Showing posts with label பிருஹஸ்பதி. Show all posts
Showing posts with label பிருஹஸ்பதி. Show all posts

Thursday, September 26, 2019

முஞ்சவான் மலையின் தங்கம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 08

The gold in Munjaban! | Aswamedha-Parva-Section-08 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 08)


பதிவின் சுருக்கம் : இமயத்தில் உள்ள முஞ்சவான் மலையில் இருக்கும் தங்கத்தைக் குறித்து மருத்தனுக்குச் சொன்ன ஸம்வர்த்தர்; அங்கே சென்று சிவனைத் துதித்து தங்கத்தை அடைந்த மருத்தன்; கவலையடைந்த பிருஹஸ்பதி; பிருஹஸ்பதியிடம் சென்ற இந்திரன்...


சம்வர்த்தர் {மருத்தனிடம்}, "இமய மலையின் உச்சியில் முஞ்சவான் என்ற பெயரில் ஒரு சிகரம் இருக்கிறது. அங்கே உமையின் துதிக்கத்தக்க தலைவன் (மஹாதேவன்) தொடர்ந்து தவம் செய்து கொண்டிருக்கிறான். வலிமைமிக்கவனும், வழிபடத்தகுந்தவனும், பெரும் பலம் கொண்டவனுமான அந்தத் தேவன் திரிசூல தாரியாக, பல வகைப் பூதகணங்களால் சூழப்பட்டவனாக, அங்கே பெரும் காட்டு மரங்களின் நிழலிலோ, குகைகளிலோ, அந்தப் பெரும் மலையின் முரட்டுச் சிகரங்களிலோ தன் மனைவியான உமையுடன் தன் விருப்பம் போல் திரிந்து கொண்டிருக்கிறான்.(2,3) ருத்திரர்கள், ஸாத்யர்கள், விஷ்வேதேவர்கள், வசுக்கள், யமன், வருணன், தன் பணியாட்களுடன் கூடிய குபேரன்,(4) பூதங்கள், பிசாசங்கள், அஸ்வினி தேவர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், யக்ஷர்கள், தெய்வீக முனிவர்கள்,(5) சூரிய தேவர்கள் {ஆதித்யர்கள்}, காற்றுகளுக்குத் தலைமை தாங்கும் தேவர்கள் {மருத்துகள்}, அனைத்து வகையான ராட்சசர்கள் ஆகியோர் அங்கே பல்வேறு பண்புகளைக் கொண்டவனும், உயர்ந்த ஆன்மாவுமான உமையின் தலைவனை வழிபடுகின்றனர்.(6)

Tuesday, September 24, 2019

ஸம்வர்த்தர்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 06

Samvarta! | Aswamedha-Parva-Section-06 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 06)


பதிவின் சுருக்கம் : வேள்வி செய்து தர பிருஹஸ்பதியிடம் வேண்டிய மருத்தன்; பிருஹஸ்பதி மறுத்தது; ஸம்வர்த்தரைக் குறித்து மருத்தனிடம் சொன்ன நாரதர்; ஸம்வர்த்தரைக் கண்டடைந்த மருத்தன்...


வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகப் பிருஹஸ்பதி மற்றும் ஞானியான மருத்தன் ஆகியோர் குறித்த பழைய புராணம் குறிப்பிடப்படுகிறது.(1) அங்கிரஸ் மகனான பிருஹஸ்பதி தேவர்களின் தலைவனுடன் (இந்திரனுடன்) செய்து கொண்ட உடன்படிக்கையைக் கேள்விப்பட்ட மன்னன் மருத்தன் ஒரு பெரும் வேள்விக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்தான்.(2) நாநயமிக்கவனான அந்தக் கரந்தமனின் பேரன் {மருத்தன்} தன் மனத்தில் வேள்வி குறித்த கருத்தை உருவாக்கிக் கொண்டு பிருஹஸ்பதியிடம் சென்று இவ்வாறு பேசினான்.(2)

Sunday, September 15, 2019

பிருஹஸ்பதியைத் தடுத்த இந்திரன்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 05

Indra resisted Vrihaspati! | Aswamedha-Parva-Section-05 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 05)


பதிவின் சுருக்கம் : ஸம்வர்த்தர் மற்றும் பிருஹஸ்பதிக்கு இடையிலான சச்சரவு; மருத்தனைக் கண்டு பொறாமை அடைந்த இந்திரன்; மருத்தனின் புரோகிதரான பிருஹஸ்பதியை அவனுக்கு எதிராகத் தூண்டிய இந்திரன்...


யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! பேசுபவர்களில் சிறந்தவரே, அம்மன்னன் {மருத்தன்} எவ்வாறு அவ்வளவு பலசாலியானான்? மேலும், ஓ! இருபிறப்பாளரே {பிராமணரே}, அவன் எவ்வாறு அவ்வளவு தங்கத்தை அடைந்தான்?(1) மேலும், ஓ! மதிப்புக்குரிய ஐயா, அந்தச் செல்வம் அனைத்தும் இப்போது எங்கே இருக்கிறது? ஓ! தவசியே, அதை நாம் அடைவது எவ்வாறு?" என்று கேட்டான்.(2)

Wednesday, June 26, 2019

அஹிம்ஸை! - அநுசாஸனபர்வம் பகுதி – 113

Abstention from injury! | Anusasana-Parva-Section-113 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 113)


பதிவின் சுருக்கம் : அறத்தின் ஆறு வாயில்கள் மற்றும் அஹிம்ஸை குறித்து பிருஹஸ்பதிக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...


யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, "தீங்கிழையாமை {கொல்லாமை}, வேத சடங்குகளைச் செய்தல், தியானம், புலனடக்கம், தவங்கள், ஆசான்களுக்குக் கீழ்ப்படிந்து தொண்டாற்றல் ஆகியவற்றில் ஒருவனுக்குப் பெரும் பலனைத் தரக்கூடியது எது?" எனக் கேட்டான்.

அன்னதானம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 112

Gift of food! | Anusasana-Parva-Section-112 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 112)


பதிவின் சுருக்கம் : பாவத்தைப் போக்கும் வழிமுறைகள்; அறத்தின் துணையுடன் அடையப்படும் கதிகள்; அன்னதானத்தின் சிறப்பு; அறத்தின் ஆறு வாயில்கள் குறித்துப் பிருஹஸ்பதிக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...


யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, மறம் அல்லது பாவத்தின் கதியென்ன? என எனக்குச் சொன்னீர். ஓ! பேசுபவர்களின் முதன்மையானவரே, அறத்தின் கதியென்ன? என இப்போது கேட்க விரும்புகிறேன்.(1) பல்வேறு பாவச் செயல்களைச் செய்தபின் எந்தச் செயல்களின் மூலம் மக்கள் இவ்வுலகில் {இம்மையில்} மங்கல கதியை அடைகிறார்கள்? எந்தச் செயல்களின் மூலம் மக்கள் சொர்க்கத்திலும் {மறுமையிலும்} மங்கல கதியை அடைகிறார்கள்?" என்று கேட்டான்.(2)

பாவப்பிறவிகள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 111

Sinful births! | Anusasana-Parva-Section-111 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 111)


பதிவின் சுருக்கம் : அறம் எவ்வாறு ஒருவனைப் பின்தொடர்கிறது; உயிர்வித்து எவ்வாறு உண்டாகிறது; ஜீவன் எவ்வாறு பிறந்து வளர்கிறது; உடலைக் கைவிடும்போது, ஜீவன் எவ்வாறு இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது; பல்வேறு செயல்களின் விளைவால் ஜீவன் அடையும் பல்வேறு வடிவங்களிலான பிறவிகள் குறித்து யுதிஷ்டிரனுக்கும் பிருஹஸ்பதிக்கும் இடையில் நடந்த உரையாடல்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்து பெரும் ஞானம் கொண்டவரே, எவற்றின் விளைவாக மனித உயிரினங்கள் மறுபிறவி எனும் பயணத்தில் சுழல்கின்றனவோ அந்தச் சிறந்த விதிகளை நான் அறிய விரும்புகிறேன்.(1) ஓ! மன்னா, எந்த ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் மனிதர்கள் உயர்ந்த சொர்க்கத்தை அடைகின்றனர்? எவ்வொழுக்கத்தைப் பின்பற்றினால் ஒருவன் நரகில் மூழ்குகிறான்?(2) மரத்துண்டையோ, மண்ணாங்கட்டியையோ போன்ற செயலற்ற இறந்த உடலைக் கைவிட்டு, மக்கள் மறுஉலகத்திற்குச் செல்லும்போது, அவர்களைப் பின்தொடர்பவை எவை?" என்று கேட்டான்.(3)

Monday, May 27, 2019

கோதான விதிமுறைகள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 76

The ordinances that regulate the gift of kine! | Anusasana-Parva-Section-76 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 76)


பதிவின் சுருக்கம் : பசுக்கொடைக்கு உரிய விதிமுறைகள் மற்றும் சிறப்புகள் முதலியவற்றை மாந்தாதாவுக்குச் சொன்ன பிருஹஸ்பதி...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா, எவ்விதிகளின்படி (பசுக்) கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற நித்திய இன்பலோகங்களை அடைகிறானோ, {எவ்விதிகள்} பசுக்கொடைகளை ஒழுங்கு படுத்துமோ, அந்த உயர்ந்த விதிகளைக் குறித்து நீர் விரிவாகச் சொல்வதை நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(1)

Monday, November 26, 2018

நாராயணீயம்! - சாந்திபர்வம் பகுதி – 337

Narayaneeyam! | Shanti-Parva-Section-337 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 164)


பதிவின் சுருக்கம் : உபரிசர வசு செய்த யாகம்; பிருஹஸ்பதிக்கு நாராயணனின் மகிமையைச் சொன்ன ஏகதர் மற்றும் பிறர்; ஸ்வேதத்வீபம் என்ற வெண்தீவு; அங்கே வசிக்கும் வெண் மனிதர்கள்; ஸ்வேதத்வீபத்தில் நாராயணனைக் காணாத முனிவர்கள்; உபரிசரவசு அடைந்த கதி...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] "பெரும் கல்பம் {மஹாகல்பம்} நிறைவடைந்ததும், அங்கிரஸ குலத்தில் தேவபுரோஹிதர் பிருஹஸ்பதி பிறந்தபோது, தேவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.(1) பிருஹத், பிரம்ம, மஹத் என்ற சொற்கள் அனைத்தும் ஒரே பொருளைக் கொண்டனவாகும்[2]. ஓ! மன்னா, தேவ புரோஹிதர் இந்தக் குணங்கள் அனைத்தையும் கொண்டிருந்ததால் பிருஹஸ்பதி என்று அழைக்கப்படலானார்.(2) வசு என்றும் அழைக்கப்படும் மன்னன் உபரிசரன், பிருஹஸ்பதியின் சீடனாகி விரைவில் அவனது முதன்மையான சீடனானான். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அவன், தன் ஆசானின் காலடியில் அமர்ந்து, சித்திர சிகண்டிகள் என்ற பெயரில் அறியப்பட்ட ஏழு முனிவர்களால் தொகுக்கப்பட்ட அந்த அறிவியலை {சாத்திரத்தைக்} கற்கத் தொடங்கினான்.(3) வேள்விகள் மற்றும் பிற அறச்சடங்குகள் மூலம் தீமைகள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்த அவன் {உபரிசரன்}, சொர்க்கத்தை ஆளும் இந்திரனைப் போல இந்தப் பூமியை ஆண்டு வந்தான்.(4)

Monday, June 18, 2018

செயல்விலக்கம்! - சாந்திபர்வம் பகுதி – 206

Abstention from acts! | Shanti-Parva-Section-206 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 33)


பதிவின் சுருக்கம் : செயல்களில் இருந்து விலகுவதே உயர்ந்த அறம் என்பதைப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...


Abstention from acts! | Shanti-Parva-Section-206 | Mahabharata In Tamil
மனு {பிரஹஸ்பதியிடம்}, "ஐம்புலன்களோடும், மனத்தோடும் ஐவகை உடைமைகள் கலக்கும்போது, ரத்தினத்தின் ஊடாகக் கடக்கும் நூலைப் போலத் தனிப்பட்ட ஒருவனால் {ஆன்மாவால்} பிரம்மம் {பரம்பொருள்} காணப்படுகிறது.(1) மேலும் நூலானது எவ்வாறு தங்கம், முத்து, வைடூரியம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட எந்தப் பொருளிலும் நூலாகக் கிடக்குமோ,(2) அவ்வாறே ஒருவனின் ஆன்மாவும், அதன் செயல்களின் விளைவாக ஒரு பசுவுக்குள்ளோ, குதிரை, மனிதன், யானை, பிற விலங்கு, புழு, அல்லது பூச்சிக்குள்ளோ வாழ்கிறது.(3) தனிப்பட்ட ஒருவன் {ஆத்மா} குறிப்பிட்ட ஓர் உடலுக்குள் இருந்து செய்யும் நற்செயல்கள் உண்டாக்கும் வெகுமதிகளை அந்தக் குறிப்பிட்ட உடலுக்குள் உள்ள அந்த ஒருவனே {ஆத்மாவே} அனுபவிக்கிறான்[1].(4) குறிப்பிட்ட வகை நீர்மத்தால் நனைக்கப்பட்ட மண்ணானது, அதில் வளரும் ஒவ்வொரு வகை மூலிகை, அல்லது செடிக்கும் அதற்குத் தேவையான வகையில் உள்ள சாற்றைக் கொடுக்கிறது. அதே வகையில், ஆன்மாவை சாட்சியாகக் கொண்ட புத்தியானது, முற்பிறவிச் செயல்களால் குறிப்பிடப்பட்ட பாதையைப் பின்பற்றவே இணங்குகிறது[2].(5)

Saturday, June 16, 2018

பரப்பிரம்மம்! - சாந்திபர்வம் பகுதி – 205

Supreme Brahma! | Shanti-Parva-Section-205 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 32)


பதிவின் சுருக்கம் : துன்பத்தைத் தவிர்ப்பதும், பிரம்மத்தை அடைவதும் எவ்வாறு என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...


