Sunday, March 31, 2013

துஷ்யந்தன் வேட்டை! | ஆதிபர்வம் - பகுதி 69

The Hunting of Dushmanta! | Adi Parva - Section 69 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 5)

பதிவின் சுருக்கம் : காட்டுக்கு வேட்டையாட படைகளுடன் சென்ற துஷ்யந்தன்; விலங்குகளை வேட்டையாடி அவற்றை அச்சுறுத்தியது...

ஜனமேஜயன், "உயர் ஆன்ம பரதனின் பிறப்பு, வாழ்வு மற்றும் சகுந்தலையின் பிறப்பு குறித்தும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன். ஓ புனிதமானவரே! {வைசம்பாயனரே}, மனிதர்களில் சிங்கமான துஷ்யந்தனைக் குறித்தும், அவ்வீரன் சகுந்தலையை எப்படி அடைந்தான் என்பது குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ உண்மையை அறிந்தவரே, புத்திசாலிகள் அனைவரிலும் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, அனைத்தும் எனக்குக் கூறுவதே உமக்குத் தகும்" என்றான்.(2)

துஷ்யந்தன்! | ஆதிபர்வம் - பகுதி 68

Dushmanta (Dushyanta)! | Adi Parva - Section 68 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 4)

பதிவின் சுருக்கம் : பௌரவக் குலத்தை நிறுவிய துஷ்யந்தன்; துஷ்யந்தனின் ஆட்சி சிறப்பு...

ஜனமேஜயன், "ஓ பிராமணரே! {வைசம்பாயனரே} உண்மையில் நான் தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரின் உயிர்ப்பகுதிகளுக்கேற்ப உண்டான அவதராங்களை உம்மிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டேன்.(1) எனினும் நான், குருக்களின் அரசமரபை {வம்சத்தைக்} குறித்துத் தொடக்கத்திலிருந்தே கேட்க விரும்புகிறேன். எனவே, ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, அவற்றை இந்த மறுபிறப்பாளர்களான முனிவர்கள் அனைவரின் முன்னிலையில் சொல்வீராக" என்றான்.(2)

அவதாரங்களின் உயிர்ப்பகுதிகள்! | ஆதிபர்வம் - பகுதி 67ஆ

Life Portions of Gods! | Adi Parva - Section 67b | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 3)

பதிவின் சுருக்கம் : மகாபாரதத்தில் வரும் பாத்திரங்கள் யார் யாருடைய அம்சங்கள் என்ற விரிவு...

ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே} மன்னன் யுதிஷ்டிரன் தர்மனுடைய {தர்ம தேவனான யமனுடைய} ஒரு பகுதியாவான்; பீமசேனன் காற்று தேவனுடையவன் {வாயு தேவனுடையவன்}; அர்ஜுனன் தேவர்களின் தலைவனான இந்திரனுடையவன்;(111) அதே போல உயிரினங்கள் அனைத்திலும் அழகானவர்களும், பூமியில் ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களுமான நகுலனும், சகாதேவனும், அசுவினி இரட்டையர்களுடைய பகுதிகளாவர் என்பதைத் தெரிந்து கொள்வாயாக.(112)

அசுரர்கள் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 67அ

The Birth of Asuras! | Adi Parva - Section 67a | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 3)

பதிவின் சுருக்கம் : மகாபாரதத்தில் வரும் பாத்திரங்கள் யார் யாருடைய அம்சங்கள் என்ற விரிவு...

ஜனமேஜயன், "ஓ போற்றுதலுக்குரியவரே! {வைசம்பாயனரே}, மனிதர்களுக்கிடையே தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள், சிங்கங்கள், புலிகள், பிற விலங்குகள், பாம்புகள், பறவைகள் மற்றும் அனைத்து உயிர்களும் பிறந்த விவரத்தை உம்மிடம் கேட்க விரும்புகிறேன். மேலும், மனித வடிவை ஏற்ற {அவதாரமெடுத்த} பிறகு, அவர்களின் செயல்களையும், சாதனைகளையும், முறையான வரிசையில் அறிய விரும்புகிறேன்" என்றான்.(1,2)

