூணாகர்ணா}, இதற்கு முன் எவனும் செய்யாததை நீ செய்திருப்பதால், இந்த நாள் முதலே, நீ பெண்ணாகவே நீடிப்பாய், அவளும் ஆணாகவே நீடிப்பாள்" என்றான்.

அவனது {குபேரனது} இந்த வார்த்தைகளைக் கேட்ட யக்ஷர்கள் அனைவரும், வைஸ்ரவணனை {குபேரனை} மென்மைப்படுத்தத் {அமைதிப்படுத்தத்} தொடங்கி, ஸ்தூணாகர்ணன் சார்பாக மீண்டும் மீண்டும் பேசி, "உமது சாபத்திற்கான எல்லையை {முடிவை} நிர்ணியிப்பீராக!" என்றனர். அந்த உயர் ஆன்ம யக்ஷர்கள் தலைவன் {குபேரன்}, தன்னைத் தொடர்ந்து வந்த அந்த யக்ஷர்கள் அனைவரிடமும், தனது சாபத்தின் எல்லையை நிர்ணயிக்கும் விருப்பத்தால், "யக்ஷர்களே, சிகண்டியின் மரணத்திற்குப் பிறகு, இவன் {ஸ்தூணன்} தனது சுய வடிவை அடைவான்! எனவே, இந்த உயர் ஆன்ம யக்ஷனான ஸ்தூணன் தனது கவலையில் இருந்து விடுபடட்டும்!" என்றான். இதைச் சொன்னவனும், ஒப்பற்றவனுமான அந்த யக்ஷர்களின் தெய்வீக மன்னன் {குபேரன்}, உரிய வழிபாட்டை அடைந்து, குறுகிய நேர இடைவெளியில் பெரும் தூரத்தைக் கடக்கவல்ல, தனது தொண்டர்கள் அனைவருடனும் புறப்பட்டான். இப்படிச் சபிக்கப்பட்ட ஸ்தூணன் அங்கேயே தொடர்ந்து வாழ ஆரம்பித்தான்.

நேரம் வந்த போது, சிகண்டி ஒரு நொடியும் காலந்தாழ்த்தாமல் அந்த இரவுலாவியிடம் {யக்ஷன் ஸ்தூணனிடம்} வந்தான். அவனது முன்னிலையை அடைந்த அவன் {சிகண்டி}, "ஓ! புனிதமானவனே {ஸ்தூணா}, நான் உன்னிடம் வந்துவிட்டேன்" என்றான். ஸ்தூணன், "நான் உன்னிடம் மகிழ்ச்சி கொள்கிறேன்" என்று மீண்டும் மீண்டும் சொன்னான். உண்மையில், சூது ஏதுமற்ற {வஞ்சனையற்ற} அந்த இளவரசன் {சிகண்டி} தன்னிடம் திரும்பி வந்ததைக் கண்ட ஸ்தூணன், சிகண்டியிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். உண்மையில், அந்த யக்ஷன் {ஸ்தூணன்}, "ஓ! மன்னனின் மகனே {சிகண்டி}, நான் வைஸ்ரவணனால் {குபேரனால்} சபிக்கப்பட்டேன். இப்போது சென்று, நீ தேர்ந்தெடுத்த மனிதர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக வாழ்வாயாக. நீ இங்கே வந்தது மற்றும் புலஸ்தியரின் மகனுடைய {குபேரனின்} வருகை ஆகிய இரண்டும் முன்பே விதிக்கப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். இவை யாவும் தவிர்க்க இயலாவையாகும்" என்றான் {ஸ்தூணன்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "யக்ஷனான ஸ்தூணனால் இப்படிச் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ! பாரதா {துரியோதனா}, பெரும் மகிழ்ச்சியால் நிரம்பி தனது நகரத்திற்கு வந்தான். அவன் {சிகண்டி} பல்வேறு விதமான நறுமணத் தைலங்கள், மலர் மாலைகள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பொருட்களால் மறுபிறப்பாளர்களையும் {பிராமணர்களையும்}, தேவர்களையும், பெரும் மரங்களையும், நாற்சந்திகளையும் வழிபட்டான்.

பாஞ்சாலர்களின் ஆட்சியாளனான துருபதன், விருப்பங்களால் வெற்றிமகுடம் சூட்டப்பட்ட தனது மகன் சிகண்டியுடனும், தனது இரத்த உறவினர்களுடனும் சேர்ந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். பிறகு, ஓ! குரு குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த மன்னன் {துருபதன்}, முன்பு பெண்ணாக இருந்த தனது மகன் சிகண்டியை, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, துரோணருக்குச் சீடனாக அளித்தான். அந்த இளவரசன் சிகண்டி, உங்கள் அனைவருடன் சேர்ந்து, நால்வகை ஆயுத அறிவியலையும் அடைந்தான். மேலும் (அவனது தம்பியான) பிருஷத குல திருஷ்டத்யும்னனும் {உங்களுக்குப் பிறகு} அதையே {அதே கல்வியை} அடைந்தான்.

உண்மையில், இவை யாவும், ஓ! ஐயா {துரியோதனா}, மூடர்களாகவும், பார்வை மற்றும் கேள்விப் புலன்களை இழந்தவர்களாகவும் {குருடர்களாகவும், செவிடர்களாகவும்} மாற்றுருவம் தரித்துத் துருபதனிடம் ஏற்கனவே என்னால் அனுப்பப்பட்டிருந்த எனது ஒற்றர்களால் எனக்குத் தெரிவிக்கப்பட்டன. இப்படியே, ஓ! மன்னா {துரியோதனா}, அந்த ரதர்களில் சிறந்தவனும், துருபதனின் மகனுமான சிகண்டி, முதலில் பெண்ணாகப் பிறந்து, அதன் தொடர்ச்சியாக, வேறு பாலினத்திற்கு {ஆணாக} மாறினான். அம்பை என்ற பெயரால் கொண்டாடப்பட்ட காசி ஆட்சியாளனின் மூத்த மகளே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, துருபதன் குலத்தில் சிகண்டியாகப் பிறந்தாள். போரிடும் விருப்பத்தால், கையில் வில்லுடன் அவன் {சிகண்டி} என்னை அணுகினால், அவனை நான் ஒருக்கணமும் பார்க்கவோ, அடிக்கவோ மாட்டேன்.

ஓ! மங்காப் புகழ் கொண்டவனே, ஓ! குரு குலத்தின் காளையே {துரியோதனா}, "பெண், அல்லது முன்னர்ப் பெண்ணாக இருந்தவன், அல்லது பெண்தன்மையுள்ள பெயரைக் கொண்டவன், அல்லது பெண்களைப் போன்ற தோற்றம் கொண்டவன் ஆகியோர் மீது நான் ஆயுதங்களை அடிக்க மாட்டேன்" என்பது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட எனது நோன்பாகும். எனவே, கையில் ஆயுதத்துடன் அவன் என்னை அணுகினாலும், நான் அவனைப் போரில் கொல்ல மாட்டேன். பீஷ்மன் ஒரு பெண்ணைக் கொன்றால், நீதிமான்கள் அவனை {பீஷ்மனான என்னை} இழிவாகப் பேசுவார்கள். எனவே, போரில் அவன் {சிகண்டி எனக்காகக்} காத்திருப்பதை நான் கண்டாலும், அவனை {சிகண்டியை} நான் கொல்ல மாட்டேன்!" என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட குரு குலத்தின் மன்னன் துரியோதனன், ஒருக்கணம் சிந்தித்து, பீஷ்மரின் அந்த நடத்தை சரியானதே என்று நினைத்தான்" என்றான் {சஞ்சயன்}.


Monday, June 15, 2015

கிருஷ்ணனிடம் பேசிய குந்தி! - உத்யோக பர்வம் பகுதி 132

Kunti spoke to Krishna! | Udyoga Parva - Section 132 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –61)

பதிவின் சுருக்கம் : குந்தியைச் சந்தித்த கிருஷ்ணன், அவளிடம் கௌரவச் சபையில் நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொன்னது; தான் புறப்படப் போவதாகவும், பாண்டவர்களின் தாய் சொல்லிய அனுப்பிய செய்தி என யுதிஷ்டிரனிடம் தான் என்ன சொல்ல வேண்டும் என்றும் கிருஷ்ணன் குந்தியிடம் கேட்டது; ஓர் அரசனுக்கு உரிய கடமைகளைக் குறித்துக் கிருஷ்ணன் மூலமாகக் குந்தி யுதிஷ்டிரனுக்குச் சொன்ன நீதிகள்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குந்தியின் வசிப்பிடம் சென்று அவளது பாதங்களை வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்}, குருக்களின் சபையில் நடந்தது அத்தனையும் அவளுக்குச் சுருக்கமாகச் சொன்னான். வாசுதேவன் {கிருஷ்ணன் - குந்தியிடம்}, "ஏற்கத்தகுந்ததும், காரணங்களுடன் கூடியதுமான பல்வேறு வார்த்தைகள், என்னாலும், முனிவர்களாலும் சொல்லப்பட்டும் துரியோதனன் அவற்றை ஏற்கவில்லை.


துரியோதனனையும் அவனது தொண்டர்களையும் பொறுத்தவரை, அவர்களது {அழிவு} நேரம் வந்துவிட்டது. உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு, நான் பாண்டவர்களிடம் விரைந்து செல்வேன். உனது செய்தியாக நான் அவர்களிடம் {பாண்டவர்களிடம்} என்ன சொல்ல வேண்டும்? ஓ! பெரும் அறிவு படைத்தவளே, நான் உனது வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.