Supreme Brahma! | Shanti-Parva-Section-205 | Mahabharata In Tamil

மனு {பிரஹஸ்பதியிடம்}, "உடல் மற்றும் மனத் துன்பங்கள் தோன்றும்போது, ஒருவனால் யோகத்தைப் பயில முடியாது. எனவே, அத்தகைய கவலைகளை நினைத்தேங்கிக் கொண்டிருப்பவனுக்கு அது கைக்கொள்ளக்கூடியதல்ல.(1) கவலைகளை நினைத்து ஏங்காமல் இருப்பதே அதற்கான மருந்தாகும். துன்பங்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால், அவை மேலும் தீவிரமடைந்து, தீங்கை அதிகரிக்கச் செய்கிறது.(2) ஒருவன் ஞானத்தால் மனத்துன்பத்தில் இருந்தும், குணப்படுத்தும் மருந்துகளால் உடல் துன்பத்தில் இருந்தும் விடுபட வேண்டும். ஞானம் இதையே கற்பிக்கிறது. கவலையில் இருக்கும்போது ஒருவன் குழந்தை போல நடந்து கொள்ளக்கூடாது.(3) ஞானம் கொண்ட மனிதன், நிலையற்றவையான இளமை, அழகு, நீடித்த வாழ்நாள் {ஆயுள்}, செல்வத் திரட்டு, அன்புக்குரியோரின் தோழமை ஆகிய ஆசைகளை ஒருபோதும் பேணி வளர்க்கக்கூடாது.(4) மொத்த சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கவலைக்காக ஒருவன் தனியாக வருந்தக்கூடாது. வாய்ப்பைக் காணும்போது அவன் தீர்வை நடைமுறைப்படுத்த முனைய வேண்டும்.(5)

ஆன்மவுணர்வு! - சாந்திபர்வம் பகுதி – 204

Spiritual sense! | Shanti-Parva-Section-204 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 31)


பதிவின் சுருக்கம் : எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...


Spiritual sense! | Shanti-Parva-Section-204 | Mahabharata In Tamil
மனு {பிரஹஸ்பதியிடம்}, "இந்த வெளிப்பாடு (உடல்) {ஸ்தூலசரீரம்}, கனவின்போது (செயலின்றி) கிடந்து, ஜீவனானது {ஸூக்ஷமசரீரமானது} முன்னதிலிருந்து {உடலான ஸ்தூலசரீரத்திலிருந்து} தன்னை விடுவித்துக் கொண்டு நுண்ணிய வடிவில் நடப்பதைப் போல, ஆழ்ந்த உறக்கம் (அல்லது மரணம்) என்றழைக்கப்படும் நிலையில், புலன்கள் அனைத்துடன் கூடிய அந்த நுண்ணிய வடிவம் {ஜீவன் / சூக்ஷமசரீரம்} செயலற்றுப் போகவும், புத்தியானது அதனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விழிப்புடன் இருக்கிறது. இவ்வாறு இருப்பு மற்றும் இல்லாமை {முக்தி} ஆகிய நிலைகளில நேர்கிறது[1].(1) தெளிந்த நீரில் கண்ணால் வடிவச் சாயல்கள் {பிரதிபிம்பங்கள்} காணப்படுவதைப் போல, புலன்கள் கலக்கமடையாமல் இருந்தால், ஆன்மாவானது புத்தியால் காணப்படவல்லதாக இருக்கிறது.(2) எனினும், அந்நீர் கலங்கினால், அதன் அருகில் இருக்கும் மனிதனால் அந்த வடிவத்தோற்றங்களைக் காண முடியாது. அதைப் போலவே, புலன்கள் கலக்கமடைந்தால், ஆன்மாவைப் புத்தியால் காண முடியாது.(3) அறியாமையானது மாயையைத் தோற்றுவிக்கிறது. மாயை மனத்தைப் பாதிக்கிறது. மனமானது, பழுதாகும்போது, மனத்தையே தங்கள் புகலிடமாகக் கொண்ட ஐம்புலன்களும் பழுதடைகின்றன.(4) அறியாமையால் மடக்கப்பட்டு, உலகம் சார்ந்த பொருட்களெனும் சகதிக்குள் மூழ்கும் ஒருவனால், மனநிறைவு அல்லது நிலையமைதியின் இனிமைகளை அனுபவிக்க முடியாது. (இவ்வாறான சூழ்நிலையில்} நன்மை மற்றும் தீமையான செயல்களின் தொடர்பறாத ஆன்மாவானது, மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த பொருட்களுக்கே திரும்புகிறது.(5)

Thursday, June 14, 2018

கர்மப்பயன்! - சாந்திபர்வம் பகுதி – 203

The fruits of acts! | Shanti-Parva-Section-203 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 30)


பதிவின் சுருக்கம் : புலப்படாததாக இருக்கும் ஆன்மாவின் இருப்பையும், எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதையும் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...


The fruits of acts! | Shanti-Parva-Section-203 | Mahabharata In Tamil
மனு {பிருஹஸ்பதியிடம்}, "புலன்களுடன் ஒன்றிணையும் மனம், கடந்தகாலத்தில் பெறப்பட்ட பொருட்களின் மனப்பதிவுகளை நீண்ட காலத்திற்குப் பிறகு நினைவுகூர்கிறது. புலன்கள் அனைத்தும் (தங்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளில் இருந்து) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டால்,[1] புத்தியின் வடிவில் உள்ள உயர்ந்தது (ஆன்மா), தன் உண்மையான இயல்பில் நீடித்திருக்கிறது.(1) (அத்தகைய நேரத்தில்) ஆன்மாவானது, புலன்நுகர் பொருட்களின் ஒருங்கமைவையோ, முரணையோ கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாமல், அனைத்துத் திசைகளில் இருந்தும் அவற்றைத் திரட்டி ஒன்றாகப் பற்றி வைக்கும்போது, பொருத்தமற்ற பொருட்கள் அனைத்திற்கும் மத்தியில் அஃது அவசியம் உலவ நேர்கிறது. எனவே, அஃது (அமைதியான) சாட்சியாக இருக்கிறது. உடலுக்குள் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தனிப்பட்ட சுதந்திர இருப்பாக இருக்கிறது[2].(2)

Tuesday, June 12, 2018

கர்மக் கோட்பாடு! - சாந்திபர்வம் பகுதி – 202

The Karma Theory! | Shanti-Parva-Section-202 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 29)


பதிவின் சுருக்கம் : பரம்பொருளுக்கும், ஐம்பூதங்களுக்குமிடையில் உள்ள உறவு; புலன்கள் மற்றும் புலன்நுகர் பொருட்களுக்கிடையில் உள்ள உறவும் அவற்றின் செயல்பாடுகளும்; ஆன்மாவின் தன்மையை உணரும் வழி; காரணக் காரியங்கள்; கர்மவினைகளின் தொடர்ச்சி; ஆன்மா உடல்களை உடையாகப் பயன்படுத்தல்; உடலின் அழிவுக்குப் பிறகு ஐம்பூதங்களுடன் கலக்கும் முறை; புதிய உடல் அடையும் நன்மை, தீமைகளின் தன்மைகள் ஆகியவற்றை பரத்வாஜருக்குச் சொன்ன மனு...