பரம்பரைகளின் ஆய்வு | ஆதிபர்வம் - பகுதி 66

Genealogy Report | Adi Parva - Section 66 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 2)

பதிவின் சுருக்கம் : பிரம்மனின் மகன்கள்; மகன்கள் இல்லாத தக்ஷன் மகளைப் புத்ரிகைகளாக ஆக்கிக் கொண்டது; அந்தப் பெண்கள் மூலம் வளர்ந்த பரம்பரை; பரசுராமர் வம்ச வரலாறு; ராட்சசர்கள் பிறப்பு; உயிரினங்களின் பிறப்பு...

வைசம்பாயனர் சொன்னார், "(ஏற்கனவே குறிப்பிட்டது போல) பிரம்மனின் ஆன்மிக {மனத்திலிருந்து பிறந்த} மகன்கள் ஆறுபேர் என்று அறியப்படுகிறது. ஸ்தாணு என்ற பெயரில் மற்றொருவரும் இருந்தார். அந்த ஸ்தாணு பெரும் சக்தி கொண்ட பதினோரு மகன்களைப் பெற்றிருந்தார்.(1) அவர்கள் மிருகவியாதர், சர்ப்பர், பெரும்புகழ் கொண்ட நிருருதி, அஜைகபாத், அஹிர்ப்புத்னியர், எதிரிகளை அடக்கும் பினாகி,(2) தஹனர், ஈஸ்வரர், பெரும் காந்தி கொண்ட கபாலி ஆவார்கள். இவர்களுடன் ஸ்தாணு மற்றும் சிறப்புமிக்கப் பகன் ஆகியோர் சேர்ந்து பதினொரு ருத்ரர்களாக அழைக்கப்படுகிறார்கள்.[1](3)

Friday, March 29, 2013

அனைத்துயிர்களின் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 65

Birth of all lives! | Adi Parva - Section 65 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 1)

பதிவின் சுருக்கம் : பிரம்மாவின் மானஸ புத்திரர்கள்; கஸ்யபருக்கும் தக்ஷனின் மகள்களுக்கும் பிறந்தவர்கள்; இந்தப் பகுதியைப் படிப்பதால் உண்டாகும் பலன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதன்பிறகு இந்திரன், நாராயணனிடம், தேவர்கள் அனைவருடன் அவரவர் அம்சங்களுக்கேற்ப பின்னவன் {நாராயணன்} எவ்வாறு சொர்க்கத்தில் இருந்து பூமியில் இறங்கப் போகிறான் என்பது குறித்துக் கலந்தாலோசித்தான்.(1) தேவலோகவாசிகள் அனைவருக்கும் கட்டளையிட்ட பிறகு இந்திரன் நாராயணனின் இருப்பிடத்திலிருந்து திரும்பினான்.(2)

Wednesday, March 27, 2013

பூமி பாரத்தைக் குறைக்க தேவர்கள் பிறப்பு! | ஆதிபர்வம் - பகுதி 64

Gods born to reduce the mass of earth! | Adi Parva - Section 64 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 6)

பதிவின் சுருக்கம் : பூமியில் பிறந்த அசுரர்கள்; பிரம்மனிடம் முறையிட்ட பூமாதேவி; தேவர்களைப் பூமியில் பிறக்கும்படி பிரம்மன் உத்தரவிட்டது; இந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க நாராயணன் அவதரிக்க உடன்பட்டது...

ஜனமேஜயன், "ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, நீர் பெயர் குறிப்பிட்டவர்களைப் பற்றியும், பெயர் குறிப்பிடாதவர்களைப் பற்றியும், ஆயிரக்கணக்கான மன்னர்களைப் பற்றியும் விவரமாகச் சொல்வீராக.(1) ஓ பெரும் நற்பேறு பெற்றவரே {வைசம்பாயனரே}, தேவர்களுக்கு இணையானவர்களான அந்த மஹாரதர்கள் பூமியில் பிறந்த காரணம் பற்றி முழுமையாகச் சொல்லுங்கள் " என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(2)

Tuesday, March 26, 2013

பெரும் போர் காரணகர்த்தர்கள் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 63ஈ

The Births of Men of the great war! | Adi Parva - Section 63d | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)

பதிவின் சுருக்கம் : மஹாபாரதப் பாத்திரங்களின் பிறப்பு...