குந்தி {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, நல்ல ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக, "ஓ மகனே {யுதிஷ்டிரா}, உனது அறம் வெகுவாகக் குறைந்து வருகிறது. வீண் செயல் புரியாதே. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வேதங்களின் உண்மைப் பொருளை உணரும் திறனற்றவன் அதைப் படித்தாலும் உண்மையில் கல்லாதவனே. அது போல, நீ வேதங்களில் அறம் சார்ந்த வார்த்தைகளை மட்டுமே புரிந்து கொள்கிறாய். படைப்பாளன் {பிரம்மன்} வகுத்துள்ள படி, உனது சொந்த வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளில் உனது கண்களைச் செலுத்துவாயாக. கொடூரச் செயல்கள் அத்தனைக்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், தன் கரங்களின் ஆற்றலையே நம்பியிருக்கும் க்ஷத்திரியன், அவனது (பிரம்மனின்) கரங்களில் இருந்தே உண்டாக்கப்பட்டான்.

இது தொடர்பாக, நான் முதியோரிடம் இருந்து கேட்டறிந்த ஒரு நிகழ்வைக் கேட்பாயாக. பழங்காலத்தில், அரசமுனியான முசுகுந்தனிடம் மனநிறைவு கொண்ட வைஸ்ரவணன் {குபேரன்}, இந்தப் பூமியைக் கொடையாக அவனுக்கு {முசுகுந்தனுக்கு} அளித்தான். பின்னவனோ {முசுகுந்தனோ} அந்தக் கொடையை ஏற்காமல், "எனது கரங்களின் ஆற்றலினால் வெல்லப்பட்ட அரசுரிமையையே நான் அனுபவிக்க விரும்புகிறேன்" என்றான். இதனால் பெரிதும் மகிழ்ந்த வைஸ்ரவணன் {குபேரன்}, ஆச்சரியத்தால் நிறைந்து போனான். க்ஷத்திரிய வகைக் கடமைகளை முழுமையாக நோற்ற மன்னன் முசுகுந்தன், தனது கரங்களின் ஆற்றலினால் இந்தப் பூமியை வென்று ஆட்சி செலுத்தினான். 

மன்னனால் நன்கு பாதுகாக்கப்பட்ட குடிமக்கள் பயிலும் அறத்தில் {தர்மத்தில்} ஆறில் ஒரு பங்கு மன்னனால் அடையப்படுகிறது. தானே பயிலும் அறத்தால் அந்த மன்னன் தெய்வத் தன்மையை அடைகிறான். அதே வேளையில் அவன் பாவத்தைச் {மறம்-அதர்மம்} செய்தால், அவன் நரகத்திற்குச் செல்கிறான்.

குற்றவியல் சட்டங்களை {தண்ட நீதியை} முறையாகப் பயன்படுத்தும் ஆட்சியாளன், நால்வகை மக்களையும் தங்கள் கடமைகளைச் செய்ய வைத்தால், அஃது (ஆட்சியாளன்) அறம் (பொருளையும், முக்தியையும்) ஈட்ட வழிவகுக்கிறது. குற்றவியல் சட்டத்தின் {தண்ட நீதியின்} ஒரு பகுதியின் ஓர் எழுத்தைக் கூட உயிரற்றதாக்கமல், ஒரு மன்னன் அவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்தும்போது, காலங்களில் சிறந்த அந்தக் காலத்தில்தான் கிருதயுகம் ஏற்படுகிறது. காலம் மன்னனுக்குக் காரணமா? மன்னன் காலத்துக்குக் காரணமா? என்பதில் உனக்குச் சந்தேகம் வேண்டாம். மன்னனே காலத்திற்குக் காரணமாவான் (இதை உறுதியாக அறிந்து கொள்வாயாக).

கிருத, திரேத அல்லது துவாபர யுகங்களை மன்னனே உண்டாக்குகிறான். உண்மையில், நான்காவது யுகத்துக்கும் (கலியுகத்துக்கும்) மன்னனே காரணமாக இருக்கிறான். கிருத யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான் {அதாவது சொர்க்கத்தை முடிவின்றி அனுபவிக்கிறான்}. திரேதா யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆனால் அதீதமாக அல்ல. {அதாவது சொர்க்கத்தை முடிவுள்ளதாகவே அனுபவிக்கிறான்}. துவாபர யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், தனக்கு உரியதை அனுபவிக்கிறான். எனினும் கலியுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன் பாவத்தை அதீதமாக ஈட்டுகிறான். அதன்பேரில், அந்த மன்னன் நரகத்தில் எண்ணற்ற வருடங்களுக்கு வசிக்கிறான். உண்மையில், மன்னனின் பாவங்கள் உலகை பாதிக்கச் செய்கின்றன, உலகின் பாவங்களும் அவனைப் பாதிக்கின்றன.

உனது குலமரபுக்குப் பொருத்தமான அரச கடமைகளை நீ நோற்பாயாக. நீ பின்பற்ற விரும்பும் நடத்தை ஓர் அரசமுனியினுடையது அல்ல. உண்மையில், பலவீனமான இதயத்தால் கறைபடிந்தவனும், இரக்கம் கொள்பவனும், நிலையற்றவனுமான ஒருவனால், தனது குடிமக்களை அன்புடன் பேணிக்காத்து தகுதியை {புண்ணியத்தை} அடைய முடியாது.

என்ன புரிதலில் நீ இப்போது செயல்பட்டுவருகிறாயோ, அதை {அந்தச் செயல்களை}, {உனது தந்தை} பாண்டுவோ, நானோ, உனது பாட்டனோ {பீஷ்மரோ} எப்போதும் விரும்பியதில்லை. நாங்கள் உனக்கு ஆசிகள் வழங்கிய போதெல்லாம், வேள்வி, கொடை, தகுதி {புண்ணியம்}, வீரம், குடிமக்கள், பிள்ளைகள், ஆன்ம பெருமை, பலம், சக்தி ஆகியவற்றை வேண்டியே உனக்கு ஆசி கூறினோம். நன்மை விரும்பும் அந்தணர்கள் {வேள்வியில்} தங்கள் சுவாகாக்களையும், சுவதாக்களையும் சேர்த்து, உனக்கு நீண்ட ஆயுள், செல்வம், பிள்ளைகள் ஆகியவை ஏற்பட தேவர்களையும், பித்ருக்களையும் மனநிறைவு கொள்ளச் செய்து, அவர்களை முறையாக வழிபட்டனர்.

தேவர்களைப் போலவே தாயும் தந்தையும் எப்போதும் தங்கள் பிள்ளைகளுக்காகத் தயாளம், கொடை, கல்வி, வேள்வி, குடிமக்களின் மீது ஆட்சி ஆகியவற்றையே எப்போதும் விரும்புகின்றனர். இவை நீதிமிக்கதோ {அறமோ}, நீதியற்றதோ {மறமோ},  எப்படிப்பட்டதாக இவை இருப்பினும், உனது பிறப்பின் விளைவால் நீ அதைப் {க்ஷத்ரியக் கடமைகளைப்} பயிலவே வேண்டும்.

(ஓ! கிருஷ்ணா, இவற்றையெல்லாம் {அவன்} செய்யும்படி பார்), உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும், ஆதரவுக்கான வழிமுறைகள் அற்றவர்களாக இருப்பவர்கள், துன்பத்தால் பாதிக்கப்படுகின்றனர். துணிச்சல் மிக்கவனும், தாராளமானவனுமான ஏகாதிபதி ஒருவனை அணுகும் பசி நிறைந்த மனிதர்கள், மனநிறைவடைந்து, அவனுக்குப் பக்கத்திலேயே வாழ்கிறார்கள். அதைக்காட்டிலும் மேன்மையான அறம் என்ன? அறம் சார்ந்த மனிதன் ஒருவன், நாட்டை அடைந்த பிறகு, கொடையால் சிலரையும் {தானத்தால்}, பலத்தால் சிலரையும் {தண்டத்தால்}, இனிய சொற்களால் {சாமத்தால்} சிலரையும் என உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும்.

அந்தணன் ஒருவன் பிச்சையெடுத்து வாழும் வாழ்வை மேற்கொள்ள வேண்டும்; 
ஒரு க்ஷத்திரியன் (குடிமக்களைப்) பாதுகாக்க வேண்டும்; 
ஒரு வைசியன் செல்வம் ஈட்ட வேண்டும்; 
ஒரு சூத்திரன் மற்ற மூவருக்கும் சேவை செய்ய வேண்டும்.
எனவே, பிச்சை உனக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. உழவும் {விவசாயம்} உனக்குப் பொருத்தமானது இல்லை.

நீ ஒரு க்ஷத்திரியன். எனவே, துயரில் இருக்கும் அனைவரையும் நீ பாதுகாப்பவனாவாய். உனது கரங்களின் ஆற்றலைக் கொண்டே நீ வாழ வேண்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ இழந்த உனது தந்தையின் பங்கை, சமரசப் பேச்சுவார்த்தை மூலமோ {சாமத்தாலோ}, எதிரிகளுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தியோ {பேதத்தாலோ}, பணத்தைக் கொடையாகக் கொடுத்தோ {தானத்தாலோ}, வன்முறையாலோ {தண்டத்தாலோ}, நன்கு இயக்கப்படும் கொள்கையினாலோ {நீதியினாலோ} மீட்டெடுப்பாயாக.

