Puru took the decrepitude of Yayati! | Adi Parva - Section 84 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 20)
பதிவின் சுருக்கம் : யயாதியின் மூப்பைப் பெற்றுக் கொள்ள மறுத்த முதல் நான்கு மகன்கள்; அந்த மகன்கள் நால்வரையும் சபித்த யயாதி; முதுமையை ஏற்றுக் கொண்ட பூரு...
வைசம்பாயனர் சொன்னார், "யயாதி முதுமையால் பலவீனமடைந்து தனது தலைநகருக்குச் சென்று, தனது மூத்த மகன் யதுவை அழைத்து,(1) "அன்புக் குழந்தாய்! உசானஸ் என்று அழைக்கப்படும் காவியரின் சாபத்தால், பலவீனமடைந்து, தோல் சுருக்கம் ஏற்பட்டு, தலை மயிர் வெண்மையாகி முதுமை என்னை ஆட்கொண்டது. ஆனால், நான் இன்னும் எனது இளமையின் இனிமையில் மனநிறைவுகொள்ளவில்லை.(2) எனவே, ஓ யதுவே! எனது பலவீனத்துடன் கூடிய முதுமையை நீ ஏற்றுக் கொள்வாயாக. உனது இளமையைக் கொண்டு நான் இன்பம் அனுபவிப்பேன்.(3) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையை உனக்குத் திருப்பி அளித்து, எனது முதுமையையும் பலவீனத்தையும் பெற்றுக் கொள்கிறேன்" என்றான்.(4)