அதன்பிறகு, பெரும் சக்தியும், புகழும் கொண்ட பீஷ்மர் அளவிடமுடியாத காந்தியைத் தன்னகத்தே கொண்டு, {பிரபாசன் என்ற வசுவின்} வசுக்களின் அம்சங்களைக் கொண்டு, கங்கையின் கருப்பையில் சந்தனுவால் பிறந்தார்.(90,91) பெரும் புகழ் கொண்ட முனிவர் ஒருவர் ஆணிமாண்டவ்யர் என்ற பெயரில் இருந்தார். அவர் வேதங்களின் விளக்கங்களில் ஆழ்ந்த புலமை கொண்டு, சிறப்புற்றுப் பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டு, பெரும் நற்பெயர் பெற்றிருந்தார். அப்பாவியாக இருந்தும், திருட்டுப் பழி சுமத்தப்பட்டு, அந்த வயதான முனிவர் {ஆணிமாண்டவ்யர்}, கழுவிலேற்றபட்டார்.(92)

பராசரரின் ஆசைக்கிணங்கிய சத்தியவதி! | ஆதிபர்வம் - பகுதி 63இ

Satyavati accepted the embrace of Parasara! | Adi Parva - Section 63c | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)

பதிவின் சுருக்கம் : ; மீனுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தை சத்யவதியாகவும் வளர்ந்தது; சத்தியவதிக்குப் பிறந்த வியாசர்...

அந்த அப்சரஸின் மகளும், மீன் நாற்றம் கொண்டவளுமான அக் குழந்தையை மன்னன் {சேதி நாட்டு மன்னன் உபரிசரன்} மீனவர்களிடம் {செம்படவர்களிடம்} கொடுத்து, "இவள் உங்கள் மகளாக இருக்கட்டும்" என்றான்.(66,67) அந்தப் பெண்குழந்தை சத்தியவதி என்ற பெயரால் அறியப்பட்டாள். மிகுந்த அழகைக் கொடையாகக் கொண்டு, அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்டு, இனிய புன்னகை உடையவளாய், மீனவர்களின் தொடர்பால், சிறிது காலம் மீன் நாற்றத்தோடே இருந்தாள்.{அதனால் அவள் மச்சகந்தி என்றும் அறியப்பட்டாள்}(68) தனது (வளர்ப்புத்) தந்தைக்குச் சேவை செய்வதற்காக, யமுனையின் நீரில் அவள் ஓடம் செலுத்திக் கொண்டிருந்தாள். இந்த வேலையை அவள் {சத்தியவதி} செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள், யாத்திரை செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் பராசரரால் சத்தியவதி பார்க்கப்பட்டாள்.(69) பேரழகைக் கொடையாகக் கொண்டவளும், துறவிகளுக்கும் ஆசையைத் தரும் வடிவம் உடையவளும், இனிய புன்னகையை உடையவளுமான அவளைக் கண்டதும் ஞானியான முனிவர் {பராசரர்} அவளை அடைய விருப்பம் கொண்டார்[3].(70)

சாபம் விலகிய மீன்! | ஆதிபர்வம் - பகுதி 63ஆ

Fish, freed from curse! | Adi Parva - Section 63b | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)

பதிவின் சுருக்கம்: உபரிசரனின் உயிர்வித்தை விழுங்கிய மீன்; மீனுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது; ஆண் {சத்யவதியின் சகோதரன்} மத்ஸ்ய நாட்டு மன்னனாக வளர்ந்தது...