நண்பர்களின் இன்பங்களை அதிகரிப்பவனே {யுதிஷ்டிரா}, உன்னைப் பெற்ற பிறகும், நண்பர்களை இழந்த நான், பிறரால் தரப்படும் உணவில் வாழும் நிலை இருப்பதைவிட வேறு என்ன பெரிய துயரம்  இருக்க முடியும்? மன்னர்களின் நடைமுறைப்படி போரிடுவாயாக. உனது மூதாதையர்களை (புகழ்க்கேட்டில்) ஆழ்த்தாதே. உனது தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்து, உனது தம்பிகளுடன், பாவம் நிறைந்த முடிவை {கதியை} அடையாதே" {என்று யுதிஷ்டிரனிடம் சொல்லும்படி கிருஷ்ணனிடம் சொன்னாள் குந்தி}.


Friday, September 05, 2014

இராமாயணம் ஆரம்பம்! - வனபர்வம் பகுதி 272

Markandeya related Ramayana!  | Vana Parva - Section 272 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

ராமன் மற்றும் சீதையின் பிறப்பு; ராவணனின் மூதாதையர் பற்றிய அறிமுகம்; குபேரன் பிறப்பு; குபேரன் பெற்ற நன்மைகள் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, {தசரத ராமனே} ராமனே கூட இணையற்ற துயரத்தைச் சந்தித்தான். ராட்சச மன்னனான தீய மனம் கொண்ட ராவணன், ஏமாற்றைக் {மாயையைக்} கைக்கொண்டு, ஜடாயு என்ற கழுகை வீழ்த்தி, அவனது {ராமனின்} மனைவியான சீதையை, அவனது {ராமனின்} ஆசிரமத்தில் இருந்து பலவந்தமாகக் கடத்திச் சென்றான். பிறகு உண்மையில், சுக்ரீவனின் உதவியைப் பெற்று, கடலில் பாலத்தைக் கட்டி தனது கூர்முனை கொண்ட கணைகளால் லங்கையை எரித்து, சீதையை மீட்டான்"

யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ராமன் எந்தக் குலத்தில் பிறந்தான். அவனது பலம் மற்றும் பராக்கிரமத்தின் அளவு என்ன? ராவணன் யாருடைய மகன்? எதன் பேரில் அவன் ராமனுடன் முரண்பட்டான்? ஓ சிறப்புமிக்கவரே {மார்க்கண்டேயரே}, அனைத்தையும் விவரமாக எனக்குச் சொல்லும்; பெரும் சாதனைகள் கொண்ட ராமனின் கதையை நான் கேட்க மிக ஆவலாக உள்ளேன்" என்றான்.


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குல இளவரசே {யுதிஷ்டிரா}, இந்தப் பழைய வரலாற்றை அது நடந்தவாறே சரியாகக் கேள்! தனது மனைவியுடன் சேர்ந்து ராமன் அனுபவித்த துன்பம் அனைத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன். இக்ஷவாகு குலத்தில் உதித்த அஜன் என்ற பெரும் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு {அஜனுக்கு}, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்து, எப்போதும் சுத்தமாக இருந்த தசரதன் என்ற பெயர் கொண்ட மகன் ஒருவன் இருந்தான். அந்தத் தசரதனுக்கு, அறநெறிகளையும், பொருளையும் அறிந்த ராமன், லட்சுமணன், சத்ருக்னன் மற்றும் பலம்பொருந்திய பரதன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர்.

ராமனுக்குக் கௌசல்யை என்ற தாயும், பரதனுக்குக் கைகேயி என்ற தாயும் இருந்தனர். எதிரிகளுக்குக் கசையாக இருந்த லட்சுமணனும், சத்ருக்னனும் சுமித்திரையின் மகன்கள். ஜனகன் விதேக நாட்டின் மன்னாக இருந்தான். சீதை அவனது மகளாக இருந்தாள். அவளை {சீதையை} ராமனின் அன்பிற்குரிய மனைவியாக்க விரும்பிய தஷ்திரி {பிரம்மன்} தானே அவளைப் படைத்தான். ராமன் மற்றும் சீதையின் பிறப்பு குறித்த வரலாற்றை இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.

இப்போது, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் ராவணனின் பிறப்பைக் குறித்து உரைக்கிறேன். அனைத்து உயிர்களின் தலைவனும், அண்டத்தைப் படைத்தவனும், பெரும் தவத்தகுதி படைத்த தேவனும், சுயம்புவுமான பிரஜாபதியே {பிரம்மனே} ராவணனின் பாட்டனாவான். புலஸ்தியருக்கு, பசுவிடம் பெறப்பட்ட வைஸ்ரவணன் {குபேரன்} என்ற பெயரில் அழைக்கப்பட்ட பலம்பொருந்திய மகன் ஒருவன் இருந்தான். ஆனால் அவரது {புலஸ்தியரின்} மகன் {வைஸ்ரவணன்}, தன் தந்தையை {புலஸ்தியரை} விட்டுவிட்டு, தன் பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றுவிட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதனால் கோபமடைந்த அவனது {வைஸ்ரவணனின்} தந்தை {புலஸ்தியர்}, தன்னிடமிருந்து இரண்டாவதாக ஒரு சுயத்தைப் படைத்தார். தன் சுயத்தின் மறுபாதியின் மூலமே அந்த மறுபிறப்பாளர், வைஸ்ரவணனிடம் கொண்ட கோபத்தைத் தீர்க்க விஸ்ரவஸ் என்றவனைப் பிறப்பித்தார்.

ஆனால் வைஸ்ரவணனிடம் {குபேரனிடம்} மனநிறைவு கொண்ட பெரும்பாட்டனோ {பிரம்மனோ}, அவனுக்கு {வைஸ்ரவணனுக்கு} இறவாமையையும், அண்டத்தில் உள்ள அனைத்துச் செல்வங்களின் மீது ஆட்சி அதிகாரத்தையும், திசைப்புள்ளிகளில் ஒன்றுக்குப் பாதுகாவலன் என்ற பொறுப்பையும், ஈசானனின் நட்பையும், நளகுபேரன் என்ற மகனையும் கொடுத்தான். அவன் {பிரம்மன்}, ராட்சசக் கூட்டத்தால் பாதுகாக்கப்பட்ட, அவனது தலைநகரான இலங்கையையும், செலுத்துபவன் விருப்பதிற்கேற்ப நினைத்த இடம் எங்கும் செல்லும் திறன் கொண்ட புஷ்பகம் என்று அழைக்கப்பட்ட தேரையும் {விமானத்தையும்} கொடுத்தான். யக்ஷர்களுக்கு மன்னனாகவும், மன்னர்களை ஆள்பவனாகவும் அவனை {வைஸ்ரவணனை} நியமித்தான்." 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Thursday, May 01, 2014

குபேரன் மறைந்தான்! - வனபர்வம் பகுதி 161

Kubera vanished! | Vana Parva - Section 161 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனுக்குச் சில உபதேசங்களைச் செய்த குபேரன், அர்ஜுனனின் நலத்தைச் சொல்லி அங்கிருந்து மறைவது...

பொக்கிஷத்தலைவன் {குபேரன்} சொன்னான், "ஓ! யுதிஷ்டிரா, பொறுமை, திறன் (சரியான) நேரம், இடம் மற்றும் பராக்கிரமம் ஆகிய ஐந்தும் காரியங்களில் வெற்றியை நோக்கி மனிதனை இட்டுச் செல்கின்றன. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, கிருத யுகத்தில், மனிதர்கள் பொறுமையாகவும், தங்களுக்கு உரிய பணிகளில் திறன்வாய்ந்தும் தங்கள்கள் பராக்கிரமத்தைக் காட்டுவது எவ்வாறு என்பதை அறிந்துமிருந்தனர். ஓ!க்ஷத்திரியர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, பொறுமையோடிருந்து தனக்கான இடம், மற்றும் நேரத்தை புரிந்து கொண்டு, மனித தர்மங்களை நன்கு அறிந்த ஒரு க்ஷத்திரியன், நீண்ட காலம் இந்த உலகத்தைத் தனியாக ஆளுகிறான். ஓ! வீரா, இதன் படி நடந்து கொள்பவன் இந்த உலகத்தில் புகழையும், அடுத்த உலகத்தில் அற்புத நிலையையும் அடைகிறான்.


தனது பராக்கிரமத்தை உரிய இடத்தில் காலத்தில் வெளிப்படுத்திய வசுக்களோடு கூடிய சக்ரன் {இந்திரன்}, சொர்க்கத்தின் ஆளுமையை அடைந்தான். கோபத்திலிருப்பவனுக்குத் தனது வீழ்ச்சி தெரியாது. இயற்கையிலேயே தீயவனும், தீய எண்ணம் கொண்டவனும், இடம் நேரம் அறியாது செயல் புரிபவனும், இவ்வுலகம் மற்றும் அடுத்த உலகம் ஆகிய இரண்டிலும் அழிவைச் சந்திக்கிறார்கள். அப்படிப்பட்ட முட்டாளின் முயற்சிகள் அனைத்தும் கனியற்றதாகும். விரும்பத்தகுந்த நேரம் மற்றும் செயல்களை அறியாதவன் இவ்வுலகம் மற்றும் அடுத்த உலகம் ஆகிய இரண்டிலும் அழிவைச் சந்திக்கிறான். தீய நோக்கம் கொண்ட ஏமாற்றுகர மனிதர்கள் அனைத்து வகையிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்று எண்ணி முரட்டுச் செயல்களைச் செய்வார்கள்.

ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பீமசேனன் அச்சமற்றவனாகவும், கடமைகளை அறியாதவனாகவும், செருக்குடையவனாகவும், குழந்தையின் மனம் கொண்டவனாகவும், பொறுமையற்றவனாகவும் இருக்கிறான். ஆகையால் அவனைக் குறித்து ஆய்வு செய். மீண்டும் பக்திமானான முனிவர் ஆர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்திற்கு இந்தத் தேய்பிறைகாலத்தில் திரும்பி பயமோ துயரமோ அற்று இரு. ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, என்னால் நியமிக்கப்பட்டு அழகையிலும் {அழகாபுரியில்} வசிக்கும் அனைத்து கந்தர்வர்களும் மற்றும் இந்த மலையில் வசிப்பவர்களும், ஓ! பலம்வாய்ந்த கரம் கொண்டவனே, உன்னையும், இந்த அந்தணர்களில் சிறந்தவர்களையும் காப்பார்கள். மேலும், ஓ! மன்னா, ஓ! அறம்சார்ந்த மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, தனது முரட்டுத் தனத்தால் விருகோதரன் இங்கு வந்தான் என்பதை அறிந்தாய், ஆகையால் அவனை ஆய்வு செய். ஓ! ஏகாதிபதி, இது முதல், இந்தக் கானகத்தில வசிக்கும் அனைத்து உயிர்களும் உன்னை வந்து சந்தித்து, உனக்காகக் காத்திருந்து, எப்போதும் உங்கள் அனைவரையும் காப்பாற்றும்.

மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, எனது பணியாட்கள் எப்போதும் உனக்குப் பலதரப்பட்ட இறைச்சிகளையும், சுவைமிக்கப் பானங்களையும் கொண்டு வந்து கொடுப்பார்கள். ஓ! மகனே, யுதிஷ்டிரா, தெய்வீகக் கூடுகையால் பெறப்பட்ட அர்ஜுனன் மகேந்திரனுக்கும் {இந்திரனுக்கும்}, விருகோதரன் வாயுத்தேவனுக்கும், நீ தர்மனும், பலம் கொண்ட இரட்டையர்கள் அசுவினிகளுக்கும் எப்படிப் பாதுகாக்கப்படத் தகுந்தவர்களோ, அதே போலவே எனக்கும் நீங்கள் அனைவரும் ஆவீர்கள். பிறப்பால் பீமசேனனுக்கு அடுத்தவனான, பொருள் அறிவியலும், அனைத்து மனித விதிகளையும் அறிந்தவனுமான பல்குனன் {அர்ஜுனன்} சொர்க்கத்தில் நன்றாக இருக்கிறான். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, சொர்க்கத்திற்கு இட்டுச்செல்லக்கூடியவை என்று உலகத்தில் அறியப்பட்ட அனைத்து நிறைகுணங்களும், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} அவனது பிறப்பில் இருந்து நிறுவப்பட்டிருக்கின்றன.

தன்னடக்கம், தானம், பலம், புத்திக்கூர்மை, அடக்கம், தாங்கும் திறன், அற்புதமான சக்தி ஆகிய அனைத்தும் அந்த அற்புத ஆன்மாகக் கொண்ட மகத்தானவனிடம் {அர்ஜுனனிடம்} நிறுவப்பட்டுள்ளன. ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, ஆவியின் வறுமையால் {Poverty of Spirit}, ஜிஷ்ணு {அர்ஜுனன்} எந்த வெட்கங்கெட்ட செயலையும் செய்ததில்லை. பார்த்தன் {அர்ஜுனன்} ஒரு பொய் சொன்னான் என்று இந்த உலகத்தில் யாரும் சொன்னதில்லை. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தேவர்களாலும், பித்ருக்களாலும், கந்தர்வர்களாலும் மதிக்கப்பட்டுச் சக்ரனின் வசிப்பிடத்தில் ஆயுத அறிவியலைப் பயின்று கொண்டிருக்கிறான் குருக்களின் புகழைத் தூண்டுபவன் {அர்ஜுனன்}.

ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, பூலோகத்தின் அனைத்து ஆட்சியாளர்களையும் நீதியுடன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, உனது தகப்பனின் பாட்டனான சந்தனுவையும் தனது செயலைக் குறித்துத் திருப்தி கொள்ள வைத்தான் தனது குலத்தில் முதன்மையானவனான காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்}. ஓ! மன்னா, யமுனையின் கரையில் தேவர்களையும், பித்ருக்களையும், அந்தணர்களையும் வழிபட்டு, ஏழு பெரும் குதிரை வேள்விகளைச் செய்து சொர்க்கத்தை அடைந்து, இந்திரனின் உலகத்தில் வசித்து வரும் உனது முப்பாட்டனும் கடும் தவசியுமான சக்கரவர்த்திச் சந்தனு, உனது நலம் குறித்து விசாரித்தான்" என்றான் {குபேரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், "செல்வத்தைப் பகிர்ந்தளிப்பவனின் {குபேரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள் அவனிடம் மிகவும் திருப்தி கொண்டனர். பிறகு தனது தடி, கதாயுதம், வாள், வில் ஆகியவற்றை இறக்கிய பாரதர்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்} குபேரனை வணங்கினான். பாதுகாப்பை அளிப்பவனான கருவூலத்தலைவன், நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவனைக் {யுதிஷ்டிரனைக்} கண்டு, "எதிரிகளின் கர்வத்தை அழிப்பவனாகவும், நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனாகவும் இரு. எதிரிகளை ஒடுக்குபவனே, எங்கள் அழகிய பகுதியில் வாழு. உனது விருப்பங்களுக்கு யக்ஷர்கள் குறுக்கே நிற்க மாட்டார்கள். குடகேசன் {அர்ஜுனன்}, ஆயுதங்களில் நிபுணத்துவம் அடைந்த பிறகு விரைவில் திரும்பி வருவான். மகவத்தால் {இந்திரனால்} விடை கொடுத்து அனுப்பப்படும் தனஞ்சயன் உன்னிடம் வந்து சேர்வான்" என்றான் {குபேரன்}.

அற்புதச் செயல்கள் செய்யும் யுதிஷ்டிரனிடம் இப்படிச் சொன்ன குஹ்யர்களின் தலைவன் {குபேரன்}, அந்த மலைகளில் சிறந்த மலையில் மறைந்தான். ஆயிரம் ஆயிரம் யக்ஷர்களும், ராட்சசர்கள் பஞ்சணைகள் கொண்ட, பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அவனைத் தொடர்ந்து சென்றனர். குதிரைகள் குபேரனின் வசிப்பிடத்தை நோக்கி முன்னேறிய போது, பறவைகள் காற்றில் பறக்கும் ஒலி எழும்பியது. கருவூலங்களின் தலைவனது {குபேரனின்} சாரதிகள் வானத்தை இழுப்பது போல, காற்றில் பறந்து சென்றனர்.

பிறகு செல்வத்தலைவனின் {குபேரனின்} உத்தரவின் பேரில், ராட்சசர்களின் சடலங்கள் அந்த மலைச்சிகரத்தில் இருந்த அப்புறப்படுத்தப்பட்டன. புத்திகூர்மை கொண்ட அகஸ்தியர் சாபத்தின் காலத்தை நிர்ணயித்தது போல, மோதலில் கொல்லப்பட்ட ராட்சசர்கள் சாபத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். பாண்டவர்கள் ராட்சசர்களால் மதிக்கப்பட்டுப் பல இரவுகளை அந்த வசிப்பிடத்தில இனிமையாகக் கழித்தனர்.


இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

Tuesday, April 29, 2014

குபேரனின் கோபம் தணிந்தது! - வனபர்வம் பகுதி 160

The wrath of Kuvera appeased! | Vana Parva - Section 160 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பீமனைக் காணாது மனம் வருந்திய பாண்டவர்கள் மலைச்சிகரத்தில் ஏறியது; பீமனையும், பீமனால் கொல்லப்பட்ட ராட்சசர்களையும் காண்பது; குபேரன் பீமனிடம் போருக்கு வந்தது; வந்த இடத்தில் யுதிஷ்டிரனைக் கண்டு கோபம் தணிந்து, தனக்கு அகத்தியரால் ஏற்பட்ட சாபத்தைச் சொன்னது; பீமசேனன் செயலால் சாபவிமோசனம் பெற்றதாகக் குபேரன் சொல்வது...

வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், "மலையின் குகைகளில் இருந்து பலதரப்பட்ட ஒலிகள் வருவதையும், பீமசேனனைக் காணாததையும் கண்ட, குந்தியின் மகனான அஜாதசத்ருவும் {யுதிஷ்டிரனும்}, மாத்ரியின் மகன்களான இரட்டையர்களும், தௌமியரும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, அனைத்து அந்தணர்களும், (பாண்டவர்களின்) நண்பர்களும் துயரத்தில் நிறைந்தனர். அதன்பிறகு திரௌபதியை ஆரிஷ்டஷேணரிடம் ஒப்படைத்துவிட்டு, தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அந்த வீரமிக்க, வலிமைமிக்க ரதவீரர்கள் {பாண்டவர்கள்} ஒன்றாகச் சேர்ந்து அந்த மலையின் சிகரத்தில் ஏறினர். எதிரிகளை ஒடுக்குபவர்களான வலிமையான வில்லாளிகளும், பலம் வாய்ந்த தேரோட்டிகளுமான அவர்கள் {பாண்டவர்கள்} அந்த மலைச்சிகரத்தை அடைந்ததும் பீமனையும், பீமனால் அடிக்கப்பட்டுச் சுயநினைவற்ற நிலையில் கிடக்கும் பெரும் பலம்வாய்ந்த ராட்சசர்களையும் கண்டனர். அந்தத் தானவப் படையைக் கொன்ற பிறகு, தனது கதாயுதத்தையும், வாளையும், வில்லையும் பிடித்தவாறு இருந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {பீமன்}, மகவானைப் {இந்திரனைப்} போலத் தெரிந்தான்.