மனு {பரத்வாஜரிடம்}, "அழிவற்றவனும், சிதைவற்றவனுமான அவனிடமிருந்து {பரம்பொருளிடமிருந்து} முதலில் வெளி {ஆகாயம்} உண்டானது; வெளியில் இருந்து காற்று {வாயு} வந்தது; காற்றில் இருந்து ஒளி வந்தது; ஒளியில் இருந்து நீர் வந்தது. நீரில் இருந்து இந்த அண்டம் உண்டானது; அண்டத்திலிருந்து அதில் தோன்றும் அனைத்துப் பொருட்களும் உண்டாகின.(1) (பிரளயத்திற்குப் பிறகு), (உலகம் சார்ந்த) அனைத்துப் பொருட்களும் முதலில் நீருக்குள் நுழையும், அங்கிருந்து ஒளி அல்லது வெப்பத்திற்கும், அங்கிருந்து காற்றுக்கும் {வாயுவுக்கும்}, அங்கிருந்து வெளிக்குள்ளும் {ஆகாயத்திற்குள்ளும்} நுழையும். விடுதலையை {முக்தியை} நாடுவோர் வெளிக்கு {ஆகாயத்துக்குத்} திரும்ப வேண்டியதில்லை. மறுபுறம் அவர்கள் பிரம்மத்தை அடைகிறார்கள்.(2) முக்தியின் புகலிடமான பிரம்மம் வெப்பமானதோ, குளிந்ததோ, மென்மையானதோ, கடுமையானதோ, புளிப்பானதோ, துவர்ப்பானதோ, இனிமையானதோ, கசப்பானதோ கிடையாது. அவன் {பிரம்மத்தை அடைந்தவன்} ஒலியையோ, மணத்தையோ, வடிவத்தையோ கொண்டிருப்பதில்லை. அவன் இவை அனைத்தையும் விஞ்சியவனாக, அளவுகள் அற்றவனாக இருக்கிறான்.(3) தோலானது தீண்டலை உணர்கிறது; நா சுவையையும், மூக்கு மணத்தையும், காதுகள் ஒலிகளையும், கண்கள் வடிவங்களையும் உணர்கின்றன. அத்யாத்மாவை {ஆன்ம யோகத்தை} அறியாத மனிதர்கள், இவற்றைத் தாண்டிய எதையும் காண மாட்டார்கள்.(4) சுவைகளில் இருந்து நாவையும், மணங்களில் இருந்து மூக்கையும், ஒலிகளில் இருந்து காதுகளையும், வடிவங்களில் இருந்து கண்களையும், தீண்டலில் இருந்து தோலையும் விலக்கிய ஒருவனே, (புலன்கள் மற்றும் மனத்தில் இருந்து விடுபட்ட) சுயத்தின் {ஆன்மாவின்} பண்பியல்புகளைக் {ஆத்மஸ்வபாவத்தைக்} காண்பான்.(5)

Sunday, June 10, 2018

ஜீவாத்மா! - சாந்திபர்வம் பகுதி – 201

The creature-soul! | Shanti-Parva-Section-201 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 28)


பதிவின் சுருக்கம் : செயல், ஞானம், ஜீவன், பிரம்மம் குறித்துப் பிருஹஸ்பதிக்கும் மனுவுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


The creature-soul! | Shanti-Parva-Section-201 | Mahabharata In Tamil
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "வேதங்கள் அனைத்திலும், (பல்வேறு} சடங்குகளிலும், நோன்புகளிலும் ஞானத்தைப் பிரதிபலிக்கும் யோகத்தின் கனிகள் {பயன்கள்} என்னென்ன? ஜீவனை எவ்வாறு அறியலாம்? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)

Monday, March 12, 2018

எவன் தீயவன்! - சாந்திபர்வம் பகுதி – 103

Who is a wicked man! | Shanti-Parva-Section-103 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 103)


பதிவின் சுருக்கம் : எதிரியை வெற்றி கொள்வது குறித்தும், தீயவர்களின் அறிகுறிகளைக் குறித்தும் இந்திரனுக்கும், பிருஹஸ்பதிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Vrihaspati and Indra, Mahabharata (பிருஹஸ்பதியும் இந்திரனும் மகாபாரதம்)
யுதிஷ்டிரன் {பீமரிடம்}, "ஓ! பாட்டா, மென்மையான எதிரியிடமும், கடுமையான எதிரியிடமும், பல கூட்டாளிகளையும், பெரிய படையையும் கொண்ட ஒருவனிடமும் ஒரு மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?" என்று கேட்டான்.(1)

Saturday, February 17, 2018

இன்சொல்லும் இனிய நடத்தையும்! - சாந்திபர்வம் பகுதி – 84

Sweet speech and agreeable behaviour! | Shanti-Parva-Section-84 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 84)


பதிவின் சுருக்கம் : இனிமையான பேச்சும், இனிமையான நடத்தையும் சாதிக்கக் கூடியவற்றைப் பிருஹஸ்பதிக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலின் மூலம் யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன பீஷ்மர்...


Monday, January 08, 2018

அரசனின் இன்றியமையாத்தன்மை! - சாந்திபர்வம் பகுதி – 68

The importance of a king! | Shanti-Parva-Section-68 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 68)


பதிவின் சுருக்கம் : மன்னர்கள் தேவர்களுக்கு இணையாகப் போற்றப்படுவது ஏன் என்று கேட்ட யுதிஷ்டிரன்; ஒரு நாட்டுக்கு மன்னன் ஏன் அவசியம் என்று வசுமனஸுக்குப் பிருஹஸ்பதி சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஒரு தேவன் என்று ஏன் பிராமணர்கள் சொன்னார்கள்?" என்று கேட்டான்.(1)

Wednesday, August 23, 2017

திரித முனிவரின் மனோவேள்வி - உதபானத் தீர்த்தம்! - சல்லிய பர்வம் பகுதி – 36

Trita muni's Mental Sacrifice - Chandramas and Rohini! | Shalya-Parva-Section-36 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 5)