மன்னன் வசு {உபரிசரன்}, இந்திரனால் பரிசாக அளிக்கப்பட்ட தனது தெய்வீக தேரில் அமர்ந்து வானத்தினூடே செல்லும்போது, கந்தர்வர்களும், அப்சரஸ்களும் (தேவலோக பாடகர்களும், ஆடல் கலைஞர்களும்) அவனை {உபரிசரனை} அணுகினர். அப்படி அவன் {உபரிசரன்} மேலுகங்களில் உலவியதால் {மேலே சஞ்சரிப்பவன் என்ற பொருள்பட} உபரிசரன் என்று அழைக்கப்பட்டான்.(33,34)

Sunday, March 24, 2013

உபரிசரன் (எ) வசு! | ஆதிபர்வம் - பகுதி 63அ

Uparichara (a) Vasu! | Adi Parva - Section 63a | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)

பதிவின் சுருக்கம் : கடுந்தவம் இருந்த உபரிசரனைச் சமாதானப்படுத்திய இந்திரன் சேதி நாட்டைக் கவனமாக ஆளச் சொல்வது...

வானத்தில் பறக்கும் உபரிசரன்
வைசம்பாயனர் சொன்னார், "உபரிசரன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான். அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்தவனாக இருந்தான். வேட்டைக்கும் அவன் அடிமையாக இருந்தான்.(1)

வசு என்றும் அழைக்கப்பட்ட அந்தப் பௌரவகுல மன்னன் {உபரிசரன்}, இந்திரனின் ஆலோசனையின்படி அருமையானதும், இன்பத்தை அளிப்பதுமான சேதி நாட்டை அடக்கி ஆண்டான்.(2) சில காலங்களுக்குப் பிறகு, ஆயுதங்களை விடுத்து, தனிமையான இடத்தில் இருந்து, கடுந்தவம் செய்தான். அந்தக் காலத்தில், அவன் {உபரிசரன்} தேவர்களின் தலைமைப் பதவியை வேண்டிக் கடுந்தவம் இருக்கிறான் என்று எண்ணிய தேவர்கள், இந்திரனின் தலைமையில் வந்து அந்த ஏகாதிபதியை {உபரிசரனை} அணுகினர்.(3) தேவர்கள், அவன் {உபரிசரன்} முன் தோன்றி, மென்மையாகப் பேசி அவனைத் தவத்தைக் கைவிடவைத்து வெற்றி பெற்றனர்.(4)  தேவர்கள், "ஓ பூமியின் தலைவா! {உபரிசரனே} பூமியில் அறம் குறையாதபடி நீ பார்த்துக் கொள்ள வேண்டும். உன்னால் காக்கப்பட்ட அந்த அறம், பதிலுக்கு இந்த அண்டத்தையே காக்கும்" என்றனர்.(5)

Wednesday, March 20, 2013

பாரதம் படிப்பது வேதம் படிப்பதற்குச் சமம்! | ஆதிபர்வம் - பகுதி 62

Reading Bharatha is equal unto Vedas! | Adi Parva - Section 62 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 4)

பதிவின் சுருக்கம் : மகாபாரதப் பாத்திரங்களின் செயல்பாட்டில் உள்ள தன் சந்தேகங்களைக் கேள்விகளாக வைசம்பாயனரிடம் வைத்த ஜனமேஜயன்; மஹாபாரதத்தை விரிவாகச் சொல்லும்படி வைசம்பாயனரை வேண்டினான்; மகாபாரதத்தின் பெருமைகளை எடுத்துரைத்த வைசம்பாயனர்...

ஜனமேஜயன் "ஓ பிராமணர்களில் சிறந்தவரே! {வைசம்பாயனரே} குருக்களின் {குரு குலத்தவர்களின்} பெரும் செயல்களை விளக்குவதும், மஹாபாரதம் என்று அழைக்கப்படுவதுமான வரலாற்றை நீர் சுருக்கமாகச் சொல்லிவிட்ட போதிலும்,(1) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! {வைசம்பாயனரே} அந்த அற்புதமான விவரிப்பை முழுமையாகச் சொல்வீராக. அதைக் கேட்பதில் நான் {ஜனமேஜயனாகிய நான்} பெரும் ஆவல் கொண்டுள்ளேன்.(2) எனவே, அதை நீர் முழுமையாகச் சொல்வீராக. இப்படி அந்தப் பெரும் வரலாற்றை மணிச்சுருக்கமாகக் கேட்பதில் நான் மனநிறைவுகொள்ளவில்லை.(3) கொல்லத்தகாதவர்களைக் {ஆசிரியர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும்} கொன்ற அந்த அறவோர் {பாண்டவர்கள்}, அதற்காகக் கொண்டாடப்படுகிறார்கள் என்றால் அதன் காரணம் சிறியதாக இருக்கமுடியாது.(4) நேர்மையானவர்களும், தாங்களே பழி வாங்கும் திறன் கொண்டவர்களுமான அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்}, ஏன், அந்தப் பொல்லாத குருக்களின் {கௌரவர்களின்} துன்புறுத்தலை அமைதியாக ஏற்றனர்?(5)