அற்புதமான நிலையை அடைந்த அந்தப் பாண்டவர்கள் தங்கள் சகோதரனை {பீமனைக்} கண்டதும், அவனை அணைத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்தனர். அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளிகள் இருந்த அந்தச் சிகரம், தேவர்களில் முதன்மையான, உயர்ந்த நற்பேறைக் கொண்ட லோகபாலர்கள் இருக்கும் சொர்க்கத்தைப் போலத் தெரிந்தது. குபேரனின் வசிப்பிடத்தையும், கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் ராட்சசர்களையும் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அங்கே அமர்ந்திருந்த தனது தம்பியிடம் {பீமனிடம்}, "முரட்டுத்தனத்தாலோ, அறியாமையாலோ, ஓ! பீமா, நீ பாவ காரியத்தைச் செய்திருக்கிறாய். ஓ! வீரா {பீமா}, துறவு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, காரணமற்று நீ செய்திருக்கும் இந்தக் கொலை உனக்குத் தகுந்ததன்று. ஏகாதிபதி விரும்பாத செயல் என்று கடமைகளை அறிந்தவர்களால் கணிக்கப்பட்டுள்ள செயல்களைச் செய்யக்கூடாது. ஆனால், ஓ! பீமசேனா, நீ தேவர்களையே அவமதிக்கும் காரியத்தைச் செய்திருக்கிறாய். பொருளையும், கடமையையும் கருதிப் பாராமல், பாவ எண்ணங்கள் பால் திரும்புபவன், ஓ! பார்த்தா {பீமா}, அந்தப் பாவகரச் செயல்களுக்கான கனியை அறுவடை செய்கிறான். எனினும், நீ எனது நன்மையை விரும்பினால், மீண்டும் இதுபோன்ற ஒரு காரியத்தைச் செய்யாதே" என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், "தனது தம்பியான விருகோதரனிடம் {பீமனிடம்} இதைச் சொன்ன உயர்ந்த சக்தியும் உறுதியான மனமும், பொருள் குறித்த அறிவியலையும் அறிந்த குந்தியின் மகனான யுதிஷ்டிரன் பேச்சை நிறுத்தி, அவ்விஷயம் குறித்துச் சிந்திக்கலானான்.

மறுபுறம், பீமானால் கொல்லப்பட்டவர்கள் தவிர மீந்திருந்த ராட்சசர்கள் ஒன்று சேர்ந்து குபேரனின் வசிப்பிடத்திற்கு ஓடினார்கள். பெரும் வேகம் கொண்ட அவர்கள் வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தை விரைவாக அடைந்து, பீமனின் மீது ஏற்பட்ட பயத்தால் துன்பக்குரலுடன் கதறத் தொடங்கினர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் ஆயுதங்களை இழந்து, களைப்படைந்து, இரத்தக்கறை கொண்ட கவசங்களுடனும், கலைந்த கேசங்களுடனும், குபேரனிடம், "ஓ! தலைவா, கதாயுதம், தண்டம், வாள்கள், ஈட்டிகள், வேல்கம்புகள் கொண்டு போரிடும் உமது ராட்சசர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். ஓ! கருவூலத்தின் தலைவா, மலையில் ஊடுருவி வந்த ஒரு மனிதன், தனி ஒருவனாக உமது குரோதவாச ராட்சசர்கள் அனைவரையும் கொன்றுவிட்டான். மேலும், செல்வத்தின் தலைவா, யக்ஷர்களிலும் ராட்சசர்களின் முதன்மையானவர்கள் அங்கே அடிபட்டு, உணர்வற்று விழுந்து, இறந்து கிடக்கின்றனர். அவனது {பீமனது} கருணையால் நாங்கள் விடப்பட்டோம். மேலும், உமது நண்பரான மணிமானும் கொல்லப்பட்டார். இவை அனைத்தையும் ஒரு மனிதன் செய்தான். இதன்பிறகு எது சரியோ அதைச் செய்யும்" என்றனர்.

இதைக் கேட்ட யக்ஷப் படைகளின் தலைவன் {குபேரன்}, கோபம் மிகுந்து, சினத்தால் கண்கள் சிவக்க, "என்ன?" என்று கேட்டான். பீமனின் இரண்டாவது தாக்குதலைக் கேட்ட பொக்கிஷங்களின் தலைவனான, யக்ஷர்கள் மன்னன், கோபத்தால் நிறைந்து, "(குதிரைகளைப்) பூட்டுங்கள்" என்றான். அதன்பேரில், கரு மேக வண்ணத்தில் மலைச்சிகரம் போல உயரமாக இருந்த தேரில் தங்க ஆபரணங்கள் பூண்ட குதிரைகள் பூட்டப்பட்டன. தேரில் பூட்டப்பட்ட அனைத்து நற்குணங்களும், பத்து மங்களகரமான சுழிகளும் கொண்ட அந்தச் சக்திமிக்க, பலமிக்க அற்புதமான குதிரைகள், பலதரப்பட்ட ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுக் காண்பதற்கு அருமையாக இருந்தன. காற்றைப் போல வேகமாகச் செல்ல விரும்பிய அவை வெற்றித்தருணத்தில் கனைக்கும் கனைப்பொலியை, ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டு அப்போது கனைத்தன.

அந்தத் தெய்வீகமான பிரகாசமிக்க யக்ஷர்கள் மன்னன் {குபேரன்}, தேவர்களாலும், கந்தர்வர்களாலும் துதிபாடப்பட்டுக் கிளம்பினான். கண்கள் சிவந்து, தங்க நிறத்தில், பெரும் உடல் படைத்த, பெரும் பலமிக்க யக்ஷர்களின் முதன்மையான ஆயிரம் பேர் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, வாளைச் சுழற்றிக் கொண்டு, அந்த உயர் ஆன்ம பொக்கிஷத் தலைவனை {குபேரனைத்} தொடர்ந்து சென்றனர். வானத்தின் ஊடே பறந்து வந்த அக்குதிரைகள், தங்கள் வேகத்தால் வானத்தை இழுப்பதைப் போல ஓடி விரைவாகக் கந்தமாதனத்தை அடைந்தன. செல்வத்தின் தலைவனால் {குபேரனால்} பராமரிக்கப்படும் அந்தப் பெரும் கூட்டத்தையும், யக்ஷப்படைகளால் சூழப்பட்ட அருள் நிறைந்த உயர் ஆன்ம குபேரனையும் கண்ட பாண்டவர்களுக்கு மயிர் சிலிர்த்தது.

விற்களும், வாள்களும் தாங்கிக் கொண்டு நின்ற பெரும்பலம்வாய்ந்த ரதவீரர்களான பாண்டுவின் மகன்களைக் {பாண்டவர்களைக்} கண்ட குபேரன் மகிழ்ந்தான். தேவர்களின் காரியத்தை மனதில் கொண்ட அவன் இதயத்தால் திருப்தியடைந்தான். பெரும் வேகத்தைக் கொடையாகக் கொண்ட யக்ஷர்கள் பறவைகளைப் போல அந்த மலைச்சிகரத்தில் ஏறி, கருவூலங்களின் தலைவனைத் {குபேரனைத்} தலைமையாகக் கொண்டு அவர்கள் {பாண்டவர்கள்} முன்பாக நின்றனர். பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவன் {குபேரன்} பாண்டவர்களிடம் திருப்தியடைந்து நிற்பதைக் கண்ட யக்ஷர்களும், கந்தர்வர்களும் கலக்கமில்லாமல் அங்கே நின்றனர். பிறகு தாங்களே ஊடுருவி வந்ததாகக் கருதிய அந்த உயர் ஆன்ம ரத வீரர்களான பாண்டவர்கள், செல்வங்களைத் தரும் அத்தலைவனை {குபேரனை} வணங்கி, குவிந்த கரங்களுடன் கருவூலங்களின் தலைவனைச் {குபேரனைச்} சூழ்ந்து நின்றனர்.

பல வண்ணங்கள் பூசப்பட்டு விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட அழகான புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்}, ஓர் அற்புதமான இருக்கையில் பொக்கிஷங்களின் தலைவன் {குபேரன்} அமர்ந்தான். பெரும் உடல் படைத்தவர்கள் சிலரும், முளை {அல்லது தாழ்ப்பாள்} போன்ற காதுகளைக் கொண்ட சிலருமான ஆயிரக்கணக்கான யக்ஷர்களும், ராட்சசர்களும், நூற்றுக்கணக்கான கந்தர்வர்களும், அப்சரசுக் கூட்டங்களுங்களும் அமர்ந்திருந்த அவன் {குபேரனின்} முன்னால், நூறு வேள்விகளைச் செய்தவனைச் சுற்றி அமரும் தேவர்களைப் போல அமர்ந்தனர். தலையில் அழகான தங்க மாலை அணிந்துகொண்டு, கரங்களில் சுருக்குக் கயிற்றையும், வாளையும், வில்லையும் கொண்டிருந்த செல்வத் தலைவனைக் {குபேரனைக்} ஏறிட்டுப் பார்த்தபடி பீமன் நின்றான். ராட்சசர்களால் பலத்த காயமடைந்திருந்த பீமசேனன் எந்தக் கவலையும் அடையாமல், குபேரனின் வருகையால் பயத்தையும் அடையாமல் இருந்தான்.