பதிவின் சுருக்கம் : ஏகதன், துவிதன் மற்றும் திரிதன் என்ற மூன்று சகோதரர்களின் கதை; பேராசையால் திரிதரை வஞ்சிக்க நினைத்த அவரது சகோதரர்கள்; கிணற்றுக்குள் விழுந்த திரிதர்; சோமரசத்திற்காக மனோவேள்வி செய்த திரிதர்; அவரிடம் நிறைவடைந்த தேவர்கள்; உதபானத் தீர்த்தத்தில் நீராடுவதால் கிடைக்கும் பலன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(ஏற்கனவே சொன்னது போல) பலதேவன் {பலராமன்}, முன்பொரு சமயம் சிறப்புமிக்க (முனிவரான) திரிதரின் வசிப்பிடமாக இருந்ததும், சரஸ்வதியில் {சரஸ்வதி நதிக்கரையில்} இருப்பதுமான உதபானம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(1) கலப்பையை ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, பெரும் செல்வத்தைத் தானமளித்து, பிராமணர்களை வழிபட்டு, அங்கே நீராடி மகிழ்ச்சியால் நிறைந்தான்.(2) அறத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பெரும் தவசி திரிதர் அங்கேதான் வாழ்ந்திருந்தார். அந்த உயர் ஆன்மா கொண்டவர் {திரிதர்} ஒரு குழியில் {கிணற்றில்} இருந்த போது, சோமச்சாற்றைப் பருகினார்.(3) அவரது சகோதரர்கள் இருவரும், அவரை அந்தக் குழிக்குள் {கிணற்றுக்குள்} விட்டுவிட்டுத் தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர். பிராமணர்களில் முதன்மையானவரான அந்தத் திரிதர், அவர்கள் இருவரையும் சபித்தார்".(4)

Monday, January 19, 2015

வேள்விப் பங்கைப் பெற்ற அக்னி! - உத்யோக பர்வம் பகுதி 16

Agni received his share in sacrifices! | Udyoga Parva - Section 16 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 16)

பதிவின் சுருக்கம் : அக்னியைப் புகழ்ந்த பிருஹஸ்பதி; பிருஹஸ்பதியின் துதியை ஏற்ற அக்னி, நீர்நிலைகளில் இந்திரனைத் தேடப் புறப்பட்டது; தாமரைத்தண்டின் இழைகளுக்குள் மறைந்து கிடந்த இந்திரனைக் கண்ட அக்னி, பிருஹஸ்பதியிடம் அதைத் தெரிவிப்பது; தேவர்களுடன் அந்த இடத்திற்கு விரைந்த பிருஹஸ்பதி, இந்திரனைத் துதிப்பது; துதியால் பலம் பெற்ற இந்திரன்; லோகபாலர்கள் இந்திரன் இருந்த இடத்திற்கு வருவது; அவர்களின் உதவியை இந்திரன் கோருவது; வேள்விப் பங்குகளையும், ஆட்சியுரிமைகளையும் அந்த லோகபாலர்களுக்கு இந்திரன் வழங்குவது ...

பிருஹஸ்பதி {அக்னியிடம்} சொன்னார், “ஓ! அக்னியே, தேவர்கள் அனைவருக்கும் வாய் நீயே. புனித காணிக்கைகளைச் சுமப்பவன் நீயே. ஒரு சாட்சியைப் போல, அனைத்து உயிர்களின் அந்தரங்க ஆன்மாக்களை அணுகக்கூடியவன் நீயே. தனியன் என்றும், {கர்ஹபத்ய, ஆஹவநீய, தக்ஷிணாக்னி என்று} மூன்று விதங்களில் இருப்பவன் என்றும், புலவர்களால் சொல்லப்படுபவன் நீயே. ஓ! எரிந்த காணிக்கைகளை {ஹவிஸை} உண்பவனே {அக்னியே}, உன்னால் கைவிடப்பட்டால், இந்த அண்டம் உடனே அழிந்துவிடும். உன்னை வணங்குவதால், அந்தணர்கள், தங்கள் நற்செயல்களால் அடையப்பட்ட வெகுமதியைத் தங்கள் மனைவியரோடும், பிள்ளைகளோடும் நித்தியமான உலகத்தில் பெறுகிறார்கள். ஓ! அக்னியே, புனிதக் காணிக்கைகளைத் தாங்குபவன் நீயே.


ஓ! அக்னி, தன்னளவில் சிறந்த காணிக்கையானவன் நீயே. உயர்ந்த வகையிலான வேள்விச் சடங்கில், அபரிமிதமான பரிசுகளுடனும், காணிக்கைகளுடனும் வழிபடப்படுபவன் நீயே. ஓ! காணிக்கைகளைச் சுமப்பவனே, மூவுலகங்களையும் படைத்து, நேரம் வரும்போது, தூண்டப்படாத வடிவம் கொண்டு அவற்றை அழிப்பவனும் நீயே. இந்த முழு அண்டத்துக்கும் தாய் நீயே; அதே போலே, ஓ! அக்னி, அவற்றின் அழிவும் நீயே. ஞானிகள் உன்னை மேகங்களோடும் மின்னலோடும் ஒப்பிடுகின்றனர். உன்னிலிருந்து வெளியேறும் சுடர்கள் அனைத்து உயிர்களையும் தாங்குகின்றன. அனைத்து நீர்நிலைகளும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. அதே போல இந்த முழு உலகமும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. ஓ! பரிசுத்தம் செய்பவனே, மூவுலகங்களிலும் நீ அறியாதது எதுவும் இல்லை. தன் முன்னோடியை {முன்னோடியான உன்னை} அனைத்தும் அன்பாகவே ஏற்றுக் கொள்ளும். வேதங்களின் நித்திய பாடல்களால் உன்னை நான் பலமாக்குகிறேன்” என்றார் {பிருஹஸ்பதி}.

இப்படித் துதிக்கப்பட்டதால், எரிந்த காணிக்கைகளைத் தாங்குபவனான அந்தக் கவிகளிற்சிறந்தவன் {அக்னி}, மிகவும் மகிழ்ந்து, பாராட்டத்தக்க சொற்களைப் பிருஹஸ்பதியிடம் பேசினான். பிறகு அவன் {அக்னி பிருஹஸ்பதியிடம்}, “நான் இந்திரனை உமக்குக் காட்டுகிறேன். இதை நான் உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன்” என்றான் {அக்னி}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு அக்னி, கடல்களிலும் சிறு குளங்களிலும் நுழைந்து, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்தத் தடாகத்திற்கு வந்து, தாமரை மலர்களில் தேடிய போது, அங்கே ஒரு தாமரைத் தண்டின் இழையினுள் கிடக்கும் தேவர்கள் மன்னனை {இந்திரனைக்} கண்டான். பிறகு விரைந்து திரும்பிய அவன் {அக்னி}, நுண்ணிய வடிவம் கொண்டு தாமரைத் தண்டின் இழைகளில் எப்படி இந்திரன் தஞ்சமடைந்திருக்கிறான் என்பதைப் பிருஹஸ்பதியிடம் தெரிவித்தான். பிறகு தேவர்கள், துறவிகள், கந்தர்வர்கள் ஆகியோருடன் கூடிய பிருஹஸ்பதி அங்கே சென்று, வலனைக் கொன்றவன் {இந்திரன்} முன்பு செய்த செயல்களைச் சுட்டிக்காட்டி அவனை {இந்திரனை} மகிமைப்படுத்தினார்.