பாண்டவர் வரலாறு! | ஆதிபர்வம் - பகுதி 61

The History of Pandavas! | Adi Parva - Section 61 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 3)

பதிவின் சுருக்கம் : மகாபாரதத்தின் கதைச்சுருக்கம்...

வைசம்பாயனர் சொன்னார், "எனது உடலின் எட்டுப் பகுதிகளும் தரையைத் தொட,[1] என் ஆசானை {வியாசரை} பக்தியுடனும், மரியாதையுடனும் முதற்கண் வணங்கி, இந்தச் சபையில் இருக்கும் பிராமணர்களையும், மற்ற கற்றவர்களையும் முழு மனத்துடன் வழிபட்டு, மூவுலகங்களிலும் புத்திசாலிகளில் முதன்மையான இந்த உயரான்ம முனிவர் வியாசரிடம் நான் கேட்டவற்றை முழுமையாக உரைக்கின்றேன்.(1,2) இதை அறியப்போகும் ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, நீ பாரதம் என்று அழைக்கப்படும் இந்தத் தொகுப்பைக் கேட்கத் தகுதி வாய்ந்தவனே. எனது ஆசானின் {வியாசரின்} கட்டளையில் தூண்டப்பட்டிருப்பதால் எனது இதயத்தில் அச்சத்தை[2]  நான் உணரவில்லை.(3) "ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒற்றுமையின்மை நிலவியது ஏன் என்றும், (குருக்களின்) ஆளும் ஆசையினால் நேர்ந்த சூதாட்டத்தைத் தொடர்ந்து, வனவாசம் ஏன் விதிக்கப்பட்டது என்றும் கேட்பாயாக. பாரதக் குலத்தில் சிறந்தவனே! {ஜனமேஜயனே!} கேட்க விரும்பிய உனக்கு அனைத்தையும் சொல்வேன்.(4,5)

மஹாபாரதம் ஆரம்பம்! | ஆதிபர்வம் - பகுதி 60

Mahabharatham Begins! | Adi Parva - Section 60 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 2)

பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன் யாகத்திற்கு வியாசர் வருவது; வியாசரின் பெருமை; பாண்டவர் வரலாற்றை ஜனமேஜயன் வியாசரிடம் கேட்பது; அக்கதையைச் சொல்லும்படி வைசம்பாயனரைப் பணித்த வியாசர்...

சௌதி சொன்னார், "ஜனமேஜயன் நாக வேள்வியில் அமர்ந்திருக்கிறான், என்று கேள்விப்பட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அங்கே சென்றார்.(1) அந்தப் பாண்டவர்களின் பாட்டன் {வியாசர்}, கன்னிகையான கலிக்கும் {சத்தியவதிக்கும்}, சக்தியின்[1] மைந்தன் பராசரருக்கும், யமுனையின் தீவு ஒன்றில் பிறந்தவராவார்.(2) அந்தச் சிறப்பு வாய்ந்தவர் {வியாசர்}, பிறந்தவுடன் தனது விருப்பத்தினால் மட்டுமே {விருப்பிய உடனே தன் சுய சங்கல்பத்தாலேயே} தன் உடலை வளர்த்து, வேதங்களையும் அதன் கிளைகளையும், வரலாறுகள் அனைத்தையும் கற்றார்.(3)

Tuesday, March 19, 2013

பெரும் வரலாறு! | ஆதிபர்வம் - பகுதி 59

The Great History! | Adi Parva - Section 59 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 1)

பதிவின் சுருக்கம் : சௌதியிடம் மஹாபாரதத்தைச் சொல்லும்படி கேட்ட சௌனகர்; மஹாபாரதப் பீடிகை...