மனிதர்களின் தோள்களில் சவாரி செய்யும் அவன் {குபேரன்}, கூரிய கணைகளுடன் போரிடும் விருப்பத்துடன் நின்று கொண்டிருக்கும் பீமனைக் கண்டு தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, அனைத்து உயிர்களும், நீ அவைகளுக்கான நன்மையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய் என்று அறிந்திருக்கின்றன. ஆகையால், நீ இந்த மலைச்சிகரத்தில் உனது தம்பிகளுடன் பயமற்ற வசிப்பாயாக. ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, நீ பீமனிடம் கோபம் கொள்ளாதே. இந்த யக்ஷர்களும், ராட்சசர்களும் விதியால் ஏற்கனவே கொல்லப்பட்டனர். உன் தம்பி அதற்கு ஒரு கருவியாக இருந்திருக்கிறான். செய்யப்பட்ட இந்தக் கெட்ட செயலுக்காக வெட்கப்பட வேண்டியது அவசியமில்லை. ராட்சசர்களின் இந்த அழிவு, தேவர்களால் முன்பே கணிக்கப்பட்டதுதான். பீமசேனன் மீதான கோபத்தை நான் ஊக்குவிக்கமாட்டேன். மாறாக, ஓ பாரதக் குலத்தின் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, நான் அவனிடம் {பீமனிடம்} திருப்தியாக இருக்கிறேன். நான் இங்கு வருவதற்கு முன்பே, பீமனின் இச்செயலால் திருப்தியடைந்தேன்" என்றான் {குபேரன் யுதிஷ்டிரனிடம்}.

வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், "மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிப் பேசியவன் {குபேரன்}, பீமனிடம், "ஓ! குழந்தாய், ஓ குருக்களில் சிறந்தவனே, நான் இதை மனதில் வைக்கவில்லை. ஓ! பீமா, கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} திருப்தி செய்வதற்காக, தேவர்களையும், என்னையும் அவமதிக்கும் இம்முரட்டுச் செயலைச் செய்தாய். உனது கரங்களின் பலத்தை நம்பி, யக்ஷர்களையும், ராட்சசர்களையும் அழித்த உன்னிடம் நான் மிகவும் திருப்தி கொண்டுள்ளேன். ஓ! விருகோதரா {பீமா}, இன்று நான் ஒரு பயங்கர சாபத்தில் இருந்து விடுபட்டுள்ளேன். ஒரு குற்றத்திற்காகப் பெரும் முனிவரான அகஸ்தியர், கோபத்தால் என்னைச் சபித்தார். (உனது) இந்தச் செயலின் மூலம் நீ என்னை விடுவித்தாய். ஓ! பாண்டுவின் மகனே {பீமா}, நான் அடைந்த இழிவு முன்பே விதிக்கப்பட்டதே. எனவே, எவ்வழியிலும், ஓ! பாண்டவா {பீமா}, எக்குற்றமும் உன்னைச் சாராது" என்றான் {குபேரன்}.

யுதிஷ்டிரன் {குபேரனிடம்}, "ஓ! தெய்வீகமானவனே, உயர் ஆன்ம அகஸ்தியரால், நீ ஏன் சபிக்கப்பட்டாய்? ஓ! தேவனே, இந்தச் சாபம் ஏற்பட்ட விதத்தைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். சிறந்த புத்தியுள்ளவரான அகஸ்தியரின் கோபத்தால், அச்சமயத்திலேயே உன்னைத் தொடர்ந்து வந்த சேனைகளுடனும், பரிவாரங்களுடனும் நீ எரிக்கப்படாமல் இருந்தாய் என்பதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறது" என்றான்.

அதன்பேரில் கருவூலங்களின் தலைவன் {குபேரன்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் குசஸ்தலி என்ற இடத்தில் தேவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. மூன்று மகாபத்மங்கள் எண்ணிக்கையிலான கடும் முகம் கொண்ட, பலதரப்பட்ட ஆயுதங்கள் தாங்கிய யக்ஷர்கள் சூழ நான் அவ்விடத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். அப்படிச் செல்லும் வழியில், பல வகையான பறவைகளும், பூத்துக்குலுங்கும் மரங்களும் நிறைந்த யமுனைக் கரையில் கடும் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முனிவர்களில் முதன்மையான அகஸ்தியரைக் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நெருப்பு போன்ற பிரகாசத்துடனும், உயர்த்திப் பிடித்த கரங்களுடன் அமர்ந்து, சூரியனை நோக்கிக் கொண்டிருந்த அந்தச் சக்தியின் குவியலைக் {அகஸ்தியரைக்} கண்ட உடனேயே, எனது நண்பனும், ராட்சசர்களின் அருள்நிறைந்த தலைவனுமான மணிமான், முட்டாள்தனத்தாலும், செருக்காலும், அறியாமையாலும், அந்தப் பெரும் முனிவரின் தலையில் எச்சிலை உமிழ்ந்தான்.

அதன் காரணமாக, அனைத்து திக்குகளையும் எரித்துவிடக்கூடிய கோபம் கொண்ட அவர் {அகஸ்தியர்} என்னிடம், "ஓ! கருவூலங்களின் தலைவா {குபேரா}, உனது நண்பன், உனது முன்னிலையில் என்னை இழிவாக அவமதித்ததால், உனது படைகளுடன் கூடிய அவன், ஒரு மனிதனின் கையால் அழிவைச் சந்திப்பான். ஓ! தீய மனம் கொண்டவனே, நீ அந்த மனிதனைக் காண்பதால், வீழ்ந்த உனது படைவீரர்களால் ஏற்படும் துன்பமான அந்தப் பாவத்திலிருந்து விடுபடுவாய். ஆனால் அவர்கள் {படைவீரர்கள்} உனது கட்டளைகளைப் பின்பற்றினால் (அந்தப் படைவீரர்களின்) பலமிக்க மகன்களுக்கு இந்தக் கடும் சாபம் உண்டாகாது. இந்தச் சாபத்தையே முன்பொரு காலத்தில் நான் முனிவர்களில் முதன்மையானவரிடம் {அகஸ்தியரிடம்} பெற்றேன். ஓ! பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது நான் உனது தம்பியான பீமனால் விடுவிக்கப்பட்டேன்" என்றான் {குபேரன்}.
http://www.mediafire.com/view/h526b06w895kf8a/வன_பர்வம்_158__ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.pdf
http://www.mediafire.com/view/6ciys7a7y2tawfw/வனபர்வம்_158_ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.doc

Monday, April 28, 2014

மணிமான் வதம்! - வனபர்வம் பகுதி 159

Maniman slained! | Vana Parva - Section 159 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சுபர்ணத்தின் சிறகசைவில் எழும்பிய காற்றால் கொண்டுவரப்பட்ட பஞ்சநிற மலரை திரௌபதி காண்பது; ராட்சசர்களை அழித்து வரும்படி பீமனிடம் திரௌபதி வேண்டுவது; பீமன் கந்தமாத மலையின் சிகரத்தில் ஏறி, மணிமான் முதலிய யக்ஷர்களைப் போரிட்டுக் கொல்வது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், "ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட எனது பெரும்பாட்டன்கள் {பாண்டவர்கள்} கந்தமாதன மலையில் எவ்வளவு காலம் தங்கியிருந்தார்கள்? ஆண்மையைக் கொடையாகக் கொண்ட பெரும் பலம் வாய்ந்த அவர்கள் {பாண்டவர்கள்} {அங்கிருந்த போது} என்ன செய்தார்கள்? உலகங்களின் வீரர்களான அவர்கள் {பாண்டவர்கள்} அங்கு வசித்த போது, அந்த உயர் ஆன்மா கொண்டவர்களின் {பாண்டவர்களின்} உணவு என்னவாக இருந்தது? ஓ! அற்புதமானவரே {வைசம்பாயனரே}, இது குறித்த அனைத்தையும் நீர் சொல்லும். பீமசேனனின் பராக்கிரமத்தையும், அந்தப் பலம்வாய்ந்த கரம் கொண்டவன் இமய மலையில் என்ன செய்தான் என்பதையும் விவரித்துச் சொல்லும். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, நிச்சயமாக மீண்டும் அவன் {பீமன்} யக்ஷர்களுடன் போரிடவில்லையா? அவர்கள் {பாண்டவர்கள்} வைஸ்ரவணனைச் சந்தித்தார்களா? ஆர்ஷ்டிஷேணர் சொன்னதுபோலச் செல்வத்தலைவன் {குபேரன்} அங்கு வந்தானா? ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {வைசம்பாயனரே}, இவை அனைத்தையும், நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். நிச்சயமாக நான் அவர்களது {பாண்டவர்களின்} செயல்களைக் கேட்டு இன்னும் முழுமையாகத் திருப்தியடையவில்லை."


வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், "அந்த ஒப்பற்ற சக்தி கொண்டவரிடம் {ஆர்ஷ்டிஷேணரிடம்}, தங்கள் நன்மைக்கான அறிவுரைகளைக் கேட்ட அந்தப் பாரதர்களில் சிறந்தவர்கள் {பாண்டவர்கள்}, அதன் படியே நடக்கத் தொடங்கினார்கள். மனிதர்களில் சிறந்த அந்தப் பாண்டவர்கள், முனிவர்கள் உண்ணும் உணவையும், சுவை மிக்கக் கனிகளையும், நஞ்சில்லா கணைகளால் கொல்லப்பட்ட மான் இறைச்சியையும், பல வகைப்பட்ட சுத்தமான தேனையும் {மது என்று வேறு பதிப்பில் இருக்கிறது} உண்டு இமயத்தில் வசித்தார்கள். லோமசரிடம் பல கதைகளைக் கேட்டபடி இப்படியே வாழ்ந்து, ங்களது ஐந்தாவது வருடத்தைக் கடத்தினார்கள். ஓ! தலைவா {ஜனமேஜயா}, கடோத்கசன் "தேவையேற்படும் போது நான் இங்கு இருப்பேன்" என்று சொல்லி, அனைத்து ராட்சசர்களுடன் முன்பே சென்றுவிட்டான். பல அற்புதங்களைக் கண்டபடியே அந்தச் சிறப்புமிக்கவர்கள் {பாண்டவர்கள்} பல மாதங்களை ஆர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்தில் கழித்தனர். அங்கே பாண்டவர்கள் இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தபோது, உள்ளம் நிறைவு பெற்று, கடும் நோன்புகள் நோற்கும் முனிவர்களும், பெரும் நற்பேறு பெற்ற சாரணர்களும், பரிசுத்தமான ஆன்மா கொண்டவர்களும் அவர்களைக் {பாண்டவர்களைக்} காண வந்தனர். அந்தப் பாரதர்களில் முதன்மையானவர்கள் {பாண்டவர்கள்} அவர்களுடன் உலகம் சார்ந்த பல தலைப்புகளைப் {கதைகளைப்} பேசினார்கள்.

இப்படியே பல நாள் கடந்ததும் ஒரு நாள், ஒரு சுபர்ணம் {கருடன்}, அங்கிருந்த பெரும் தடாகத்தில் இருந்து, ஒரு பலம் வாய்ந்த நாகத்தைத் தூக்கிச் செல்வதை அவர்கள் {பாண்டவர்கள்} காண நேர்ந்தது. அதன் காரணமாக, பெரும் மரங்கள் உடைந்தன. அம்மரங்களைத் தாங்கிக் கொண்டிருந்த அந்தப் பெரும் மலை நடுங்கத்தொடங்கியது. அந்த அற்புதத்தை அனைத்து உயிர்களும் பாண்டவர்களும் கண்டனர். அந்தப் பெரும் மலையின் உச்சியில் இருந்து வீசிய காற்று, பாண்டவர்களுக்கு முன்னிலையில் பலவித நறுமணம் கொண்ட அழகான மலர்களை அடித்துக் கொண்டு வந்து சேர்ந்தது. நண்பர்களோடு கூடிய பாண்டவர்களும், சிறப்புமிக்கக் கிருஷ்ணையும் {திரௌபதியும்} ஐந்து நிறம் {பஞ்சவர்ணம்} கொண்ட தெய்வீக மலர்களைக் கண்டனர்.

அந்த மலையில் சுகமாக வீற்றிருந்து பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட பீமனிடம் கிருஷ்ணை {திரௌபதி}, "ஓ! பாரதக் குலத்தின் சிறந்தவரே, சுபர்ணம் {கருடன்} எழுப்பிய காற்றினால், ஐந்து நிறம் கொண்ட இந்த மலர்கள் {பஞ்சவர்ண மலர்கள்}, அனைத்து உயிர்களுக்கும் முன்னிலையில் மிக வேகமாக அஸ்வரத நதியில் விழுகின்றன. சத்தியத்தில் உறுதி கொண்ட உமது தம்பியால் {அர்ஜுனரால்}, கந்தர்வர்களும், நாகர்களும், ஏன் வாசவனும் {இந்திரனும்} கூடக் காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} கலங்கடிக்கப்பட்டார்கள். கடுமை நிறைந்த ராட்சசர்கள் கொல்லப்பட்டார்கள். காண்டீவ வில்லையும் அவர் {அர்ஜுனர்} பெற்றார். பராக்கிரமத்திலும், கரங்களின் பலத்திலும் வெல்லப்பட முடியாதவராக, தாங்க முடியாதவராக, சக்ரனின் {இந்திரனின்} பலத்திற்கு ஒப்பாகவே நீரும் இருக்கிறீர். ஓ! பீமசேனரே, உமது கரங்களின் சக்தியைக் கண்ட அனைத்து ராட்சசர்களும் பயந்து போய், இந்த மலையை விட்டுவிட்டு பத்து திக்குகளையும் அடையட்டும். அப்போது பயம் மற்றும் துயரத்தில் இருந்து உமது நண்பர்கள் விடுவிக்கப்பட்டு, பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த மங்களகரமான சிகரம் கொண்ட அற்புத மலையைக் காண்பார்கள். ஓ! பீமரே, உமது கரங்களின் பலத்தால் காக்கப்பட்டு, இந்தச் சிகரத்தைக் காணவேண்டும் என்ற எண்ணத்தை நான் நீண்ட நாளாக எனது மனதில் பேணிக்காத்து வருகிறேன்" என்றாள் {திரௌபதி}.

இதனால், நல்ல எழுச்சி கொண்ட காளை அடிக்கப்பட்டது போல அடிக்கப்பட்ட பீமசேனன், திரௌபதி தன்னை அவமதிப்பதாகக் கருதினான். அதை அவனால் பொறுக்கமுடியவில்லை. சிங்கம் அல்லது காளையைப் போன்ற நடையும், அருளும், தயாளமும், தங்கத்தைப் போன்ற பிரகாசமும், புத்திகூர்மையும், பலமும், கர்வமும், உணர்வும், வீரமும், சிவந்த கண்களும், அகன்ற தோள்களும், சிங்கப்பற்களும், அகன்ற கழுத்தும், ஆச்சா {சால} மரத்தைப் போன்ற உயரமும், உயர் ஆன்மாவும், அருள் நிறைந்த அனைத்து உறுப்புகளும், சங்கு குறிகள் கொண்ட கழுத்தும், மதயானையின் பலத்தையும் கொடையாகக் கொண்ட அந்தப் பாண்டவன் {பீமன்}, பொன்னால் பின்புறம் அலங்கரிக்கப்பட்ட தனது வில்லையும், வாளையும் எடுத்தான். சிங்கம் போன்ற செருக்குடன், மதயானையைப் போன்ற பலம் வாய்ந்த அவன் {பீமன்}, பயமோ துயரமோ இல்லாமல் அச்சிகரத்தை நோக்கி விரைந்தான். விற்களுடனும், கணைகளுடனும் சிங்கம் போன்றோ அல்லது மதங்கொண்ட யானை போன்றோ செல்லும் அவனை அனைத்து உயிரினங்களும் கண்டன.

பயமோ துயரமோ அற்ற அந்தப் பாண்டவன் {பீமன்}, தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, திரௌபதி மகிழும் வகையில், அந்த மலைகளின் ஏகாதிபதியை {கந்தமாதன மலையை} நோக்கி முன்னேறினான். பிருதை {குந்தி} மற்றும் வாயுத்தேவன் மகனுக்கு {பீமனுக்கு} வாட்டமோ, பயமோ, ஊக்கமின்மையோ, (பிறரைக் கண்டு} விரோத மனப்பான்மையோ ஏற்படவில்லை. ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய கரடுமுரடான பாதையில் சென்ற அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {பீமன்}, பல பனைமரங்களின் {ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும் பனைகளின்} உயரம் இருக்கும் அந்தக் கடுமை நிறைந்த சிகரத்தில் ஏறினான். அச்சிகரத்தில் ஏறி, கின்னரர்களையும், பெரும் நாகர்களையும், முனிவர்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும் மகிழ்வித்த பாரதக் குலத்தில் வந்த முதன்மையானவன் {பீமன்}, வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தைப் பார்த்தான். சிகரத்தைவிட உயர்ந்த நந்தவனங்கள் சூழ, கோட்டைமதிற்சுவர், கோபுரங்கள், கதவுகள், வாயில்கள், வரிசையான கொடிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்கச் சுவர்களால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருந்த பொன்மயமான பளிங்கு மாளிகைகள் அங்கே இருந்தன. இன்பக்கேளிக்கைகளுடன் ஆடிக்கொண்டிருந்த அருள் நிறைந்த மங்கைகளுடனும், தென்றல் காற்றால் ஆடிக்கொண்டிருந்த முக்கோண வடிவக் கொடிகளுடனும் {குபேரனின்} அவ்வசிப்பிடம் இருந்தது.

வளைந்த கைகளால் வில்லின் நுனியைப் பிடித்திருந்த பீமன், ஆவலுடன் கருவூலத் தலைவனின் {குபேரனின்} நகரத்தைக் கண்டான். அனைத்து உயிரினங்களும் மகிழும் வகையில் அங்கே நறுமணத்தைச் சுமந்து கொண்டு வீசிய தென்றல், அவனுக்குக் குணமளிக்கும் உணர்ச்சியைக் கொடுத்தது. அங்கே பல நிறங்களில் அழகான அற்புதமான மரங்களில், பலதரப்பட்ட இனிய ஒலிகள் நிரம்பியிருந்தன. அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த பாரதர்களில் முதன்மையானவன் {பீமன்}, ரத்தினக்குவியல்கள் சிதறி, பலவண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த ராட்சசத் தலைவனின் {குபேரனின்} அரண்மனையை நோட்டம் விட்டான். உயிர் மீது கொண்ட கவனத்தைக் கைவிட்ட பெரும் பலம்வாய்ந்த கரம் கொண்ட பீமசேனன், தனது கதாயுதம், வாள், வில் ஆகியவற்றைக் கைகளில் தாங்கியவாறு பாறை போல அசைவற்று நின்றான் {பீமன்}.