அவர் {பிருஹஸ்பதி இந்திரனிடம்}, “ஓ! இந்திரா, பெரும் அசுரனான நமுச்சி உன்னால் கொல்லப்பட்டான். பயங்கர வலிமை கொண்ட சம்பரன், வலன் என்ற அசுரர்கள் இருவரும் அப்படியே உன்னால் கொல்லப்பட்டார்கள். ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பலத்தில் வளர்ந்து, உனது எதிரிகளைக் கொல்வாயாக. ஓ! இந்திரா, எழு! இங்கே கூடியிருக்கும் தேவர்களையும் துறவியரையும் பார். ஓ! இந்திரா, ஓ! பெரும் தலைவா, அசுரர்களைக் கொன்று உலகங்களை விடுவிப்பவன் நீயே. விஷ்ணுவின் சக்தியைக் கொண்ட நீர் நுரைகளால் பலம் கொண்டு முன்பு விருத்திரனைக் கொன்றவன் நீயே. அனைத்து உயிர்களுக்கும் புகலிடமும், வணங்கத்தக்கவனும் நீயே. உனக்கு நிகரான எவனும் இல்லை. ஓ! இந்திரா, அனைத்து உயிர்களும் உன்னாலேயே தாங்கப்படுகின்றன. தேவர்களின் பெருமைகளை எழுப்பியவன் நீயே. ஓ! பெரும் இந்திரா, உனது சுயபலத்தை அடைந்து உலகங்களையும், {அதிலுள்ள} அனைவரையும் காப்பாயாக!” என்றார் {பிருஹஸ்பதி}.

இப்படித் துதிக்கப்பட்ட இந்திரன் சிறிது சிறிதாக வளர்ந்தான். பிறகு தனது சுய உருவை அடைந்து, பலத்தில் வளர்ந்த அவன் {இந்திரன்}, தன் முன்னிலையில் நின்ற ஆசான் பிருஹஸ்பதியிடம் பேசினான். அவன் {இந்திரன் பிருகஸ்பதியிடம்}, “பெரும் அசுரர்களான துவஷ்டிரியின் {துவஷ்டாவின்} மகனும் {திரிசிரனும்}, மிகப்பெரிய வடிவம் கொண்டவனும் உலகங்களை அழித்தவனுமான விருத்திரனும் கொல்லப்பட்டுவிட்டனரே. உமக்கு இன்னும் வேறு என்ன காரியம் மீதமிருக்கிறது?” என்று கேட்டான் {இந்திரன்}. அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “மனிதனான நகுஷன் என்ற மன்னன், தெய்வீகத் துறவியருடைய சக்தியின் அறத்தால் சொர்க்கத்தின் அரியணையை அடைந்து, எங்களுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கிறான்” என்றார் {பிருகஸ்பதி}.

இந்திரன் {பிருகஸ்பதியிடம்}, “அடைவதற்கு அரிதான சொர்க்கத்தின் அரியணையை நகுஷன் அடைந்தது எப்படி? அவன் பயின்ற தவங்கள் என்னென்ன? ஓ! பிருஹஸ்பதி, அவனது வலிமை எவ்வளவு பெரியது?” என்று கேட்டான். அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “சொர்க்கத்தின் ஆட்சியாளனுக்குரிய உயர்ந்த கண்ணியத்தை நீ இழந்ததால், அச்சமடைந்த தேவர்கள் சொர்க்கத்திற்கு ஒரு மன்னனை விரும்பினர். பிறகு, ஓ! இந்திரா, தேவர்களும், அண்டத்திலுள்ள பித்ருக்களும், துறவியரும், முக்கியமான கந்தர்வர்களும் ஒன்றுகூடி நகுஷனிடம் சென்று, “அண்டத்தைக் காப்பவனாகவும், எங்களுக்கு மன்னனாகவும் நீ ஆவாயாக!” என்று சொன்னார்கள். அவர்களிடம் நகுஷன், “நான் திறனற்றவனாக இருக்கிறேன். உங்கள் சக்தியாலும், உங்கள் தவங்களின் அறத்தாலும் என்னை நிரப்புங்கள்” என்று சொன்னான்.

இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், ஓ! தேவர்களின் மன்னா {இந்திரா}, அவனைப் {தங்கள் தவங்களின் அறத்தால்} பலவானாக்கினார்கள். பிறகு, நகுஷன் பயங்கரப் பலம் கொண்டவனாக ஆனான். இப்படியே மூன்று உலகங்களின் ஆட்சியாளனாக ஆன அவன் {நகுஷன்}, பெரும் துறவிகளைப் (தனது தேரில்} பூட்டினான். இப்படியே {முனிவர்களை வாகனமாகப் பயன்படுத்திய} அந்த இழிந்தவன் {நகுஷன்} உலகம் விட்டு உலகம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறான். பயங்கரமான நகுஷனை நீ பார்த்துவிடாதே. அவன் தனது கண்களில் இருந்து நஞ்சை உமிழ்ந்து, அனைவரின் சக்தியையும் உறிஞ்சி விடுகிறான். தேவர்கள் அனைவரும் மிகவும் பயந்திருக்கின்றனர். அவன் மீது தங்கள் பார்வையைச் செலுத்தாமல் அவர்கள் {தேவர்கள்} மறைந்தே செல்கின்றனர்” என்றார்.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அங்கீரஸ் குலத்தில் சிறந்தவர் {பிருஹஸ்பதி} அப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, உலகத்தின் காப்பாளர்களான {திக்பாலர்களான} குபேரனும், சூரியனின் மகனான யமனும், பழந்தேவனான சோமனும் {சந்திரனும்}, வருணனும் அங்கே வந்தனர். அங்கே வந்த அவர்கள் {திக்பாலர்கள்} பெரும் இந்திரனிடம், “நற்பேறாலேயே துவஷ்ட்ரியின் {துவஷ்டாவின்} மகனும் {திரிசிரனும்}, விருத்திரனும் கொல்லப்பட்டனர். ஓ! இந்திரா, உனது எதிரிகள் கொல்லப்பட்ட பிறகும், பாதுகாப்பாகவும், பலமாகவும் நீ இருப்பதும் நற்பேறாலேயேதான்” என்றனர். உலகத்தின் காவலர்களான {லோகபாலர்களான} அவர்கள் அனைவரையும் வரவேற்ற இந்திரன், நகுஷன் தொடர்பாக அவர்களிடம் முறையான வடிவில் கோரிக்கை வைக்கும் நோக்கில், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களை வாழ்த்தினான். பிறகு, அவன் {இந்திரன்}, “கடுமுகம் கொண்ட நகுஷன் தேவர்களின் மன்னனாக இருக்கிறான். அதன் நிமித்தமாக உங்கள் உதவி எனக்குத் தாருங்கள்” என்று கேட்டான்.