சௌனகர் சொன்னார், "ஓ மகனே! {சௌதியே}, விரிவானதும், அற்புதமானதுமான இந்த வரலாற்றை, பிருகு பரம்பரையின் தொடக்கத்தில் இருந்து எனக்குக் கூறினாய். ஓ சூத மைந்தா {சௌதி}, உன்னால் நான் மனநிறைவடைந்தேன்.(1) உன்னை மறுபடியும் கேட்கிறேன். ஓ சூத மைந்தா {சௌதி}, வியாசர் தொகுத்த வரலாற்றைச் சொல்வாயாக. ஓ சூத மைந்தா {சௌதி}, அந்த வேள்வியில் கூடியிருந்த சிறப்புமிக்கச் சதஸ்யர்கள், அந்த நீண்ட விழாவில் தம் கடமைகளுக்கு இடையில் கிடைத்த இடைவெளிகளில் ஓதிய சிறந்தவைகளும், அற்புதமானவைகளுமான அந்த வர்ணனைகளையும், அவற்றின் பொருளையும் உன்னிடம் நான் கேட்க விரும்புகிறேன். ஆகையால் முழுமையாகச் சொல்" என்றார் {சௌனகர்}.(2-4)

வேள்வி நின்றது! | ஆதிபர்வம் - பகுதி 58

The sacrifice stopped! | Adi Parva - Section 58 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 46)

பதிவின் சுருக்கம் : ஆஸ்தீகர் புரிந்த அற்புதம்; வேள்வி முடிந்தது; லோகிதாக்ஷனுக்குப் பரிசளித்த ஜனமேஜயன்; ஆஸ்தீகருக்குப் பாம்புகள் அளித்த வரம்...

சௌதி சொன்னார், "இப்போது, ஆஸ்தீகருடன் தொடர்புடைய ஓர் அற்புத நிகழ்வைச் சொல்கிறேன் கேட்பீராக. மன்னன் ஜனமேஜயன் ஆஸ்தீகருக்கு வரத்தைக் கொடுக்கப் போகும் தருணத்தில்,(1) இந்திரனின் கைகளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாம்பு {தஷகன்}, கீழே விழாமல் அந்தரத்தில் மிதந்தது. தக்ஷகன் பெயரைச் சொல்லி ஆகுதி {நெய்} சரியான முறையில் வேள்வித்தீயில் ஊற்றப்பட்டும், அச்சத்துடனிருந்த தக்ஷகன் கீழே நெருப்பில் விழாததைக் கண்ட ஜனமேஜயன் ஆச்சரியப்பட்டான்" என்றார் {சௌதி}.(2,3)

Monday, March 18, 2013

எரிந்த பாம்புகளின் பெயர்கள்! | ஆதிபர்வம் - பகுதி 57

The Names of the burnt snakes! | Adi Parva - Section 57 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 45)

பதிவின் சுருக்கம் : எரிந்த பாம்புகளின் பட்டியல் ...

சௌனகர், "ஓ சூத மைந்தா! {சௌதியே} இந்தப் பாம்பு வேள்வியில் தீயில் விழுந்த பாம்புகள் அனைத்தின் பெயர்களையும் கேட்க விரும்புகிறேன்" என்றார்.(1)

Sunday, March 17, 2013

தக்ஷகனைக் கைவிட்டான் இந்திரன்! | ஆதிபர்வம் - பகுதி 56

Indra cast off Takshaka! | Adi Parva - Section 56 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 44)

பதிவின் சுருக்கம் : ஆஸ்தீகரைப் பாராட்டி வரமளிக்க முன்வந்த ஜனமேஜயன்; இந்திரனின் பாதுகாப்பில் தக்ஷகன் இருப்பதாக ஜனமேஜயனுக்குச் சொல்லப்படுவது; அச்சத்தால் தக்ஷகனைக் கைவிட்ட இந்திரன்; வேள்வியை நிறுத்தும் வரத்தைக் கோரிய ஆஸ்தீகர்...