பிறகு பகைவர்களின் மயிர் சிலிர்க்கும் வண்ணம் தனது சங்கை எடுத்து ஊதினான்; தனது வில்லைச் சுண்டி நாணொலி எழுப்பினான்; தனது கைகளைத் தட்டி அனைத்து உயிர்களையும் துணிவிழக்கச் செய்தான். மயிர் சிலிர்த்த யக்ஷர்களும், ராட்சசர்களும் ஒலி வந்த திக்கில் இருந்த பாண்டவனை {பீமனை} நோக்கி விரைந்தனர். கதாயுதம், தடி, வேல்கம்பு, ஈட்டி, கோடரி ஆகிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு யக்ஷர்களும், ராட்சசர்களும் கோபத்துடன் வந்தனர். ஓ!பாரதா {ஜனமேஜயா}, பீமனுக்கும் ராட்சசர்களுக்கும் இடையில் போர் துவங்கிய போது, மாய சக்தி கொண்ட அவர்களது சூலங்கள், ஈட்டிகள், கோடரிகள் ஆகியவற்றைப் பீமன் தனது அம்புகளால் அறுத்தெறிந்தான். பெரும் பலம் மிக்க அவன் {பீமன்} தனது கணைகளைக் கொண்டு, ஆகாயத்திலும், பூமியிலும் நின்று கர்ஜித்துக் கொண்டிருந்த ராட்சசர்களின் உடலைத் துளைத்தான் {பீமன்}.

அளவிலா பலமிக்கப் பீமன், கதாயுதம், தடி முதலியன கொண்டு எல்லாப்புறங்களிலும் இருந்து வந்த ராட்சசர்களின் உடலில் இருந்த செந்நிற மழை பெய்ய வைத்து, அந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கினான். பீமனின் பலமிக்கக் கரங்களில் இருந்த விடுபட்ட ஆயுதங்கள், ராட்சசர்கள் மற்றும் யக்ஷர்களின் உடல்களையும், கரங்களையும் அடித்தன. பிறகு, மேகங்களால் மூடப்பட்ட சூரியனைப் போல அருள் நிறைந்த பாண்டவன் {பீமன்} அனைத்துப் புறங்களிலும் ராட்சசர்களால் சூழப்பட்டிருப்பதை அனைத்து உயிரினங்களும் கண்டன. சூரியன் தனது கதிர்களால் அனைத்தையும் சூழ்வதைப் போல, அந்தப் பெரும்பலம் மிக்கக் கரம் கொண்டு வீழா பராக்கிரமம் கொண்டவன் {பீமன்}, தனது கணைகளால் எதிரிகளை மூழ்கடித்து அழித்தான்.

அவர்கள் {ராட்சசர்கள்} கர்ஜித்துக் கொண்டு பயமுறுத்தியபடி இருந்தாலும், பீமன் கலங்காதிருப்பதை ராட்சசர்கள் கண்டனர். அவர்களது உடல்கள் சிதைய, யக்ஷர்கள் பயத்தால் பீடிக்கப்பட, பீமசேனன் துன்பம் விளைவிக்கிற வகையில் பயங்கரமான ஒலி எழுப்பினான். பலமான வில்லைத் தாங்கியிருப்பவனை {பீமனைக்} கண்டு பயந்த அவர்கள், தங்கள் கதைகளையும், வேல்கம்புகளையும், வாள்களையும், தடிகளையும், கோடரிகளையும் கைவிட்டுத் தென்திசை நோக்கி ஓடினர். அகன்ற மார்பும், வலுத்த கரமும் கொண்டவனும், வைஸ்ரவணனின் {குபேரனின்} நண்பனுமான மணிமான் என்ற பெயர் கொண்ட ராட்சசன், தனது கைகளில் சூலங்களுடனும், கதாயுதங்களுடனும் அங்கே நின்று கொண்டிருந்தான்.

பெரும்பலம் மிக்க அவன் {மணிமான்}, தனது நிபுணத்துவத்தையும், ஆண்மையையும் வெளிக்காட்டத் தொடங்கினான். போரைக் கைவிட்டு ஓடும் அவர்களிடம் {ராட்சசர்களிடம்} புன்னகையுடன், "வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்திற்குச் சென்று, அந்தச் செல்வத்தலைவனிடம் {குபேரனிடம்}, எண்ணிக்கையில் அதிகமான எங்கள் அனைவரையும், தனித்த ஒரு மனிதன் போரில் வீழ்த்தினான் என்று எப்படிச் சொல்வீர்கள்?" என்று கேட்டான். இதை அவர்களிடம் சொன்ன அந்த ராட்சசன் {மணிமான்}, கைகளில் தடிகளையும், ஈட்டிகளையும், கதாயுதங்களையும் எடுத்துக்கொண்டு அந்தப் பாண்டவனை {பீமனை} நோக்கி விரைந்தான். மதங்கொண்ட யானையைப் போல, அவன் வேகமாக விரைந்து சென்றான். அப்படி வந்தவனை {மணிமானை} பீமசேனன் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கணைகளால் {வத்சதந்தம் என்ற கணை} விலாப்புறத்தில் அடித்தான். அந்தப் பெரும்பலம் வாய்ந்த மணிமானும், தனது பங்கிற்கு, கோபத்துடன், பயங்கரமான கதாயுதத்தைப் பீமசேனன் மீது வீசினான். இதன் பேரில், கற்களில் கூரேற்றப்பட்ட எண்ணிலடங்கா கணைகளால் அந்தக் கதாயுதத்தைப் பீமன் தடுத்தான். அது மின்னல் போன்ற ஒளியை வெளியிட்டது. ஆனால் அந்தக் கதாயுதத்தை அடைந்த கணைகள் அனைத்தும் கலங்கடிக்கபட்டன. பிறகு கடும் பராக்கிரமம் நிறைந்தவனும் பெரும் பலம் வாய்ந்தவனுமான பீமன் {அந்த ராட்சசனால்- மணிமானால்} விடப்பட்ட அந்த ஆயுதத்தைத் தனது கதாயுத நிபுணத்துவத்தால் கலங்கடித்தான்.

அதே சமயம், புத்திகூர்மை கொண்ட அந்த ராட்சசன் {மணிமான்}, தங்கப் பிடி கொண்டு இரும்பினால் செய்யப்பட்ட பயங்கரமான தடியை எடுத்து வீசினான். நெருப்பைக் கக்கிய அத்தடி, பயங்கரச் சத்தமிட்டபடி, திடீரெனப் பீமனின் வலக்கரத்தைத் துளைத்துத் தரையில் விழுந்தது. அத்தடியால் கடும் காயமடைந்த வில்லாளியான, அளவிலா பராக்கிரமம் கொண்ட குந்தியின் மகன் {பீமன்}, கோபத்தில் கண்கள் உருள, தனது கதாயுதத்தை எடுத்தான். எதிரிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தி அவர்களை வீழ்த்த, பொற்தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த இரும்பு கதையை எடுத்த அவன் {பீமன்}, பெரும்பலமிக்க மணிமானை நோக்கி அச்சுறுத்தும் வகையிலும் பெரும் ஒலியுடனும் பெரும் வேகத்துடனும் வீசினான். மணிமான் தனது பங்கிற்குப் பெரும் உருவமும், சுடர்விட்டுப் பிரகாசிப்பதுமான தனது கைவேலை {வேல்} எடுத்துப் பீமனை நோக்கி பெரும் கூச்சலுடன் தூக்கி எறிந்தான்.

அந்த வேலை, தனது கதையின் முனையால் உடைத்த கதாயுத்த நிபுணனான அந்தப் பெரும் பலம்வாய்ந்தவன் {பீமன்}, கருடன் நாகத்தைக் கொல்ல விரைவது போல, அவனைக் {மணிமானைக்} கொல்ல விரைந்தான். பிறகு திடீரெனக் களத்தின் முன்னணிக்கு வந்த அந்தப் பலமிக்கக் கரம்வாய்ந்தவன் {பீமன்} வானத்தில் எழும்பி தனது கதையைச் சுழற்றி பெரும் கர்ஜனையுடன் வீசி எறிந்தான். இந்திரனால் ஏவப்பட்ட வஜ்ரம் போல, தீமை விளைவிக்கும் அந்தக் கதாயுதம், காற்றின் வேகத்தோடு சென்று அந்த ராட்சசனை {மணிமானை} அழித்துவிட்டுத் தரையில் விழுந்தது. காளை சிங்கத்தால் கொல்லப்படுவதைப் போல, பயங்கரமான பலம் கொண்ட ராட்சசன் {மணிமான்} பீமனால் கொல்லப்படுவதை அனைத்து உயிரினங்களும் கண்டன. அவன் {மணிமான்} கொல்லப்பட்டுத் தரையில் வீழ்த்தப்பட்டதைக் கண்டு, உயிருடன் இருந்த பிற ராட்சசர்கள் துயரத்தால் பயங்கரமான ஓலமெழுப்பியபடி கிழக்கு நோக்கி ஓடினர்.
http://www.mediafire.com/view/h526b06w895kf8a/வன_பர்வம்_158__ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.pdf
http://www.mediafire.com/view/6ciys7a7y2tawfw/வனபர்வம்_158_ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.doc

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்