அதற்கு அவர்கள் {திக்பாலர்கள்}, “நகுஷன் கோர முகம் கொண்டவன்; ஓ! தேவா {இந்திரா}, நஞ்சே அவனது பார்வை. நாங்கள் அவனை அஞ்சுகிறோம். நீ நகுஷனை வீழ்த்தினால், ஓ! இந்திரா, வேள்விக் காணிக்கைகளில் எங்களுக்குரிய பங்குகளைப் பெற நாங்கள் உரிமையுடையவர்கள் ஆவோம்” என்றனர். அதற்கு இந்திரன், “அப்படியே ஆகட்டும். என்னுடன் சேர்த்து, நீரின் ஆட்சியாளனான நீயும் {வருணனும்}, யமனும், குபேரனும் இன்றே முடிசூட்டப்படுவீர்கள். தேவர்கள் அனைவரின் துணையுடன், பயங்கரப் பார்வை கொண்ட எதிரியான நகுஷனை நாம் வீழ்த்துவோமாக” என்றான். பிறகு அக்னி, இந்திரனிடம், “வேள்விக் காணிக்கைகளில் எனக்கும் ஒரு பங்கைத் தா. நான் எனது துணையை உனக்கு அளிப்பேன்” என்றான். அவனிடம் {அக்னியிடம்} இந்திரன், “ஓ அக்னி, பெரும் வேள்விகளில் நீயும் ஒரு பங்கைப் பெறுவாய். (அப்படிப்பட்ட நேரங்களில்), இந்திரன் அக்னி ஆகிய இருவருக்கும் ஒரே பங்கு கிடைக்கும்” என்றான்.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பகனைத் தண்டித்தவனும், வரங்களை அளிப்பவனுமான ஒப்பற்ற தலைவனான இந்திரன், இவ்விதம் ஆலோசித்து, யக்ஷர்கள் மீதான ஆட்சி மற்றும் உலகத்தின் அனைத்து செல்வங்களையும் குபேரனுக்கும்; பித்ருக்கள் மீதான ஆட்சியை யமனுக்கும், நீர்நிலைகள் மீதான ஆட்சியை வருணனுக்கும் அளித்தான்.

************************************

இந்திரன் – இந்திராணி - நகுஷன் – சம்பந்தப்பட்ட இந்தக் கதை இன்னும் விரிவாக தேவி பாகவதத்தில் உள்ளது. http://www.sacred-texts.com/hin/db/bk06ch07.htm


இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, January 17, 2015

இந்திரனைத் தேடிய அக்னி! - உத்யோக பர்வம் பகுதி 15

Agni searched for Indra! | Udyoga Parva - Section 15 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 15)

பதிவின் சுருக்கம் : நகுஷனின் பலம் குறித்து இந்திரன் சச்சியிடம் சொன்னது; சச்சி முனிவர்களால் இழுக்கப்படும் தேரில் நகுஷனை வரச்சொன்னது; நகுஷன் முனிவர்களைத் தேரில் பூட்டியது; சச்சி பிருஹஸ்பதியிடம் இந்திரனை விரைவாகத் தேடச் சொன்னது; பிருஹஸ்பதி அக்னியைக் கொண்டு இந்திரனைத் தேடியது; அக்னியால் இந்திரனைக் காண முடியாதது; அக்னி தனது இயலாமையைப் பிருஹஸ்பதியிடம் சொன்னது ...

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “சச்சியால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த ஒப்பற்ற தேவன் {இந்திரன்} அவளிடம் {சச்சியிடம்}, மீண்டும், “இது வீரத்தைக் காட்ட வேண்டிய நேரமன்று. நகுஷன் என்னைவிடப் பலவானாக இருக்கிறான். ஓ! அழகிய மங்கையே {சச்சி}, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் முனிவர்களால் கொடுக்கப்பட்ட காணிக்கைகளின் தகுதியால் {பலத்தால்} அவன் {நகுஷன்} பலமூட்டப்பட்டிருக்கிறான். இது சம்பந்தமாக நான் ஒரு கொள்கையை {தீர்மானத்தை} எட்டியிருக்கிறேன். ஓ! தேவி {சச்சி}, நீயே அதனைச் செய்ய வேண்டியிருக்கும். ஓ! மங்கையே {சச்சியே}, நீ அதைக் கமுக்கமாகச் செய்ய வேண்டும். மேலும் அதை யாரிடமும் நீ சொல்லக்கூடாது. ஓ! அழகிய இடை கொண்ட மங்கையே {சச்சியே}, நகுஷனிடம் தனிமையில் சென்று, அவனிடம், “ஓ! அண்டத்தின் தலைவா {நகுஷா}, முனிவர்களால் சுமக்கப்படும் அழகிய வாகனத்தில் ஏறி நீர் என்னைச் சந்திக்க வேண்டும். அப்படிச் செய்தால் நான் மகிழ்ந்து, என்னை உம்மிடம் கொடுப்பேன்” என்று நீ சொல்ல வேண்டும்” என்றான் {இந்திரன்}.


தேவர்கள் மன்னனால் {இந்திரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தாமரைக் கண் கொண்ட அவனது மனைவி {சச்சி}, அதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்து நகுஷனிடம் சென்றாள். அவளை {சச்சியைக்} கண்ட நகுஷன், புன்னகையுடன் அவளிடம், “ஓ! அழகிய தொடைகளைக் கொண்ட மங்கையே {சச்சி}, உனக்கு நல்வரவு. ஓ! இனிய புன்னகை கொண்டவளே, உனக்கு இன்பமானது எது? ஓ! நற்பார்வை கொண்ட மங்கையே, உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட என்னை நீ ஏற்றுக் கொள்வாயாக. ஓ! உற்சாகமானக் காரிகையே {சச்சி}, உன் விருப்பம் என்ன? ஓ! நற்பார்வை கொண்ட மங்கையே, கொடியிடையாளே, நான் உனது விருப்பத்தையே செய்வேன். ஓ! அழகிய இடை கொண்டவளே, நீ வெட்கமடையத் தேவையில்லை. என்னிடம் நீ நம்பிக்கை வைப்பாயாக. ஓ! தேவி, உண்மையின் {சத்தியத்தின்} பேரால், நீ சொல்வதையே நான் செய்வேன்” என்றான் {நகுஷன்}.