ஜனமேஜயன், "இவர் சிறுவனைப் போல இருந்தாலும், விவேகமுள்ள முதிர்ந்தவர் போலப் பேசுகிறார். இவர் சிறுவனில்லை. விவேகி. முதிர்ந்தவர். இவருக்கு நான் வரமளிக்கலாம் என்று நினைக்கிறேன். பிராமணர்களே, அதற்கான அனுமதியை எனக்கு அளியுங்கள்" என்றான்.(1)

அதற்குச் சதயஸ்யர்கள், "பிராமணன் ஒருவன் சிறுவனாக இருந்தாலும், மன்னனால் மதிக்கப்பட வேண்டியவன். கற்றோர் எப்போதும் அப்படியே செய்வர். இந்தச் சிறுவனின் விருப்பங்கள் உன்னால் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், வேகத்துடன் தக்ஷகன் வந்து விழுவதற்கு முன்னால் அல்ல " என்றனர்."(2)

ஆஸ்தீகர் புகழ்ச்சி! | ஆதிபர்வம் - பகுதி 55

Adoration of Astika! | Adi Parva - Section 55 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 43)

பதிவின் சுருக்கம் : ஜனமேஜயனையும், மற்றவர்களையும் புகழ்ந்த ஆஸ்தீகர்; அனைவரும் ஆஸ்தீகரிடத்தில் மனநிறைவு அடைந்தனர்…

ஆஸ்தீகர் சொன்னார், "பழங்காலத்தில் பிரயாகையில் சோமனும் வருணனும், பிரஜாபதியும் வேள்விகளைச் செய்தனர். ஆனால் உனது வேள்வி, அவற்றில் எதிலும் குறைந்ததில்லை. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே! {ஜனமேஜயனே} நம் அன்பிற்குரியவர்கள்[1] அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(1) சக்ரன் (இந்திரன்) நூறு வேள்விகளை நடத்தினான். ஆனால் உனது இந்த வேள்வி, அந்தச் சக்ரனின் பத்தாயிரம் வேள்விகளுக்குச் சமமானதாகும். ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே {ஜனமேஜயனே}, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(2) யமன், ஹரிமேதன், ரந்திதேவ மன்னன் ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள்  அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(3) மயன், மன்னன் சசபிந்து, மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது இந்த வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள்  அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(4) நிருகன், அஜமீடன், தசரத மைந்தன் {ஸ்ரீராமன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(5)

ஆஸ்தீகர் உறுதி! | ஆதிபர்வம் - பகுதி 54

Promise of Astika! | Adi Parva - Section 54 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 42)

பதிவின் சுருக்கம் : ஆஸ்திகருக்கு ஜரத்காரு பழைய வரலாறுகளைத் தெரிவித்தாள்; ஆஸ்தீகர் பாம்புகளை விடுவிக்க உதவுவதாக வாக்களிப்பது; வேள்வி அரங்கில் நுழைந்த ஆஸ்தீகர்...

சௌதி சொன்னார், "அதன்பிறகு, அந்த நாகமங்கை ஜரத்காரு, தனது மகனை {ஆஸ்தீகனை} அழைத்து, பாம்புகளின் மன்னன் வாசுகி சொன்னபடி பேசினாள்.(1) அவள், "ஓ மகனே! {ஆஸ்தீகனே} எதற்காக நான் எனது தமையனால் {வாசுகியால்} உனது தந்தைக்கு {ஜரத்காருவுக்கு} அளிக்கப்பட்டேனோ அந்தக் குறிக்கோளை அடைய இப்போது நேரம் வந்து விட்டது. எனவே, எது செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்" என்றாள் {பெண் பாம்பு ஜரத்காரு}.(2)

ஆஸ்தீகர், "ஓ தாயே!{ஜரத்காருவே}, மாமா {பாம்பு மன்னன் வாசுகி} ஏன் உன்னை எனது தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} மணமுடித்துக் கொடுத்தார்? உண்மை முழுமையும் சொல்வாயானால், அதைக் கேட்டதும் நான் தகுந்ததைச் செய்ய ஏதுவாக இருக்கும்" என்றார்.(3)

தக்ஷகனைப் பாதுகாத்த இந்திரன்! | ஆதிபர்வம் - பகுதி 53

Indra protected Takshaka! | Adi Parva - Section 53 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 41)

பதிவின் சுருக்கம் : வேள்வியை நடத்திய அந்தணர்களின் பெயர்கள்; வேள்வி குறித்து அறிந்த தக்ஷகன் இந்திரனின் பாதுகாப்பை அடைந்தான்; கவலைக்கொண்ட வாசுகி தங்கை ஜரத்காருவிடம் ஆஸ்திகனின் உதவியைக் கோரியது…

சௌனகர், "பாண்டவ குலத்தில் வந்த விவேகியான மன்னன் ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில், எந்தப் பெரும் முனிவர்கள், ரித்விக்குகளாக இருந்தனர்?(1) பாம்புகளுக்கு அச்சமூட்டியதும், அவைகளுக்குத் துன்பத்தைக் கொடுத்ததுமான அந்தப் பயங்கரமான பாம்பு வேள்வியில் யாரெல்லாம் சதஸ்யர்களாக இருந்தனர்?(2) ஓ சூத மைந்தா! {சௌதியே}, இந்த விவரங்களை விரிவாகக் கூறினால், அந்தப் பாம்பு வேள்வியின் சடங்குகளை யார் அறிந்திருந்தனர் என்று நாங்கள் தெரிந்து கொள்வோம்" என்று கேட்டார்.(3)

நெருப்பில் விழுந்த பாம்புகள்! | ஆதிபர்வம் - பகுதி 52

Snakes fell on fire! | Adi Parva - Section 52 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 40)

பதிவின் சுருக்கம் : வேள்வி ஆரம்பித்தது; பாம்புகள் அழிந்தன…

சௌதி சொன்னார், "பாம்பு வேள்வி அதன் விதிகளின்படி தொடங்கியது. சாத்திர விதிகள்படி தங்கள் கடமைகளில் தேர்ந்தவர்களான வேள்விப் புரோகிதர்கள், கருப்பு ஆடை அணிந்து, புகையினால் கண்கள் சிவந்து, சுடர்விட்டெரியும் நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டு சரியான மந்திரங்களை உச்சரித்தனர்.(1,2) அக்னியின் வாயில் தெளிந்த நெய்யை விட்டு, பாம்புகளின் பெயர்களைச் சொல்லி, அந்தப் பாம்புகளைப் பயத்தால் நடுங்க வைத்தனர்.(3) அதன்பிறகு, பாம்புகள் தங்கள் சக்திகளை இழந்து, பரிதாபமாக ஒன்றை ஒன்று அழைத்துக்கொண்டு, அந்த எரியும் நெருப்பில் விழ ஆரம்பித்தன.(4) உடல் உப்பி, மூச்சு விடச் சிரமப்பட்டு, ஒன்றை ஒன்று {அந்த பாம்புகள்} தம் தலைகளாலும், வால்களாலும் பின்னிக் கொண்டு பெரும் எண்ணிக்கையில் வந்து நெருப்பில் விழுந்தன.(5)

சூதனின் தீர்க்க தரிசனம்! | ஆதிபர்வம் - பகுதி 51

The prophesy of a Suta! | Adi Parva - Section 51 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 39)

பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன் பாம்பு வேள்விக்கு உத்தரவிட்டான்; அந்தணனால் வேள்வி தடைபடும் என்றான் ஒரு சூதன்…

சௌதி சொன்னார், "மன்னன் ஜனமேஜயன் இப்படிச் சொல்லவும், அமைச்சர்களும் அதை உறுதி செய்தனர். அந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்}, பாம்பு வேள்வியை நடத்தப்போவதாகத் தனது முடிவைச் சொன்னான்.(1) பிறகு அந்தப் பூமியின் தலைவன், பாரதக் குலத்தின் புலி, பரீக்ஷித்தின் மைந்தன் {ஜனமேஜயன்} தனது புரோகிதரையும் ரித்விக்குகளையும், அழைத்தான்.(2)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்