அதற்குச் சச்சி {நகுஷனிடம்}, “ஓ! அண்டத்தின் தலைவா {நகுஷரே}, நீர் எனக்கு நிர்ணயித்திருக்கும் காலமே எனக்கு வேண்டியது. அதன்பிறகு, ஓ! தேவர்களின் தலைவா, நீர் எனது கணவனாகலாம். எனக்கு ஒரு விருப்பமிருக்கிறது. ஓ! தேவர்களின் மன்னா, அதைக் கவனித்துக் கேட்பீராக. ஓ! மன்னா, நான் சொல்வதை நீர் செய்ய வேண்டும் என்றே நான் சொல்வேன். நீர் என் மீது கொண்டிருக்கும் அன்பின் நிமித்தமாகவே இதை நான் கோருகிறேன். நீர் அதை அருளினால், நான் உம் வசம் இருப்பேன். இந்திரர் தன்னைச் சுமக்க, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களை வைத்திருந்தார். ஓ! தேவர்கள் மன்னா, விஷ்ணு, ருத்ரன் {சிவன்}, அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோர் யாரிடமும் இல்லாத புதுமையான ஒரு வாகனத்தை நீர் கொண்டிருக்க வேண்டும் என்று, ஓ! தலைவா, நான் விரும்புகிறேன். கண்ணியமிக்க உயர்ந்த முனிவர்கள் ஒன்றுகூடி, உம்மைப் பல்லக்கில் வைத்து சுமக்கட்டும். எனக்குத் தோன்றுவது இதுவே. அசுரர்களுக்கோ, தேவர்களுக்கோ சமமானவராக நீர் உம்மைக் கருதக்கூடாது. யாரையெல்லாம் நீர் பார்க்கிறீரோ அவர்களின் பலத்தையெல்லாம் நீர் கிரகித்துக் கொள்கிறீர். உம் முன்னிலையில் நிற்கும் பலமுடையவர் யாரும் இல்லை” என்றாள் {சச்சி}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொல்லப்பட்ட நகுஷன் மிகவும் மகிழ்ந்தான். பிறகு அந்தத் தேவர்கள் தலைவன் {நகுஷன்}, அந்தக் களங்கமற்ற மங்கையிடம் {சச்சியிடம்}, “ஓ! அழகிய நிறம் கொண்ட மங்கையே, இதற்கு முன் கேள்விப்படாத ஒரு வாகனத்தையே நீ சொல்லியிருக்கிறாய். ஓ! தேவி, நான் அதை மிகவும் விரும்புகிறேன். ஓ அழகிய முகம் கொண்டவளே, நான் உனது கட்டுப்பாட்டில் இருக்கிறேன். தன்னைத் தாங்குவதற்கு முனிவர்களை ஈடுபடுத்துபவன் பலவீனனாக இருக்க முடியாது. நான் தவங்கள் பயின்றவன், மேலும் நான் பெரும் பலமிக்கவனுமாவேன். இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களுக்கு நானே தலைவன். நான் சினமுற்றால் இந்த அண்டமே இல்லாது போய்விடும். இந்த முழு அண்டமும் என்னிலேயே நிறுவப்பட்டுள்ளது. ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோர் ஒன்றுகூடியிருந்தாலும், ஆத்திரம் கொள்ளும் என்னை அவர்கள் அனைவராலும் சமாளிக்க முடியாது. எவனை நான் பார்த்தாலும், அவனது ஆற்றல் அவனிடம் இருந்து அகன்றுவிடும். ஓ! தேவி, உனது கோரிக்கை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களும் என்னைச் சுமக்கட்டும். ஓ! அழகிய நிறம் கொண்ட மங்கையே, எந்தன் பெருமையையும், காந்தியையும் நீ காண்பாய்” என்றான் {நகுஷன்}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அழகிய முகம் கொண்ட அந்தத் தேவியிடம் {சச்சியிடம்} இப்படிப் பேசிய அவன் {நகுஷன்}, அவளுக்கு விடை கொடுத்தனுப்பி, தவப்பயிற்சிக்குத் தங்களை அர்ப்பணித்திருந்த எண்ணற்ற துறவிகளைத் தனது தெய்வீகத் தேரில் பூட்டினான். பலம் கொண்டவனும், கர்வத்தால் போதை கொண்டவனும், நிலையற்றவனும், இழிந்த ஆன்மா கொண்டவனும், அந்தணர்களை அலட்சியம் செய்பவனுமான அவன் {நகுஷன்}, தன்னைச் சுமக்கத் துறவியரை நியமித்தான். அதே வேளையில், நகுஷனால் அனுப்பப்பட்ட சச்சி, பிருஹஸ்பதியிடம் சென்று, “நகுஷன் எனக்கு அளித்திருக்கும் காலத்தில் சொற்பமே மீதம் இருக்கிறது. உம்மை மதிக்கும் என்னிடம் கருணை கொண்டு, இந்திரரை விரைவில் கண்டுபிடிப்பீராக!” என்றாள் {சச்சி}.

அதற்கு ஒப்பற்ற பிருஹஸ்பதி அவளிடம் {சச்சியிடம்}, “மிக்க நன்று. ஓ! தேவி, தீய ஆன்மா கொண்ட நகுஷனிடம் நீ அஞ்ச வேண்டாம். அவன் {நகுஷன்} தனது சக்தியை நீண்ட காலம் பெற்றிருக்க மாட்டான். ஓ! அழகிய காரிகையே, தன்னைச் சுமக்கப் பெரும் துறவியரை நியமித்த காரணத்தால், உண்மையில், அறத்தைக் கருதிப் பார்க்காத அந்த இழிந்தவன் ஏற்கனவே வீழ்ந்துவிட்டான். அந்த இழிந்த தீயவன் அழிவடைய, நான் ஒரு வேள்வியைச் செய்வேன். இந்திரனை நான் கண்டுபிடிப்பேன். அஞ்சாதே. உனக்கு நன்மையே விளையட்டும்” என்றார் {பிருஹஸ்பதி}.

அதன்பேரில் மதிப்புமிக்கத் தேவனான எரிந்த காணிக்கைகளை உண்பவன் {அக்னி}, தன்னுருவை விட்டு, பெண்ணுருக் கொண்டு, அந்த இடத்தில் இருந்து உடனே மறைந்து போனான். மனோ வேகம் கொண்ட அவன் {அக்னி}, மலைகள், காடுகள், பூமி, வானம் ஆகிய அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பிருஹஸ்பதியிடம் திரும்பி வந்தான்.

பிறகு அக்னி பிருஹஸ்பதியிடம், இவ்விடங்களில் எல்லாம் தேவர்களின் மன்னனை {இந்திரனை} என்னால் காண முடியவில்லை. நீர் கொள்ளிடங்கள் மட்டுமே தேட வேண்டியதில் மீதம் இருக்கின்றன. நீருக்குள் நுழைவதில் நான் எப்போதும் பின்தங்குவேன். அதற்குள் செல்வதற்கு எனக்கு வழி கிடையாது. ஓ! அந்தணரே, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அந்தத் தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, அவனிடம் {அக்னியிடம்}, “ஓ! ஒப்பற்ற தேவா {அக்னி}, நீருக்குள் நீ நுழைவாயாக” என்றார்.

அதற்கு அக்னி {பிருஹஸ்பதியிடம்}, “என்னால் நீருக்குள் நுழைய முடியாது. அங்கே எனக்கு அழிவு காத்திருக்கிறது. ஓ! பெரும் பிரகாசம் கொண்டவரே, நான் என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். நீர் எனக்கு நன்மையைச் செய்வீராக! கல்லில் இருந்து, இரும்பு பிறந்தது போலவும், புரோகித சாதியில் இருந்து, போர்ச்சாதி உதித்தது போலவும், நீரிலிருந்தே நெருப்பு உதித்தது. அனைத்துப் பொருட்களையும் ஊடுருவும் இவற்றின் சக்தி, தாங்கள் உதித்த தோற்றுவாயிடம் எடுபடுவதில்லை” என்றான் {அக்னி}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்